Friday, September 30, 2016
நிழலாட்சி..
அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்கவேண்டும் ..
கலைஞர்..
சிலர் எப்படி சொல்லலாம் ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கிற செயல் .. திமுகவின் பிரதான கொள்கையான ஆளுநரின் அதிகாரமே வேண்டாமென்பதற்கு எதிரானது என்கிறார்கள்..
ஆளுநரே வேண்டாமென்பது தான் எங்கள் கொள்கை ஆனால் ஆளுநர்
இருக்கிறவரை அவரின் பொறுப்பை உணர்ந்துதான் இதுபோன்ற உண்மைகள் மூடிமறைக்கப்படுகிற அல்லது இலைமறைவு ஆட்சியை நடுத்துகிற நேரங்களில் பிறர் தலையீட்டை தடுக்கவேண்டிய பொறுப்பு ஆளுநருக்குண்டு.. அதைதான்
ஆனந்தவிகடனை மேற்கோள்காட்டி சசிகலாவும் ஷீலாவும் நிழல்கள் தான்
நிழல் ஆள மக்கள் வாக்களிக்கவில்லை ..என குறிப்பிட்டு இருக்கிறார்..
..
உண்மை அதுதான் ஜெயலலிதாவின் கையெழுத்தில்லாமல் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வருகிறது ..அது அவர்கள் உட்கட்சிவிவகாரமென்றாலும்.. தேர்தலை சந்திக்கிற மக்களிடம் வாக்கு கேட்க வருகிறவர்கள் ஜெயலலிதாவின் வேட்பாளரா என அறியவேண்டியிருக்கிறது .. ஆனால் அரசு நிர்வாகத்தை சசியோ ஷீலாவோ எடுத்து நடத்துவதென்பது சட்டவிரோதம் மட்டுமல்ல ஏற்புடையதுமல்ல அதனால் தான் கலைஞர் ஆளுநரின் தலையீடு வேண்டுமென்கிறார்..முறைபடி அதிமுக உறுப்பினர்களால் வேறொருவர் தேர்தெடுக்கபடட்டும் ஏன்
#அத்தாச்சி_சசிகலா வரட்டும் யார் வேண்டாமென்கிறார்கள்... மாறாக முதல்வரின் உடல்நிலையைப்பற்றி தவறான தகவல்கள் உலவும் போதாவது அவரின் புகைப்படங்களை வெளியிட்டு உண்மை நிலையை தெரிவிக்கவேண்டாமா..
..
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து தெரிந்துக்கொள்ள தமிழக மக்கள் விரும்புகிறார்கள் முழுமையாக குணமடைந்து விரைந்து வரவேண்டும் ஆனால் முதல்வரை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு சிலர் அரசு அதிகாரத்தை கையிலெடுத்து செயல்படுவதை ஏற்கமுடியாது..
ஆளுநர் அப்போலோ சென்று முதல்வரை காணவேண்டும்.. இதுவரை கண்டதாக சொன்னவர்களை தொடர்ந்து சிலர் மறுத்து யாரும் முதல்வரை காணவில்லை என செய்திகள் வருகிறது.. எது உண்மையென தெரியவில்லை தமிழக முதல்வரின் உடல்நிலைபபற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்..
முழு அதிகாரமும் சசிகலாவின் கையில் இருப்பதாக செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன..அரைகுறையாக நாம் அறிந்ததுதான் என்றாலும்.. இப்போது முழுகட்டுபாட்டில் கட்சியும் அரசும் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது..
..
கலைஞர் சொன்னதிலும் காரியமிருக்கிறது..
ஆரம்பம் தொட்டே ஜெயலலிதா வாழ்க்கை / அரசியல் எல்லாவற்றிலும் நிழல்களின் சாயல் இருந்துக்கொண்டேயிருக்கிறது.. உண்மைகள் உறங்குகிறது..
#நிஜம்_வேறு_நிழல்வேறு..
#இப்போதுதமிழகத்தில்_நிழலாட்சியா_நடக்கிறது
உண்மை அறியவேண்டும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Wednesday, September 28, 2016
காவிரி..நடந்தாய் வாழி
Cauvery Management Board
காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை என கர்நாடக எம்பிக்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்..
நம்ம எம்.பி க்கள் என்ன செய்யறாங்க அப்படின்னு கேட்காதீங்க அலகு குத்திக்கொண்டும் நாகூரில் வேளாங்கண்ணியில் பிராத்தனை செய்துக்கொண்டும்.. இடையிடையே ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு #அழுது டிராமாசெய்துக்கொண்டிருக்கிறார்கள்.. இவர்கள் மனதளவில் கூட ஜெயலலிதா மீதான பாசத்தால் செய்யவில்லை ஜெயலலிதா கண்பட்டால் கொஞ்சம் சம்பாதிக்கிற வழி கிடைக்கும் என்பதால் தெருவில் அமர்ந்து முழுநீள #நகைச்சுவை_நாடகத்தை நடத்துகிறார்கள்..
..
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை உச்தநீதிமன்றத்திற்கு அனுப்பிய போதே அதன் உள் அர்த்தம் இதுதான் இரண்டு விடயங்களில் கொண்டுபோய் சேர்க்கும் ஒன்று நீண்ட போராட்டமாக மாறும் அதாவது அரசியல் அமைப்பு இதை விசாரிக்க வைக்கலாம்.. மக்கள் மன்ற தீர்ப்பை கேள்வி கேட்க நீதிமன்றங்களுக்கு உரிமையில்லை என கேட்டு காலம் கடத்தலாம்..
இரண்டாவதாக மத்திய அரசிற்கு அழுத்தத்தை தந்து குடியரசு தலைவரைக்கொண்டு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம்.. அதேவேளை கர்நாடகவை சேர்ந்த ஒட்டுமொத்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை கேள்வி கேட்க உரிமையில்லையென வாதிட வகைசெய்யலாம்..
..
எதுவாக இருந்தாலும் கர்நாடகம் மிக சாமர்த்தியமாக உச்சநீதிமன்றத்தாவேயே ஏன் இருமாநில முதல்வர்களும் அமர்ந்து பேசவில்லையென கேள்வி எழுப்பியிருக்கிறது.. எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தின் மூலமே தீர்வுகாண முடியாதென்பதை உணர்ந்து செயல்பட ஆலோசனை வழங்கியிருக்கிறது..
மொத்தத்தில் காயை மத்திய அரசின் பக்கம் திருப்பி அதை கொண்டு காலதாமதம்.. அல்லது தீர்வு என்ற நிலைக்கு ஆளாக்கி சித்தராமையா அரசு தன் ஆளுமையை காட்டியிருக்கிறது..
..
கலைஞர் அவர்கள் சொன்னதைப்போல அனைத்துகட்சி கூட்டம் ஒட்டுமொத்தமாக பிரதமரை சந்திப்பது கர்நாடகாவோடு பேசுவார்த்தை நடத்துவதென மீண்டும் முதலில் இருந்து தொடங்கவேண்டியதுதான்.. திறமையின்மை ஆணவம் கோவம் இவையெல்லாம் ஆட்சியாளருக்கிருந்தால் இதுபோல்தான் ஆகும்..
..
தன் சொந்த வழக்குகளுக்காக பிரபலமான வழக்கறிஞர்களை அழைத்துவந்து நீதிமன்றத்தை தன் இஷ்டத்திற்கு வழங்கவைத்த ஜெயலலிதாவால் ..இது முடியாமல் போனது
சித்தராமையா சிறந்த நிர்வாகியாகிப்போனார்..
..
இதனை இதனால் இவன் முடிக்கும்..
என்ற அய்யனின் வாக்கை மறந்து போனோம்..
..
#நடந்தாய்_வாழி...
..
ஆலஞ்சி மன்சூர்
வழிகேட்டில்
கோவை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வங்கதேசத்தினர் எச்.ராசா..
புத்தி சுவாதீனமில்லாதவரின் கூற்றாக கருதமுடியாது.. உளறல் என்பதை விட குற்றவாளிகளை காப்பாற்றும் தந்திரம் என்பதுதான் சரி.. அதைவிட இந்த மத அமைப்புகளின் முகம் வெளுக்க தொடங்கியதும் .. சரியான வழிகாட்டுதல் இல்லாத மூளைச்சலவை செய்து மற்றொரு மதத்தினர் மீதோ அல்லது மற்றொரு பிரிவினர்மீதோ தாக்குதலை தொடரவேண்டுமென்ற நோக்கம் மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டவர்கள் ..
..
பாவம் தோன்றுகிறது இவர்கள் சுயமாக சிந்திக்கிற ஆற்றலை இழந்து நிற்கிறார்கள்.. மதம் ஜாதி பிரிவு அதிகார பேராசை இவைகளை காட்டி சட்டென்று உயரத்திற்கு ஏற்றிவிடுவதாக வாக்குறுதி தந்து கடைசியில் வழிகெட்டு நிற்க இளைஞர்கள்.. மிக சமார்த்தியமாக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களை தயார் செய்கிறார்கள்..காரணம் அவர்களுக்கு பின்னால் பணபலமோ ஆள்பலமோ இருக்காது அவர்களுக்கு யாரும் வக்காலத்து வாங்கமாட்டார்கள் எதிலாவது மாட்டிக்கொண்டு சிறைக்கு சென்றால் கூட யாரும் அவர்களைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.. இப்படிபட்டவர்களை தான் மத ஜாதி அமைப்புகள் பயன்படுத்துகின்றன..
..
தூண்டிவிடுகிறவர்கள் அல்லது வழிநடத்துகிறவர்கள் சர்வ பாக்கியத்தின் செல்வாக்கோடு அவர்கள் குழந்தைகள் உயர்தர கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள் அவர்கள் குடும்பத்தினர் அமைதியான சூழலில் இருக்கிறார்கள்.. பாவம் மூளைச்சலவை செய்யப்பட்ட யாரும் வேண்டாதவராய் குற்றவாளியாக நிற்கிறார்கள் .. இளைஞர்கள் .. இது எல்லா மத அமைப்புகளிலும் நடக்கிறதென்பது தான் பெரும் சோகம்..
நூறு இளைஞர்களை கேட்டார்.. சுவாமி விவேகானந்தர்... ஆனால் இன்றோ வழிகாட்ட யாருமில்லாமல் ...
ஆயிரம்கணக்கானோர்.. வழிதவறிய செம்மறிகளாய்..
..
#வழிகேட்டில்_இளைஞர்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Monday, September 26, 2016
மிகசிறந்த தலைவராக...
நான் திராவிடன்.. திராவிட சிந்தனையாளன் என்ற நிலையில் பணியாற்றி இருக்கிறேனே தவிர அரசியலில் எனது பங்கு என்பது மிககுறைவு..
தேர்தல் முறை எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயகநாட்டில் இனத்தின் பங்கு வெளிப்படையாக வேண்டுமென்பதற்காகவும்
பாசிச சக்திகளின் கையில் அதிகாரம் சென்றுவிட கூடாதென்பதற்காகவும் ..அரசியலை முன்னெடுக்கிறோம்..
..
ஒருவர் அரசியலில் எப்படி சேவைமனபாண்மையோடு செயலாற்றவேண்டுமென்று திரு.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கையை கண்டு படிக்கவேண்டும்..
எதிராளிகளையும் மதிக்கும் போக்கும் தனக்கு மக்கள் தந்த அங்கீகாரத்திற்கு உண்மையாளனாக இருக்கவேண்டுமென்பதை ஸ்டாலின் நடவடிக்கைகள் உணர்த்தும்.. மிக சிறந்த அரசியல் தலவனுக்கான தகுதிகளை ஒருங்கே பெற்றவர்..முழுநேரமும் மக்கள் பணியில் தன்னை முழு ஈடுபாடோடு இணைத்துக்கொண்டு செயலாற்றும் வீரர்.. ஆனால் திமுகவின் மற்ற உறுப்பினர்கள் இதுபோல் செயலாற்றுகின்றரா என்றால் ஒரு சிலரை தவிர சிலர் மிக மந்தமாகவே செயல்படுகிறார்கள்..
இப்போது கூட தன் தொகுதி சார்ந்த பகுதிகளை மழைகாலத்தில் நீர்தேங்கும் என அச்சப்படும் பகுதிகளை ஆய்வு செய்து வடிகால்கள் தூர்வாறபட்டிருக்கிறதா என ஆய்வு செய்கிறார்..
மக்களுக்கான சேவை என்பது அவர்களின் எண்ணத்திற்கேற்க தேவைகளுக்கேற்ப செயலாற்றுவது. அதை செவ்வனே செய்பவராக ஸ்டாலின் இருக்கிறார்..அவரை மற்றவர்களும் பின்பற்றவேண்டும்..
..
திரு.ஸ்டாலின் அவர்கள் கொள்கை கட்சி இதையெல்லாம் கடந்து மக்கள் சேவையாற்றுகிற மாபெரும் தலைவராக தன்னை நிலைநிறுத்துகிறார்.. தமிழகம் கண்ட சிறந்த தலைவர்களில் ஒருவர் ஸ்டாலின் ..
தமிழகம் செய்த தவறின் காரணமாக இன்று ஆட்சியில் அமர்த்தப்படவில்லை நாளடையில் இதற்காக வருந்தும் நிலை வரும் இப்போதே இந்தநிலை தொடர்கிறது..
..
மிக சிறந்த தலைவர்கள் கொள்கைகளால் மட்டும் வடிவமைக்கப்படுவதில்லை.. மக்கள் சேவையில் மக்கள் நலன் சார்ந்த தன் இனம் மொழி சார்ந்த சிந்தனை/செயல்களால் உண்மையான உழைப்பால் கட்டியெழுப்படுகிறார்கள்..
தமிழகம் கண்ட /காணும் மிகசிறந்த தலைவர்களில் ஒருவராக ஸ்டாலின்
நிச்சயம் இடம் பெறுவார்..
..
ஆலஞ்சி மன்சூர்
அஞ்சும் வழக்கம் திராவிடர்கில்லை
நண்பர் ஒருவர் இனத்தின் அடையாளம் மொழி என்றார்.. இல்லை ஒரு இனத்தின் அடையாளங்களில் பிரதான பங்கை மொழி வகிக்கிறது..
மொழி என்பது ஊடகம் அல்லது தொடர்புக்கானது..
ஒரு இனத்தில் பல்வேறு மொழி பேசுகிறவர்களை வரலாற்று நெடுக காணமுடியும் ஆனால் இனத்தால் அவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறார்கள்..
