Saturday, June 3, 2017
மகிழ்ச்சி
#மகிழ்ச்சி..
நடந்துமுடிந்த #வைரவிழா ஒன்றை பறைச்சாட்டியிருக்கிறது.. இந்த நாட்டை ஆளும் பாஜகவிற்கு எச்சரிக்கையை தந்ததோடு.. சிதறிக்கிடப்பதால் பலனற்று போய் பாசிசம் தலைதூக்கி நிற்கிறது அதன் கொடூரபற்களை மக்களை காவு கேட்கிறது.. அதை பிடிங்கியெறிய வேண்டுமென்பதை உணர்ந்திருக்கிறது/ உணர்த்தியும் இருக்கிறது..
..
#கலைஞர்..
தவிர்க்கமுடியாத தலைமை இந்திய அரசியல் எப்போதெல்லாம் திசைமாறி போகிறதோ அப்போதெல்லாம் சரியான திசையில் திருப்பி சரியாக செலுத்தும் #விசையாய் இருக்கிறார் ..இப்போது கூட மௌனத்தை காதல்கொண்ட வேளையிலும் அவரின் அசைவுகள் கூட அதைதான் செய்திருக்கிறது.. தேசம் மிக மோசமான காலத்தை இதுவரை சந்தித்திராத மதவெறியாட்டத்தின் உச்சத்தை .. கோமாளித்தனமான ஆட்சியை , கொடூரமாக விசவிதைகளை விதைத்திடும் அயோக்கியர்களின் கையில் நாடு இருக்கும்வேளையில் .. கலைஞரின் வைரவிழா புதியதொரு தொடக்கத்தை நாட்டின் நலன் கருதும் நோக்கத்தோடு செய்திருக்கிறது..
..
#தளபதிஸ்டாலின்..
நாடே வியந்து போற்றுகிறது.. நாட்டின் பல்வேறு மாநில தலைவர்களும் புகழ்கிறார்கள்.. சரியான நேரத்தில் கலைஞரைப்போல சரியாக முடிவெடுத்து ஒருங்கிணைத்திருக்கிறார்.. இந்த தேசம் சந்திக்கிற/சந்தித்து கொண்டிருக்கிற அவலங்களை களைய
மிக சரியான நபரை இனம் காண வேண்டிய தருணத்தை உணர்த்திருக்கிறார் அதை தேசத்தின் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை இந்த விழா சொல்கிறது..
தமிழகத்தின் தவிர்க்க முடியாத, தவறவிடகூடாத சக்தியாக ஸ்டாலின் எழுந்து நிற்கிறார்.. நிச்சயம் ராகுல் சொன்னதைப்போல கலைஞரைப்போல இவரும் பேசப்படுவார் /புகழப்படுவார்..
இன்று சிலர் எரிச்சலடையலாம் அதுவே தளபதியின் வளர்ச்சிக்கு உரமாகும்..
..
எல்லோரும் விரும்பும் தலைவராக தமிழகத்தின் எதிர்பார்ப்பாக.. இந்திய தேசத்தின் ஒப்பற்ற தலைவர்கள் வரிசையில் கலைஞரைப்போல தளபதியும் முத்திரை பதிப்பார்..
தளபதி கனிந்திருக்கிறார்..
..
#தளபதி_தலைவராகிறார்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment