Tuesday, July 7, 2020

ஊடகம்

ஏன் கதற வேண்டும் ..
பத்திரிக்கை செய்தித்துறையில் #அவர்கள் மட்டுமே ஆண்டுவந்தது தகரும்போது வரும் இயல்பான கோபம் அதைகூட தைரியமாய் சொல்வதற்கு வக்கற்று மாரி மதன்களை களம் இறக்குகிறார்கள் ..நேர்மையாக நெஞ்சுயர்த்தி பேசுவது பண்டே
பழகமில்லாத ஆரிய கூட்டம் #குணசேகரன்களை கண்டால் பதறி அழுகிறார்கள் ..
ஊடகங்களின் அவாள்களின் ஆதிக்கம் இப்போதும் முழுமையாக குறைந்திடவில்லை எனினும் நம்மவர்களின் வளர்ச்சி எரிச்சலை தருகிறது.. 
தொலைக்காட்சி ஊடகத்தின் தேவையை  முழுமையாக புரிந்துக்கொண்ட முதல் தமிழன் மாறன் .. சன்டிவியின் வளர்ச்சியும் அதன் வேகமும் பதறவைத்தது இத்தனைக்கும் அது ஒரு கட்சியின் டிவியாக தான் இருந்தது .. மாறன் மறைவிற்க்கு பிறகு மல்லிகாக்கள் கையில் வந்ததும் தன் நிறத்தை மாற்றியது ஆனாலும் நாம் கலங்கவில்லை வீரபாண்டியன்களை உருவாக்கி வைத்திருந்தோம்..தொலைக்காட்சி ஊடகம் பரிணாம வளர்ச்சியடைந்த போது நிறைய செய்தி ஊடகங்கள் நம்மவர்களால் கையாளபடுதலால் அவர்கள் கோபபடுவது இயல்புதானே..
..
நம் வீட்டு பிள்ளைகள் செய்தியாளராக, செய்தி ஆசிரியராக,செய்தி நிறுவனத்தை நிர்வகிப்பவராக வந்ததும் பொறுக்கமுடியாமல் புலம்பகிறார்கள் அதிலும் இரவல் குரலில் ..
இந்த நிலைக்கு திராவிடம் முக்கிய காரணம் 
நம் பிள்ளைகளை குலக்கல்விக்கு விடாமல் 
கல்வி தந்தது முதல்பட்டதாரிக்கு கல்விக்கட்டணத்தை ரத்து செய்தது நீ விரும்புகிற துறையில் உன் திறமையை காட்ட களம் அமைத்து தந்தது ..  ஆனாலும் திமுகவை விமர்சித்துதான் பெரும்பாலான ஊடகங்கள் ஆனால் திமுக கதறவில்லை,பதறவில்லை தன் கடமையை செவ்வனே செய்கிறது.. ஆனால் மோடியை  பாஜகவை,சனாதனத்தை பிராமணத்தை விமர்சிக்கும் போது
அவர்களுக்கு உதறல் வருகிறது.. 
..
என்ன சொல்ல வருகிறார்கள் 
ஊடகம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படவேண்டுமென்றா.. பாசிசத்திற்கு வால்பிடிக்கவேண்டுமா.. இவர்கள் செய்யும் அலுச்சாட்டியங்களை கண்டுக்கொள்ளாமல் கைதட்டவேண்டுமா .. மோடியையும் பாஜகவையும் பார்பனீயத்தையும் கொண்டாட வேண்டுமா.. ஊடகத்தின் குரல்வளையை நெறித்து ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜனநாயக மூச்சை நிறுத்தவேண்டுமா.. இவையெல்லாம் இங்கே நடத்திடமுடியாது 
சனாதனத்திற்கெதிரான திராவிட மண்ணில் கொஞ்சம் புளிக்கும்.. பெரியாரின் உழைப்பு திராவிட இயக்கம் பலனால் நேடிய கல்வியால் சமூகநீதியை பேசுவதை தொடர்ந்து எவ்வளவு முயற்சித்தும் பொய்யை பரப்பியும் கலவரத்தை தூண்டியும் மதவெறியை சாதிவெறியை நடத்தியும் அவர்களால் இறுதியில் வெற்றிபெற முடியாமல் போவதற்கு சிறதேனும்,காரணிகளில் இன்றைய முதல்தலைமுறை ஊடகவியலாளர்கள் ..
பின்னே கோபம் வரத்தானே செய்யும். 
..
இவர்கள் குற்றம்சாட்டும் ஊடகவியலாளர்கள் 
நேர்மையோடு நடக்கவில்லைதான் .. எதையும் அறநெறியோடு அணுகவில்லைதான் இன்னும்,சொல்லபோனால் திமுகவின் வெற்றியை தடுப்பதில் தடைபோடுவதில் 
முனைப்போடு செயல்பட்டவர்கள் தான் ஆனாலும் அவர்கள் மீது பாசிசவாதிகளின் வன்மம் நிறைந்த குற்றச்சாட்டை பழியை அவர்கள் மீது எரியும் தனலை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கமுடியாது ஏனெனில் இவர்கள் நம் பிள்ளைகள் 
இவர்களை உயரத்தில் ஏற்றதான் திராவிடம் பாடுபட்டது இனியும் தொடர்ந்து உழைக்கும்..
..
ஆலஞ்சியார்

Friday, June 19, 2020

ராகுல்

ராகுல் 
மதிப்பிற்குரிய தலைவராக உயர்ந்துநிற்கிறார் 
பதவிக்காக எதையும் செய்யும் அரசியல் அறியாத மிகவும் பக்குவபட்ட தலைவராக வலம் வருகிறார் ..நாட்டை உண்மையாக நேசிக்கிறவர் .. பொய் அறியாதவர் தன்னை தேடி பதவி வந்தபோதும் மன்மோகன் எவ்வளவோ வற்புறுத்தி ஏற்காதவர் .. அன்று பதவியை ஏற்றிருந்தால் Dominate செய்கிறார் அதிகாரத்தில் தலையிடுகிறாரென பெயர் வந்திருக்கும் ..  இவர் மீது வைக்கபட்ட விமர்சனங்கள் அவதூறுகளை கண்டுகொள்ளாமல் பயணிப்பவர் .. இத்தாலி குடியுரிமை வெளிநாட்டில் காதலியென கதைவிட்டு பார்த்தும் பொதுவெளியில் மோடியை போல கண்ணீர்விடவில்லை ..
நல்ல தலைவனுக்கு தகுதி கற்றுக்கொள்ளல் அது ராகுலிடம் காணமுடிகிறது.. மிகச் சிறந்த தலைவர்களை காலம் தரும் .. 
இளைஞராக இந்நாட்டின் நாட்டுமக்களின் நம்பிக்கையாக வலம் வருவார்.
..
நாடகம் நடத்தவில்லை மார்பை விரித்து வீரவசனம் பேசவில்லை அடுக்கடுக்காய் பொய்பேசி திரியவில்லை அழுது புலம்பவில்லை, மதவெறியை தூண்டி கலவரம் செய்ய தெரியவில்லை சாதிவெறியூட்டி கீழானவர்கள் என விசவிதையை தூவி தாக்கவில்லை மாட்டிறைச்சி வைத்திருந்தவனை கொன்றவனுக்கு மாலை அணிவிக்க சொல்லவில்லை .. முன்பிருந்த ஆட்சியாளர்கள் மீது பலிபோடவில்லை .. 
இந்திராவையும் ராஜீவ் மரணத்தையும் வைத்து 
அரசியல் செய்ய தெரியவில்லை.. தொடர்ந்து தன்னை கேலி செய்தும் தரந்தாழ்ந்து தனிநபர் விமர்சனத்தை செய்ய தெரிவில்லை.. கண்ணீர் வடித்து என்னை தீக்கிரையாக்கிவிடுங்கள்  என நடிக்கவில்லை .. பாவம் வடஇந்திய அரசியலை அறியாதவராகிப் போனார்..
..
நேர்மையாக பேசி நல்ல நெறியோடு கூடிய அரசியல் அறத்தை அறிந்திருந்தார் .. தனக்கு தெரியாத துறைகளில் தெளிவு பெற அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களை கலந்தாலோசிக்கிறார் .. மக்கள் அவதிபடும் போது கைதட்ட சொல்லாமல் தானே நேரில் சென்று புலம்பெயர் மக்களோடு பேசுகிறார் .. 
எளிமையாக தன்னை முன்னிறுத்துகிறார் .. நீண்டகாலமாக காங்கிரஸில் இருந்த ஆர்எஸ்எஸ் பிராமணர்களின் துரோகத்தால் தனது அரசியல் பயணம் கேள்விக்குறியான போதும்.. ஊடகத்துறை ராகுலை ஏதோ தகுதியே இல்லாதவர் போல் போலி பிம்பத்தை உருவாக்கிய போதும் கலங்காமல் மக்கள் பணியை செய்கிறவர் .. 
..
நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் தளபதி.முக.ஸ்டாலின் ராகுல் பெயரை முன்மொழிந்தார் ஆனால் பதவி ஆசை/வெறிப்பிடித்த மாநில தலைவர்கள் ஏற்க மறுத்ததின் விளைவு .. சில இஸ்லாமிய கட்சிகள் உ.பி. கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாக்கை பிரித்து பாஜகவிற்கு துணைப்போனது இவையெல்லாம் இன்றைய 
துயரத்திற்கு காரணம் ..
திரு.ராகுல் அவர்களே .. 
நீண்ட பயணம் காத்திருக்கிறது .. அரசியல் ஆசான் கலைஞரை படியுங்கள் ..இந்த பாசிச கூட்டம் எப்படி தொடர்ந்து தொந்தரவு செய்தது ஊழல் வழக்கு உதிரிக்கட்சிகளை பிரித்தது 
திமுகவை உடைக்க மகோராவை முன்னெடுத்தது அடுத்தடுத்து தோல்விகள் வீழ்ச்சிகள் துரோகங்கள் என தொடர்ந்து அழுத்தபட்டபோதும் "அறம் வெல்லும் " என்ற துணிவோடு அரசியல் செய்தவர்..இன்று வரலாறு  புகழ்கிறது .. நேர்மையும் நெஞ்சுரமும் விடாமுயற்சியும் எதிரிகளின் சூழ்ச்சி அறிந்த வீயூகமும் துரோகிகளை இனம்கண்டு தூரத்தே நிறுத்தி செயலாற்றுங்கள் .. மக்களை சந்தியுங்கள் "நமக்குநாமே " நல்ல முன்னுதாரணம் .. மக்களிடம் செல்லுங்கள் 
மக்கள் என்றைக்கும் கைவிட மாட்டார்கள் பெருந்துயரத்தில் இருக்கும் அவர்கள் எதிர்பார்ப்பது பொய் சொல்லாத நல்ல நிர்வாகத்தை தருகிற நேர்மையானவரை ..
நாணயமான நல்ல அரசியல் தலைவரை தான்..
நம்புங்கள் மக்களிடமே ஜனநாயகத்தின் உயிர்நாடி இருக்கிறது ..

வாழ்த்துகள் ராகுல்
..
ஆலஞ்சியார்

Tuesday, May 12, 2020

தவைவர்

தொழிலாளர்கள் சாலைகளில் நடப்பது எனக்கு வேதனை அளிக்கிறது - மோடி கண்ணீர்..
ஆம் அதற்காக  என்ன செய்தீர்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் வண்டி கூலி கேட்டவர் தானே இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்..
கொரோனாவோடு வாழ பழகிக்கொள்ளுங்கள் என்கிறீர்..  உலகமெங்கும் கொரோனாவோடு போராடி வாழ பழகி கொண்டார்கள் ஆனால் பசியோடு வாழ தான் மக்கள் இன்னும் அறியவில்லை .. நடந்தே வீடு திரும்பும் 4 வயது சிறுமி சாப்பிட்டு இரண்டுநாளாகிறதென்கிறாள் கும்பி எரிகிறது.. சைக்கிளில் 1400 கிலோமீட்டர் பயணிக்கிறான் இந்தியாவின் எதிர்கால இளைஞன் சாப்பிட வழியில்லை .. ரயிலில் அடிப்பட்டு குடும்பத்தோடு இறந்து போவதெல்லாம் எசமானர் அறிவாரா தெரியவில்லை .. 
குஜராத் மாடல் என "பொய்" சொன்னதாக தான் இதுவரை அறிந்திருந்தோம் இப்போதுதான் தெரிகிறது நீலிக்கண்ணீர் பசி போக்கும் நம்ப வைக்கும் அழுதுக்கொண்டே சொன்னால் நம்பிவிடும் இளகிய மனம்படைத்த மக்கள்.. முடியாமல் போனால் மதம் பேசி மயக்கலாம் இதுதான் குஜராத் மாடல் .. வளர்ச்சிபாதை தெரியாது நிர்வாக திறமை அதெல்லாம் தேவையில்லை வாய்கிழிய வீரவசனம் பேசி திடீரென கரைந்து கூனிகுறுகி மக்கள் முன் நின்றால் கடந்ததையெல்லாம் மறநிதுவிடுவார்கள் என்ற சூத்தரம் நன்கு அறிந்ததால் பிரதமராய் இருக்கிறீர் ..
..
மக்கள் நிம்மதி இழந்து வெகுநாட்களாகிவிட்டது.. சமயம் சமூகம் சார்ந்த தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வேட்டையாடுதல் .. வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களை எப்போதும் கண்டுக்கொள்ளாத ஆரிய சமாஜன கூப்பாடுகளுக்கு செவிசாய்த்து ஆட்சி நடத்துகிறீர் .. சில பெரும் முதலாளிகளின் பார்வைமட்டும் உம் கண்ணுக்கு தெரியும் .. சிறுதொழில்களை முடக்கி முதலாளியாய் வலம்வந்தவனை தொழிலாளியாக்கிய பெருமை வேறெந்த பிரதமருக்கும் வாய்க்கவில்லை .. வீழ்ந்த பொருளாதாரத்தை நிமிர்த்த வல்லுநர்கள் சொல்லை செவிசாய்க்காமல் மீண்டும் மீண்டும் அகலபாதாளத்தில் நிறுத்திவைத்துதான் சாதனை .. ஆட்சியில் இருக்கும் போதே வெறுக்கபடுகிறவராக இருப்பது அறியாமல் இல்லை .. இதுவரை முதலமைச்சர்களிடையே கலந்துரையாடல் செய்து என்ன சாதித்தீர் ..பிரதமரோடான கலந்துரையாடல் வீண் என கேரள முதல்வர் வெளிப்படையாகவே சொல்லிவிட்டு தன் பணிகளை செய்ய தொடங்கினார் இந்தியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த மாநிலமாக கேரளம் திகழ்கிறது இந்தியாவிற்கே Excellent Paradigm 
சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது ..
பிரதமரோ வழக்கம் போல சுயசார்பில் வென்றுகாட்டுவோம் எனச் சொல்லி வாழபழக சொல்கிறார்.. ஊடரங்கை நீட்டித்து வாழ பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்
..
மாநிலத்தில் ஒரு எதிர்க்கட்சி எப்படி செயல்பட வேண்டுமென திரு.ஸ்டாலின் தன் நிர்வாகத்தால் செய்துகாட்டுகிறார் பசியோடு யாரும் உறங்க செல்ல கூடாதென்ற உயர்பண்பு .. உதவி என கேட்போருக்கு உடனடியாக அந்தந்த மாவட்ட வட்ட பிரதிநிதிகளை கொண்டு உதவிட செய்தல் .. புற்றுநோய்க்கு மருந்து கிடைக்கவில்லை என்றவுடன் உடனே ஏற்பாடு செய்கிற நாடாளுமன்ற உறுப்பினர் .. கேட்டதும் கிடைக்கிறது என மக்கள் மனதிருப்தி கொள்கிறார்கள் ஒவ்வொருநொடியும் மக்களைப் பற்றிய சிந்தனை மக்கள் நலன் காக்க தவறிய அரசை கண்டித்துவிட்டு சும்மா இருந்துவிடாமல் உடனடியாக தானே களத்தில் இறங்கி அனைத்து தரப்பினரையும் காணொளியில் அழைத்துப் பேசி அவர்களின் துயர்துடைக்கும் கரமாய் திகழ்கிறார் .. பொதுவாழ்விற்கு வந்துவிட்டபிறகு அதிகாரம் அளிக்கவில்லையென்றாலும் மக்கட்பணி செய்து கிடப்பதே அறம் என செயல்படும் தலைவர் .. தலைவர்கள் எப்படி 
செயல்படவேண்டமென்ற இலக்கணத்தை எங்கள் #பேரருளாளன்_கலைஞரிடம் படித்தவர் 
நல்ல தலைவனை கொண்டாடுவோம்..
மாநிலத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டும் பெருந்தலைவராய் திகழ்கிறார் .. அன்று ராகுலை முன்மொழிந்த போது சில மாநில கட்சிகள் பதவி ஆசை கொண்ட சுயவிரும்பிகள் எதிர்த்தார்கள் அன்று அனைவரும் ஏற்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது .. 
..
#தலைவர்_ஸ்டாலின்
..
#MISSION_MKS2021

#MISSION_DMK2021
..
ஆலஞ்சியார்

Monday, May 11, 2020

வழிபாடு

வழிபாட்டுத்தளங்களை திறக்க வேண்டுமென ஜலீல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் .. வழிபாட்டுதளங்கள் என்பது கோயில் மசூதி தேவாலயம் அடங்கியது தான் ஆனால் வழக்கை தொடர்ந்திருப்பவர் ஜலீல் .. கேட்கவே வேண்டாம் ஏற்கனவே தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் உலகெங்கும் கொரோனா தாக்கம் வெகுவாக பரவி வரும் வேளையில் தப்லிக்ஜமாத் கூட்டத்தை நடத்தி .. அதை நாகபட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அன்சாரி ஜாவஹிருல்லா போன்றவர்கள் தவிர்த்திருக்கலாம் என பேசினார்கள் .. இவர்களால் தான் பரவியதென இந்துத்துத்வாவும் ஊடகங்களும் வெகு விரைாக பரப்பி அண்ணன் தம்பி மாமன் மச்சானை போல வாழ்ந்தவர்கள் தெருவிற்குள் வராதவேறு தடுப்பக்களை எல்லாம் ஏற்படுத்தி மனதில் மெல்லிய பிரிவை ஏற்படுத்தினார்கள் ..  இன்னும் 13 நாட்களே பெருநாளைக்கு மிஞ்சி உள்ளநிலையில் நீதிமன்றம் இருதினங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டிருக்கிறது .. ஏற்கனவே இஸ்லாமிய இளைஞர்கள் சில அமைப்புகளால் சரியான பாதையிலிருந்து வழிமாற்றம் செய்யபட்டு உணர்ச்சி பிழம்பில் திரிகிறார்கள் .. வெள்ளிக்கிழமை ஜூம்மா வை தெரியாமல் தொழ முற்பட காவல் துறை வந்து தடியடியெல்லாம் நடந்தது .. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருக்க நிலையில் ..அரசாள்வோரின் திறமையற்ற நிர்வாகத்தால் எண்ணிக்கை அதிகரிக்கிற சூழலில் பெருநாள் தொழுகையை காட்டி வழக்கு தொடர்ந்திருப்பது 
உண்மையில் இவர்களின் நோக்கம் என்ன என்பதை கேள்விக்குறியாக்கியிருக்கிறது ..
..
உலக இஸ்லாமிய நாடுகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே தொழுதுக்கொள்ளுங்களென அறிவுறுத்தி பள்ளிவாசல்கள் காலவரையின்றி மூடபட்டு 
கொரோனைவை விரட்ட எல்லா கொண்டாட்டங்களையும் விலக்கி/தவிர்த்து செயல்படும் போது தமிழகம் மட்டும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு காப்பிரைட் எடுத்ததை போல செயல்படுவது அறிவீனம் 
ஏற்கனவே இஸ்லாமியர்கள் மீது சட்டென்று அவதூறை பரப்ப தயாராக இருக்கும் ஊடகங்கள் சங் அமைப்புகள் இதை கொண்டாடுவார்கள் .. வழிபாடு என்பது அவரவர் விருப்பம் அதை பிற சமூக மக்களுக்கும் சொந்த சமூகத்திற்கு இடைஞ்சல் செய்து நடத்துவதை தவிர்க்கவேண்டும் பேரிடர் காலங்களில் நோக்கம் நோயை விரட்டுவதாக இருக்கவேண்டும் ..
..
மனுவில் வழிபாட்டுதளங்கள் என்கிற போது எல்லா மதத்திற்கும் பேசுவதை போல தெரியும் ஆனால் ஊடகங்கள் அதை ரம்ஜான் பெருநாளுக்காக தொடரபட்டதாக பேசும்.. உண்மையில் அமைதியாக இந்த ரமலானை கடந்து போவதுதான் அறிவுடை செயல் . வரும் 15 ,16 தேதிகளில் தமிழக அரசு முடிவெடுக்குமென நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது எதுவாகினும் தவிர்த்து கொள்ளல் என்பதே சமூதாயத்திற்கும் நாட்டுக்கும் செய்கிற நல்லவிடயம் .. இது தேவையில்லாத வழக்கு .. உலகெங்கும் தெய்வங்களின் ஆலயங்கள் மூடபட்டு மருத்துவத்தின் துணையோடு மக்கள் போராடி வென்று வரும் வேளையில் சில சமூக புல்லுறுவிகள் இக்கட்டான சூழலை உருவாக்குகிறார்கள் உண்மையில் இவர்களுக்கு அக்கறையெல்லாம் இல்லை ..
பெயரெடுப்பதற்கும் வீம்புக்கும் செய்கிறார்கள் ..
ஏற்கனவே தமிழக உலமா சபை இந்த வருட தராவிஹ் தொழுகை பெருநாள் தொழுகையெல்லாம் தவிர்க்க சொல்லியிருக்கும் போது சில சமூகவிரோதிகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை சமுதாயம் கண்டிக்க வேண்டும் 
..
ஆலஞ்சியார்

Saturday, May 9, 2020

தலைவர்

'பெட்ரோல், டீசலை 'சீப்பா'கொடுத்தால் வண்டி வாகனம் அதிகமாகி விடும்'_
எம்.எல்.ஏ. செம்மலை!..
"குடி"பிரியர்களின் கோரிக்கையை  ஏற்று மதுகடை திறப்பு செல்லூரார்..
..
சுற்றி முட்டாள்களை வைத்துக்கொண்டால் தான் புத்திசாலியாக தெரிவோம் என்று சொல் உண்டு .. அதை மிகவும் சரியாக கடைப்பிடித்தார் ஜெயலலிதா ஆனால் பாருங்கள் ஜெயலலிதாவை மிகசிறந்த ஆளுமையை போல ஊடகங்களும் நடுநிலைகளும் கடைசிவரை கட்டிகாத்து நின்றன .. சிறந்த நிர்வாகியாகவோ நேர்மையாளராகவோ ஜெயலலிதாவை சொல்லமுடியாது .. தொலைநோக்கோடு எதையும் செய்திடவில்லை .. ஆனால் காழ்ப்புணர்ச்சியில் நல்ல திட்டங்களை செயல்படாமல் நிறுத்தியதும் சரியானததென்று கடைசிவரை உணராமல் போனதும்தான் நடந்தது சமச்சீர் கல்வியை தடுத்திட என்னவெல்லாமோ செய்ததும் நாம் கண்டதும் தான் ..சிறந்த நிர்வாகியாக இருந்ததுமில்லை நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தலையில் கொட்டியும் ரத்து செய்தும் இவரின் நிர்வாகத்தை கண்டித்துமிருக்கிறது .. டான்சி வழக்கில் தண்டனையிலிருந்து தப்ப சொத்தை திருப்பி தருகிறேன் என நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக சொல்லி தண்டனையிலிருந்து மீண்டதெல்லாம் வரலாறு .. தான் இட்ட கையெழுத்தையே போலி என்றவர் .. கடைசிவரை சசிகலாவின் "கீ"கொடுத்த பொம்மையாக இருந்தார் ஒருகட்டத்தில் செயலிழந்தும் போனார் .. தன்வாழ்வை சரியாக அமைத்துக்கொள்ள தெரியாத, தன் பொதுவாழ்வை கூட நேர்மையோடு கட்டமைக்க தெரியாதவர் தான் ஆனால் அவரை இந்த சமூகம் கொண்டாடியது தான் விந்தை .. 
..
இவரின் அமைச்சரவையில் முன்பிருந்தவர்கள் கூட நாவலர் போன்ற முன்னோடிகள் கூட ஒருகட்டத்தில் தங்களின் "திறமையை" வெளிகாட்டி தலைகுனிந்து நின்றார்கள் சிறந்த நிர்வாகியாகவோ ஆளுமையாகவோ அவர்களின் பங்களிப்பு இருந்ததா என்றால் வியப்பே மிஞ்சும்.. இப்போதைய அமைச்சர்கள் 
சொல்லவே வேண்டாம் முதல்வராக இருப்பவருக்கே அதற்கான தகுதி இல்லையென்கிற போது என்ன சொல்ல .. அண்ணாவிற்கு பிறகு அதிகம் புத்தகம் படித்தவன் நான் என்றபோது கடைசியாக படித்த புத்தகத்தின் பெயரை கேட்டபோது அது..வந்து.... உள்ளே இருக்கு என வடிவேலு காமெடியை ஞாபகபடுத்தியவர் ..சேக்கிழாரின் கம்பராமாயணத்தை கரைத்து குடித்தவரின் அமைச்சர் பெருமக்களின் பெருமைகளை சொல்லவேண்டுமா என்ன..? 
..
இவர்களை போன்றவர்களை உயர்த்தி பிடித்ததில் பாசிச சிந்தனையாளர்களுக்கும் பெரும்பங்குண்டு அவர்களுக்கு திராவிடம் ஆட்சியில் இருப்பதை பொறுக்கமுடியவில்லை அதற்காக எதைவேண்டுமானாலும் உயர்த்தி பிடிக்கலாம் சகதியை கூட சந்தனம் எனலாம்..
அறுவறுப்பை அழகென்கலாம்.. முட்டாளை அறிவாளியாக்கி திருடர்களை தேவதூதர்கள் ஆக்கலாம் .. திமுகவை தவிர்க்க வேண்டும் அதற்காக எந்த கழிசடைகளையும் ஆதரிக்கலாம் .. நீதிமன்றத்தால் "திருடி " என தீர்ப்பு தரபட்டாலும் "புண்ணியம் கோடி செய்த புனிதர்"என பெயர் சூட்டலாம்  .. அரசை கொண்டே #திருடிக்கு மணிமண்டபம் கட்டலாம் .. அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி கூட்டுக்கொள்ளை அடித்தாலும் .. திராவிடத்தை வீழ்த்த வேறு ஆள் கிடைக்காதென்பதால் கொண்டாடுவோம் .. 
..
தமிழகம் கண்ட மோசமான அவல ஆட்சி நடக்கிறது தன்மானமில்லாத கேவலமானவர்களை கொண்டு சதியை அரங்கேற்றுகிறார்கள் .. 50 ஆண்டுகாலம் போராடி பெற்றதெல்லாம் பறிபோகிறது ..வெளிப்படையான கொள்ளை .. ஊழல் சர்வசாதாரணம்.. கொஞ்சமும் கூச்சமின்றி பொய்யை சொல்லி ஏமாற்றும் அயோக்கியத்தனம் .. நிர்வாக குளறுபடிகள் நாளை என்ன நடக்கும் முதல்வருக்கே தெரியாது ..அதிகாரிகள் யாரும் முதல்வரை பொருட்டாகவே மதிப்பதில்லை .. தமிழகம் பேரிடரில்/பேராபத்தில் .. இவர்கள் ஏறியபடவேண்டியவர்கள் இவர்கள் கொள்கை சித்தாந்தம் எரிக்கபடவேண்டியவை .. நல்லதொரு தலைமையை நாம் தவறவிட்டதன் விளைவை அனுபவிக்கிறோம் ..மாற வேண்டும் ..
சில அரைகுறைகளின் இனம் மொழி பகை என உளறுதல் கேட்கும் ..அவையாவும் பாசிசத்தின் புதிய குரல்கள் அவைகளை புறக்கணிப்போம் ..
..
மக்கள் அவதியுறும் போதும் அருகில் நின்று காத்தருளும் கனவான்கள் ..ஒருங்கிணைவோம் வா என குரல் கொடுக்கும் தயை உள்ளம் .. அரசியல் நேர்மை அயராத உழைப்பு அனைவரையும் நேசிக்கும் பண்பு .. சிறந்த தலைமை நேர்மையான நிர்வாகம் பொறுப்புணரிச்சியோடு அணுகும் ஆற்றல் அனைவரையும் அரவணைத்து வழிநடத்து பேராளுமை இவையெல்லாம் ஒருங்கிணைந்த தலைவர் திரு.ஸ்டாலின் ..
#நாம்_பெற்ற_பேறு..
அறியணையேற்றுவோம் 
கொண்டாடுவோம் 
முட்டாள்களிடமிருந்து நாட்டை மீட்டெடுப்போம் ..
தலைவர்.ஸ்டாலின் #காலம்_தந்த_கொடை ..
..
ஆலஞ்சியார்

Friday, May 8, 2020

துயரம்

வெளிநாடுகளிலிருந்து 30 லட்சம் இந்தியர்கள்
 நாடு திரும்ப தூதரகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் அவர்களை  மோடி திரும்ப அழைத்து வருகிறாரென பத்திரிக்கைகள் 
மோடியை ரட்சகன் ரேஞ்ச்க்கு புகழ்கிறது இதெல்லாம் நாம் பார்த்ததுதான் ..
கொரோனா தொற்றின் தாக்கம் பல நாடுகளில் வேலைவாய்ப்பை வெகுவாக பாதித்ததும் நாடு விட தயாராக இந்திய சமூகம் .. இவர்களின் பெரும்பாலோனார் சுற்றுலா விசாவில் வந்தவர்கள்  பணிநீக்கம் செய்யபட்டவர்கள் விசா காலாவதியானவர்கள் பொருளாதார நெருக்கடியில் குடும்பத்தை நாட்டிற்கு அனுப்புகிறவர்கள் .. இவர்களை இந்திய அரசு சொந்த செலவில் அழைத்துவர வில்லை மாறாக விமான செலவை அவர்களே ஏற்க வேண்டும் அதோடு தாயகம் வந்தவுடன் அவர்களின் பரிசோதனை மற்றும் தனிமைபடுத்துதல் செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் .. இதுதான் இவர்கள் ஆட்சியின் லட்சணம் .. 
..
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இதுபோன்ற பேரிடர் காலங்களில் உகாண்டா வியட்நாம் கம்போடியா குவைத் போன்ற நாடுகளிலிருந்து தம் மக்களை அழைத்துவந்த போது அப்போதைய அரசு பெருமை பீத்திக்கொள்ளவில்லை மாறாக எந்த தொகையும் பெறாமல் அழைத்துவந்து தங்கள் இருப்பிடம் செல்லும் வரை ரயில் பயணத்தையும் ஏற்பாடு செய்தது ஆனால் மக்கள் சொந்த செலவில் வருவதை கூட "காப்பாளன் மோடி" என கதைவிடுகிறார்கள் ..
இவர்கள் லட்சணம் இப்போதுதான் நாட்டுமக்கள் அறிய தொடங்கியிருக்கிறார்கள்  நடந்தே தங்கள் ஊருக்கு 600, 700 கிலோமீட்டர் குழந்தை குட்டிகளோடு சாப்பிட கூட வழியில்லை சொந்த மண்ணை பார்த்துவிட வேண்டுமென நடந்தே வருகிறார்கள் இன்று தரை வழி மார்க்கமாக சென்றால் இடையூறுகளை அதிகாரிகள் செய்வார்களென ரயில் பாதையில் வந்தவர்கள் சிதறி கிடக்கிறார்கள் கேட்கவே நடுங்குகிறது .. இவர்களை எல்லாம் சொந்த மாநிலத்தில் 
கல்வியை வேலைவாய்ப்பை  தராமல் மதவெறியையும் அடிமைத்தனத்தையும் ஊட்டி இன்று அல்லல்பட காரணமானவர்கள் .. குஜராத்தை வியக்கதக்க மாற்றம் செய்திருப்பதாக பொய்கதை பேசி நாட்டை/மாநிலத்தை குடிடிசுவராக்கி வைத்திருக்கிறார் இவரை தான் இந்த ஊடகங்கள் வானளாவி புகழ்ந்தன ..
..
நாடெங்கும் அபயகுரல்கள் மெல்லியதாய் கூட ஆள்பவர்கள் காதில் விழவில்லை .. புலம்பெயர் மக்களை கூட காசு கொடுத்து ரயில் பயணம் செய்ய சொன்னவர்கள் ..  காங்கிரஸ் தலைவர் 
சோனியா அவர்கள் வீடு திரும்ப ஆகும்செலவை காங்கிரஸ் ஏற்கும் என்றவுடன்  
மத்திய மாநில அரசு ஏற்குமென்றார்கள் .. 
மதுக்கடைகளை திறந்து மக்களை மகிழ்விக்கிறார்கள் இனி எவனும் கொரோனாவால் செத்தான் என சொல்ல கூடாது .. கர்நாடகம் ₹45 கோடியா தமிழகம் ₹150கோடி வசூல் .. நீண்ட வரிசை சரக்குகளை பள்ளிகூடங்களில் வைத்து விநியோகம்.. வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு அப்பன் குடிக்க போனான் .. அம்மாவும் மகளும் தீக்குளித்தார்கள் .. நல்லவேளை கொரோனா உயிரிழப்பில்லை .. நாம் எங்கே போகிறோம் நம் ஆட்சியாளர்கள் அதிகார வெறிப்பிடித்தவர்கள் நாட்டை சூறையாடுகிறார்கள் .. சொல்லமுடியாமல் மக்கள் துயரத்தில் .. இக்கட்டான காலகட்டத்தில் கூட இவர்கள் ஆட்சியாளர்களாக இல்லை வியாபாரிகளாக கொள்ளையடிப்பவர்களாக 
எரிகிற பிடிங்கியது வரை லாபம் என செயல்படுகிறார்கள் .. வெளிநாடுவாழ் இந்தியனும் சொந்த மண்ணின் வாழ்பவன் எவருமே இந்த அரசுகளால் நிம்மதியாக இல்லை துயரமே அடைகிறார்கள் ..
..
ஆலஞ்சியார்

Wednesday, May 6, 2020

தளபதி தலைவர்

செயல்படாத அரசும்
செயல்படும் எதிர்க்கட்சி தலைவரும் ..

கொஞ்சமேனும் இருந்த நம்பிக்கைகள் பொய்த்துபோய்விட்டனவோ என ஆளும் கட்சி பிரமுகர்களே கவலைக்கொள்கிற நிலையில் தமிழக அரசு நிர்வாகம்.. யாருக்கும் இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது அரசு அதிகாரிகள் கூட முதல்வரை மதிப்பதில்லை என்பது அவர்கள் தரும் மரியாதையில் தெரிகிறது.. எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாதென்ற அறிவு கொஞ்சமும் இல்லை .. இன்றைய அவலநிலைக்கு முழுகாரணமும் எடப்பாடியின் தலைமையிலான அரசு என்றால் மிகையில்லை .. அரசு இயந்திரம் சரியாக செயல்படாததும் அதிகாரிகள் எடப்பாடியை மதிப்பதில்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது ..முன்கூட்டியே எதிர்க்கட்சி தலைவர் எச்சரித்தும் அதை கண்டுக்கொள்ளாமல் வயதானவர்களுக்கு தான் வருமென கிண்டல் செய்தவர்கள் இன்று கைபிசைந்து நிற்கிறார்கள்.. சொல்வதை ஏற்பதில்லை சுயசிந்தனையும் இல்லாத முட்டாள்கள் கையில் காலம் நம்மை சிறை செய்திருக்கிறது .. திடீரென முழு ஊரடங்கென அறிவித்து மக்கள் ஒன்றுகூடலை செயற்கையாக ஏற்படுத்தி இன்று அதீத பரவலுக்கு காரணமானதும் மக்களின் பசி தீர்க்க முடியாமல் ஒரு அரசு இயங்குவதும் காலகொடுமை என்பதை தவிர சொல்வதற்கொன்றுமில்லை .. இக்கட்டான கால கட்டத்தில் மதுபானகடைகளை திறந்து 
மேலும் சங்கடத்தை ஏற்படுத்துவது தேவையில்லாதது ..
..
இந்த அரசை நம்பி பலனில்லை என முடிவெடுத்து மிக சிறந்த நிர்வாகத்தை அரங்கேற்றியிருக்கிறார் .. ஒரு அரசு பேரிடர் காலங்களில் எப்படி செயல்படவேண்டுமென மிக அழகான வடிவமைப்போடு திட்டங்களை செயல்படுத்துகிறார் #மாண்பிமை_எதிர்க்கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் .. #ஒருங்கிணைவோம்_வா… 
மக்களின் குறைகளை தேவைகளை தீர்க்க வேண்டிய அரசு வருவாயை அதிகரிக்கும் செயல்களில் கவனம் செலுத்துகிறது இலவசமாக உணவு தருகிறோம் என்றவர்கள் அம்மா உணவகத்தில் காசுக்கு சோறு என்றார்கள் ..ஆனால் திமுகவோ நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவு என்ற இலக்கோடு சமையல் கூடங்களை இயக்குகிறது .. தொலைபேசியில் அழைத்து குறைச்சொன்னால் சொன்னவன் யாரென்றெல்லாம் பார்க்காமல் தேவையான பொருட்களோடு கதை தட்டுகிறார்கள் .. கேட்டால் கிடைக்கும் என நம்பிக்கையை விதைக்கிறார்கள் .. பல்வேறு ஊடகங்கள் பலசார்பு அமைப்புகள் எதிர்கருத்தை கொண்டவர்கள் பரமவைரியாக நினைத்தவர்கள் கூட தளபதி.ஸ்டாலின் செயல்பாடுகளை  பாராட்டுகிறார்கள் 
புகழ்கிறார்கள்.. மக்களின் தேவையறிந்தவனே சிறந்த தலைவனாக முடியும் மக்களோடு எப்போதும் இணைந்து செயல்படுபவனே ஆள தகுதியானவன் ..
..
பல்வேறு அமைப்புகள் வணிகர்கள் தன்னார்வலர்கள் என அவர்களின் குறைகளை தேவைகளை கேட்டறிந்து #ஒருங்கிணைவோம்  என செயல்படுகிறார்.. நல்ல தலைவன் தன்னலமற்ற சேவையை முன்னெடுப்பான்  
குறைகளை அறிதலோடு முடிந்துவிடவில்லை எப்படி தீர்ப்பதென்று  எண்ணி அதை நிறைவேற்றும் கடமை தமக்குண்டு என வியக்கதக்கவகையில் செயல்படும் தலைவர் 
உண்மையில் கலைஞரை நினைவில் கொள்கிறேன் .. விவசாய கடனை தள்ளுபடி செய்தபோது உடனிருந்தவர்கள் அதிகம் அதிமுககாரர்கள் தான் பயனடைகிறார்கள்  என்ற போது அவர்களை நான் விவசாயிகளாக பார்க்கிறேன் என்றார் அந்த பெருமகன் .. 
..
ஆம் இப்போது கூட சிலர் உண்மையில் உதவி கரம் நீட்டுகிறார்களா என சோதித்தும் பார்க்கிறார்கள் .. கேட்பவன் யார் என்று பார்பதில்லை  உதவி கேட்பவனின் நிலையை உணர்ந்து தாயுள்ளத்தோடு செயல்படுகிறார் 
தளபதி .. இன்னல்பட்டு அழும்குரலை அறிந்து உதவும் பேரன்பாளராய் ஓடிவந்து உதவும் உன்னதராய் தெரிகிறார் .. ஆம் 
#தளபதி_தாயுமானவர் ..
..
இதிலிருந்து யாரிடம் 
நம்மை ஒப்படைக்க வேண்டுமென நாம் 
அறிந்துணர வேண்டும் நம்மை ஆள தகுதியானவர் யாரென்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..

#அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.. 
என்றான் வள்ளுவன் 

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.. அது நம்க்கே வினையாகும் .. 
..
#தளபதி_தலைவர்
..
ஆலஞ்சியார்

Monday, May 4, 2020

ஈகை பசி தீர்த்தல்

இந்து அறநிலையத்துறையிடமிருந்து 10 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு .. கல்யாண மண்டபங்களை கொரோனாவிற்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவிட்டதும் ராகவேந்திரா மண்டபம் பாரமரிப்பு பணியில் இருப்பதாக அறிக்கை.. காங்கிரஸ் கட்சி தலைவர் தலைவர் திருமதி.சோனியா புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ரயிலில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்றவுடன் மத்திய அரசு இறங்கி வந்து இலவசமாக செல்ல அனுமதி.  
இவ்வளவு தான் இவர்கள் நாட்டுபற்று தேசநலன் .. 
..
திருப்பதி கோயில் நிர்வாகம்.ஒப்பந்த பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது இடர்காலங்களில் பணியில் இருந்து விலக்குவதை ஏழுமலையானே பொறுப்பானா..?.. அறநிலையத்துறையிலிருந்து 10கோடியை நிவாரணத்திற்கு கொடுப்பதால் என்ன குறைந்துவிட போகிறது .. முதலில் எதிர்த்து இந்துமுன்னணியும் கிச்சா அய்யரும் குரல் கொடுக்க தினமலர் கோபால் ஜி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர .. விரைந்து விசாரணைக்கு வந்தது உடனே தமிழக அரசு 47 கோயில்களிலிருந்து 10 கோடியை நிவாரணத்திற்கு கேட்டதை திரும்பபெறுவதாக தமிழக மனுதாக்கல் செய்ய வழக்கு முடித்துவைக்கபட்டது .. 
..
தேசத்தின் நவீன பாதுகாவலன் ரசினியின் மண்டபம் பராமத்து பணியில் இருப்பதால் அடுத்தபடத்தில் மக்களை காப்பாற்றி ராகவேந்திராவில் தஞ்சமடைய செய்து உணவும் பொருளும் வழங்குவதாக காட்சி அமைக்கபடும் ரசிகமணிகள் கைதட்டுங்கள் .. இடர்காலங்களில் கூட உதவ முன்வரவில்லை இவர்களெல்லாம் தமிழர்கள்/தமிழக நலன் காப்பவர்களென வரிந்து கட்டி நடுநிலையாளர்கள் வக்காலத்து வாங்குவார்கள் .. அரசு கேட்பதற்கு முன்பு அறிவாயலத்தில் கலைஞர் அரங்கை பயன்படுத்திக்கொள்ளலாம் என திமுக நகராட்சிக்கு கடிதம் எழுதியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும் .. 
..
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உண்ண உணவின்றி செல்ல பணமின்றியும் தவித்து நிற்கும் வேலையில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு /இடத்திற்கு செல்ல கட்டண வசூல் செய்வதெல்லாம் பெரும் கொடூரமனம் படைத்த ஆட்சியாளர்களால் தான் முடியும் .. பிரதமர்நிதி PM CARE என பெருந்தனக்காரர்கள் 
பெரும் முதலாளிகள் நடிகர்கள் தொடங்கி முடிந்ததை அனுப்பிவைத்த சாமானியர்கள் ஏராளம் .. இவையெல்லாம் என்ன ஆனது .. பாஜகவின் கணக்கிற்கு சென்றுவிட்டது அரசின் தணிக்கைக்கு வராத பணம் கள்ளபணமாய் தானே கணக்கெடுக்க வேண்டும் ...தனியார் தொண்டு நிறுவனம் கூட வருமான கணக்கை காட்டவேண்டும் ஆனால் பிரதமர் நிதி குறித்து கேட்டால் பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் இல்லை ..
கூலித்தொழிலாளர்கள் குடும்பத்தோடு பிழைக்கவந்தவர்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி வந்தவர்கள் திரும்பி செல்ல பணமின்றி தவிக்கும் போது கருணை உள்ளத்தோடு நடந்துக்கொள்ள வேண்டிய அரசு  அதை செய்ய மறுத்ததும் .. "தயா" உள்ளத்தோடு காங்கிரஸ் அந்த செலவை ஏற்கும் என அறிவித்தவுடன் விழித்தெழிந்து மத்திய அரசு 85% ம் மாநில அரசு 15% செலுத்துமென பிரதமர் அறிவிக்கிறார் .. அரசை இயக்க எதிர்க்கட்சி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் .. ஜனநாயகத்தில் மிருகபலத்தோடு ஆள்வோருக்கு அதிகாரத்தை அளிக்க கூடாதென்று இப்போது புரிந்திருக்கும் ..
இங்கே தமிழகத்திலும் அம்மா உணவகத்தில் உணவு இலவசமென அறிவித்துவிட்டு இப்போது கட்டணம் வசூலிக்கிறார்கள் ..
..
#ஒருங்கிணைவோம்_வா திட்டத்தை இன்னும் முனைப்பாக எடுக்க வேண்டும் தன்னார்வர்களை அழைத்து பேசி அவர்களையும் இணைத்து செயல்படுவதென முடிவு நல்ல நிர்வாகத்தின் தரும் .. தமிழகம் நல்ல எதிர்க்கட்சியை கொண்டிருக்கிறது ஓயாது உழைக்கும் ஒப்பற்ற தலைவராக தளபதி .. மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார் அடிக்கடி அரசு செயல்பாடுகளை மாற்றி, என்ன திட்டம் அவர்களிடத்தில் இருக்கிறதென அவர்களுக்கு தெரியாத சூழலில் தான் எடப்பாடி அரசு முட்டாள்கள் கையில் நாடு சிக்கி தவிக்கிறது 
..
#அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.. என்றான் வள்ளுவன் 

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்..

மக்கள் பசி போக்க திமுக செயல்படுபவதை பாராட்டுவதோடு உடன்,ஒத்துழைப்போம் ..
..
ஆலஞ்சியார்

Saturday, May 2, 2020

ஈழ வியாபாரம்

ஈழம் மட்டுமே தங்களின் பிழைப்பாக கொண்டு திரியும் திருமுருகன் காந்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டுமென்கிறார் .. பிரபாகரனை விமர்சிப்பதை பார்பனீய மனநிலை என்கிறார் ..
முதலில் இவர்களுக்கு ஈழம் பிரபாகரன் தவிர வேறெதும்,தெரியாது .. பத்தாண்டுகளுக்கு முன்பே தோற்றுவிட்ட ஈழ போராட்டத்தோடு நூற்றாண்டுகளாய் எம்மை அழுத்தி நிற்கும் பார்பனத்தோடு முடிச்சு போடுகிறார் .. மக்களின் ஆதரவு பெற்ற ஜனநாயக பாதையில் பயணிக்கும் திமுக உறுப்பினரை விமர்சிக்க கூட ஒரு தகுதி வேண்டும் அது ஈழ பிழைப்புவாதிகளுக்கெல்லாம் இல்லை ..
..
பிரபாகரனின் மறுபக்கத்தை கிளற தேவையில்லை ஆனால் என்பதாண்டுகள் இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்த மிகச்சிறந்த ஜனநாயகவாதி .. மாபெரும் கட்சியின் தலைவர் இந்தியா கண்ட ஆகசிறந்த ஆளுமை கலைஞரை சில சில்லுவண்டிகள் அரைகுறைகள் வாய்க்குவந்ததை பேசி திரிந்தபோதெல்லாம் இந்த மயிராண்டிகள் எங்கு போனார்கள் .. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லை #கலைஞர்  ஆனால் வரம்புமீறி திரும்ப திரும்ப ஒரே பொய்மூட்டைகளால் கேலியும் கிண்டலும் செய்தபோதெல்லாம் வராத கோபம் ..
பிரபாகரனை விமர்சித்தால் வருகிறது
இன்று தமிழகம் கண்ட மாபெரும் வளர்ச்சி அடித்தளம் கலைஞரின் கடும்உழைப்பில், சிந்தையில், தொலைநோக்கு பார்வையில் வந்ததென அறியாதவர் யாருமில்லை ஆனாலும் அவரை விமர்சிப்போம் என்பது தான் பார்பனீய நிலைபாடு .. இன்றும் பாசிசவாதிகள் திமுகவை மட்டுமே நோக்கி குரைத்துக்கொண்டிருக்கிறார்களே என்ன காரணம் ..அந்தளவு பார்பனீயத்திற்கு தண்ணிகாட்டியவர் கலைஞரை தவிர வேறு யாரும் இல்லை ..
..
மே மாதம் வந்தாலே வசூல் ஞாபகம் வரும் ஈழ போராட்ட வரலாற்றை இவர்களை விட கொச்சைபடுத்தியவர்கள் வேறுயாரும் இல்லை .. ஆமைகதைகளும் அரசிகடத்தலும் தான் பிரபாகரனின் பிரதான பணியாக இருந்ததாக பேசி திரிந்தபோதெல்லாம் சிறுமைப்படாத பிரபாகரனின் செல்வாக்கு திமுக எம்பி  விமர்சிப்பத்தவுடன் வந்துவிடுமா என்ன.. 
இலங்கை போர் முடிந்து பெண் போராளிகள் உட்பட தடவுகாரர்களாய் இருந்த போது நீதிமன்றத்தில் வழக்காட வழியில்லாமல் வலிகளோடு இருந்தவர்களுக்கு சில சிங்கள வழக்குரைஞர்கள் வாதிட்டு வெளிகொணர்ந்ததெல்லாம் எழுத தொடங்கினால் இந்த பிழைப்புவாதிகளின் பாடு திண்டாட்டமாகிவிடும்.. பிரபாகரனை கலைஞர் கடைசி வரை குறைவாக மதிப்பிடவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போல ஒரு இடத்தும் பிரபாகரனும் கலைஞரை குறைத்து பேசியோ விமர்ச்க்கவோ இல்லை .. சில தவறான வழிகாட்டுததால் வீழ்ந்தது ஈழப் போராட்டம்..
சிலர் இதைவிட்டால் பிழைக்க,
அரசியல் செய்ய வேறுவழியில்லை என்பதால்
ஈழ அரசியல் பார்வையை   ஆரம்பம் தொட்டே திமுக எதிர்பார்க்கி காலத்தை ஓட்டினார்கள் .. ஆனால் இனியும் அது இங்கே நடக்காது மக்கள் ஈழ போராட்ட வீழ்ச்சியை அறிந்திருக்கிறார்கள் 
..
தமிழகத்தில் எத்தனை போராட்டங்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கெல்லாம் காரணமான மத்திய மாநில அரசுகளை எல்லாம் இவர்கள் மறந்து கண்டிப்பதில்லை..ஆனால் முடிந்துவிட்ட இனி ஈழம் கிட்டாதென்ற உண்மையை உணர்ந்து ..
பெருங்கனவாய் போனதென்று அறிந்தும் பிரபாகரனைப்போல ஒருவர் ஈழ போராட்டத்தை இனி முன்னெடுக்க முடியாது நீர்த்து போய்விட்ட போராட்ட வரலாற்றை வைத்து இனியும் தமிழகத்தை அரசியல் செய்ய நினைப்பதையும் .. திராவிடத்தை எதிர்ப்பதற்கு ஈழத்தை கையிலெடுத்து பார்பனீயத்திற்கு அடிவருடுவதையும் இனியும் கண்டும்காணாததுபோல் இருக்கமுடியாது ..
பெரியாரை பேரறிஞரை பேரருளாளனை குற்றம் சுமத்துகிறவன் எவனையும் விடுவதாயில்லை .. அரசியல் செய்ய வேறெதாவது காரணிகளை கொண்டுவாருங்கள்..
..
ஆலஞ்சியார்

Friday, May 1, 2020

தலைவர் ஸ்டாலின்

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவு .. மத்திய அரசு 
நோயால் சாவதை விட பசியால் சாவு என்கிறதா..,,புரியவில்லை அன்றாடம் வேலைக்கு போனால் தான் சோறு என்கிற நிலையில் தொடர்ந்து மாதகணக்கில் ஊரடங்கை நீட்டித்து மக்களை பசியின் கொடுமையில் நிறுத்துகிறார்கள்.. மக்கள் படும் அவதியை உணராத அரசாய் திடீரென எந்த முன்னறிவிப்பின்றி ஊடரங்கை 21 நாட்கள் பிறகு 15 என தொடர்ந்து மூன்றாவது முறையாக நீட்டித்தால் சாலையோர மக்கள் ..தினக்கூலிகள், வறுமையின் பிடியில் வாழ்வோர் செலவிற்கு பணமின்றி என்னசெய்வதென அறியாமல் நிற்கிறார்கள் ..
..
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் 68,000 கோடி ஒதுக்கி நிவாரணம் அளித்திருக்கலாம் என்கிறார் .. மேனாள் மத்திய நிதியமைச்சர் குடும்பத்திற்கு உணவு பொருட்களும் ₹5,000 ரூபாயும் ஒதுக்கவேண்டும் என்கிறார் ஆனால் செவிடனைப்போல வீண்பிடிவாதத்தோடு அரசு மக்களை பசியில் கொல்லபார்க்கிறது .. கைதட்டியோ விளக்கேற்றியோ பசியை விரட்டிவிட முடியாது நல்ல திட்டங்கள் ஏதுமில்லாத அரசு .. சதா மக்களை பரபரப்பாக வைத்திருப்பதே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது குஜராத்தில் 5 கிலோ அரசி வாங்க 5 மைல் தொலைவிற்கு வரிசை இதை முன்மாதிரியாக கொண்டுதான் இந்திய ஒன்றியத்தை ஆள அனுமதித்தார்கள் 56 இன்ச் மார்புள்ளவர் தான் ஆள அருகதை என்றெல்லாம் பேசி கடைசியில் தெருவில் நிறுத்துவரை வாய்சவடால் பேசியே பொழுதை கழிக்கலாம் ..
..
அரசியல் கடந்து மனிதநேயத்தோடு ஒரு #தலைவனை காண முடிந்தததில் தமிழகம் பெருமை கொள்ளவேண்டும் .. #ஒருங்கிணவோம்_வா என்ற ஒன்றை வாக்கியத்தில் அனைவரோடும் கலந்துரையாடி கருத்து கேட்டு தேவையான உதவிகளை திமுகவினரை கொண்டு அவர்களுக்கு வழங்கி (மிகப்பெரிய நெட்வொர்க் )  லட்சக்கணக்கான மக்கள் தங்களின் இயலாமையை கருத்தை தேவையை பதிவு செய்கிறார்கள் .. தலைவரே நேரடியாக காணொளியில் கலந்துக்கொண்டு பேசி அவர்களின் குறைகளை கேட்கிறார் .. ஒரு தலைவன் எப்படி செயல்படவேண்டுமென அரசியல் செய்வோர்க்கெல்லாம் பாடமாய் திகழ்கிறார் .. வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் இந்த பேரிடர் காலத்தில் அவர்கள் படும் துன்பங்கள் அவர்களின் கோரிக்கைகள் தேவைகள் உதவிகள் எதுவென கேட்டறிந்து களைய முற்படுகிறார் சம்பந்தபட்ட துறைகளுக்கு கடிதமெழுதி துயர் களைய வேண்டுமென சொல்கிறார் .. தொடர்ந்து மக்களிடத்திலே உரையாடியதில் பசியோடு இருக்கிறோம் என்ன செய்வதென்றே தெரியவில்லை என மக்களின் உள்ளக் குமறலை கேட்டு பதைபதைத்து அதற்கு உடனே விடிவு காண்கிறார் ..26 நகரங்களில் மிகப்பெரிய சமயலறையை ஏற்பாடு செய்து தினம் ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்க உத்தரவிடுகிறார் .. பசியால் யாரும் இறந்தான்  தமிழகத்தில் என்ற நிலை வராமல் காத்துநிற்கிறார் ..  பெரியாரும் பேரறிஞரும் செதுக்கிய சமூக நீதியின் அடிச்சுவட்டை தலைமேல் கொண்டு தொலைநோக்கு திட்டங்களால் தமிழகத்தை மிளிர செய்த
பேரருளாளனும் எம்மை சரியான கையில் சேர்த்திருக்கிறார்கள் என்று உண்மையில் பெருமை கொள்கிறேன் ..
..
ஊடரங்கில் முழு ஊரடங்கென அறிவித்து ஒரே தினம் மக்களை தெருவில் அங்காடிகளில் நிறுத்தி இன்று சென்னையில் பெருங்கொள்ளை நோய் அதீதமாய் பரவ காரணமான அறிவுகெட்ட அரசும் ஆட்சியாளர்களும் செய்வதறியாது நிற்கும் போதும் .. திறம்பட செயல்பட்டு அருமையாக திட்டம் தீட்டி பொதுமக்களின் குறைகேட்கும் அரசனாய் உண்மையில் மக்களை ஆளுகிற தலைவனாய் தளபதி ஸ்டாலின் நிற்கிறார் ..

#அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".. 
என்றான் வள்ளுவன்..

துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளையெட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் தலைவனுக்குரிய தகுதிகளாகும்..
..
#தலைவர்_தளபதிஸ்டாலின் ..
..
ஆலஞ்சியார்

Monday, April 27, 2020

வரனெ அவெசமுண்டு

"வரனெஅவேசமுண்டு"..
மலையாள திரைப்படம் நேற்றுதான் பார்த்தேன் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படம்.. சுரேஷ்கோபி ஷோபனா துல்கர் காய்த்ரி பிரியதர்ஷன் (இயக்குநர் பிரயதர்ஷனின் மகள் அவருக்கு மலையாளத்தில்  முதல்படம்) 
"சிலப்போ நமக்கு முன்பே அம்மே விவாகம் கழிக்கும் " என மகள் தன் காதலனோடு சொல்வாள்..
விவாகரத்து பெற்ற தாய் தனக்கு இயல்பாக எழும் காதலை மிக அழகாக படமாக்கியிக்கிறது மலையாள கரை ..
நிம்மி என்ற நாயின் பெயர் .. நல்ல பழகிட்டா எந்த பெயரை சொல்லி அழைத்தாலும்வரும் என சிறுவன் சொல்ல பிரபாகரா என சுரேஷ் கோபி அழைக்க ஓடிவருகிறது .. 
எப்படி பிரபாகரன் பெயரை வைக்கலாம் என சிலர் பொங்குகிறார்கள் .. சாதாரணமாக கடந்து போகவேண்டிய விடயத்தை பெரிதாக்கி நல்ல விளம்பரம் தந்திருக்கிறார்கள் .. 
சீமான் போன்றவர்கள் காட்சியை நீக்கவேண்டுமென எச்சரிக்கிறார்கள் .. இவர்கள் எல்லாம் எங்கிருந்தார்கள் கொரோனா தொற்று மிகப்பெரிய அழிவை சமூகத்திடையே,ஏற்படுத்துகிறது பசியால் வாடுகிற மக்களை காக்கவோ அவர்களுக்கு உதவவோ செய்யாமல் இலங்கை பிரபாகரனின் பெயர் ஒருபடத்தில் வைத்ததற்கு இங்கே வீறுகொள்கிறார்கள் .. 
..
திரௌபதி படத்தில் ஆணவ கொலை செய்யும் பாத்திரம் கூட "பிரபாகரன்" பெயரில் தான் அப்போதெல்லாம் எங்கே போனார்கள் ..  இலங்கை அரசியல் தமிழகத்தில் நீர்த்துபோய் பலகாலமாகிவிட்டது இங்கே யாரும் இலங்கை தமிழர்களைப்பற்றி கவலைக் கொள்வதில்லை.. இலங்கை தமிழ்மக்கள் மெல்ல இயல்புவாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் .. புலிகள் இயக்கம் மிகப்பெரிய கட்டுமானம் ஆனால் தங்களின் அகந்தையால் சிதறிப்போனது விவேகமற்ற செயல்,யாரை நம்புவதென்று கூட தெரியாத தெளிவற்ற பார்வை .. உலகமே விழித்துக்கொண்டு தீவிரவாத செயலுக்கு எதிராக போர்குணம் கொண்டபோது போராட்டகளத்தை ஜனநாயகபடுத்தாமல் வீம்புக்கு எதிர்த்து நின்று கடைசியில் மனித கேடயங்கள் வீழ்ந்த போது அதுவரை கட்டிகாத்தெல்லாம் தகர்ந்தது ..
சிலர் தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் என்கிறார்கள்.. இலங்கை மலையக தமிழர்கள் கூட பிரபாகரனை தலைவனாக ஏற்கவில்லை .. 
சிலர் அண்ணாவோடு ஒப்பிட்டு தங்களை சிறுமைபடுத்திக்கொள்கிறார்கள் .. #பேரறிஞர்அண்ணா மிக சிறந்த ஜனநாயகவாதி மாபெரும் அரசியல் ஆளுமை விவேகமுள்ள தலைவர் ஒப்பற்ற தலைவரோடு "சிலதுகளை"
ஒப்பிடாதீர்கள்
..
மலையாளிகள் பிரபாகரன் என்கிற பெயரை அதிகளவில் வைத்துக்கொள்வார்கள் 
இதில் என்ன தவறை கண்டார்கள் .. இனியும் புலிகள் பிரபாகரன் ஈழமென கதைத்துக்கொண்டிருந்தால் நிலைகுலைந்து போகவேண்டிவரும் .. தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை எல்லாம் தராது மக்கள் தெளிவுபெற தொடங்கிவிட்டார்கள் .. ஈழத்தை சொல்லி பிழைக்கிறவர்கள் வன்மதில்களுக்குள் வாழ்கை நடத்துவதை அறிவார்கள் இலங்கை போராடியவர்கள் சோத்திற்கு வழியின்றி வழக்கு சிறை என காலம்கழிக்கும் போதும் இங்கே ஈழ வியாபாரிகள் நல்ல லாபம் பார்த்தார்கள் ..
..
சினிமாவில் பெயரிடுவதற்கே போராடுகிறளவில் தான் இவர்களின் அறிவும் அரசியலும் .. 
ஈழப்போருக்குப் பிறகு பெருமளவில்
தமிழ்தேசியம் பேசுகிறவர்கள் யாரும் மத்திய மாநுல அரசின் தமிழ்விரோதபோக்கை கண்டுக்கொள்வதில்லை.. ஈழம் காசு மணி துட்டு இவ்வளவுதான் இவர்கள் அறிந்தது..
 #விவரகேடுகள்..
..
ஆலஞ்சியார்

Saturday, April 18, 2020

எது அரசியல்

எது அரசியல் ..
அரசு இதுவரை என்ன செய்தது செய்ய தவறியது எது என சுட்டிகாட்டி கொட்டி திருத்துவது எதிர்க்கட்சியின் கடமை .. ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என முதல்வர் புலம்புவது ஏன் .. முன்னுக்குபின் முரணாக பேசுவதும் வாய் திறந்தால் பொய் மட்டுமே சொல்வதும் செய்யாததை செய்துவிட்டதாகவும் 
நடக்காத ஒன்றை நடத்துவிட்டதாகவும் தொடர்ந்து பொய்யை தவறான தகவலை தருவது அரசுதானே தவிர திமுக அல்ல..
கொரோனா பரிசோதனைக்கு ராபிட்கிட் போன மாதமே வந்துவிடும் என சொன்னது என்னானது.. சீனாவிலிருந்து வந்ததா. சட்டீஸ்கர் அரசு வெளிப்படையாக 
ரேப்பிட் டெஸ்ட்  கிட்  விலை ₹355+ GST அறிவித்திருக்கிறது அதைபோல் தமிழக அரசு அறிவிக்கலாமே.. எதிர்க்கட்சிதலைவர் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த அனுமதி மறுத்தீர்கள் சரி .. தலைமை செயலகத்தில் அதிகாரி மத "பெரியவர்கள்" எல்லாம் கலந்துக்கொண்டு கலந்துரையாடியது ஏன் .. 
மதுரையில் இறந்த ஜல்லிகட்டு மாட்டின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துக்கொண்டு "சமூகவிலகலை" கடைப்பிடித்தார்களே அதெல்லாம் எதில் வரும் இந்த ஆட்சியின் பெருமையிலா.. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே நோய் பரப்புகிறார்களென பாசிச பாஜகவின் குரலை சுகாதாரத்துறை செயலரே ஓங்கி ஒலித்தாரே இதையெல்லாம் முதல்வர் எடப்பாடி அறிவோடுதான் நடந்ததா ..இதுவரை சரியான புள்ளிவிபரங்களை தர மறுப்பது ஏன் .. மருத்துவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் மருத்துவர்கள் மரணம் இதெல்லாம் கண்டிக்காமல் கடந்துபோக வேண்டுமா ..
உண்மையில் ஸ்டாலின் சரியாக வழிநடத்துகிறார் ரேப்பிட் கிட் எவ்வளவுக்கு வாங்கினீர்கள் என்ற பதில் அளிக்க அஞ்சிதான் ஸ்டாலினுக்கு பதில் அளிக்க போவதில்லை என்கிறீர் ..எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதில் தர மறுப்பது மக்களுக்கு உண்மையை சொல்ல மறுப்பதற்கு சமம்.. மக்கள் தேர்ந்தெடுத்து  முதல்வராக வரவில்லை அதனால் எதைப்பற்றி கவலைபடாமல் வாய்க்கு வந்ததை பேசி 
எஜமான் மோடிக்கு விசுவாசமாய் தமிழர்நலனை தமிழக நலனை அடகுவைத்து வாழ்கிறீர் ..
அடிக்கிற காற்றில் கோபுர உச்சியில் சறுகுகள் கூட வரும் ஆனால் கலசம் ஆகமுடியாது .. 
..
பிரதமரின் தொகுதியில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானோர் பேருந்துகளில் அனுப்பிவைக்கபட்டுள்ளார்கள் நல்லது இதே போல் வீடு திரும்ப முடியாமல் தத்தளிக்கும் மும்பையில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கலாம் .. தன் தொகுதியில் தத்தளித்தவர்களை உதவியது போல் அனைவருக்கும் உதவினால் தான் தான் பொதுவானவன் என அறியபடுவீர்கள் .. அதிகம் பேசுகிற செயல்படுவதில் மந்தநிலையில் தான் பிரதமரை சர்வதேசம் காண்கிறது .. தொடர்ந்து ஊரடங்கு செயல்படுத்துவதில் தவறில்லை ஆனால் தின வருவாயில் குடும்பம் நடத்துவோரைப் பற்றி பிரதமர் கவலைபட்டதாக தெரியவில்லை .. உலக சந்தையில் எரிப்பொருள் விலை வீழ்ச்சியடைந்தும் சில பெருமுதலாளிகளுக்காக விலைகுறைப்பு செய்யாமல் இருப்பதிலிருந்தே இந்த அரசு சாமனிய மக்களுக்கானதில்லை என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.. தமிழக அரசிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றிய அரசிற்கும் கூட சிறந்த எதிர்க்கட்சி தலைவராக திகழ்கிறார்
மாநில அரசிற்கு ஆலோசனையை வழங்கி இந்திய ஒன்றிய அரசிடம் வாதிடுவதற்கு பெயர் அக்கறை.. இதெல்லாம் புரிந்தால் நல்ல நிர்வாகத்தை தரலாம் தொடர்ந்து தவறுகளை சுட்டிகாட்டியும் ஆரம்பம் முதலே மறுத்தும் பின் கடைபிடித்தும் ஸ்டாலின் சொன்னதுதான் சரியென கடைசியல் நிரூபணம் ஆகிறது .. மருத்துவ உபகரணங்களே போதிய அளவில் இன்னும் தட்டுபாடுகள் என்ற நிலையில் மூன்று நாட்களில் கொரோனாவை ஒழித்துவிடுவோம் என முதல்வர் சொல்வதற்கு பெயர் தான் அரசியல் உளறல் .. பொய்கணக்குகளை சொல்லாதீர் தவறான புள்ளிவிபரங்களை சொல்லாதீர் பரிசோதனையை அதிகபடுத்துங்கள் என ஸ்டாலின் சொல்வது அரசியல் செய்வதல்ல
..
#இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்..
(குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்) என்ற குறளுக்கொப்ப மத்திய மாநில அரசை தொடர்ந்து எச்சரித்தும் கண்டித்தும் பாராட்டியும் கவனத்திற்கு கொண்டுவந்தும் தன் கடமையை சரியாக செய்கிறார் எதிர்க்கட்சி தலைவர் தளபதி.ஸ்டாலின் .. நல்ல தலைவராக நாட்டின் மீதும் நாட்டுமக்களின் மீதும் அன்பும் அக்கறையும் கொண்ட தலைவராக திகழ்கிறார் 
#தளபதி_ஸ்டாலின்
..
#தலைவர்

Thursday, April 16, 2020

கருப்பு

கருப்புச்சட்டை போட்டால் பகுத்தறிவு என்று எந்த சயின்ஸ் புக்ல இருக்கு என கேட்கிறார்கள் .. அத்திவரதர் வந்தால் நல்லது நடக்கும் என்றீர்களே நடந்ததா என சுப.வீ. அய்யா கேட்கிறார் விஐபி டிக்கெட் எடுத்து தரிசித்தார்களென கேள்வி எழுப்பியிருக்கிறார்.. காங்கிரஸ் திமுக ஆட்சியில் இலங்கை தமிழர்கள் கொல்லபடவில்லாயா என புலம்பிதீர்த்திருக்கிறார்.. தினகூலிண்னே நாங்க என்ன செய்யமுடியும் பிழைப்புக்கு என்ன வழி..
ஏதாவது பாஜக திட்டம் இருக்கா என கேட்டவருக்கு எல்லாத்திற்கும் காரணம் தேசதுரோகி ஈவேரா
என புலம்புகிறார்கள்
இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டுமா என நண்பர்கள் கேள்வி எழுப்பினர் .. அறியாமையில் திரிகிறவர்களை நல்வழிபடுத்தல் கூட அறம் தான் ..
..
பகுத்தறிவு என்பது எதுவென அவர் புரிந்துக்கொள்ள எளிதான விளக்கம் தரலாம் மாட்டுக்கறி சாப்பிடுவது புரோதம் அதிகரிக்கும்
மாட்டு மூத்திரம் குடித்தால் கிருமிகள் வரும் என்பது தான் பகுத்தறிவு ..ராமர் சிலை வைத்தால் குற்றம் ஆனால் மற்றவர்களுக்கு சிலை வைத்தால் அது பகுத்தறிவா என கேட்கிறார் .. ராமர் சிலையைச் சொல்லி பிழைப்பு நடத்தாதே என சொல்வது கூட அறிவார்ந்த விடயம்தான் .. "கும்பிடுகிறேன் சாமி" ன்னு சொல்லாதே
சொல்றது கூட பகுத்தறிவுதான்
ஈரோட்டில் பெரியார் சிலை திறப்பில் அய்யா உங்களை போல சிலை இல்லையென சிலர் சொன்னபோது ..மேலே ஏன் பாக்குற கீழ பாரு என்ன எழுதியிருக்கு கடவுள் இல்லை கற்பித்தவன் முட்டாள் வணங்குகிறவன் காட்டுமிராண்டி .. அதை தான் தேவை முகம் தெளிவல்ல.. அதை எழுதாமல் போனால் வள்ளலாரைப்போல சாமி ஆக்கிவிடுவார்கள் என்றாரே அது தெளிவு பகுத்தறிவு .. கருப்புசட்டை ஏன் தெரியுமா .. துக்கத்திற்கான உடையாக இந்த சமூகம் கருப்பை கொண்டிருந்தது உழைக்கிறவன் சுரண்டபடுகிறான் உழைப்பை சுரண்டுகிறவன் செமையா வாழ்கிறான் இது மாறுகிறவரை கருப்பை அணியவேண்டும்.. நிறத்தில் (கலர்) கூட அரசியல் இருப்பதை அறிவாரா..
..
இலங்கை தமிழர் பிரச்சனையில் நிறைய விளக்கம் கொடுத்தாயிற்று .. வெளிநாட்டில் விவகாரத்தில் மாநில கட்சியால் செய்ய முடிகிற அனைத்தையும் செய்தது திமுக .. கடைசி போரில் புலிகளின் கணக்குகள் தட்டியதும் மனித கேடயமும் அறிவார்ந்த ஆலோசனையை புறக்கணித்ததும். ப.சிதம்பரம் எவ்வளவோ சொல்லியும்  கடைசிவரை தமிழகத்தின் ஆதரவாளர்களை நம்பியதும் பேரழிவை தந்தது .. தோக்கு தூக்கியவன் அழிவு தோக்கால் என்பதை போல கடைசியில் விவேகமற்ற போராட்டம் சகோதர பகை ஜனநாயக பாதையை நோக்கி நகராமை இப்படி நிறைய பின்னடைவுகள் இவையெல்லாம் நிறைய விவாதித்தாயிற்று அப்போதெல்லாம் மனநல சிகிச்சையில் இருந்தாரா..
அத்திவரதரை சென்று பார்த்தவர்களில் திராவிட குடும்பங்களும் உண்டு யாரை நிர்பந்திப்பதல்ல அவரவர் உரிமையை நம்பிக்கையை ,கருத்தை, சுதந்தரத்தை எதையாவது சொல்லி நசுக்குவதல்ல .. எதிர்கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது அதற்கு வாய்பளிப்பது கூட கடமை என்று சொல்வது திராவிடம் ..
..
பெரியார் பெயரை கேட்டாலே கதறுகிறார்கள் என்றால் எந்தளவு பார்பனீயத்தை அடித்து துவசம் செய்திருப்பார் .. கல்வி வேலைவாய்ப்பில் தாங்கள் மட்டுமே சிறந்தவர்கள் தங்களுக்குமட்டுமே எல்லா தகுதியுமிருக்கிறது என்று காலகாலமாய் ஏமாற்றி வந்தவர்களுக்கு இடைசாதி கடைசாதிகாரனெல்லாம் படித்து "உத்யோகம்" பார்க்க வந்ததில் எரிச்சல் இவர்களின் பேச்சில் தெரிகிறது .. பாசிசம் அதிகாரத்திற்கு வந்ததற்கு பிறகு இவர்களின் திமிர் வெளிப்படையாக தெரிகிறது தாங்கள் சொல்வதை கேட்கும் ஆட்சி, அடிமைத்தனத்தில் ஊறிப்போன ஊழல்வாதிகள் பதவி சுகம் கொண்டு தலையாட்டும் இவர்களால் எதை பேசினாலும் கேட்க மாட்டார்களென்ற எண்ணமும் இப்படி உளறவைக்கிறது .. ஆனால் ஒவ்வொருமுறையும்  அறிவுடைசமூகம் இவர்கள் முகத்தை கிழித்தெறிகிறது ..
இங்கே பெரியாரை பேசாமல் கலைஞரை பேசாமல் எதுவும் நடக்காது .. வெளிச்சம் தேவையென்றால் கூட திராவிட பேரரக்கர்களைப் பற்றி தான் பேசவேண்டும் ..
..
ஆனால்