யூத இனத்தை எடுத்துக்கொண்டால்.. யூதர்கள் பாலஸ்தீனியர்கள் சாமாரித்தர்கள் இவர்கள் யாவரும் யூத இனத்தை சேர்ந்தவர்கள்.. இப்போது கூட பிரதான எதிரியாக இருக்கிற பாலஸ்தீனியர்களும் யூதர்களும் தங்களை யஹூத் என்றே அறியப்படுகிறார்கள்.. ஆனால் அவர்களின் மொழி வழக்கம் வெவ்வேறாக இருக்கும்.. யூதமொழியை அறிந்தவர்களாக ஆனால் அரேபிய மொழியை ஏற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள் அவர்கள் மதநம்பிக்கையும் அவர்களை வெவ்வேறாக்கியது.. இப்போது கூட சில ஆய்வாளர்கள் யூதர்களின் வழிதோன்றல்கள் தான் ஆரியர் எனச் சொல்கிறார்கள்.. அதற்கவர்கள் சொல்லும் பிரதான காரணம்.. யூதர்களின் புனிதநூல் என அறிய படுகிற தோரா விலும் கிருஸ்துவர்களின் பழைய ஏற்பாடாகவும் யூதர்களின் நூலாகவும் இருந்த ஏபிரேய விவிலியம்
ஏன் இஸ்லாமியர்களின் வேதநூலான குர்ஆனிலும் யூத இனத்தை மேன்மையானவர்கள் என்கிறது.. அதைதான் யஜூர் வேதமும் ஆரியர்களை மேன்மையானவர் என சொல்லி வர்ணத்தை தருகிறது.. தலையில் பிறந்ததாக சொல்லப்படுகிறது
நம் விடயத்திற்கு வருவோம்
இனத்தின் நிறைய மொழிகளில் ஆதிக்கம் உண்டு
பார்ஸி இனத்தில் கூட பார்ஸி மொழி பேசுகிறவர்களும் தாரி மொழி மற்றும் அரபு பேசுகிறவர்களும் உண்டு.. ஆனால் அவர்கள் இனத்தால் பார்ஸிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.. இங்கே திராவிடர்களை குறிப்பிட வேண்டும் திராவிடர்கள் இயற்கை வணங்கிகள் என்றும் உலகின் முதல் இன தோன்றல் என்றும் சொல்லப்படுகிறது பழைமை நாகரீகம் என அறியபடுகிற சிந்து சமவெளி நாகரீகமே திராவிட நாகரீகம் என்றும் அங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் தமிழர்கள் என நிறைய ஆய்வு முடிவுகள் பறைசாற்றுகிறது..
திராவிடத்தின் மூலமொழியாக தமிழே இருந்தது என்றும் .. பின் வட்டார வழக்கு சொற்களால்..பிரிந்து கன்னடம் தெலுங்கு மலையாளம் ஒரிய என பல்வேறு மொழி ஒலி வடிவங்களை பெற்றதாக சொல்லப்படுகிறது..
..
உலகின் ஒவ்வொரு இனமும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எடுக்கும் முதல் ஆயுதம் கலாச்சாரம் என்கிறார் இலங்கை சேர்ந்த பண்பட்டு செயல்பாட்டாளர்
டாக்டர்.சி.சிவமோகன் ..
ஆம்..ஒரு இனத்தின் அடையாளம் என்பது அவர்களின் வாழ்வு முறை கலாச்சாரம் பண்பாடு அவர்களின் பழையான பழக்கவழக்கங்கள் அவர்களது நாகரீகம் இவைகளே அதோடு அவர்களின் வழக்கு மொழியும் பிரதான பங்கை வகிக்கும்..
..
#ஒருமனிதனின்அடையாளம்_இனம்..
#அஞ்சும்_வழக்கம்_திராவிடர்க்கில்லை
..
ஆலஞ்சி மன்சூர்
Sunday, September 25, 2016
திணமணி.....வைத்தி..
சமூக வலைதளங்களில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்ததையெல்லாம் பதிவேற்றம் செய்வதால் சமுதாயம் குப்பையாகிறது ..
வைத்தியநாதன்..
கல்வி அறிவு எழுத்து இவையெல்லாம் பார்பனர்களுக்கு மட்டுமே வேண்டுமென்ற சித்தாந்தம் மற்றவர்கள் எழுதினாலோ பேசினாலோ அதை தடுத்திட குறைகூற உடனே வருவார்கள்..
சமூக வலைதளங்கள் வந்த பிறகுதான் மக்களின் எண்ணவோட்டத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது.. அதுவரை பார்பனர்களின் செய்திகளை மட்டும் படித்துணர்ந்தோம்.. ஆரம்பகாலங்களில் ஆனந்தவிகடன் கல்கி போன்ற வார இதழ்கள் கூட பிராமணபாஷை தான் பேசியது..அவர்கள் கருத்துகள் செயல்கள் மட்டும் முன்னெடுக்கப்பட்டது /வெளியிடப்பட்டது.
..
சமூகவலைதளங்களில் வேண்டாதவைகள் இல்லாமல் இல்லை அது மிகப்பெரிய தாக்குதலை கூட தரகூடும் ..நிறைய விளைவுகள் கூட தந்திருக்கிறது அது மொழி இன மத ஜாதி பிரச்சனைகளை தந்திருக்கிறது அதே வேளை அவை அனைத்திற்குமான மறுப்பக்கத்தை /உண்மைநிலையையும் மக்களிடம் விரைந்து கொண்டு சேர்த்திருக்கிறது..
..
வைத்திக்கள் ஏன் அஞ்சுகிறார்கள்.. தங்கள் சித்தாந்தத்தை கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியவில்லை உடனேயே அது மறுதலிக்கப்படுகிறது மறுவினையாற்றுகிறதென நினைக்கிறார்கள்..
முன்பு திரு.சிவராமன் ஆசிரியராக இருந்தபோது இதுபோன்ற வன்மங்களை இனத்தின் மதத்தின் மீதான அடித்தமர்தலை செய்யவில்லை சிறியளவிலேனும் ஊடகதர்மம் கடைபிடிக்கப்பட்டது.. வைத்தி போன்றவர்களின் வரவிற்கு பிறகு ஏறக்குறைய பாசிசம் சார்ந்த பத்திரிக்கையாக தெரிகிறது.. இப்போது மிகவும் குறைந்தளவே விற்பனையாவதாகவும் Indian express வாங்கினால் இலவசமாக தரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது..
எக்காலத்திலும் பார்பானை நம்பமுடியாதென்றார் புரட்சிகவிஞர்
எப்பாப்பானாயினும் தமிழர் தலையை தடவப்பாப்பான் என்றார்
பார்ப்பனர்கள் ஏடெழுதும் பாழ்நிலைமை போகுமட்டும்
சீர்த்தபெரும் நாட்டிற்கு சிறிதேனும் நன்மையில புரட்சிக் கவிஞர் பாவேந்தர் ..
..
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை
இவையெல்லாம் பழங்கதைகள்...
#எழுதுகோல்_ஒருஇனத்திற்குமட்டும்_சொந்தமானதல்ல...
..
ஆலஞ்சி மன்சூர்
இனத்தின் மீதான தாக்குதல்
ஒரு இனத்தின் மீதான தாக்குதலுக்கும் ஒரு மொழியின் மீதான தாக்குதலுக்கும் இடையே மெல்லிய ரேகை மட்டுமே தென்படும்.. இனத்தின் மீதான தாக்குதலை புரிந்துக்கொள்ள நீண்டநாட்கள் தேவைபடும் ஆனால் மொழி மீதான தாக்குதலை சட்டென்று உணர்ந்துவிடுவீர்..
மொழியியல் ஆய்வாளர் ரிச்சர்ட் மெடோ இனத்தின் மீதான தாக்குதல் நீண்டகால போர்முறை.
மொழியின் மீதான தாக்குதல் இறுதிப்போரை போன்றது என்கிறார்.
..
ஒரு இனத்தை அழித்தொழிக்க வேண்டுமெனில் அதற்கு நீண்டகால திட்டமிடல் அவசியம்.. இங்கே திராவிட இனத்தின் மீதான தாக்குதலை ஆய்வு செய்தால் இது புலப்படும்.. இன்றைக்கு நேற்றல்ல ஏறக்குறைய பலநூற்றுாண்டுக்களுக்கு முன்பாகவே இனத்தின் மீதான மௌனப்போர் நடந்துவருகிறது.. சில ஆய்வாளர்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேல் என்கிறார்கள்.. இதில் சுவாரஸ்யமே இனத்தின் மீதான போரை மொழிவளத்தை மெல்ல அழிப்பதில் தொடங்குகிறது.. மொழியறிவு அந்த இனத்திடமிருந்து பிடுங்கியெறியது என்பது மொத்த இனத்தின் ஆணிவேரையே அசைக்கிற செயல்..ஆம்..
ஆரியர்கள் தங்களை திராவிட இனத்தின் தாய்மொழியான தமிழை கற்றுணர்ந்து தங்களை தமிழர்களாகவே அடையாளம் படுத்தினார்கள்..
இன்னும் சொல்லப்போனால் பண்டிதர்களாக தங்களை நிலைநிறுத்தினார்கள்..மெல்ல சமஸ்கிருத சொற்களை திணித்து தமிழை இரண்டாம் நிலை மொழி/சொற்களாக்கினார்கள்..
இப்போது மொழி மீதான தாக்குதலில் நேரடியாகவே இறங்க தொடங்கிவிட்டார்கள்..
சில பள்ளிகளில் தமிழ் மொழியே இல்லை விருப்பபாடமாககூட மாணவர்களிடம் கொண்டு சேர்பதில்லை இதை ஆட்சியாளர்களும் உணரவில்லையென்பதுதான் பெரும்சோகம்..
ஒருவரின் அடையாளம் மதமோ பிரிவோ ஜாதியோ அல்ல மாறாக ஒருவரை இனம்கொள்ள அவரின் இனம் மொழி முக்கியம்.. ஒரு இனத்தில் பல்வேறு மொழிவடிவங்கள் காணப்படலாம் ஆனால் இனம் மட்டுமே ஒருவரின் அடையாளம்..
ஒருவரின் அடையாளத்தை அழிப்பதென்பது இனஒழிப்பேயாகும்..
..
ஆரம்பம் தொட்டே தமிழ் மொழி மீதான தாக்குதல்களை மிக கச்சிதமாக செய்துவந்திருக்கிறார்கள்.. அவர்கள் பேசுகிற எழுதுகிற மொழியாக அதாவது வழக்குமொழியாக தமிழை கொண்டிருந்தாலும் அதை நீசபாஷை எனச்சொல்லி தங்களின் இனப்பற்றை முன்னெடுத்தார்கள்.. இயற்கையை மட்டுமே வணங்கி வாழ்ந்த ஒரு இனத்தின் மீது விக்ரஹ வழிபாடு எனச்சொல்லி கடவுளை புகுத்தி அவனிடம் பேசுகிற /சொல்கிற மொழியாக தங்களின் இனமொழியை கொண்டுவந்தார்கள்..
..
அவர்களின் நோக்கம் இதுதான் அது நீண்டகால போர்முறையில் இனத்தின் மீதான தாக்குதல் ..அது கடைசியில் இனத்தின் தாய்மொழி மீது கொண்டு சேர்க்கும்.. இப்போது தமிழை இரண்டாம்தர மொழியாக்க அல்லது பிறமொழியை திணிக்க செய்கிற வழிகள் எல்லாம் இனத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கும்..
..
இப்போது புரிந்திருக்கும்.. தமிழ்மொழி மீதான தாக்குதல் எவ்வளவு வலிமையானதென்று.. ஒரு மொழியின் வளத்தை அழிக்க அவர்களின் கலாச்சாரத்தை அழித்தொழிக்க அல்லது பிற கலாச்சாரத்தை திணிக்கவேண்டும்.. அவர்களின் பண்பாட்டு மரபுகளில் இடைசொருகல்களை நிகழ்த்தி புதிய பண்பாட்டு சுவடுகளை உருவாக்கினால் மெல்ல இனத்தின் மீதான தாக்குதலை அது தானே செய்துக்கொள்ளும்..
..
மொழி இனத்தின் மீதான தாக்குதல் ஒருவனின் முகத்தையே மாற்றிவிடும்..
..
#இனம்_மொழிகாப்போம்_உணர்வுகொள்வோம்..
..
ஆலஞ்சி மன்சூர்
Saturday, September 24, 2016
மேடம் ஜெயா
சிங்கப்பூர்...
செய்திகள் பலவாறு வந்தடைகிறது எது உண்மை எது அதிகாரபூர்வ அறிவிப்பு என்று யாருக்கும் தெரியாது சசிகலாவை தவிர..
எதிரிகள் யோசனை சொல்கிறார்கள் கூட இருப்பவர்கள் சரியான தகவலை தராமல் எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள்.. சில தொலைபேசி அழைப்பில் மூன்று நாளைக்கு தேவையான அத்திவாசிய பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள் என சொன்னதாக சில சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்கள்..
மருத்துவமனை நலமாக உள்ளதாக அறிக்கை தந்துவிட்டு இன்று வீட்டுக்கு திரும்புவார் என சொன்னதில் உண்மையில்லை..ஏனெனில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் சொல்கிறது..
..
சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பின் தேதியை வரும் நாட்களில் உச்சநீீதிமன்றம் அறிவிக்க இருக்கிறது திங்கட்கிழமை தேதி குறிப்பிடலாம் என மூத்தபத்திரிக்கையாளர் சொல்கிறார்.. அதற்குள் உடல்நிலையை காரணம் காட்டி சிங்கப்பூர் சிகிச்சையென சென்றுவிட்டால் தீர்ப்பின் தேதியை மாற்றலாம் அதற்குள் சிறிய அவகாசம் கிடைக்கும்.. நீதிபதிகள் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு வேறொருவர் வரகூடும் என சொல்லப்படுகிறது..
நிறைய வதந்திகளும் கூடவே பொய்களும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த சந்தேகங்களை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது..
..
ஜெயலலிதா அரசியல் வாழ்வு நிறைய மர்மங்கள் நிறைந்த திகில் கதையைபோலதான் இருக்கிறது..யாருமே அறிந்திட கூடாதென்பதில் அதிகவனம் செலுத்தப்படுகிறது.. எப்போதுமே இவரது அரசியல் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருந்ததில்லை.. காற்றினில் வரும் செய்திகள் மட்டுமே..
..
மற்றவர்கள் உடல்நிலையை கிண்டல் செய்து ரசித்தவர் பின்னாளில் நமக்கு வருமென அறியாமல் போனார் .. கட்டவண்டி சக்கரநாற்காலி என்றெல்லாம் பேச கேட்டவர் இப்போது வரும் சேதிகளை பார்க்கும்போது உண்மையில் வருத்தமே வருகிறது..
கலைஞர் விரைந்து குணமடைய வேண்டி விழைகிறார்.. #இன்னாசெய்தாரை...
..
எல்லாவற்றையும் நம்பவைக்க இரும்புத்திரை அமைக்கப்பட்டு அதில் வாழ்வது அவ்வளவொன்றும் சுகமான செய்தி இல்லை..
யாரோ இயக்குகிறார்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Friday, September 23, 2016
ஆட்டுவித்தார்..
#ஆட்டுவித்தார்...
..
சென்னை அப்போலோவில் முதல்வர்.. அமைச்சர்கள் மற்றும் கட்சியினருக்கு என்ன செய்யவேண்டும் எதை செய்யவேண்டுமென கட்டளையிடும் அதிகார மையமாக தமிழச்சி சசிகலை #மகிழ்ச்சி..
..
முன்பெல்லாம் மறைமுகமாக அல்லது சொல்லப்படாமல் நடந்தது வந்தது வெளிப்படையாகவே நடந்துவருகிறது.. இதை ஊடகங்கள் பெருமை பொங்க செய்தியாக வெளியிடுகின்றன.. வெட்கம் ..
மிகபெரிய செல்வாக்கான இடத்தில் அமர்ந்திருந்தாலும் அரசு அதிகாரத்தில் தலையிடுவதை யாரும் கேள்வி கேட்கவில்லை.. பாண்டே போன்ற.. ஜனநாயகத்தில்..? நம்பிக்கையுள்ள நேர்மையான..? பத்திரிக்கையாளர்கள் தலையிடலாமா என விவாதிக்கவில்லை.. கட்சிகாரனுக்கு எந்த அறிவுரையாவது சொல்லட்டும்...அது அவர்களது சொந்த கட்சி விடயம். அமைச்சர்களை கூட கட்சிக்காரனாக கருதிக்கொள்ளலாம் உயர் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கிறார் என்றால் இது கண்டிக்கதக்க செயல்..
..
மன்னார்குடி சசி நேரடியாக பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் எந்த ஆட்சேபனையுமில்லை.ஆனால் மறைமுக தலையீடு என்பது நாளை தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் எளிய வழி.. முன்பு இவர் மீது வழக்கு தொடர்ந்த போது மருத்துவமனையில் இருந்துக்கொண்டே நீதிமன்ற வரமறுத்ததும் கடைசியில் ஸ்டெச்சரில் படுத்துக்கொண்டே வந்ததும் வேண்டுமானால் பெங்களுருவில் இருந்து மருத்துவரை பரிசோதனைக்கு நியமிக்கலாமென்றவுடன் நீதிமன்றத்தில் நேர்நின்றதும்.. ஞாபகம் வருகிறது..
..
மொத்தத்தில் தமிழச்சியின் பிடியில் பாப்பாத்தி என்கிற போது எல்லாவற்றையும் மீறி சிறிய சந்தோசம் வந்து போகிறது..சரியோ தவறோ மிகப்பெரிய ஆளுமையாக மன்னார்குடி #அத்தாச்சிஇருப்பதில் மகிழ்ச்சி..
#கள்ளச்சி..
..
ஆலஞ்சி மன்சூர்
Thursday, September 22, 2016
உறுதி..
சரவணன்...
டெல்லி எய்ம்ஸ் மருத்துவகல்லூரி மாணவர் சரவணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கு பிரேதபரிசோதனையில் நரம்பில் விசஊசி ஏற்றப்பட்டிருக்கிறது.. மருத்துவம் தெரிந்தவரே இதை செய்திருக்கவேண்டும் என தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது
..
ஆரம்பம் முதலே ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இதன் பின்ணணியை விசாரிக்கவேண்டுமென கூறிவருகிறார். பிற்படுத்தப்பட்டவர்கள் உயர்கல்விக்கு வரும் போது நேரிடுகிற பிரச்சனைகளில் தலையாள ஒன்று இது .. உயர்கல்வி என்பது உயர்வகுப்பினருக்கானதை போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்..
அல்லது பணம் உள்ளவர்களுக்கானதை போன்ற ஒருமாயை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.. மிகவும் சராசரி குடும்பசூழலில் இருந்து வருகிறவர்கள் மேட்டுக்குடியினரோடு போட்டி போடுவதற்குள் போதுமென்றாகிவிடுகிறது ..இதையும் மீறி நம்பிக்கையோடு போய்சேர்ந்தால் இதுபோன்ற ஆதிக்க பாசிச வெறியர்களால் வேட்டையாடபடுகிறார்கள்..
..
எங்கோ ஒருவனுக்கு நடந்ததாக நாம் கடந்து போவோமேயானால் இது மீண்டும் மீண்டும் தலைதூக்கும்.. சரவணனின் சாவிற்கு பின்னில் ஆர்எஸ்எஸ் சிந்தாத்தாவாதிகள் கொம்பு சீவியிருப்பதாக திராவிட கழகம் சந்தேகத்தை ஆரம்பம் முதலே சொல்லிவந்தது அது உண்மை என்பதை போலதான் சரவணின் பிர்தபரிசோதனை அறிக்கை விசஊசி ஏற்றி கொல்லப்பட்டிருக்கிறார் அவர் தற்கொலை செய்துக்கொள்ளவில்லையென சொல்கிறது..
..
பட்டியலினத்தவன் ராம்குமாருக்கு நடந்தது தானே என பாராமுகமாக இருக்கிறோமே அதைபோல இதிலும் பாராமுகமாக தான் கடந்து போவோமென்றால்.. இனியும். . நிறைய சரவணன்களை ராம்குமார்களை .. இடைசாதி கடைசாதியென காரணம் காட்டி அடித்தே கொல்வார்கள்...
பார்பனனும் பார்பனியமுமே வாழமுடியும் வாழ்கிற சிந்தாத்தம் என நினைக்கிறார்கள் மற்றவர்கள் அவர்களின் ஒருபடி கீழே என எண்ணுகிறார்கள்..
..
இனியும் நிறைய பேரை காவு கொடுப்போம்..
பிராமணர்கள் மட்டுமே வாழ..
உயர்கல்வி உயர்பதவி பிற்படுத்தபட்ட ஒடுக்கப்பட்டவனுக்கு மறுக்கபடுகிறது மீறி வந்துவிட்டால் வழக்கோ அல்லது தாக்குதலோ நடத்தப்படுகிறது.. ஊடகத்துறையில் விரும்பியதை செய்தால் மிரட்டபடுகிறார்கள்... இனியும் பயனில்லை..
உயர்கல்வி/ பதவிகளில் இடஒதுக்கீட்டை பெறும் வரை போராட்டத்தை கையிலெடுப்போம் நுழைவுதேர்வை ரத்துசெய்யும் வரை உறுதியோடு போராடுவோம் உறுதி கொள்வோம்
..
#பொறுத்ததுபோதும் ...
..
ஆலஞ்சி மன்சூர்
ஊடக நெறி...
திலீபன்..
இவரின் பேச்சுக்களோடும் செயல்களோடும் ஏன் கொள்கையில் கூட நிறைய முரண் இருக்கிறது..
சட்டென்று உணர்ச்சியவயப்படும் சிறுப்பிள்ளைத்தனம் காண்கிறோம்..
அவர் செயல்களை விமர்சிக்க கூட செய்யலாம் தவறில்லை.. அவரை விவாதித்திற்கு அழைப்பது மிக கொடும் செயல் என்பதைப்போல பார்பனர்கள் கத்திக்கொண்டிருக்கிறார்கள்..
..
ஏதோ இவர்களுக்கு மட்டுமே தேசத்தின் மீது பற்றுள்ளதைப் போல.. இவர்கள் மகாகவி என்கிற சுப்ரமணிய பாரதி கூட மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த மாவீரர்தான்.. நாட்டை காட்டிக்கொடுத்தவர்களில்.. ஏன் வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசியவர்களில் அதிகம் பேர் இவர்கள்தாம்.. தங்களின் உயர்வுக்காக விருந்துவைத்தவர்கள் தேசப்பற்றைப்பற்றி
இவர்கள் பேசுகிறார்கள் .
..
கருத்தோடு மோதுங்கள் அவனது செயலை விமர்சனம் செய்யுங்கள் தேசியகொடிக்கொண்டு மூக்குசிந்துபவனையும் .. காலில் போட்டு மிதித்த சங்பரிவார் கும்பலையோ கேள்வி கேட்க முடியதாவர்கள் திலீபனை கேட்கிறார்கள்..
..
திலீபனின் செயலோடு எக்காலத்திலும் ஒத்துபோக முடியாது என்பதற்காக அவரின் பேச்சை / கருத்தை செவிமடுக்ககூடாது என்பது பக்கா பாசிசம்..
திலீபனை செயலை கடுமையான கண்டித்திருக்கிறேன் அவரின் செயல்கள் இன்னமும் சரியாக #செதுக்கபடாதவைகளாகவே இருக்கிறது.. தமிழனின் மிகப்பெரிய பலவீனம் சட்டென்று உணர்ச்சியவயப்படல் ..ஒற்றுமையின்மை
எதையும் ஆழ்ந்தாராயாமல் எடுக்கும் முடிவுகள் ..
யார் எதிரி அவனின் பலவீனம் பலம் அறியாமல் இருப்பது..
..
மேக்கப் போடும் பெண்கள் விபச்சாரிகள் என்று பேசுகிறான் பாஜகவின் நாராயணன் .. அப்போது கடுமையாக எதிரிக்கவோ மன்னிப்பு கேட்க சொல்லவோ முடியாதவர்கள் ஒட்டுமொத்தமாக பெண்களை கேவலமாக பேசியவனை சமூகஆர்வலர் கல்வியாளர் என்றழைக்கிறீர்..இதையெல்லாம் மௌனமாக கடந்து செல்கிறவர்கள்.. இப்போது வாய் திறக்கிறார்கள்
ராம்குமார் Accused குற்றம்சாட்டப்பட்டவராம்.. சங்கர்ராமன் கொலைவழக்கில் ஜெயேந்திரன் கூட தான் Accused
அப்போது ஏன் வாய்மூடியிருந்தீர்..
..
எவரை பேசகூடாது எனச்சொல்ல எவனுக்கு உரிமையில்லை அவன் தவறாகவே பேசினாலும்..
பேச்சை தவறென்று சொல்வோமே தவிர... அழைக்கவோ பேசவோ கூடாதென்பதை ஏற்கமுடியாது..
..
ஆலஞ்சி மன்சூர்
Wednesday, September 21, 2016
உள்ளாட்சியில் பெண்கள்
உள்ளாட்சி.. ஜனநாயகம்
மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள ஜனநாயகம் தந்த சிறந்த அமைப்பு உள்ளாட்சி அதிகாரம்..
நிறைய ஆளுமைகள் இங்கிருந்துதான் பயிற்சி பெற்றார்கள்.. பெரியார் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளின் பயிற்சிகூடமாக இருந்தது..
உள்ளாட்சி அமைப்புகள்..
..
அதிகாரத்தில் பெண்கள் பங்கு மிக அவசியம் என்றார் பெரியார்.. நிறைய பெண்கள் அதிகாரத்தில் பங்குபெறவேண்டுமென்பதற்காகதான் நீண்டகாலமாக சட்டமன்ற நாடாளுமன்றங்களில் அவர்களுக்குரிய பங்கை 33 விழுக்காட்டை தரவேண்டுமென காங்கிரஸ் உட்பட பிரதான கட்சிகள் விரும்பியும் இன்னும் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.. மகளிர் இடஒதுக்கீட்டைப்பற்றி பாஜக அரசு வாய் திறக்கவே மறுக்கிறது.. வேலைக்கு போகிற பெண்கள் விபசாரிகள் என்கிற ஆரிய/ ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பின் தொடரும் பாஜக அரசால் மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டுவர முடியாது.. காணல் நீர் தான்..
..
உள்ளாட்சிகளில் 33 விழுக்காட்டை திமுக அரசுதான் கொண்டு வந்து இந்தியாவிற்கு வழிகாட்டியது.. இன்றைக்கு இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மகளிருக்கென பிரதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறதென்றால் அது திராவிடத்தின் சாதனை..
..
நிறைய பேர் இந்த கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.. பெண்கள் பதவி்க்கு வந்தாலும் அவரை பின்னின்று இயக்குவது அவர்கள் குடும்பத்து ஆண்கள்தான் .. சரிதான் அதற்காக இதை தவறென்று சொல்லமுடியாது..பல இடங்களில் இதுபோன்று நடக்கிறது குறிப்பாக ஊராட்சித்தலைவர் கவுன்சிலர் .. யூனியன் சேர்மன் போன்ற பதவிக்கு வருகிறவர்களின் குடும்பத்து ஆண்கள் ஏறக்குறைய பதவியை கையிலெடுத்து ஆடுகிறார்கள்.. நிறைய பெண்கள் சுயமாகவோ சுதந்திரமாகவோ செயல்பட விரும்பமிருந்தாலும் அதற்கான தகுதியிருந்தாலும் அனுமதிப்பதில்லை..
ஒரு சிலர் சுயமாக கம்பீரமாக செயல்படுகிறார்கள் என்பதையும் மறந்து கடந்துவிடமுடியாது..
..
இங்கே நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கூட சுதந்திரமாக சியசிந்தனையோடு செயல்பட முடியவில்லை என்கிற உண்மையை நாம் உணரவேண்டும்.. அதிகார பகிர்வு அல்லது பங்கு என்பது முழுமையானதாக இருக்கவேண்டும்..
சென்னை போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த
மாநகராட்சிகளை பெண்கள் அலங்கரிக்கபோய்கிறார்கள் எனும் போது உண்மையில் பெரும் #மகிழ்ச்சி.
..
எல்லா கட்சி மற்றும் அமைப்பு .. அமைப்புசாரா சுயங்கள்.. பெண்களை முழுமையான தனிச்சையாக செயல்பட அனுமதிக்கவேண்டும்..அவர்கள் மிகசிறந்த முறையில் செயல்படமுடியும் என்ற நம்பிக்கை கொள்ளவேண்டும்.. எந்த குறிக்கீடும் இல்லாமல் இருந்தால் மிகசிறந்தமுறையில் செயல்படுவார்கள்.
அப்போதுதான் பெரியார்கனவு நினைவானதாக பொருள்..
..
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் என்ற #கவிமணியின் வரிகளோடு..
#வாழ்க_பெண்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Tuesday, September 20, 2016
காவிரி கலைஞர்
காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்று வாரியமும் 4 வாரத்தில் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கதக்கது.
இதனை அமைப்பதற்கு அடிப்படையான
#காவிரிநடுவர்மன்றம்...
முதலில் கலைஞருக்கும் மறைந்த பிரதமர் வி.பி.சிங்கிற்கும் காவிரிக்காரன் என்ற வகையில் #நன்றிகள்..
..
ஆட்சியாளர்கள் ஒன்று நினைக்க அது வேறொன்றாதில் மகிழ்ச்சி.. காவிரி நடுவர் மன்றம் அமைத்தபோது இதனால் ஒரு பயனுமில்லை .. என்று கூப்பாடு போட்டவர் இடைக்கால நதிநீர் பங்கீடுயாக 205 டிஎம்சி யை வழக்கின் இறுதி தீர்ப்பு வரை செயல்படுத்தவேண்டுமென்ற நடுவர்மன்ற ஆணையை கேலிசெய்தவர்.. பின்னாளில் ஆட்சிக்கு வந்தபோது இறுதி தீர்ப்பை வந்ததால் காவிரித்தாயானார்..
..
89 ல் நடுவர்மன்றம் அமைத்தற்கு தஞ்சையில் விவசாயிகள் தங்கள் நன்றியை தெரிவிக்கும் பொருட்டு திலகர்திடல் என்று நினைக்கிறேன் .. விழா எடுத்தார்கள்.. அப்போது பேசிய கலைஞர் எனக்கு சேர்த்துதான் மன்றம் அமைத்தது என்றார்..
அந்த விழா வி.பி .சிங்கிற்கான பாராட்டுவிழாவாக மாற்றினார்.. உண்மையில் சமூகநீதிக்கான செயலாக்கங்களை திரு.வி.பி சிங் பிரதமராக இருந்தபோதுதான் நடந்தது.
மண்டல் பரிந்துரை... கிடப்பில் போட்டிருந்தார்கள்..