Wednesday, April 15, 2020

ஸ்டாலின்

பிரதமருக்கு சில கேள்விகள்..? திரு.ஸ்டாலின் .. ஆனீலி
அதற்கான பதிலை இதுவரை பிரதமர் அலுவலகமோ பாஜகவோ தரவில்லை ..
எழு அறிவுரைகளை சொன்னதோடு முடிந்து போனதா ..அவர்கள் எதிர்பார்பது அறிவுரைகளை அல்ல பேருதவிகளை உணவு பணம் பொருளுதவிகள் இவைகளுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை மத்திய பட்ஜெட்டில் இருக்கும் 30 லட்சம் கோடியில் 65,000 கோடியை மக்களுக்கு 5000 வீதம் பகிர்ந்தளிக்கலாம் என்ற ப.சிதம்பரத்தின் ஆலோசனை பிரதமருக்கு புரியவில்லையா.. உயிர்காக்கும் கருவிகளை மாநிலங்களுக்கு எப்போது தரபோகிறீர்..
என அடுக்கடுக்காய் கேள்வியை எழுப்பி 
அறிவுரையை அல்ல ஆறுதல் உரையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார்..
#தளபதி_ஸ்டாலின் கேள்விகளில் அக்கறையும் 
இந்த அரசின் கையாலாகாதனமும் வெளிச்சம் போட்டுகாட்டுகிறது ..    
..
ஜார்கண்டிலிருந்து 1500பேர் 28 பேருந்துகளில் குஜராத்திற்கு செல்கிறார் .. மும்பை பந்த்ராவில் ஆயிரம்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல குவிந்தனர் .. ஆனால் மோடி நம்மை பார்த்து உலகம் வியக்கிறதென வழக்கம் போல் "பொய்" பேசுகிறார் .. சரியான திட்டமிடல் இல்லாமல் திடீரென ஒருநாள் ஊடரங்கென அறிவித்து அதை 21 நாட்கள் என்றும் பிறகு நீட்டி மே 3 வரை என்றால் அன்றாடம்காய்ச்சிகள் வருவாய் இன்றி பெருநகரங்களில் தவிப்பது எப்படி முடியும் இதற்கெல்லாம் என்ன நிவாரணத்தை வைத்திருக்கிறார் பிரதமர் .. வாய்ச்சொல்லில் எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம் இல்லையென்றால் காங்கிரஸ் ஆட்சியில் என திசை திருப்பலாம் கொரோனை தொற்றே முஸ்லிம்களால் தான் என "சாயம்" பூசலாம் இதை தவிர ராமாயணமும் மகாபாரதமும் பார்த்துக்கொண்டிருந்தால் பசி மறந்து போகும் .. 
எதாவது நல திட்டங்கள் இந்த அரசு செய்ததுண்டா .. தொலைநோக்கு பார்வையில் கடந்த ஐந்து வருடங்களில் செய்ததுண்டா ..? திலகருக்கு சிலை வைக்க தெரிந்தவர்களுக்கு மருத்துவம் கல்வி கட்டமைப்பை இன்னும் பலப்படுத்த யோசனையாவது உதித்ததுண்டா ..?  இவர்கள் ஆளும் மாநிலங்களில்  மருத்துவ கட்டமைப்பு Clinical structure பரிதாபகரம் என்பதை மறைக்கமுடியாமல் திணறுவதையும் திராவிட இயக்கம் குறிப்பாக திமுக ஆட்சியில் கலைஞரின் தொலைநோக்கு மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரியென இந்தியாவிற்கே வழிகாட்டி விடிவெள்ளியாக திகழ்கிறதே இதையெல்லாம் கண்டு படிக்கவேண்டாமா..
..
மதமும் சாதியும் கலவரமும் மட்டுமே சிந்தனையில் இருந்தால் இந்தியாவை வளர்ச்சிபாதையில் எப்படி கொண்டுசெல்லமுடியும்.. புராணம் சமயம் நம்பிக்கை என்பதெல்லாம் தனிநபர் நம்பிக்கை அதை வைத்து அரசியல் செய்வதும் அதிகாரம் செய்வதும் நாட்டை முன்னேற்றத்திற்கு எடுத்துச்செல்லாது ..கடவுள் நம்பிக்கையற்ற #கலைஞர் அவர்களின் #கருணைதான் இன்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலையை மெச்சபடுத்திக்கொண்டிருக்கிறது .. எல்லா மதங்களும் தங்கள் கோட்பாடிலிருந்து விலகி வரதொடங்கியிருக்கிறது.. இதுவரை கட்டிசமைத்த முடநாற்றங்களை மெல்ல தூக்கியெறிய தொடங்கியிருப்பது புதியதொரு உலகம் சமைக்க உதவும் ..இயற்கையின் பேரழகு புதிய தொடக்கத்தை குறிக்கலாம் ..
சமயம் சடங்கு வேதம் வழிபாடெல்லாம்  மனஅழுத்தத்தை வேறுபாட்டை விதைக்கவே பயன்பட்டதே தவிர மனிதநேயத்தை மக்களிடம் பேரன்பை ஒற்றுமையை .. மனிதில் மனிதத்தை விதைக்க மறந்து போனது ..
..
இந்த மத்திய மாநில அரசுகளை இயக்க 
விழிப்புணர்வை தந்திட ..எச்சரிக்கை செய்ய .. செயல்பட வைக்க ..திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவன் அயராமல் இயங்கிக்கொண்டிருப்பது ஒருவித ஆசுவாசம்..நிம்மதி..
ஒன்றுபட்டு பெருந்தொற்றை வென்றுகாட்டுவோம் .. எளியவர்க்கும் வறியவருக்கும் நம்மால் ஆனதை தந்துதவி மனிதம் வளர்ப்போம் ஆட்சியும் அரசும் ஆள்வோரும் அலட்சியபடுத்தினாலும், நாம் மீண்டுவருவோம் .. 
#புதியவார்ப்புகளாய்  
..
ஆலஞ்சியார்

Monday, April 13, 2020

திமுகவின் செயல்பாடுகள்

தன்னார்வர்கள் உதவிகள் வழங்க தடையில்லை..  நேற்று தடை செய்துவிட்டு திமுக 
வழக்கு பதிவு செய்தவுடன் தடையில்லையென பின்மாறுகிறது .. சுயம் இல்லை தானாக முன்கூட்டியே திட்டமிடும் திறன் இல்லை ..பிறமாநில அரசுகளைபோல தானாக முடிவெடுக்கு அதிகாரமில்லை .. எல்லாவற்றுக்கும் மத்திய அரசின் கட்டளைக்கு காத்திருக்கும் அவலம் .. சுயமரியாதையை, மாநிலகளுக்கு அதிகாரத்தை வழங்கிட வேண்டும் என்ற திராவிட இயக்கத்தில் மூல கொள்கையான "சுயாட்சியை" தூக்கி குப்பையில் போட்டுவிட்டு பதவி சுகத்திற்காக பரத்தையை போல மானங்கெட்டு நிற்பது படுகேவலம் ..
..
28-04-74 அன்று மயிலை பொதுக்கூட்டத்தில் #பேரருளாளன்_கலைஞர் பேசியபோது 
“நீ மாநில சுயாட்சி கேட்கிறாய் ஆகவே உன் அரசாங்கத்தைக் கலைக்கிறேன்” என்று டெல்லியிலிருந்து உத்தரவு வருமேயானால் , அதைவிட என்னுடைய வாழ்க்கையிலே "புனிதமான வரலாற்று நிகழ்வு" வேறு எதுவுமே இருக்க முடியாது” .. பத்தாண்டுகளுக்கு  முழு அதிகாரத்தையும் கொடுத்து பாருங்கள் .. இந்த சுயாட்சி அதிகாரத்தை எல்லா மாநிலங்களுக்கும் தான் கேட்கிறோம்  என்றார் 
இன்று கல்வி, மொழி, கலை,நிதி, என எல்லாவற்றிலும் சுயத்தை இழந்து நிற்கிறோம்,
இதற்கு நாமும் ஒரு காரணம் என்றே சொல்லவேண்டும் .. நேர்மை பேசி  மக்கள் ஆதரவோடு தான் இந்த ஆட்சியை அகற்ற வேண்டுமென காத்திருந்தது பேராபத்தை தந்திருக்கிறது .. நேர்மையாக ஆட்சிக்கு வராதவர்களை அதே சூழ்ச்சியில் வீழ்த்துவது கூட "அறம்"என்று  அறியாமல் போனது அபத்தமாகிவிட்டது .. மக்களுக்கு பெருந்துயரை தரும் ஆட்சியை தொடரவிட்டதும் கூட நம் மீது பழியாகிப்போனது .. வரலாற்று பிழை ..
..
மத்திய மாநில அரசுகள் இது போன்ற பேரிடர் காலங்களில் கூட மத அரசியலை முன்னெடுப்பது கண்டிக்கதக்கது .. ஒரு முறை அமித்ஷா எங்களால் ஒரு விடயத்தை வைரலாக்க முடியும் அதற்கான IT கட்டமைப்பு எங்களிடம் உண்டு என்றார் அதைதான் மிக கச்சிதமாக செய்துவருகிறது ..கொரோனா பாதித்தவர்களை நோயாளியாக பார்க்காமல் மதம் சாயம் பூசி அதை சுகாதாரத்துறை செயலரை கொண்டே பரப்பவதுதான் ஹைலைட் .. இதெல்லாம் வேறெந்த மாநிலத்திலும் நடக்கவில்லை ஆர்எஸ்எஸை கௌண்டு மாநகராட்சி உதவிகளை வழங்குவதெல்லாம் இங்குதான் நடக்கிறது ..
தன்னார்வு நிறுவனங்கள் உதவிகரம் நீட்டுவது 
ஆளும்தரப்பை அவ்வளவாக பாதிக்காது ஆனால் திமுகவின் செயல்பாடுகள் .. விரைந்து நிவாரணபொருட்களை அதிலும் ஸ்டிக்கர் ஒட்டாமல் வழங்குவது அதிமுகவை அரசை கதிகலங்க செய்திருக்கிறது .. அதனால் தான் தடை என அறிவித்து பின் வழக்கென்றவுடன் பின்மாறியது ..
..
திமுக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது 
ஆரம்பத்திலிருந்தே முககவசம் கையுறை போதிய அளவில்லை  என்ற எச்சரிக்கை செய்ததும் ,தனித்திருக்கும் அவசியத்தை சட்டமன்றத்தில் எடுத்துரைத்ததும், வரும் முன்காப்பதே சாலசிறந்ததென்ற அறிவுரை .. தமிழக அரசு செயல்படவில்லையென்றால் செயல்பட வைக்கும் என்ற தளபதியின் எச்சரிக்கையையும் பலன் தந்தது திமுக இணையத்தள அணி தன்னார்வு தொண்டர்கள் கட்சிகள் உதவுவதை தடுக்க நினைத்ததை அரசின் கையாலாகாத செயலை  மக்களிடம் உடன் கொண்டு சேர்த்ததும் அரசு இறங்கிவரவேண்டிருந்தது .. திமுகவின் செயல்பாடு மெச்சதகுந்தது .. அது தொடரவேண்டும் .. இந்த கேடுகெட்ட பாஜக பினாமிகளை அடிமைகளை மக்களிடத்திலிருந்தே/ அதிகாரத்திலிந்து கீழிறக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.. அடிமைத்தனம் ஒழிந்து அறநெறியோடு கூடிய சுயாட்சி மலரந்திடும் வரை போராடிக்கொண்டே இருப்போம்
.. 
ஆலஞ்சியார்

Saturday, April 11, 2020

மதுவந்தி..