பார்பனர்கள் எதிர்ப்பை காரணம் காட்டி.. நியாயமாக பிற்படுத்தபட்ட மக்களின் உரிமைகளையும் களவாடிக்கொண்டிருந்தார்கள் ..
27 சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கிய பிறகுதான் கொ்சமேனும் எல்லாமதங்களிலும் உள்ள பிற்படுத்தபட்டோர் தங்களுக்கான இடஒதுக்கீட்டை பெற முடிந்தது .. மாணவர்களை தூண்டி தீக்குளிப்பெல்லாம் நடத்தினார்கள் கடைசிவரை உறுதியோடிருந்து நிறைவேற்றினார்.
அதற்காக பதவியை இழந்தார்..
ஆனால் மனநிம்மதியோடு போகிறேன் என்றார்..
..
காவிரி பிரச்சனை உணர்வுபூர்வமாக மாற்றி அதை அரசியலாக்கும் லாபம் நேடும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியலை கடந்து ..
நியாயமாக பல்வேறு கட்டங்களிலும் போராட்டமும் கவனஈர்ப்பும் தந்து போராடியவர்கள் நிறைய உண்டு.. கல்லெறிந்தவன் ஒருவன் காயை பொறுக்கினவன் என்பதை போல எதையுமே செய்யாமல் செய்த நல்லவிடயங்களை அரசியலுக்காக குறைகூறியும் திட்டியும் ..வசைபாடியும் நான்காம்தர அரசியல்செய்து .. கடைசியில் ஆட்சியில் இருந்தபோது இறுதி தீர்ப்பு வந்ததால் .. காவிரித்தாய் பொன்னியின் செல்வி என்றெல்லாம் பட்டம் பெற்றுக்கொண்ட ஜெயலலிதாவை .. சிறிய நகைப்போடு கடந்து போவோம்..
..
காவிரி நடுவர் மன்றம் அமைய காரணமான
இருபெரும் தலைவர்களைகளுக்கும் நன்றி சொல்வோம்..
..
ஆலஞ்சி மன்சூர்
கலைஞர் எனும் பெருமகன்
கலைஞர்
என்ற ஒருவார்த்தை
தமிழகத்தை
ஆட்டுவிக்கும்,
ஆடவைக்கும்,
அலங்கரிக்கும்,
சுடர்தரும்,
சுட்டெரிக்கும்,
சுகம்தரும்,
கவிசொல்லும்,
கனிவுதரும்,
காப்பாற்றும்,
எதிரிக்கும்வாழ்வுதரும்
அன்புதரும்,
அரவணைக்கும்
நெஞ்சில் ஆர்ப்பரிக்கும்..
..
கலைஞர் எனும்
கிழட்டுசிங்கம்
வாழும்பெரியார்
வயதில்மட்டுமல்ல
சிந்தனையில்
செய்து முடிப்பதில்
அவர்
#வாழும்பெரியார்
..
கலைஞருக்கும் ஸ்டானினுக்கும் பிரச்சனை என சிலர்.. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் இவர்களின் சூழ்ச்சி செய்வார்கள்.. one India இன்றைக்கு கனிமொழியை முன்னிறுத்தி செயல்படுவதாக சொல்லி தங்கள் அரிப்பை தீர்த்துக்கொண்டிருக்கிறது... மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு காலதாமதமாக வந்தாராம்.. கலைஞரை கலக்காமல் வாசனோடு பேசினாராம்.
..
கலைஞர் பெருமகனும் .. பேராசிரியர் பெருந்தகையும் மிக தெளிவாக பலமுறை சொல்லிவிட்டார்கள்.. இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த ஸ்டாலினே தகுதியானவர்.. ஏற்கனவே அண்ணனை கொம்பி சீவி அது அடிமாடாய் போனதால்.. வேறொன்றை கையிலெடுக்கிறார்கள்.. கலைஞர்தான் தலைவர் வழிநடத்துவார் இதில் எள்ளளவும் சந்தேகமில்லை..
ஆனால் காலமும் உடல்நிலையும் ஒத்துழைக்க மறுக்கிறது அதனாலேயே ஸ்டாலின் எல்லாவற்றிலும் முன்னெடுக்கப்படுகிறார்.. கலைஞரின் அறிவோடு..
..
இன்றைக்கும் கலைஞரின் சொல்தான் எழுத்துதான்
தமிழகத்தை விழிக்கசெய்கிறது..
ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்துவோருக்கு கொலைகளும், தற்கொலைகளும் சாதாரணம்தான் கலைஞர்..
இரண்டடி கூர்மை.. கிழித்து தொங்கவிடுகிறது..
இந்த கிழவனின் செயல்தான் தமிழகம்..
..
கலைஞர்_தமிழர்களின்அரசியல்_வாழ்வியல்
..
ஆலஞ்சி மன்சூர்
Monday, September 19, 2016
ஆடுகள் ஜாக்கிரதை
கடக்கநினைக்கிறேன்
வம்பிற்கு இழுக்கிறீர்..
ஆசை காட்டி.
என்னை
வலையில் சிக்கவைக்கிறீர்
..
நானறிவேன்..
வழிநெடுக
ஓநாய்களின் ஊளையிடல்
கடித்து குதறும்..
ரத்தம் குடிக்காமல் விடாது..
..
பார்பதற்கு கொஞ்சம்
அழகானதால் ..
ரசித்து தொலைத்தேன்..
பின்னால்...
மின்சாரகம்பிகளை
கடக்கவேண்டியிருக்குமென
அறியாமல் போனேன்..
..
கறுப்பாய்..
கொஞ்சம் கலையாய்
உழைத்து உழைத்து
திமிரேறிய உடலாய்
இருந்தது குற்றமா..
பார்த்ததும் ரசித்ததும்..
கொஞ்சம் சிரித்ததும்
அவ்வளவு பெரிய
இழிசெயலா..
..
இழிவானவன் என்கிறீர்..
உங்கள் செயல்
அதனினும் இழிவானதை
யாரறிவார்..
சிலநேரம் சில்லறை
சில்மிஷங்கள்
சிக்கலாய் போகுமென..
யாரறிவார்.
..
பாவங்களின்
தலைகள் மீது
உங்கள் பாதங்கள்..
சிறிய நூல் கொண்டு
#சிரச்சேதம் செய்யலாம்
இரும்பு கம்பிகளை
சிறிய நூல்கொண்டு
அறுக்கலாம்
இங்கே....
நீதி நூல்களை
சிறிய நூல் கொண்டு
கட்டலாம்..
#நூல்_வலிமையானது..
..
வழிநெடுக
ஓநாய்கள்...
..
#ஆடுகள்_ஜாக்கிரதை…
**************************
ஆலஞ்சி மன்சூர்
மௌனம் கலைப்பாரா
இங்கே ஒருவிடயம் திரும்ப திரும்ப மறைக்கப்படுகிறது..
தமிழ்நாட்டில் நிகழும் கொலை கொள்ளைகள் .. சர்வசாதாரணமாக நம்மில் கடந்துபோகிறது.. இவையனைத்தும் விவாதிக்கபடுகிறது ஆனால் மிக எச்சரிக்கையோடு உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரை விமர்சிக்கவோ அல்லது ஏன் விளக்கம் தரவில்லையென்று கேட்கப்படுவதே இல்லை..
..
இந்தியாவிலேயே முதல்முறையாக மின்சார வயர் கடித்து சிறையில் நீதிமன்ற காவலில் இருந்தவர் இறந்துபோகிறார் .. சம்பவத்தின் உண்மைநிலை எதுவாகவோ இருக்கட்டும் .. நிறைய சந்தேகங்கள் எழுப்பிய ஒரு வழக்கில் கைது செய்யபட்டவரை இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்திருக்கிறார்களா.. சிறை அதிகாரி போனில். பேசியது வெளியில் வந்திருக்கிறது அதில் உடல் நிலை சரியில்லையென ராயபேட்டைக்கு அழைத்துச்செல்வதாக கூடவே சிறை மருத்துவரும் செல்வதாகவும் இந்த தகவலை கைதியின் குடும்பத்தாரிடம் தெரியபடுத்தியதாக சொல்கிறார்..
..
இதுவரை உள்துறையின் அமைச்சர் என்ற முறையில் முதல்வர் விளக்கம் அளிக்கவில்லை.. விரைந்து பிரேதபரிசோதனை என நகர்வதை உயர்நீதிமன்ற தடை செய்திருக்கிறது..
ஏற்கனவே சிபிஐ விசாரணை கோரியபோது அதற்கு அவசியமில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தது ஒரு உயிரின் முடிவிற்கு கொண்டுவந்திருக்கிறது..
சுவாதி கொலையில் மர்மமுடிச்சுக்கள் இன்னும் அவிழவில்லை.. கொலையுண்ட சுவாதி தரப்பினர் விசாரணைக்கு உட்படுத்தபடவே இல்லை வழக்கில் ஆர்வம் காட்டவில்லை மாறாக குற்றம் சாட்டபட்டவர் தரப்பு தொடர்ந்து சிபிஐ விசாரணை வேண்டுமென்றும் ...குற்றத்தின் பின்ணணி குறித்த தகவல்களை தந்துக்கொண்டே இருந்தது.. வீணான சந்தேகங்கள்.. நிறைய மர்மங்கள் புதிரான விடயங்கள்
இதற்கெல்லாம் முடிவு கட்ட அரசே சிபிஐக்கு மாற்றி உத்தரவிடவேண்டும்.
..
இனியேனும் மௌனம் கலைப்பாரா..
..
ஆலஞ்சி.மன்சூர்
பெரியார்
#பெரியார்..
தந்தை பெரியார் பொதுவாழ்வில் மிக தூய்மையானவராக இருந்தார்.. தன் பூர்வீக சொத்திலிருந்து வரும் வருவாயைதான் தன் செலவுக்கு எடுத்துக்கொண்டார் தனக்கு தருகிற பணம் மற்றும் பொருளை டிரஸ்ட்டுக்கே தந்தார் ..
அதிலிருந்து நயாபைசாகூட செலவிற்கு எடுத்துக்கொள்ளாதவர்..
பதவி தன்னை தேடிவந்த போது கூட அதை மறுத்தார் 1940 மற்றும் 42 கவர்னர்ஜெனரல் வீடுதேடி வந்து சென்னை மகான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற போது மறுத்தவர் பெரியார்..
நெருப்பு குச்சிகூட குளிர்ச்சிதரலாம்
வேப்பெண்ணை கூட தேன் ஆகலாம்... பதவிக்கு வந்தவன் யோக்கியனாக இருக்கமுடியாது /இருக்கவிடாது இந்த சமூக கட்டமைப்பு என்றார் ..
..
மற்றவர்களை மரியாதை செய்ய தவறியதில்லை வயதில் சிறியவர்களை கூட வாங்க என்றுதான் அழைப்பார்.. இன்றைக்கு சிலர் மிக மோசமாக விமர்சிக்கிறார்கள்..நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடினால் எழுந்துநிற்பார் குங்குமம் திருநீறு கொடுத்தால் கூட வாங்கிக்கொள்ளும் பழக்கம் உடையவர்.. மற்றவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பவர்.. நான் எதிர்ப்பது அவரது கொள்கையே தவிற அவர்களை அல்ல என்றவர்..
..
கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல ஜாதிய ஒழிப்பே எனது பிரதான கொள்கை ..ஜாதிய ஒழிக்க வழிதேடியபோது அது மதத்திற்கு உட்பட்டதை கண்டேன் மதத்தை ஒழிக்கலாமென்றால் அது வேதத்திற்கு உட்பட்தென்றார் வேதம் கடவுளுக்கானதென்றார் அதனால் தான் கடவுளை எதிர்த்தேன்.. ஜாதி மரக்கிளையை போன்றது அதைவெட்டி பிரயோசனமில்லை மரத்தின் ஆணிவேரான கடவுளை எதிர்த்தேன் எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறேதும் பகையில்லை என்றார்.. கடவுள் பெயரைச்சொல்லி உன்னையும் என்னையும் பிரிக்கும் ஆரியத்தை எதிர்க்கிறேன்..
ஜாதியை ஒழிக்க எவையெல்லாம் தடையோ அதையெல்லாம் எதிர்ப்பேன் மனிதனை சமமாக நடத்திட வேண்டும் மானமுள்ள அறிவுள்ளவனாக மாற்றவேண்டுமென்பதே எனது நோக்கம்/கொள்கையென்றார்..
..
தன்னை பற்றி நானொன்றும் யோக்கியனில்லை
மைனர் வாழ்வு வாழ்ந்தவன் தான் .. மதுஅருந்ததில்லை பிறருக்கு வாங்கி கொடுத்திருக்கிறேன் .. வியாபாரியாக இருந்தபோது பொய் பேசியிருக்கிறேன் ஆனால் பொதுவாழ்விற்கு வந்தபிறகு #பொய்பேசியதில்லை என்று வெளிப்படையாகவே பேசியவர்..
பெரியார் திறந்த புத்தகம்..
அறிவுச்சோலை .. இன்றைக்கு கொஞ்சமேனும் மரியாதையோடு இந்த தமிழ்சமூகமும் நாடும் இருக்கிறதென்றால் அதற்கு பெரியார் மட்டுமே காரணம்.. இல்லையெனில் பீகாரைப்போல உ.பி.யை போல ஆரியர்களுக்கு அடிமையாகளாகதான் வாழவேண்டியிருக்கும்..
..
#பெரியார்_மாபெரும்மனிதர்..
..
ஆலஞ்சி மன்சூர்
Sunday, September 18, 2016
பெரியார்
#பெரியார்..
தந்தை பெரியார் பொதுவாழ்வில் மிக தூய்மையானவராக இருந்தார்.. தன் பூர்வீக சொத்திலிருந்து வரும் வருவாயைதான் தன் செலவுக்கு எடுத்துக்கொண்டார் தனக்கு தருகிற பணம் மற்றும் பொருளை டிரஸ்ட்டுக்கே தந்தார் ..
அதிலிருந்து நயாபைசாகூட செலவிற்கு எடுத்துக்கொள்ளாதவர்..
பதவி தன்னை தேடிவந்த போது கூட அதை மறுத்தார் 1940 மற்றும் 42 கவர்னர்ஜெனரல் வீடுதேடி வந்து சென்னை மகான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற போது மறுத்தவர் பெரியார்..
நெருப்பு குச்சிகூட குளிர்ச்சிதரலாம்
வேப்பெண்ணை கூட தேன் ஆகலாம்... பதவிக்கு வந்தவன் யோக்கியனாக இருக்கமுடியாது /இருக்கவிடாது இந்த சமூக கட்டமைப்பு என்றார் ..
..
மற்றவர்களை மரியாதை செய்ய தவறியதில்லை வயதில் சிறியவர்களை கூட வாங்க என்றுதான் அழைப்பார்.. இன்றைக்கு சிலர் மிக மோசமாக விமர்சிக்கிறார்கள்..நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடினால் எழுந்துநிற்பார் குங்குமம் திருநீறு கொடுத்தால் கூட வாங்கிக்கொள்ளும் பழக்கம் உடையவர்.. மற்றவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பவர்.. நான் எதிர்ப்பது அவரது கொள்கையே தவிற அவர்களை அல்ல என்றவர்..
..
கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல ஜாதிய ஒழிப்பே எனது பிரதான கொள்கை ..ஜாதிய ஒழிக்க வழிதேடியபோது அது மதத்திற்கு உட்பட்டதை கண்டேன் மதத்தை ஒழிக்கலாமென்றால் அது வேதத்திற்கு உட்பட்தென்றார் வேதம் கடவுளுக்கானதென்றார் அதனால் தான் கடவுளை எதிர்த்தேன்.. ஜாதி மரக்கிளையை போன்றது அதைவெட்டி பிரயோசனமில்லை மரத்தின் ஆணிவேரான கடவுளை எதிர்த்தேன் எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறேதும் பகையில்லை என்றார்.. கடவுள் பெயரைச்சொல்லி உன்னையும் என்னையும் பிரிக்கும் ஆரியத்தை எதிர்க்கிறேன்..
ஜாதியை ஒழிக்க எவையெல்லாம் தடையோ அதையெல்லாம் எதிர்ப்பேன் மனிதனை சமமாக நடத்திட வேண்டும் மானமுள்ள அறிவுள்ளவனாக மாற்றவேண்டுமென்பதே எனது நோக்கம்/கொள்கையென்றார்..
..
தன்னை பற்றி நானொன்றும் யோக்கியனில்லை
மைனர் வாழ்வு வாழ்ந்தவன் தான் .. மதுஅருந்ததில்லை பிறருக்கு வாங்கி கொடுத்திருக்கிறேன் .. வியாபாரியாக இருந்தபோது பொய் பேசியிருக்கிறேன் ஆனால் பொதுவாழ்விற்கு வந்தபிறகு #பொய்பேசியதில்லை என்று வெளிப்படையாகவே பேசியவர்..
பெரியார் திறந்த புத்தகம்..
அறிவுச்சோலை .. இன்றைக்கு கொஞ்சமேனும் மரியாதையோடு இந்த தமிழ்சமூகமும் நாடும் இருக்கிறதென்றால் அதற்கு பெரியார் மட்டுமே காரணம்.. இல்லையெனில் பீகாரைப்போல உ.பி.யை போல ஆரியர்களுக்கு அடிமையாகளாகதான் வாழவேண்டியிருக்கும்..
..
#பெரியார்_மாபெரும்மனிதர்..
..
ஆலஞ்சி மன்சூர்
Saturday, September 17, 2016
கடவுள் மறுப்பு பற்றி..
கடவுள் மறுப்பு பற்றி பெரியாரே சொல்கிறார்..
..
உண்மையில்
#கடவுள்_மறுப்பு எனது கொள்கையல்ல..
ஜாதி ஒழிப்பே எனது பிரதான கொள்கை..
ஜாதியை ஒழிக்கவே வழி தேடினேன்.
அது மதத்துக்குக் கட்டுப்பட்டது என்றார்கள்.எனவே மதத்தை ஒழிக்க ஆராய்ந்தேன்..அது வேதத்துக்குக் கட்டுப்பட்டது என்றனர்..வேதத்தை ஒழிக்க முற்பட்டேன். அது கடவுளுக்குக் கட்டுப்பட்டது என்றார்கள்..
ஜாதி எனும் மரத்தின் கிளைகளை வெட்டினால் அது மீண்டும் மீண்டும் வளரும்..எனவே ஜாதி மரத்தின் அடிவேரான கடவுளை அழிக்க முற்பட்டேனே ஒழிய,
எனக்கும் உங்கள் #கடவுளுக்கும் வேறெந்தப் பகையுமில்லை..
ஜாதி ஒழிப்புப் பணியில் எவையெல்லாம் குறுக்கே வந்து தடை ஏற்படுத்துகிறதோ,அவற்றை எல்லாம் அழித்து, இந்த சமுதாயத்தை
மானமும் அறிவுமுள்ளதாக மாற்றவும்,
"மனிதனுக்கு மனிதன் #ஜாதிய ஏற்றத்தாழ்வில்லாமல் வாழச் செய்வதே #என்லட்சியம்".
- தந்தை பெரியார்
பெரியார்
#பெரியாரும்_பெண்ணீயமும்..
பெரியார் என்றவுடனேயே கடவுள் மறுப்புமட்டும் நினைவிற்கு வந்தால் இன்னும் அறிவு வளரவில்லை அல்லது பெரியாரை அறியவில்லை என்று பொருள்..
சமகாலத்தில் இந்த நூற்றாண்டின் மாபெரும் சமூகசிற்பி .. ஒரு இனத்திற்கானவராக மட்டுமே பார்க்க முடியாது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கானவர்.
..
பெரியாரை சிறிய கூட்டுக்குள் அடைத்துவிட முடியாது.. மனிதனை சுயமரியாதையோடு வாழவேண்டுமென்று வலியுறுத்தியவர்.. நமஸ்காரம் என்ற ஆதிக்க சொல்லையும் கும்பிடறேன் சாமி என்ற அடிமைத்தனத்தையும் அகற்றி #வணக்கம் சொல் என சொன்னவர்..
கல்வியை அனைவரும் கற்கவேண்டும் அது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானதல்ல என சொல்லி அதற்கான கட்டமைப்பை உருவாக்கியவர்..
எந்தயொரு சமூகமும் பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் வளர்ச்சியடைய முடியாதென்றவர்.. பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தியவர்..
உங்கள் ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள்.. உங்களூரில் அதற்கான வசதியில்லாவிட்டாலும் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. பெண்கள் கல்வி பெற்றால் தான் இந்த சமூகம் மூடபழக்கங்கள் அறியாமையிலிருந்து விடுபடும் என நம்பினார்..
வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரிகள் என்ற சங்கராச்சாரியாருக்கு
பெண்கள் வேலைக்கு சென்று சொந்தகாலில் நிற்கவேண்டுமென்றார்..
பெண்களை பொட்டுகட்டி தெய்வதொண்டு செய்யவேண்டுமென்றவருக்கு உங்கள் வீட்டுபெண்களை தெய்வதொண்டை செய்ய சொல்லுங்கள் என பதிலடி தந்தவர்.
..
எழுத்தாளர் சிவசங்கரி நான் கணவரை இழந்த பிறகு எனது சமூகத்தால் குடும்பத்தாரால் ஏறக்குறைய ஒதுக்கிவைக்கப்பட்டேன் என் வாழ்வே முடிந்தது போல்தான் இருந்தது .. பெரியாரின் எழுத்தும் சிந்தனையும் தான் இந்த சமூகத்தில் என்னால் வாழ்ந்துகாட்டமுடியுமென்ற நம்பிக்கையை அளித்தது என்றார் அதை அவர் #பெரியார்திடலுக்கே வந்து சொன்னார்..
..
இன்றைக்கு பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என சட்டம் வந்திருக்கிறதென்றால்.. அதை இந்தியாவிற்கே வழிகாட்டியாக கலைஞர் தமிழகத்தில் கொண்டுவந்து அதை பிற மாநிலங்களும் ஏற்று நடைமுறை படுத்தியதென்றால் அது பெரியாரின் விதைத்து.
ஆம் பெரியாரின் சிந்தனைக்கு சட்டவடிவம் தந்தார் கலைஞர்..
இன்றைக்கு பெண்கள் எல்லாதுறையிலும் மிளிர முடிகிறதென்றால் பெரியார் ஊட்டிய உத்வேகம்..
எல்லா மத, ஜாதியிலும், பெண்களை அடிமைப்படுத்திருந்தார்கள் சம்பளமில்லாத வேலைக்காரி பிள்ளை பெறும் இயந்திரம் அவ்வளவுதான்.. ஏறக்குறைய அடிமைசங்கிலியால் பிணைத்திருந்தார்கள்.. சாஸ்திரம் சம்பிரதாயம் மதகோட்பாடு, என கட்டுபாடுகள்.. தீட்டுவந்த பெண்கள் வெளியே வருவதால்தான் லோகம் கஷ்டபடுகிறது என்றெல்லாம் சொன்னார்கள் இப்படிதான் உடுத்தவேண்டுமென்று மதநெறிகள் .
எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விருப்பமானதை சௌகரியமானதை அணிந்துக்கொள் ..என்ற நம்பிக்கையை விதைத்தவர்..
..
பெரியார்..இந்த நூற்றாண்டின்..
மிகசிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்..
..
இன்றைக்கு சிலர் ஈ.வே.ரா என்றெல்லாம் அழைக்கிறார்கள்.. என்னை மசிரு என்று கூட அழைத்துக்கொள் கவலையில்லை என்றவர்தான் பெரியார் .. இவர்களுக்கு தெரியுமா..
முதன்முதலில் பெண்கள் தான் #பெரியார் என்று அழைத்தார்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Friday, September 16, 2016
எம் எஸ்
எம் எஸ்.சுப்புலெட்சுமி..
மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமி..
இன்று நூற்றாண்டு காணும் இசைக்குயில்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த கர்நாடக இசை உலகில் கொடிகட்டி பறந்தவர்.. இசைவேளாளரில் ஒரு பிரிவினர் தாயின் பெயரையே தங்கள் பெயரோடு இணைத்துக்கொள்வர் அப்படி தன் தாயின் பெயரை இன்சியலாக்கி கொண்டு வலம் வந்தவர் எம் எஸ் சுப்புலெட்சுமி அம்மையார்..
..
கடைசிவரை மங்காத குரல் வளத்தோடு வலம்வந்தவர் தன் உதவியாளராக இருந்த சதாசிவ அய்யரை திருமணம் செய்துக்கொண்டார் .. கல்கி கிருஷ்ணமூர்த்தி விகடனிலிருந்து வெளியேறி கல்கியை துவங்க பணமில்லாமல் அல்லாடியபோது சதாசிவம் சுப்புலெட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்கவைத்தார் அதில் கிட்டிய பணம் கொண்டுதான் கல்கி உருவானது.. கல்கி சதாசிவமானார்..
..
இசை உலகில் தனி ஆவர்த்தனம் செய்தவர் இவரோடு வந்த திருமதி பட்டம்மாள் எம் எல் வசந்தகுமாரி போன்றோரெல்லாம் காலபோக்கில் விலகிவிட கடைசி வரை கச்சேரி செய்தவர்..
காற்றினிலே வரும் கீதம் இன்றும் எல்லா கச்சேரிகளிலும் எல்லா கலைஞர்களும் பாட மறப்பதில்லை.. சென்னை சங்கீத் அகாதமி என்று நினைக்கிறேன் நண்பர் சந்திரசேகரோடு சென்றிருந்தேன்.. சில கீர்த்தனங்களை தெலுங்கில் பாடிக்கொண்டிருந்தார்.. அரங்கம் சலசலப்பாக இருந்தது.. சிறிது நேரத்திற்கு பிறகு குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என்றார்.. அரங்கம் அவ்வளவு அமைதியாக ரசித்தது..
..
கலைஞர் பெருமகனோடு சிநேகம் காட்டியவர் அமைதியான வாழ்வும் அற்புதமான இசையோடு வலம்வந்தவர்.. நிறைய உயரிய விருதுகள் இவரால் பகழ்ப்பெற்றது..இன்றைக்கும் கர்நாடக இசைகச்சேரிகளில் ஒன்றிரண்டு தமிழ்பாடல்கள் ஒலிக்கிறதென்றால் அதன் முழு கிரிடிட் இவருக்குதான்.. எல்லா கச்சேரிகளிலும் தமிழ்பாடல்கள் பாடாமல் இருந்ததில்லை..
பிற்படுத்த சமூகத்திலிருந்து வந்து உயரிய இடத்தில் இசைத்துறையில் பெருவதென்பது கொஞ்சம் சிரமமான காலத்தில் அதுவும் #மூன்று_இசைபெண்மணிகளில் முதன்மையானவராய் இருந்தார்..
..
கலைஞர் மொழியில் சொல்லவேண்டுமெனில்
#இசையரசி..
#எம்எஸ்சுப்புலெட்சுமி_நூற்றாண்டு…
..
ஆலஞ்சி மன்சூர்
முழுஅடைப்பு
முழுஅடைப்பு.
கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.. சாலைகள் வெறிச்சோடி ..வீம்புக்கு இயக்கும் பேருந்துகள் கூட ஆளில்லாமல். பள்ளிகளுக்கு குழந்தைகளை வலுகட்டாயமாக அழைத்துவந்தாலும். மக்களின் ஒருமித்த உணர்வின் முன் மண்டியிட வேண்டியிருந்தது அரசுக்கு..
காரணம் ஜெயலலிதா தான் திமுக ஆட்சியில் நடந்த முழுஅடைப்பு சட்டவிரோதமென கோர்ட்க்கு சென்றவர் முதல்வர் கலைஞரே உண்ணாவிரத்தில் கலந்துக்கொள்கிறார் என்றவுடன் அவசரவழக்காய் பதிவுசெய்து முழுஅடைப்பை அரசே முன்னின்று நடத்தகூடாது என தீர்ப்பை பெற்றார்.. இப்போது திருப்பி அடிக்கிறது..
..
கர்நாடகாவில் முழுஅடைப்பு கேரளாவில் முழுஅடைப்பு என நடக்கிறதே அது அரசியல் சாசனத்தை மீறிய செயல் இல்லையா.. இங்கே தனிநபரின் உரிமைகள் பறிக்கப்படுவதாக சிலர் உயர்நீதிமன்றம் சென்று தடைபெறுகிறார்களே. ஏன் கர்நாடகாவில் பெறவில்லை.. கேரளாவில் இன்னும் பிற மாநிலங்களில் தடைபெற முடியவில்லை..
இங்கே சிலர் தங்களை தமிழர்கள் என சொல்லிக்கொள்கிற பார்பனர்கள் இதற்கெல்லாம் முட்டுகட்டை போடுகிறார்கள் ஆனால் மற்றமாநிலங்களுக்கு போனால் வாய்மூடி இருப்பார்கள்..
..
முழுஅடைப்பு பிரதான கட்சி கலந்துக்கொண்டதும் சில உதிரிகட்சிகளை களத்தில் காணோம்.. சில இடங்களை தவிர்த்து அநேக இடங்களில் இலையில் மறைந்து போனார்கள்.. இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள்..எதிர்கட்சித்தலைவர் திரு.ஸ்டாலின் உட்பட பல்லாயிரம் கணக்கில் கைதாகியிருக்கிறார்கள்.. முழுஅடைப்பும் ரயில்மறியலும் பெரியளவில் வெற்றியடைந்திருக்கிறது.. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய மாநில அரசுகள் இனியேனும் காவிரியில் தண்ணீரை பிரச்சனையின்றி வர ஆவணசெய்யவேண்டும்..
..
இன்றும் வெகுசிலர் கடைகளை திறந்திருக்கிறார்கள்..ஆளும்கட்சிக்கு ஆதரவாக.. இவர்களை இனதுரோகி என்றெல்லாம் அழைக்கமாட்டேன்.. சமூகத்தின் மீது அக்கறையில்லாதவர்கள்.. அடுத்தவனுக்குதானே காயம் வலி எனக்கில்லையே என எண்ணுகிறவர்கள்.. அவர்களை புறந்தள்ளுவோம்.. அமைதியான முறையில் உணர்வோடு உணர்ச்சிமேலிட்டு பலிகொடுக்காமல் நடக்கிற அறப்போர் ..
..
கலந்து கொண்டு கைதான அனைத்துகட்சி/அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அவர்களின்
தமிழுணர்வுக்கு நன்றி..
..
ஆலஞ்சி.மன்சூர்
Thursday, September 15, 2016
காவிரி
காவிரி பிரச்சனையில் ஆள்பவர்களை விட ஆண்டவனிடம் கேட்பது மேல் இல.கணேசன் எனும் தஞ்சாவூர்காரன்..
..
சரியாக தான் சொல்லியிருக்கிறார் ஆண்டவனை நம்புங்கள் தமிழகத்தை ஆண்டவனை நம்பி கேளுங்கள்.. கலைஞர் பெருமகன் ஆட்சியிலிருந்தபோதெல்லாம் குறுவை கூட நடப்பட்டது.. முன்கூட்டி பேச்சுவார்த்தை, நீரை விரையம் செய்யாமல் கடைமடைக்கு செல்லும் வழிநெடுக தூர்வாரல் கடைமடைக்கு சென்ற பிறகே
முதல்மடைக்கு நீர்திறப்பு.. என திட்டமிட்டு செயலாற்றல் .. ஆற்றின் நடுவே சிறிய சிறிய தடுப்புசுவர்கள் தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்பாட்டிற்கு பெரும் உதவியது இவையெல்லாம் செயல்படும் முதல்வராலும் அமைச்சர்களாலும் செயலாற்றிய அரசாலும் முனைப்போடு செயல்பட்ட அதிகாரிகளாலும் நடந்தது..
..
தண்ணீரை கேட்க தெரிந்த நமக்கு வாய்க்கால்கள் தூர்வார படவில்லையே என கேட்க தோணவில்லை
இன்னமும் மௌனமாய் கடந்து செல்வதை கேட்க துப்பில்லை.. மொத்த தமிழகமும் உணர்வால் கோபகனலில் தகித்துக்கொண்டிருக்க உறுப்பினர்சேர்க்கையென அரசியல் செய்வதை கண்டிக்கவில்லை.. ஏன் இதுவரை அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டவில்லையென்றோ .. பிரதமரை ஏன் சந்திக்கவில்லையென்றோ கேட்கவில்லை மாறாக ஆண்டவனிடம் கேளுங்கள் என பஜனை பாட வருகிறார் இல.கணேசன்..
..
இல.கணேசன் அவர்களே .. கர்நாடக பாஜகவினர்தான் கலவரத்தை நடத்துவதாக பிரதமரிடமே மாநில முதல்வர் சித்தராமையா முறையிட்டிருக்கிறாரே.. அதை மறுத்தோ,கட்சியினரை கண்டித்தோ ஏன் அறிக்கைவிடவில்லை இதையும் ஆண்டவன் பார்த்துக்கொள்வாரோ..
..
கர்நாடக கலவரத்தின் பின்னில் கர்நாடக பாஜக என்பது யாவரும் அறிந்தவிடயம்..
காவிரி பிரச்சனையில் தலையிட முடியாதென்ற பிரதமர் .. கேவலமாக இல்லையா.. நாட்டின் இருமாநிலத்தின் பிரதான பிரச்சனையில் இருமாநில மக்களின் உணர்வில் கலந்த ஒருவிடயத்தை கண்டுக்கொள்ளாத நாட்டின் பிரதம அமைச்சர்.. தமிழக பாஜகவின் நிலையை மட்டும் சொல்லுங்கள்.. முழுஅடைப்பில் கலந்துக்கொள்வதில்லையென்ற தமிழிசையின் பாட்டுக்கு எதிர்பாட்டுபாடும் வானதி..
யார் சொல்வது உண்மை.. அதைமட்டும் சொல்லிவிட்டு ..
#வாய்மூடிஇருக்கவும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Tuesday, September 13, 2016
திராவிடர்கள்
வாமனனை ஒருபோதும் கொண்டாடமாட்டோம்/ஏற்கமாட்டோம்..
மலையாளிகள்..
ஆர்எஸ்எஸ் தன் சித்தாந்தத்தை அதாவது ஆரியத்தை மற்றவர்கள் மீது திணிக்க எப்போதும் கையிலெடுக்கும் வித்தையை இப்போது அமிர்ஷா மூலம் எடுத்து மதரீதியான செயலாக மாற்ற முயற்சித்தது..
அறுவடை திருநாளை எப்படி இந்துக்களின் விழா என தலையில் கட்டியதை போல ..
ஓணத்தை கைரளியர்கள் ( கேரளியர்) தேசிய பண்டிகையாக கொண்டாடுகிறார்கள் ..அதில் தங்கள் சித்தாந்தத்தை திணிக்க செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது..
நாங்கள் திராவிடர்கள் Dravidian legacy, Dravidian tradition எங்கள் மரபு பாரம்பரியம் வேறு.. எங்கள் அரசனை அழித்த வாமனை நாங்கள் ஏன் கொண்டாடவேண்டுமென கேட்டுஎதிர்ப்பை பலமாக பதிவு செய்திருக்கிறார்கள்..
பிராமணீயத்தை Brahmanism ஏற்றுக்கொள்ள முடியாது என தெளிவாக கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.. கேரள முதல்வரும் பதிவை நீக்க வலியுறுத்தியிருக்கிறார்
..
திராவிட மொழிகளின் தாய் என தமிழை கேரள பிரபலங்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள் திரு.மம்மூட்டி அவர்கள் கூட மலையாளம் தமிழின் கிளை மொழி என சொல்லியிருக்கிறார்.. திராவிடத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து ஆரியம் செய்துவருகிறது/ வரும்.. மொழிவெறியை திணிக்கும்..
தமிழின் கிளைமொழிகளை பிரித்து அரசியல் செய்யும் ..எல்லா வழிகளிலும் தன் சித்தாந்தத்தை திணிக்க தொடர்ந்து முயற்சிக்கிறது.. தமிழனை போல இடைசொருகலை
(திபாவளி விநாயகர் சதுர்த்தி) ஏற்காமல் நாங்கள் வாமனஜெயந்தியை கொண்டாட ஆரியர்கள் இல்லை #திராவிடர்கள் என முகத்தில் கரியை பூசிய கைரளியர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும்..
ஓணம் ஆசம்சகள்..
Happy Onam..
..
ஆலஞ்சி மன்சூர்
Monday, September 12, 2016
காதல் மௌனம்
சொல்லடி
சுகம்தரும் சேதியென்றேன்.
..
சொல்வதால் சுகமெனில்
சொல்லின் சுவைகூடும்
சொல் மட்டுமே சுவையாகும்
சொல் ..
வார்த்தையின் சதிராட்டம்
வளைந்து நெளிந்து
சலங்கைகட்டி ஆடும்..
சொல் வார்த்தையை
வளைத்தொடித்து
வண்ணம் தீட்டி
சொல்லவந்தை
தின்றே தீர்க்கும்.
சொல்லவா நானென்றாள்..
மௌனமாய் நகர்ந்தேன்..
இழுத்தணைத்து..
கண்களால்..
கவிதைமொழி சொன்னாள்.
..
உள்ளம்
உண்மைபேசும்
உன்னதமாய்..
உள்ளதை சொல்லும்
மனம் பேசும்
மொழிக்கெதற்கு வார்த்தை
விழிகளை உருட்டி
உள்ளத்தை குடைந்தெடுக்க
வார்த்தையெதற்கு.
எண்ணத்தில் உள்ளதை
உள்ளத்தில் வரைந்திட
எதற்கு மொழி..
எழுத்தை விட
இதமாய் .. இன்பம் சேர்த்து
மௌனமாய்..
கருவிழி சொல்லிவிடும்
மௌனமாய் ஊடுறுவி
ஆழ ..பதிந்துவிடும்..
ரணமாய். அதுவே மருந்தாய்..
..
#மௌனம்_சிறந்தகாதல்மொழி.
..
ஆலஞ்சி மன்சூர்
Sunday, September 11, 2016
விருது
சு.சுவாமிக்கு தமிழ்ரத்னா.. விருது..
சிலர் கோவபடுகிறார்கள்.. இப்பெல்லாம் விருதுகள் விற்கபடுகின்றன அல்லது தங்களின் பிரச்சனைக்கு தீர்வாக, ஆதரவாக செயல்படுவோருக்கு வழங்கப்படுகிறது..விருதுகள் என்றாலேஅதுஅரசியலாகிப்போய்விட்டது ..
..
தகுதியுள்ளவர்கள் மதிக்கப்படுதில்லை நிறைய பேர் தகுதியிருந்தும் அரசியல் மதம் ஜாதி போன்ற காரணங்களால் மறுக்கப்பட்டிருக்கிறது..
சு.சுவாமிக்கு தமிழ்ரத்னாவா.. என கேட்போருக்கு எம்ஜிஆருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டதே அதேபோல இதுவும் அரசியல் கோமாளிக்கு வழங்கப்பட்டதாக கொள்வோம்..
தமிழில் சரிவர பேசதெரியவருக்காக என்கிறார்கள் தமிழனே அல்லாத ஆரியனுக்குதானே வழங்கப்பட்டிருக்கிறது.. பிராமணர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதில்லை
தமிழரின் கலாச்சாரத்தோடும் திருவிழாக்களோடும் ஏன் பொங்கல் போன்ற தமிழர்திருநாளோடு கூட தங்களை இணைத்துக்கொள்வதில்லை..
தமிழரல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்ட விருதில் தமிழ்ரத்னா இருந்தால் என்ன..
..
விருதுகள் என்றவுடன் எனக்கு கலைஞரின் தென்பாண்டி சிங்கம் என்ற புதினம் ஞாபகம் வந்தது. தமிழக அரசின் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தபோது அப்போதைய முதல்வர் மகோரா... தென்பாண்டி சிங்கம் நூலுக்கு விருது கொடுப்பதை தடுத்தார் அவ்வளவிற்கும் அது முதல் நூலாக பட்டியலில் இருந்தது.. விருது வழங்கினால் கலைஞரை சந்திக்க வேண்டுமென்று காரணம் சொல்லப்பட்டது இவ்வளவிற்கும் அந்தநூலை ஆய்வுசெய்து ஒருவர் முனைவர்(கலாநிதி/டாக்டர்) பட்டமும் இருவர் இளமுனைவர் பட்டமும் பெற்றிருந்தார்கள்..
இருந்தும் மறுக்கப்பட்டது..
விருதுகள் வேண்டிவருக்கு கொடுக்கும் பழக்கம் அப்போதுதான் உருவானது..
..
சு.சுவாமிக்கு வருவோம்.. தமிழ்ரத்னா... எப்படி காவிரித்தாய் பட்டமோ அதைப்போல இதுவும் ஒரு ரசிக்கதக்க நிகழ்வாக கருதி கடந்து போவோம்..
#தமிழுக்குவந்தசோதனை..
ஆலஞ்சி மன்சூர்
நடந்தாய்...வாழி..
காவிரி..
எப்போதுமில்லாத அளவிற்கு குரோதமனபான்மையோடு இம்முறை அதிகமாக கடும்சொற்களாலும் மோசமான செயல்களாலும் தமிழர்களை / தமிழ்நாட்டை தாக்குகிறார்கள்..
என்ன காரணம்..
அரசியல் லாபத்திற்காக தேவகவுடா கட்சியும் பாஜகவும் போராட்டத்தை தூண்டிவிடுவதாக எடுத்துக்கொண்டாலும் அது அரசியல் லாபத்திற்காக இருக்கும் .. கர்நாடக தீர்ப்பு வந்தபோதும் வருடாவருடம் தண்ணீர் திறப்பு நடக்கிற போதெல்லாம்.. ஏன் 83 ல் நடந்த வன்முறைகளை விட இப்போது மிக மோசமாக நடக்கிறதே என்ன காரணம்..
..
கர்நாடக தேர்தல் நெருங்குவதால் தேவகவுடா இதை வைத்து அரசியல் செய்யநினைப்பதும் இழந்ததை மீட்க பாஜக வன்முறைகளுக்கு மறைமுக ஆதரவை தருவதும் பிரச்சனை பூதாகரமாகிக்கொண்டிருக்கிறது.. கௌட சமூகத்தினர் பெருபான்மையாக இருந்தும்.. மிகவும் பிற்படுத்தப்பட்டவர் அதிகாரத்தில் இருப்பதை விரும்பவில்லை..
லிங்கா மற்றும் ஒக்காலியா போன்ற ஆதிக்க சமூகத்தைசேர்ந்தவர்கள் போராட்டத்திற்கு மறைமுகமாக எண்ணெய் ஊற்றுகிறார்கள்.. மிகவும் பிற்படுத்தப்பட்ட மிக சிறுபான்மையான குருபா சமூகத்தை சார்ந்த சித்தராமையாவை முதல்வர் ஆக்கியதிலிருந்தே கௌட சமூகமும் ஒக்காலிய சமூகமும் பகைமையோடே இருக்கிறது..
..
சித்தராமையாவை மாற்றிவிட்டு ஆதிக்க சமூகத்திலிருந்து முதல்வரை நியமிக்கும் வரை காவிரி என்றில்லை எந்த விடயமானாலும் வன்முறையை/வன்மத்தை விதைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்கிறார் பத்திரிக்கை நண்பர் ஒருவர்.. தனிநபர்களை தாக்குதல் போன்ற விடயங்களில் ஏன் திரையுலகினரை கட்டாயப்படுத்தி போராட்டத்தில் களமிறக்கி எப்போதுமில்லாமல் இப்போது அதிக சுரத்தோடு பேச வைத்ததின் பின்னில் ஒக்காலிய சமூகத்தை சேர்ந்த திரைபடத்துறையினர் இருப்பதாக சொல்லபடுகிறது.
..
காவிரி பிரச்சனை கர்நாடகாவில் வேறுவடிவம் பெற்றிருக்கிறது.. மிகவும் முக்கியமாக அரசியலை தாண்டி இனமொழிவெறியை கடந்து .. ஆதிக்கசெலுத்தும் சாதீயநிலையை அடைந்திருக்கிறது..
இதன் பின்னில் இருப்பவைகள் மிகபெரிய ஆபத்தை விளைவிக்கும்..
ஒன்றுமட்டும்தான்.. சொல்லவேண்டும்..
காவிரி தண்ணீர் மட்டுமல்ல
Saturday, September 10, 2016
காவிரி
காவிரி..
காவிரி பிரச்சனையில் தலையிட முடியாது வழிப்போக்கன். .
மோடி பிரதமரானால் நல்லது என்று சொன்ன வைகோ போன்ற அரைகுறைகளை தேடுகிறேன்..
காவிரி நீராதார பிரச்சனை தமிழகம் போல ஒரு மடைமையான செயல்பாடுகள் செய்கிற அரசு இதுவரை இந்தியாவில் இல்லை.. தண்ணீர் தர மறுத்து அனைத்துகட்சி கூடிய முழு அடைப்பிற்கு அழைக்கிறது அரசின் துணையோடு அதை வெற்றிப்பெற செய்கிறார்கள்.. தமிழகத்தில் ஒருமுறை முழுஅடைப்பிற்கு திமுக ஆட்சியில் அழைப்பு விடுக்கப்பட்டபோது அதற்கு அரசு ஆதரவு தரகூடாது என உயர்நீதிமன்றம் போய் முழுஅடைப்பு சட்டவிரோதம் என தீர்ப்பை பெற்றவர்தான் இந்த ஜெயலலிதா..