மதுவந்தி
கருப்புச்சட்டைகாரர்கள் தான் தேவைபடுகிறார்கள்.. என்னை விமர்சித்து பிரபலபடுத்திய கருப்புச்சட்டைகாரர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார் .. மொட்டை பாப்பாத்தி என்ற நிலை இல்லாமல் செய்ததில், விதவை மறுமணத்தை  செய்துகாட்டி பார்பனீய சமூக பெண்களை #புதியவார்ப்புகள் ஆக்கியதில் 
பெரும்பங்கு திராவிட இயக்கத்திற்குண்டு..
..
வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரிகளென்ற ஜகத்குரு பெரியவா அருளுரையையெல்லாம் கிடப்பில் போட்டு .. தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கெட்டுகிடக்கிறதென்ற நாற்றமெடுத்த சிந்தனையை தூரிவீசி .. பள்ளியின் தாளாளராக மதுவந்தியும் இருப்பதற்கும் கருப்புச்சட்டைதான் உதவியது ..
அரைகுறை அறிவும் தன் குலம் காக்கும் என்ற திமிரும் வழக்கு விசாரணை தீர்ப்பென வந்தாலும் "பாப்பாத்தி" என்ற நிலை காக்குமென நாமெல்லாம் கண்டதுதான் அதனால் தான் உளறியவுடன் மன்னிப்பும் கூடவே அவர் உளறவில்லையா இவர் என்னசெய்தார் ..மன்னிப்பு கேட்டாரா என திரும்பவும் உளறிவிட்டு போயிருக்கிறார் .. ஒரு பள்ளியை நிர்வகிக்கிறவர் ஒன்பது கோள்களும் நேர்க்கோட்டில் வராதென்ற உண்மையை கூட அறிந்திராமல் உளறியதும் அதை நியாயபடுத்த தன் சாதியை  பேசுகிறார்களென சிம்பதி உருவாக்குகிறார் ..
வாய்தவறி வந்துவிட்டதென்பதை ஏற்போம் .. ஆனால் அதை தலைக்கனத்தோடு சொல்வதை தான் நாம் விமர்சிக்க வேண்டியிருக்கிறது ..
..
மதுவந்தி மட்டுமல்ல எச்.ராசா மாலன்,பானுகோமஸ்,பத்ரி, ராகவன்.. உட்பட எல்லோரும் விபரகேடுகள் தான்.. தங்களுக்கு எல்லாம் தெரியுமென நம்பிக்கொண்டிருப்பது தான் மிகப்பெரிய நகைச்சுவை .. தங்களை உயர்ந்தவர்களாக ,மெத்த படித்தவர்களாக இத்தனை காலம் நம்பவைத்தததின் விளைவு இன்று இவர்களின் வெளிப்படுத்தல்கள் முகத்தை கிழித்தெறிகிறது .. கல்வி தங்களுக்கு மட்டுமே என்றிருந்ததை உடைத்து அனைத்து தரப்பினரும் கல்வியறிவில் பெருத்தவெற்றியை பெற இவர்கள் நிலை பரிதாபத்திற்கு சென்றுவிட்டது.. விளக்கத்தோடு அதிலும் தெளிவோடு அறிவோடு விவாதிக்க நாம் கற்றுக்கொண்டோம் ..பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் அமைத்து தந்த செப்பனிட்ட பாதையில் நமது வெற்றி இலகுவானதும் இவர்கள் உண்மை "நிறம் " வெளியே வருகிறது .. பேராசான் சொன்னதைப்போல அவர்கள் படிப்பாளிகள் அறிவாளிகள் அல்ல என்றது எவ்வளவு உண்மை ..  கல்வியை வியாபாரமாக்கியவர்  அதன் தரம் உலகத்தரமென்றெல்லாம் விளம்பரபடுத்தி "பெரும்காசு" சேர்த்தவர்கள் இன்று அடிப்படை அறிவுகூட இல்லாதவர் என்று நிரூபிக்கிறார் .. அவரை இன்னமும் பேசவிடுங்கள் அவர்களின் "தரம்" உலகுக்கு தெரியும் அவரின் கல்வி நிறுவனத்தை நோக்கிய  நமது மக்களின் பார்வை திசைமாறும் .. 
..
மதுவந்தி தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு
சத்தியத்திற்கு உண்மைக்கு கட்டுபடுபவள் என்கிறார் அது அவரின் விருப்பம் .. சங்கரராமன் கொலையும், ராஜப்பா  குருக்கள் 100 சவரன் நகை கொள்ளையும் திருச்செந்தூர் ராஜமணி உண்டியல் உடைக்கபட்டதெல்லாம் கூட நம்பிக்கையில் தான் வந்தது .. திருப்பதி வேதபாடசாலையில் ஐந்து பேருக்கு கொரோனா தாக்கி 470 மாணவர்கள் தனிமைபடுத்தபட்டிருக்கிறார்கள் 
தப்லிக் ஜமாத் சென்றவர்கள் தனிமைபடுத்தபட்டிருக்கிறார்கள் புனிதவெள்ளிக்கு வாடிகன் கதவடைக்கபட்டதெவ்லாம் கூட நடந்தது .. 
மதம் அல்ல பிரச்சனை நோயை தடுக்க வேண்டிய நேரத்தில் அரசில் பேசிக்கொண்டு அதற்கு இவ்வளவு போட்டாரென தவறான கணக்கை சொல்லி சொதப்பாமல் இருந்தால் போதும் .. திமுக 1949 ல் தொடங்கபட்டபோது 48 பேர் என்கிறார் அதுகூட  தவறான தகவல்  15 பேர் என்பது வரலாறு .. தயவு செய்து நிறைய படியுங்கள் மதுவந்தி..
எதிர்மறையாளர்களின் கருத்தையும் உள்வாங்குங்கள் மாற்று சித்தாந்தத்தையும் அறிந்துக்கொள்ளுங்கள் மீண்டும் மீண்டும் தவறான தகவலை தராதீர்கள் .. மாற்றான் தோட்டத்திலும் நல்ல மல்லிகை உண்டு ..
அறிவு தேடுவதுதான் சிறந்த கல்வி..
அறிவு கண்களை திறக்கும் .. மடமையெனும் இருள் அகலும் .. 
..
ஆலஞ்சியார்

Thursday, April 9, 2020

கொரோனா

#கொரோனா ..
நிறைய படிப்பினையை தந்திருக்கிறது வாழ்வை அதன் போக்கில் வாழ வேண்டும் ..பேராசையும் பெருமையும், பகட்டும்,போலித்தனமும், அல்ல வாழ்கை இயல்பாய் இனிதாய் இருப்பதை கொண்டு வாழு ..இருப்பது உனக்கானது மட்டுமில்லை பிறருக்கும் சேர்த்து என சொல்லியிருக்கிறது. அதிகாரம் ஆணவம்,திமிர் தான்தோன்றித்தனம் வீழ்ந்து தரைமட்டமாகும் என எச்சரித்திருக்கிறது .. வாழ்வை உயரத்திற்கு கொண்டுசெல்ல நிற்காமல் ஓடுகிறாயே எதற்கிந்த வீண்வேலை என செவிட்டில் அறைந்திருக்கிறது .. சாதி மதம் சமூகம் இனம் மொழி கடந்து மனிதமே வெல்லும் என புரிகிறமாதிரி சொல்லியிருக்கிறது .. 
..
அதிகாரம் ஆணவம் தான்தான் பெரியவன் என்ற நினைப்பை உடைத்து ஒன்றுமில்லை நீ என்ற உண்மையை போதித்திருக்கிறது ..
அதிகார திமிரில் ஆடிய நாடுகள் சப்தமின்றி கண்ணீரில் நிற்கிறது .. பணமும் பகட்டும் காட்டிய நாடுகள் குலைநடுக்கத்தில்.. எதையும் விலைபேசமுடியுமென்ற நினைப்பெல்லாம் மனதின் ஓரத்தில் ஒளிந்துக்கொண்டது ..
ஜோதிடம் சமயம் சடங்கு எல்லாம் பொய்யென்று புரிந்தது ..
கடவுள் பெயரைச் சொல்லி கலவரம் நடத்தியவர்களின் கயமைத்தனம் நொடியில் நொறுங்கியது .. தொலைநோக்கோடு திட்டம் தீட்டிய தலைவர்களால் கொஞ்சமேனும் மெச்சபட முடிகிறது .. நேருவையும் இந்திராவையும் பிடல் காஸ்ட்ரோவையும் கலைஞரையும் மக்கள் நன்றியோடு நினைவுகூர்கிறார்கள்..  சாமியையும் சாதியையும் தூக்கிபிடித்தவர்கள் கைத்தட்டவும் விளக்கேற்றவும் விம்மி அழவும் செய்கிறார்கள் ..
..
உறவின் பாலத்தை பலமாக்கியிருக்கிறது அன்பை தவிர வேறெதுவும் இங்கே பலனில்லை  என்றுணர வாய்ப்பு கிட்டியிருக்கிறது .. தனிமை துயரத்திற்கு மருந்தாகி ஆர்ப்பாட்டமிக்க வாழ்வை எளிமையாக்கி வாழ இது போதும் தேவையற்ற சுமைகளை சுமக்காதே.. இயல்பாய் வாழ பழகு பகட்டானவை எல்லாம் ஆபத்தானது .. இயற்கையோடு இணைந்து வாழு.. இல்லாத ஒன்றை கற்பனையாக்கி சாமிவேசம் கட்டிவைக்காதே .. எதுவும் இங்கே அதிகாரம் பெற்றதில்லை அமைதி அன்பு அணுசரனை ஈகை இவைதான் உயர்த்திபிடிக்கும் கல்வி அறிவு உன்னை கரைசேர்க்கும் மனிதன் மட்டும் வாழ அல்ல இந்த பூமி விலங்குகள் பறவைகள் கண்ணுக்குதெரியாத ஜீவன்கள் அனைத்தும் அதனதன் பாதையில் சென்றால் யாருக்கும் தீங்கில்லை .. மனிதனின் அகங்காரமும் ஆணவமும் தனக்கானது இந்த பூமியென்ற பேராசையும் தகர்தெறிந்து மீண்டும் மனிதத்தோடு வாழ பழகு எனச் சொல்லியிருக்கிறது ..
..
தொழிலுக்கொரு சமுதாயம் ..அவனவன் வேலையை அவன் செய்து பிழைக்கவேண்டும் 
அப்படிதான் சாஸ்திரம் சொல்கிறது. மழிக்க துவைக்க தனித்தனியாய் திரிந்ததுபோய் நீயே மழிக்கவும் துவைக்கவும் செய்கிறார் உன் கழிவை நீயே அப்புறப்படுத்துகிறாய் .. தும்மல் வந்தால் கடவுளை மறந்து மருத்துவரை மருந்தகத்தை நாடுகிறாய்.. காயத்துகட்டி மந்திரித்து விட்டவர்கள் யாரையும் காணோம் ஜகத்குருவெல்லாம் ஜாதையை மாற்றிக்கொண்டு கதவடைத்து  காணாமல் போனார்கள்..அல்லோலிய்யா இருக்குமிடம் தெரியவில்லை .. 
ஆனால் அறிவாயலம் திறந்திருக்கும் .. இதிலிருந்து பெரும் உண்மை தெரிகிறது .. மனிதன் சக மனிதனுக்கு உதவினால் வேறுபாடுகள் கலைந்து வேறுபாடுகளை உண்டாக்கிய சாதிமதத்தை கடந்து தெளிந்த நீரைப்போல தூயன்போடு சிந்தித்து செயல்பட்டால் அறிவின் அறிவியல் துணைக்கொண்டு எதையும் வெல்லலாம் ..
இயற்கை தன் பணியை செய்யட்டும் இயற்கையாய் இயல்பாய் இனிதாய் எளிதாய் வாழ்வோம் ..
..
ஆலஞ்சியார்

Monday, April 6, 2020

என்ன சாதித்தீர்கள் ..பிரதமர் அவர்களே..

என்ன சாதித்தீர்கள் பிரதமர் அவர்களே ..
விளக்கு பிடிக்க சொன்னீர்கள் .. சொல்வது பிரதமர் ஏதேனும் காரணமிருக்கும் என தங்கள் கோட்பாடுகளை கடந்து வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு  தீபம், மெழுகுவர்த்தி என
விளக்கேற்றினார்கள் ..சிலர் பயத்திலும் சிலர் பக்தியிலும் .. ஆனால் அறிவுடை சமூகம் வீட்டின் விளக்கை அணைக்காமல் ஒளிரவிட்டது .. ஒரு கிரகம் ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் வரும் என புதுகதை சொன்னது .. ஊரடங்கை மீறி தீபங்களோடு சிலர் ஊர்வலம் போனார்கள் .. வாசலில் வந்து நின்று டார்ச் அடித்தவர்களும் உண்டு சிலர் மெழுகோடு வந்து நடித்தார்கள் ரசிக்க முடியவில்லை .. பட்டாசு வெடித்து துயரத்தை கொண்டாடுகிறார்கள் .. உண்மையில் வெட்கமாக இருக்கிறது
மிக கச்சிதமாக கொரோனாவிற்கு மத சாயம் பூசி அருகில் நிற்பவரை கூட விரட்டுகிற நிலை.. கொரோனா எண்ணிக்கை கூடுகிறதே தவிர சரியான திட்டமிடல் இல்லை கூட்டமாக கூடி மகா கும்பமேளா செய்தால் கூட குற்றமில்லை  .. 
என்ன நடக்கிறது நாட்டில் ..
..
ஊரடங்க சொல்லிவிட்டு வீதியில் இறங்கி கைதட்டவும் விளக்கேற்றவும் செய்ததை தவிர நம்பிக்கையான வார்த்தைகளை காணோம்..
 இந்திய பொருளாதார வீழ்ச்சியை கொரோனா மீது கட்டிவிடலாம் .. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதி நிறுத்திவைத்தாகிவிட்டது .. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி பணிக்காகவே செயல்படுத்தபட்ட தொகையை நிறுத்தியது ஏன் ..
நிதி ஒதுக்கீட்டில் கூட தென்னிந்தியா புறக்கணிக்கபடுகிறது ..
பேரிடர்கால நிதியில் கை வைத்த போதே எச்சரித்தார்களே.. ரிசர்வ வங்கியில் சுரண்டுவது தலைவேதனை தரும் என்ற "#பெருமக்களின்" பேச்சை எப்போது கேட்பீர் .. வரலாறு படித்தவர்களை பொருளாதார மேதைகளாக எண்ணிய பரந்த பாசிச சிந்தனை..  கல்வியாளர் என்ற பெயரில் ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் வரும் என்ற புழுகும் செயலுக்கு ஒப்பானது .. அறிவியல் ரீதியாக 
செயல்பட வேண்டிய தருணங்களில் செவ்வாய் குளிருமென கதையடிக்கிறார்கள் .. இவர்களை எல்லாம் மதவெறியர்களெல்லாம் அறிவிலிக்கூட்டத்தின் செயல்களையெல்லாம் எப்போது புறந்தள்ள போகிறீர்..
..
இத்தனை ஆர்ப்பாட்டங்களால்/கொண்டாட்டங்களால் அறிவியல் ரீதியாக எந்த பயனுமில்லை இஸ்லாமிய கிருஸ்துவ பௌத்த கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளில் கூட மத சடங்குகளை தங்கள் நம்பிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு 
அறிவியல் துணையை நாடுகிறார்கள் .. மதம் நம்பிக்கை வழிபாடு இவையெல்லாம் தனிநபர் சார்ந்த விடயங்கள் அதை ஒட்டுமொத்த மக்களின் மீது திணிப்பது அரைவேக்காட்டுத்தனம்.. வளைகுடா நாடுகளில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் அந்த நாட்டு குடிமக்களை விட இந்தியர்களே அதிகம் ..வரும் நாட்களில் கூடலாம் ஆனாலும் அவர்கள் நோயாளியாக தான் பார்க்கிறார்கள் மதமோ, இனமோ, மொழியோ பார்க்காமல் மனிதர்களாக பார்க்கிறார்கள் .. ஆனால் இந்தியாவில் நோய் கூட மதமாகிறது .. இவையெல்லாம் களையபடவேண்டும் .. மதம் பார்த்தோ  இனம்மொழி பார்த்தோ நோய் வரவில்லை மனித சமூகத்தின் அழிமதியே காரணம் .. 
இனியேனும் நல்லதாய் செயல்படுங்கள் ..
..
அனைத்துக்கட்சி தலைவர்களோடு ஆலோசனை நடத்த தீர்மானித்திருப்பது நல்ல தொடக்கம் .. நம் கருத்துவேறுபாடுகளை கடந்து 
ஒற்றை நோக்கோடு
பெருந்தொற்றை ஒற்றைகட்டாய் இணைந்து விரட்டியடிப்போம் 
..
ஆலஞ்சியார்