..
கர்நாடகாவில் தமிழன் அடங்கி கிடக்கவேண்டிய சூழல்.. ஆனால் தமிழகத்தில் யாவரும் அமைதியாக வாழ அனுமதிக்கிறோம்.. அது பெருந்தன்மை என பேசி திரிவதைதான் காண்கிறோம்..
திரைப்பட கலைஞர்கள் காவிரியைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் எல்லாம் வீரவசனம் பேசி உணர்ச்சியை தூண்டி பிழைப்பிற்கு வழிதேடிக்கொண்டார்கள்.
..
காவிரி பிரச்சனையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா (வழிப்போக்கனை) தெரியாதனமாக இந்தியாவிற்கு வந்துவிட்ட பாரதபிரதமரை சந்திக்கிறார்.. தலையிட முடிதென்கிறார் தமிழகத்திற்கும் சேர்த்து பிரதமராக இருக்கும் மோடி.. நலம் நலமறிய ஆவல் என கேட்டு கடிதம் எழுதுவதை தவிர வேறொன்றும் அறியாதவராக.
நாள்குறிக்கப்பட்டு பரப்பரப்பில் இயங்குபவராக இருக்கிறார்.. நம்முதல்வர்..
ஒரு கோடி இட்லி விற்று பெருமை பேசி திரிந்தால் காவிரியில் தண்ணீர் வந்துவிடுமா..
அனைத்துகட்சி தலைவர்களும் முதவ்வர் தலைமையில் டெல்லிக்கு அணிவகுக்க வேண்டாமா.. எதிர்கட்சிதலைவரும் தானும் வருவதாக சொல்லியும் காவிரிமகள் மௌனம் கலைத்தப்பாடில்லை.. 50 பாட்டுக்காரர்களை வைத்துக்கொண்டு காவிரிக்கரையிருக்கு எனதிருவையாற்று கரையில் பாட்டு கச்சேரி நடத்தி மக்களை மகிழ்விக்கலாம்..
..
காவிரியில் கலைநிகழ்ச்சி நடத்தி தமிழனை மகிழ்விப்போம்.. கோடைகாலங்களில் வசந்தவிழா நடத்தியவன்.. இனி எல்லா பருவங்களிலும் கூத்தடித்து வாழலாம்..
..
இனி
#காவிரி_பாழ்..
Wednesday, September 7, 2016
உண்மை பொய்
இறந்தவரை உயிரோடு எழுப்ப செய்த அலப்பறை..
நித்யானந்தாவுக்கு ஒரு ஜே போடுங்கள்..
யேசுவோடு பேசுவேன்.. ஜின் களோடு பேசுவேன் என்கிற பித்தலாட்டகாரர்களை நம்புகிறவர்கள் இருக்கிறவரை இதுபோன்ற செயல்களை தடுத்திடமுடியாது
மூடநம்பிக்கையை வளர்த்தெடுக்க மக்கள் மனதில் விதைக்கிற கூட்டமிது.. இறைநம்பிக்கை என்கிற ஒற்றை விடயத்தை வைத்துக்கொண்டு கடவுள் பற்றிய மனிதனின் பயத்தை கருவியாக்கி இறைவனை லெவலுக்கு தன்னை உயர்த்திக்கொள்கிறவர்கள் இங்கே அதிகம்..
சிறியளவில் .. உங்கள் அருகாமையில் தாயத் முடிந்து தருகிறவர்கள் தொடங்கி ஆசிரமம் நடத்தி செல்வம் கொழிக்கிறவர்கள் வரை .. அவர்கள் அறிவார்கள் மக்களின் மடமையை அவர்கள் தெளிவுபெறுகிறவரை மட்டுமே பயன்படுத்த முடியுமென்று..
..
சிறியதொரு கேள்வி மாத்திரம் கேளுங்கள் ...
எப்படி இது சாத்தியமென்று கடையை அடைத்துவிட்டு வேறு கடை போட்டுவிடுவார்கள்..எல்லா மதங்களிலும் இதுபோன்ற மூடநம்பிக்கை மக்கள் மனதில் பதியவைத்து அதை சிறுதுகூட யோசிக்காதபடி மக்களை மயக்கத்தில் வைத்திருப்பதில்..மெய்ஞான குரு தொடங்கி..ஜகத்குருவரை..
இவர்கள் தங்களின் உடல் உயிர் என்று வருகிற போது இவர்கள் கைவசம் உள்ள மந்திரத்தையோ வித்தைஜாலத்தையோ நம்புவதில்லை மாறாக கைகேர்ந்த அதிகம் கற்ற பிரபலமான மருத்துவரை அதுவும் உயர்தர சிகிச்சையை நம்புவார்கள்..
சிறிய பல்வலி என்றால் கூட முதன்மை மருத்துவரைதான் நாடுவார்கள்..
..
மரணம் நிச்சயமானது அதில் மாற்றமில்லை
நீ இந்த உலகில் வாழ்ந்துக்கொண்டிருப்பது நிஜம்..
இந்த உலகின் இயற்கை உனக்களித்தவற்றை உன் அறிவு கொண்டுபார்.. எது உண்மை என்பதும் எவையெல்லாம் உன் அறிவு ஏற்கவில்லையோ அதை தவிர்..
ஏதெல்லாம் சாத்தியமில்லை என்பதை அறி..இயல்பாக இயற்கையோடு இணை..
வாழ்வு வசந்தமாகும்.. உன் போக்கிற்கு வளைத்தொடிக்கிறபோதுதான் இயற்கை எதிர்மறையான உந்துதலை உன்மீது திணிக்கிறது..
..
கடவுள் நம்பிக்கை என்பதுவேறு அதில் உன் சௌகரியத்திற்காக வேண்டாத வேலைகளை திணிக்கிற போது அதை நம்பவைக்க நீ நடத்தும் எல்லாம் மூடநம்பிக்கையென்றேபடும்..
எளிமையாக சிந்தி..
#இருக்கிறது_இல்லை #நல்லது_கெட்டது #உண்மை_பொய்..இருக்கலாமென்றால் அதில் பொய்யை கலக்க முயற்சிக்கிறாய்..
அவ்வளவுதான்..
..
#மனிதனைநினை_அதுவேமகத்தானது..
..
ஆலஞ்சி மன்சூர்
Tuesday, September 6, 2016
விலைபோன வாக்கு
தலைமை செயலாளராக நான் இருந்த காலத்தில் 7 முறை மட்டுமே ஜெயலலிதாவிடம் பேசியிருக்கிறேன். தலைமைசெயலராக இருந்த ஞானதேசிகன்..
சாதாரணமான விடயமல்ல அரசின் தலைமை செயலர் சொல்வதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட முடியாது.. முதல்வரின் செயலரும் அவருக்கு வேண்டப்பட்டவர்களும் அரசை இயக்குகிறார்கள் என்பது வெளிச்சமாகிறது..
முதலில் ஞானதேசிகனுக்கு இடைநீக்கம் செய்தவுடன் ஞானம் வந்தது அருவருக்கதக்கதாக இருக்கிறது.. உயர்பதவியில் இருந்துக்கொண்டும் செயல்பட முடியவில்லையெனில் அதை அப்போதே சொல்லியிருக்கவேண்டும்.. பதவி சுகத்தை அனுபவிக்க மௌனமாய் இருந்தது எந்தவகையில் நியாயம் என்பதை திரு.ஞானதேசிகன் அவர்கள் விளக்கவேண்டும்..
..
இரண்டு அதிகாரமையங்கள் ஜெயலலிதா ஆட்சிக்குவரும்போதெல்லாம் நடக்கிறது.. சசிகலாவிற்கு வேண்டியவர்கள் என தனி அரசே நடத்துகிறார்கள் முதல்வருக்கு எந்த செய்தி செல்லவேண்டுமென்பதை இந்த அதிகாரமையம் தான் முடிவு செய்கிறது.. ஜெயலலிதா அரசு அதிகாரிகள் சுயமாக சட்த்திற்குட்பட்டு செயல்படுதென்பது அரிதாகதான் இருக்கும்..
இது ஆபத்தான போக்கு என்றோ அல்லது முறையற்ற செயல் என்றோ ஊடகங்கள் எடுத்துரைப்பதே இல்லை..
..
தலைமை செயலகம் தலைமையில்லாமல் என ஜூவி சொல்கிறது செயலகம் மட்டுமல்ல தமிழகமே சரியான தலைமை இல்லாமல் அல்லாடுகிறது.. பாட்டு கூத்து டான்ஸை விட்டுவிட்டு பாமரனை கொஞ்சம் பாருங்கள் அவனுக்கு செயல்படுங்கள் என #ஹிந்துஸ்தான்_டைம்ஸ் எழுதுகிறது.. தமிழக நாளேடுகளும் தொலைகாட்சிகளும் தங்கள் வருவாயை பெருக்கி கொண்டால் போதுமென எண்ணி ஜெயலலிதா அரசின் அவலட்சனத்தை கண்டுக்கொள்வதில்லை.. மடிகணனி ஊழலை முறையற்ற செலவு என தினமலர் எழுதுகிறதென்றால் எவ்வளவு கரிசனம் ..
இழப்பை ஊழலென்று கூக்குரலிட்டவர்கள்... இப்போது அதிகமாக பணம் கொடுத்து தரமற்ற பொருளை வாங்கி ஊழல் செய்து கொள்ளையடித்ததை முறையற்ற செலவு என மெழுகுகிறார்கள்..
..
முறையற்ற, திறனற்ற, செயல்படாத பஜனை கோஷ்டிகளோடு வலம் வருகிற ஒரு ஆட்சி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிதான்..
இங்கே ஜாதிய மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவதும் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திற்கு ஜாதிமோதலை கொண்டுவந்ததும் தான் ஜெ.வின் சாதனை..
..
#விலைபோன_வாக்கு..
..
ஆலஞ்சி மன்சூர்
காவிரி
கர்நாடகம் தர உத்தரவிட்டிற்கிற 13 டிஎம்சி.. வினாடிக்கு 15000 கனஅடிவீதம் 10 நாட்கள் .. அதுவும் ஒழுங்காக வந்தால் 13.4 டிஎம்சி கிடைக்கும்.. குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு போக மீதமுள்ளதை கொண்டு கடைமடை தவிர்த்து சம்பா பயிரிடலாம்.. இப்போதே காலம்தாழ்ந்த நிலைதான்.. எப்போதுமே முதல்மடை பகுதியினர் கரையோர விவசாயநிலங்கள்/ விவசாயிகள் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை .. வெள்ளப்பெருக்கிலோ,மழை வெள்ளத்திலோ எப்போதும் பாதிப்படைகிற திருவாரூர் நாகை ..கீழ்தஞ்சை பகுதி விவசாய நிலங்கள்..
தண்ணீர் இன்றி வருடாவருடம் விவசாயம் பொய்த்து போகிறது..
முதல் மடை பகுதி ..அதாவது காவிரி மற்றும் பிரதான கிளை ஆறு வெண்ணாறு குடமுருட்டியின் முதல் பாசன பகுதி மட்டுமே இரண்டரை லட்சம் ஹெக்டர்.. நாகை திருவாரூர் மற்றும் கீழ்தஞ்சை பகுதிகள் சென்ற ஆண்டு சம்பா பொய்தத்து ..இந்த ஆண்டும் அதே நிலைதான்.. நீரை வீணடிக்காமல் முறை பாசனம் வைத்து பகிர்ந்தால் மேற்சொன்ன இரண்டரை ஹெக்டர் பயிரிடலாம் கொஞ்சம் மழையும் கைக்கொடுக்கவேண்டும்..
..
எட்டு டிஎம்சி நீரில் ஒன்றும் செய்யமுடியாது மழை வந்து காப்பாத்தணும் இல்லையென்னா கொண்டுபோகணும் அதுதான் தமிழக விவசாயிகளின் இன்றைய நிலை.. நதிநீரை சரியான முறையில் கொண்டு செல்ல இன்னும் கால்வாய்களும், வாய்கால்களும் தூர்வாறப்படவில்லை..எப்போதுமே காலகடந்த சிந்தனையும் செயலும் ஒன்றுக்கும் உதவாது..வருடாவருடம் இதை பேசியே காலம் கடத்தினால் தஞ்சையில் இனி வயல்வெளி போய் கட்டங்களும் வீட்டுமனைகளும் தான் காட்சி தரும்..
..
#காலம்கடந்த_ஞானோதயம்..
..
Monday, September 5, 2016
இலவச ஊழல்
இலவசங்களில் ஊழல்
ஜெயலலிதா அரசு இட்லி முதல் மடிகணனி வரை ஊழல் செய்திருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிவித்திருக்கிறது..
மின் வாரியத்தில் மட்டும் ₹5 க்கும் குறைவாக கிடைக்க கூடிய மின்சாரத்தை ₹ 7.20 வாங்கியிருக்கிறது இதில் மட்டும் ₹11679 கோடி இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது இதில் எவ்வளவு கமிஷன் கிடைத்திருக்கும் மாணவர்களுக்கு மடிகணனி லேப்டாப் வாங்கியதில் மட்டும் ₹242 கோடி ஊழல்..
இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி .. எல்லாம் தரமில்லாத பொருட்களாக வாங்கி மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது..
என சிஏஜி அறிக்கை சொல்கிறது..
இதை ஊடகங்கள் வேண்டுமென்றே மறைக்கின்றன..
..
எதிலும் வெளிப்படையில்லாத நிர்வாகம்..
திறமையில்லாத முதல்வர் அதிகாரத்தில் வெளிநபர் தலையீடு இவையெல்லாம் மிகபெரிய ஊழலுக்கு காரணமாகி இருக்கிறது.. அம்மா கடை இட்லியில் கூட கொள்ளையடிக்கிற கூட்டம்..
..
திமுக ஆட்சியிலும் இலவசமாக டெலிவிஷன் கொடுக்கப்பட்டது ஆனால் அதை வெளிப்படையான டெண்டர் விடப்பட்டு அனைத்துகட்சி பிரமுகர்கள் அடங்கிய குழுவின் முன்னிலையில் திறக்கப்பட்டு மிக சிறந்த நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் கொடுத்து பெற்று விநியோகம் செய்யப்பட்டது..
ஒரு வெளிப்படையான ஊழலுக்கு முறைகேடுகளுக்கு இடம்தராத திட்டமாக இருந்தது..
ஆனால் ஜெயலலிதா அறிவித்த இலவசங்கள் விநியோகம் மர்மமானதாகவே இருந்தது எங்கிருந்து எவ்வளவு தொகைக்கு பெறப்பட்டது ..யார் யாரெல்லாம் டெண்டரில் பங்குபெற்றார்கள் என்பதை சிதம்பர ரகசியம் போல் இருந்தது இப்போது ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியிருக்கிறது.. மிகப்பெரிய மோசடியை கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் செய்திருக்கிறது ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு..
..
ஊழல் கொள்ளை ஜெயலலிதாவிற்கு புதிதல்ல டான்சி தொடங்கி சொத்துகுவிப்பு வரை தண்டனை பெற்றும் கொஞ்சம் கூட கவலையோ வருத்தமோ கொள்ளாமல் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் மக்களை விலைபேசி வாங்கிவிடலாமென்ற ஒரே ஒரு நம்பிக்கையோடு வலம் வருகிறவர்.. இந்தியாவில் பதவியில் இருக்கிற போதே தண்டிக்கப்பட்ட #கவரிமான் பரம்பரை.. நடுத்தரமக்களுக்காக குறைந்த செலவில் ஒரு ரூபாய் இட்லி என சொல்லி கோடிகளில் கொள்ளையடிக்க தெரிந்தவருக்கு..எத்தனை சிஏஜி அறிக்கை வந்தாலும் கவலையில்லை.
..
#இலவசங்களில்_இலவசமாய்கொள்ளை..
Sunday, September 4, 2016
ஆசான்
#ஆசான்..
நிறைய பேரை எழுதவேண்டிவரும்.. என்னுள் அகரத்தை எழுதிய பூலாபாய் தொடங்கி..
..
ஒரு குழந்தையின் முதல் ஆசான் தாய்..
தாயிடமிருந்து 3000 சொற்களை பள்ளிக்கு செல்வதற்கு முன்பே கற்றுக்கொள்கிறது குழந்தை..
அறத்தை அன்பை அர்ப்பணிப்பை அக்கறையோடு நம்மில் விதைக்கிற தாயே நம் முதல் ஆசான்..
பள்ளிகளில் போதிக்காத நிறைய விடயங்களை தாய் தன் செய்கையில் போதித்துவிடுவாள்.
அன்பின் மிகுதியால் நம்மை வழிநடத்தி சரிசெய்ய மறந்து போவாள்..
..
#பள்ளி..
ஆரம்பத்தில் பயத்தையும் பின் அக்கறையும் அறிவுசுடர் கொண்டு நம்மில் விதைக்கிற.. இல்லையில்லை நடுகிற இடம்.. நாற்றை பிடிங்கி வேறிடத்தில் நடுவதைப்போல பாத்திக்கட்டி பயிரை காப்பது போல வீணான களைகளை களைந்து .. நம்முள் நம்மை அறியாமல் வந்துவிழும் கொல்லிகளை.. கெட்டவிடயங்களை கொன்று நம்மை செழிப்போடும் சிறப்போடும் வளர்த்தியெடுக்கும் நெடுவயல்..
..
#ஆசான்.
நம்முள் அறிவெனும் விதையை விதைக்கிறவர்கள்.. அது சரியாக விளைகிறதா என நம்மை கவனித்து அடுத்த நிலைக்கு கொண்டுபோகும் அறம் செய்பவர்கள்.. ஆசிரியர்பணி அறப்பணி.. கற்பித்தல் எனும் அரிய சேவையாற்றுகிறவர்கள்..
..
என் ஆசான்கள் அறிவில் சிறந்த சான்றோர்கள்..
அன்பை அறிவை பகுத்தாயும் திறனை சுயமரியாதையை..சோர்ந்துவிடாமல் இயங்கும் ஆற்றலை எனக்கு கற்றுதந்தவர்கள்..
மிகசிறந்த நல்லாசிரியர்களோடு நட்போடுபழகும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.. அன்பிற்குரிய அறிவாசான்கள்..
..
இந்த ஆசிரியர் தினத்தில் என்னை செம்மைப்படுத்தி வாழும் வழிமுறையை அறத்தோடும் அன்போடும் ஈகை குணத்தோடும் கற்றுதந்த..
என் முதல் ஆசான்
எங்கள் தாயாரின் நினைவோடு..
..
ஆலஞ்சி மன்சூர்
Saturday, September 3, 2016
கொங்கு அறிவின் பட்டறை ..இப்போதெல்லாம்
விவசாயிகள் கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள் அமைச்சர் கருப்பண்ணன்..
நான் இதுவரை ஒருசிலராவது அறிவு,ஆற்றல் உடையோராய் திறமையாக செயல்படுவோராய் இருப்பார்கள் என நினைத்தேன் ஒட்டுமொத்த அறிவிலிகளும் அடிமை என்ற வரம்புக்குள்தான் வருகிறார்கள்.. இவர்கள் கையிருப்பு இவ்வளவுதான்.. இவர்கள் மீது கோவமெல்லாம் இல்லை முட்டாள்கள் என தெரிந்தும் மக்கள் தேர்தெடுத்திருக்கிறார்களே என்ற ஆதங்கம் மட்டுமே மிஞ்சுகிறது.
..
இவர் யாரையெல்லாம் விவசாயி என்கிறார் விளைநிலங்களை விலை நிலங்களாக மாற்றியவர்களையா இன்னும் மிச்சமிருக்கும் விளைநிலங்களையெல்லாம் ப்ளாட் போடமுடியுமா என்று நினைக்கிறவர்களை கோடிஸ்வரர் எனச் சொல்கிறார் போலும்..
..
இப்படி அமைச்சர்கள் பேசுவது இதுமுதல்முறையல்ல.. வாக்களித்த மக்களை கீழ்தரமாக பேசுவது அதிமுகவினருக்கு சர்வசாதாரணமான விடயம்.. எனக்கென்னவோ இதுபோன்ற உளறல்கள் ஜெயலலிதா அனுமதியோடுதான் பேசுகிறார்களோ என தோன்றுகிறது.. காரணம் இப்படி பேசினால் பிரச்சனையை திசைத்திருப்ப முடியும் .. அதேவேளை மக்களின் கோவம் அதிகமானால் சம்பந்தப்பட்ட அமைச்சரை நீக்கிவிடலாம்.. பெரிய அளவில் எதிர்ப்பில்லையென்றால் தண்ணீர் பிரச்சனையை வேறுபக்கம் மடைமாற்றிவிடலாம் இதைதான் எண்ணுகிறார் ஜெயலலிதா என நினைக்கிறேன் .. ஊடகங்கள் விவசாயிகள் மாடமாளிகையில் வாழ்வதைப்போல கதையடிக்கும்..
..
சிறு குறு விவசாயிகள் என ஏறக்குறைய எழுபது லட்சம் குடும்பங்கள். காவிரி, முல்லை ,பாலாற்றை நம்பி இருக்கின்றன.. சில நிலகிழார்கள் உண்டு மறுப்பதற்கில்லை.. ஆனால் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் என நிலங்களை வைத்திருப்பவரும் குத்திகைக்கு எடுத்து நடுகிறவர்களுமே அதிகம்..
தண்ணீர் தர மறுக்கிறார்கள் அண்டை மாநிலத்தவர்கள் என்ன செய்வது என பேசியிருந்தால் அதில் நியாயமிருக்கிறது. தண்ணீரை பெற்று தர வக்கில்லை சதா உறக்கத்திலும் தன் மீதான ஊழல்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதில் என்னாகுமோ என்ற சிந்தனையோடு ஆட்சி செய்கிறவர்.. இட்லிகடையில் கூட ஊழல் செய்ய கற்றுக்கொடுத்தவரிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும்..
..
நல்ல வேளை தமிழ்நாடு கோடிஸ்வரர்களின் நாடு எல்லோருமே கோடிகளில் புழங்குகிறார்கள் என சொல்லாமல் விட்டதுவரை சந்தோசம்..
கொங்கு அறிவின் பட்டறை என்பார்கள்..,இப்போதெல்லாம்.. அறிவிலிகளின் கூடாரமாகிறது.. என்னசெய்ய..
..
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்..
..
பெரியாரை மறந்த நிலை இப்போதில்லை
ரஞ்சித் அடுத்த படத்திலாவது பெரியாரை படத்தை வைக்கவேண்டுமென பரவலாக சொல்லபடுகிறது..
தேவையில்லை .. பெரியாரின் கருத்துக்களை ஏற்கவோ மறுக்கவோ ரஞ்சித்திற்கு உரிமை உண்டு
பெரியாரை விமர்சிக்க கூட செய்யலாம் அது அவர் விருப்பம்.. பெரியாரே நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றுதான் சொன்னார்..
..
பெரியாரை விமர்சிக்கவே கூடாதா என்றால் விமர்சிக்கலாம் கேள்விகேட்கலாம் அது உங்களுக்கு சரியானதாக, அவரின் கொள்கை அரசியல் உங்கள் அறிவு ஏற்றுக்கொள்ளாததாக மாற்றுகருத்தில் பலமாக விசுவாசம் உள்ளவராக இருக்கவேண்டும்.. ஆனால் மதில்மேல் அமர்ந்துக்கொண்டு சஞ்சலத்தோடு இருநிலைப்பாட்டை எடுக்ககூடாது..
திரு.பா.ரஞ்சித் பெரியார் படத்தை வைக்க மறந்துவிட்டேன் என்பதை ஏற்கமுடியாது.. பெரியாரை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ அவரின் விருப்பம்.. ஆனால் தவறுதலாக விடுபட்டுவிட்டதென்பது சமாளிப்பதே தவிர வேறில்லை..
ஏனெனில் பெரியாரை மறந்த நிலை இப்போது தமிழகத்தில் இல்லை..
..
இப்போது கூட
தன் மகள் காதலித்தால் 24 மணிநேரத்திற்குள் தற்கொலை செய்துக்கொள்வேன் என்கிற மதவெறியர்கள் இருக்கிறார்கள்..
தன் மகள் தன் ஜாதி பையனையோ அல்லது தன்னைவிட மேல்ஜாதி பையனையோ காதலித்தால் சாகமாட்டான் தன்னைவிட தாழ்ந்தஜாதி பையனை காதலித்தால் உயிரைவிடுவானாம்.. இப்போது கூட பெரியார் தான் தேவைபடுகிறார்.. மத,சாதீய வெறியர்களின் பங்கை அவ்வளவு குறைவாக மதிப்பிட முடியாது மெல்ல கொல்லும் விசம் போல் அவர்களின் செயல் அதற்கு அரசியல் காரணத்தை/ஆதரவை பெற முயற்சிக்க தங்களின் உரிமைகளை இழந்தாலும் பரவாயில்லை மீண்டும் கற்காலத்திற்கு/அடிமைத்தனத்திற்கு சென்றாலும் பரவாயில்லை என நினைக்கிற கூட்டம் சிறிய அளவில் எனினும் மிகவும்,ஆபத்தானவர்கள்..
..
இவர்களின் சொல்,செயலுக்கு மக்கள் அரசியல் அங்கீகாரம் அளிக்கவில்லையென்றாலும் காலபோக்கில் சிறிய சலனத்தை மக்கள் மனதில் விதைத்திட்டே போகிறார்கள் சிறியளவில் மாற்றத்தை தரும்.. பெரியாரிய கருத்துக்களை சினிமாக்களில் என்றில்லை சமூகதளங்களில் பேச விவாதிக்க பெரிய அளவில் எடுத்துச்செல்லவேண்டும்..
..
மத ஜாதீய நிழலில் நின்றுக்கொண்டு பரந்தமன்மையோடு செயல்படுவதாக சொல்வது ஒருவகை போலித்தனம்.. எதிர்ப்பதோ ஆதரிப்பதோ வெளிப்படையான/உண்மையான செயலாக இருக்கவேண்டும்.. சினிமா நிறைய சமரசங்களுக்கு உட்பட்டே எடுக்கவேண்டிவரும் அதில் கிடைக்கிற சந்தர்ப்பத்தை பயன்படுத்த ரஞ்சித் என்றில்லை நல்சிந்தனையாளர்கள் சமூக அக்கறையுள்ளவர்கள், சமூகம் சமநிலையை அடையவேண்டும் என்பவர்கள் தாமாக முன்வரவேண்டும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Thursday, September 1, 2016
பகுத்தறிவு..
ஸ்டாலின் மனைவி கோவில் கோவிலாக போகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ..
..
கொள்கையைப்பற்றி பிறகு பேசுவோம்.. ராஜூவை மக்கள் தேர்தெடுத்ததும் அமைச்சராக்கியதும்.. மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவே தவிர ஸ்டாலின் குடும்பம் கோவிலுக்கு செல்வதை கணக்கெடுக்க அல்ல.. மாறாக மக்கள் வரிப்பணத்தில் உங்க ஆத்தா புகழ்பாடவும் அல்ல..
..
சபை உறுப்பினர்களின் குடும்பங்களை பற்றி சட்டசபையில் பேசவேண்டியதில்லை அதே போல் ஜெயலலிதா வின் முந்தைய கால குடும்பவிடயங்களை பற்றி பேச அமைச்சர் தயாரா..என கேள்வி எழுந்தால் அமைச்சர் பதவி அமாவாசை வரை காத்திருக்காது... தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேசகூடிய இடமல்ல சபை மக்களின் உணர்வுகளின், தேவைகளின் அடிப்படையில் இயக்கவேண்டும்..
எங்கள் ஆசான் #பெரியார் தேர்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்தெடுத்தவன் முட்டாள் என்றார்.. இங்கே முட்டாள்களை அவசரகதியில் ஆலோசிக்காமல் அனுப்பியிருக்கிறோம்.
..
#பகுத்தறிவு..
நாத்திகம் மட்டும் பகுத்தறிவு என நினைக்கிற மடமை.. அமைச்சர் உளறலில் தெரிகிறது.. திக விலிருந்து திமுக பிரித்தபோதே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் அண்ணா.. திமுகவில் ஆரம்பம் தொட்டே இருப்பவர்களில் ஆத்திகர்களும் அடங்கும் நிறைய பேர் கடவுள் மறுப்பை ஏற்காத அதேவேளையில் பெரியார் சொன்ன கருத்தில் உடன்பட்டு செயல்படுகிறவர்கள் அதிகம் பேரை காணலாம்..
ஏன் பெரியார் கூட மத கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை புறக்கணித்ததில்லை.. ராஜாஜி கல்கி என அடுக்கி கொண்டே போகலாம்..
கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்லதிருமணத்திற்கு பெரியார் சடங்கெல்லாம் முடிந்தபிறகு சென்று மணமக்களை வாழ்த்தினார் எப்படி தெரியுமா குங்குமத்தை எடுத்துவரச்சொல்லி நெற்றியில் இட்டு வாழ்த்தினார்.. கல்கியின் உதவியாளர் இதை நம் பத்திரிக்கையில் படத்தோடு போட்டு பெரியாரின் இரட்டைவேடம் என தலைப்பு இடலாமென்ற போது கல்கி சொன்னார்..பெரியார் நமக்காக நம் மனம் நோக கூடாது என்பதற்கு திருமணம் எல்லாம் முடிந்து வந்து வாழ்த்துகிறார்.. பெரியார் தன் கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பவரல்ல மற்றவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பவர்.. அதே வேளை கொள்கையில் கடவுள் மறுப்பில் உறுதியானவர் என்றார்..
..
அடுத்தவரின் நம்பிக்கையை எதிர்ப்பதென்பது வேறு அவரின் நம்பிக்கைகளுக்கு /அவர்களுக்கு மதிப்பளிப்பது என்பது வேறு..
இந்த கூமுட்டைகள் எல்லாம் அமைச்சர்களாக வலம் வருவதிலிருந்தே அரசின் யோக்கியதையை அறிந்துக்கொள்ளலாம்
..
#அரைகுறைகள்_அமைச்சரகலாம்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Posts (Atom)