Friday, April 3, 2020

கொரோனா

வல்லரசுகளும் வளர்ந்த நாடுகளும் கொரோனாவிடம் தோற்றுபோகின்றன..
எல்லாம் எம்மிடம் உண்டு அதிநவீன ஆயுதங்கள் உலகமே தங்கள் காலடியில் தங்களின் பார்வையில் தான் வளரும் நாடுகளும் ஏழைநாடுகளும் .. அய்க்கிய நாடுகள்சபையில் நாங்கள் சொல்வதுதான் நடக்கும் .. பிடிக்காதவர்களை தங்களுக்கு அடிப்பணியாத/வழங்கிநிற்காத நாடுகளுக்கு 
பொருளாதாரதடை .. ஆயுதகுவியலையும் நவீன தொழில்நுட்பத்தையும் நாங்களே விற்போம் நாங்களே யாரை எங்கே  வைக்கவேண்டுமென தீர்மானிப்போம்  என்ற அகந்தையும் திமிரும் அடிப்பட்டு கிடக்கிறது ..
..
உலகின் மிகப்பெரிய ராணுவம் .. கல்வியில் விஞ்ஞான ஆய்வில் தனிநபர் வருமானத்தில் முன்னிலை வகிக்கிறது .. மருத்துவ ஆய்வுகளுக்காகவும் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது.. உலகின் தரம் வாய்ந்த
மருத்துவ உபகரணங்கள்/மருந்துகள் உண்டு ஆனாலும் தோற்று நிற்கிறது .. கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் அமெரிக்க திணறுவதை உலகம் கவனிக்கிறது .. ஆயுதம் குவியலை விரும்பியவர்கள் மருத்துவத்தை தனியாருக்கு தாரைவார்த்தின் துயரம் இன்று செய்வதறியாது கடைசியில் மரணத்தின் எண்ணிக்கை கூடுவதில் முடிகிறது .. ஒழுக்கமின்மை, மூடநம்பிக்கை, கடவுள் புனிதம் 
என்ற ஏமாற்று .. இவையாவும் மிகப்பெரிய விலைகொடுத்தபிறகே உணரமுடிகிறது ..
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 
மிக கவனமாக கையாளவேண்டிய விடயத்தை 
கேலிகூத்தாக்காக நினைப்பதை எண்ணுகையில் நிலைமை மோசமாகுமென அஞ்சவேண்டியிருக்கிறது ..
இன்னமும் சில அறிவிலிகள் விளக்கை அணைத்துவிட்டு விளக்குபிடிக்க சொல்கிற நிலை .. எதையும் அறிவுக்கொண்டோ, அறிவியல் கொண்டோ,யதார்த்த்தின் நிலையறியாமலோ போனால் .. அமெரிக்காவை பின்னுக்குதள்ளி மரணத்தின் முன்நிற்க வேண்டிவரும்,.
..
விழிப்புணர்வும்,தனிமைபடுதலும், தனிமைப்படுத்துதலும், முறையான மருத்துவமும், மீள்வோம் என்ற நம்பிக்கையும் வேண்டும் அதைவிடுத்து மூத்திரம் குடி,சாணியை தெளி பிராத்தனை செய் நேர்ச்சி செய், விளக்குபிடி என்றெல்லாம் செய்வது அறிவுடைமை இல்லை .. நம் நாட்டின் கேடு இது மதவெறிபிடித்தவர்கள் கையில் நாம் .. மீண்டுவருவோம் ..
மனிதன் தானாகவும் தனக்காவும் பிறக்கவில்லை என்றார் பெரியார் .. நாமும் வாழ மற்றவர்களும் வாழ தான் இந்த பூமி தனிமைபடுவோம் .. தேவைகளை தவிர வேறெதற்கும் வெளியில் வராமல் பார்த்துக்கொள்வோம் .. அரசும் ஆள்வோரும் 
விவரகேடுகளாக போனதில் நாமே காரணம் ..
அறிவுடையோரை புறக்கணித்ததின் விளைவுதான் இப்படிபட்ட கூத்துகள் ..
இன்னும் என்னென்ன காணவேண்டி வருமோ..
..
விளக்குபிடிக்கிற சொல்கிறவர்கள்  அறிவிலிகள் .. மக்களை சந்தித்து கொரோனா விழிப்புணர்வை உருவாக்கியும் மக்களுக்கு சேவை செய்கிறவர்களுக்கு உதவியையும் தெம்பையும் தன்னம்பிக்கையும் ஊட்டுகிற பேராளுமை திராவிடத்தின் தலைவன் தருவது #அறிவுடைமை .. மருத்துவர்களை தொடர்புக்கொள்கிறார் தன் கட்சியினரை தொடர்புக்கொண்டு களப்பணியை கேட்டறிகிறார்.. இதுதான் இப்போதைய தேவை 
மாறாக கைதட்டு விளக்கு பிடி என்பதல்ல
..
ஏப்ரல்5.. இந்திய முட்டாள்கள் தினமாகுமோ..
..
ஆலஞ்சியார்

Tuesday, March 31, 2020

கொரோனா.. தமிழகம் திராவிடம்.ஸ

பொதுநலனையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்படுகிறார் தளபதி ஸடாலின் .. ஆரம்பம் முதலே அமைதியான நேர்மையான அரசியலை கையிலெடுத்து வருகிறவர் ..நீண்ட அனுபவம் அவரை தொலைநோக்கோடு சிந்திக்க வைத்தது .. சட்டமன்றத்தில் தனிமைபடுதல் தனிமைப்படுத்தலை தொடர்ந்து வலியுறுத்தியவர் அரசு செவிசாய்க்க மறுத்தபோதும் தொடர்ந்து தன்கடமையை செய்தார் .. இன்று இந்தியாவே தன்னை தனிமைபடுத்திக்கொண்டிருக்கிறது.  
..
திராவிடத்தால் வீழ்ந்தோம் எனச் சொல்லி திரிந்தவர்கள் யாகம் செய்ய சொல்லியும் 
கடவுள் வைரஸ் அவதாரம் எடுத்திருக்கிறாரென துக்ளக் அறிவாளிகள் நம்மை மடமைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில்
திராவிடத்தின் நான்காம் தலைமுறை தலைவர் மருத்துவ அணியை நியமனம் செய்கிறார் .. கலைஞர் அரங்கை  தற்காலிய மருத்துவ முகாமாக்க அனுமதியளிக்கிறார் .. தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடையே கலந்துரையாடுகிறார் .. கட்சிகாரர்களை களப்பணிக்கு தயார் செய்கிறார் .. சுணக்கம் காட்டி தாமதபடுத்தலை தவிர்க்கிறார் நேரடியாக இயக்கத்தினரை தொடர்புக்கொண்டு கேட்டறிகிறார் .. இளைஞரணி எந்த ந்ரமும் தொடர்புகொள்ள தொலைப்பேசி எண்ணை அளிக்கிறது .. மக்கள் பணியில் எப்போதும் போல் நிறைந்து நிற்கிறது ..
அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படவேண்டிய நேரம் .. அனைத்துக்கட்சி கூட்டத்தை காணொளியில் நடத்தலாம் என தளபதி சொல்வதை அரசு ஏற்கவேண்டும் .. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தருவோம் என தளபதி ..
..
ஆனால் இந்திய ஒன்றியத்தின் வடமாநிலங்களில் நிலை மோசமாக இருப்பதை ஊடகங்கள் வெளிச்சம் போடுகிறது.. பஞ்சம்பிழைக்க சென்றவர்கள் உயிருக்கஞ்சி சொந்த ஊருக்கு நடந்து செல்கிறார்கள் ..அப்படி வந்தவர்கள் மீது பூச்சிமருந்தை தெளிக்கிறது பாஜக அரசு இதை யாரும் கண்டிக்க மறுப்பது எந்தளவிற்கு நம்மிடம் மனிதம் செத்துக்கொண்டிருக்கிறதென்பதை காட்டுகிறது .. வடமாநிலங்களில் பெரியாரை போல ஒருவர் பிறக்காதது இன்றைய அவலங்களுக்கு காரணம் .. மனிதர்களை சிந்திக்கவிடாமல் கடவுள் வேதம் மதம் என போதை ஏற்றி .. கல்வியறிவை பகுத்தாயும் பண்பை தெளிவை தராமல் குறுகிய வட்டத்திற்குள் இருக்க செய்து மனிதம் வளர்க்காமல் மதம் வளர்த்ததின் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள் ..
..
விழிப்புணர்வோடு தமிழகம் ..
இந்த கட்டமைப்பை உருவாக்கி திராவிட இயக்கதலைவர்களுக்கு  நன்றி..
..
ஆலஞ்சியார்

Sunday, March 29, 2020

பிரதமர் நிவாரணம்

இந்திய ஒன்றியத்தின் பிரதமரும் தமிழ்நாட்டின் முதல்வரும் நிதி கேட்கிறார்கள் 
கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க போதிய நிதி ஆதாரமில்லாததால் மக்களிடம் கையேந்துகிறார்கள் வல்லரசாக்குவேன் என்ற பிரதமரும் அவரின் தலையாட்டியும் ..
..
நாட்டின் பிரதமர் இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனாவை கட்டுபடுத்துவது பெரும் சவாலாக உள்ளது என்கிறார் .. இதைவிட அதிக மக்களை கொண்ட சீனா சிறப்பாக திட்டமிட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது .. ஆனால் பிரதமரின் அறிவிப்பை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் திருச்சியிலும் உ.பி.யிலும் இன்னும் பிற பகுதிகளிலும் சாமி ஊர்வலங்களும் பெரும்கூட்டத்தோடு சாமிசிலை கொண்டு கொண்டாடி தீர்க்கிறார்கள் .. ஆனால் அதெல்லாம் காவல்துறைக்கு கண்ணில் படாது .. சில மதம் தலைக்கேறிய அறிவிலிகள் 
அசுரவதம் நடப்பதாக சொல்லி தங்களை தாங்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள் .. கொத்துகொத்தாய் மரணங்கள் உலகமே செய்வதறியாது வழிபாட்டுதலங்களை மூடிவிட்டு தெய்வங்கள்..? ஓய்வில் .. 
தொடர்ந்து ஓய்வின்றி மருத்துவர்களும் செவிலியர்களும் மக்களை காக்க போராடிவருகிறார்கள் .. இங்கே மடையர்கள் பல்லக்கு தூக்கி சாவை வரவேற்கிறார்கள்..
..
திடீரென இரவு உத்தரவு போடுகிறார் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு எப்படி சென்று சேர்வார்களென முன்யோசனை இல்லாமல் பிழைக்க தினக்கூலிக்காய் சென்றவர்கள் பெரும்கூட்டமாய் நெடும்பயணம் மேற்கொள்கிறார்கள் டெல்லியிலிருந்து பீகாரை நோக்கி .. இந்த அரசிடம் எந்த திட்டமிடலும் இல்லை .. திடீரென ஓரிரவில் பணமதிப்பிழப்பு செய்த மகான் திடீர் ஞானோதயம் வந்து உலகமெங்கும் இரண்டுமாதங்களாகவே ஆட்டுவிக்கும் கொரோனாவைபற்றி அறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் வந்தும்  குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதிஸ் கவனம் செலுத்தி.. கடைசியில் வேறு வழியின்றி கைமீறிவிடும் என்ற நிலை வந்தவுடன் தொலைக்காட்சியில் தோன்றி நள்ளிரவு முதல் ஊரடங்கு 21 நாட்கள் என்றார் ..மக்கள் அவதியில்..
..
இந்திய பொருளாதாரம் கடும்வீழ்ச்சியில் என அறிந்தும்,  தொடர்ந்து வல்லுநர்களால் 
எச்சரிக்கபட்டும் இங்கே மதம் ஆட்சி செய்தது .. வரலாறு படித்தவர்கள் நிதித்துறையை கையாண்டதில்  கடைசியில் தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள்.. வாராகடனையும், சில கொழுத்த தொழிலதிபர்களுக்கு பல்லாயிரம் கோடிகளும், தள்ளுபடியும் செய்துவிட்டு இன்று மக்களிடம் நிதி கேட்கிறது மத்திய அரசு .. இந்திய குடிமக்கள் என நம்மால் நிரூபிக்க முடியாமல் போனாலும் சரி .. உதவியென கேட்டுநிற்கும் அரசிற்கு நம்மால் இயன்றதை வழங்குவோம்
..
தருவோம் நம் மக்களின்,உயிர்காக்க 
பிரதமரின் நிவாரண நிதிக்கு .. மக்களின் உயிர் முக்கியம் .. தலையில் சுமையோடு  கைக்குழந்தைகளையும் அழைத்து கொண்டு சாலை வழியாக தொடர்ந்து பயணித்து உயிர் பயத்தோடு செல்லும் எம் சகோதரனை /சகோதரியை காக்க ..
பசியில் தெருவில் உறங்கும் முகவரியில்லாத பெருமக்களை காக்க .. செய்வதறியாது யாரிடமும் யாசகம் கேட்க அஞ்சும் எம் எளிய மக்களை காக்க ..மதங்களும் சாதிகளும் கடவுளும் கைவிட்டாலும் மனிதனின் பெரும் முயற்சி பெரும்சாவில் இருந்து காக்கும் மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையில்.. ஒன்றுபட்டு இந்தியாவில் கொரோனாவை அழித்தொழிக்க அரசோடு இணைவோம் ..
..
ஆலஞ்சியார்

Sunday, February 16, 2020

பூம்பூம் மாடு

#காயத்தை_குருதியைக்_கொண்டு_கழுவாதே என்றார் மௌலானா ரூமி அவர்கள் ..
..
பூம்பூம் மாடு..
இன்றைய சூழலில் CAA தேவை என்கிறது
வாணியம்பாடி தந்த பூம்பூம்மாடு ..
சில நேரங்களில் சில மனிதர்கள் தங்களின் நிலைபாட்டில் உறுதியோடு நிற்பதில்லை யாரென்றே அதுவரை அறியாதவர் ஒருநாள் கடைவீதிகளில் "ரௌடிபேபியாக" வலம் வந்து கடைகளை அடித்து உடைத்து ஜெயலலிதாவிடம் "நல்லபெயர்" எடுத்து யாரிவர் என கேட்கவைத்து இவ்வளவு துணிவா என கட்சியில் சீட் கிடைத்து .. வென்று அமைச்சரானார் .. தமிழக அரசியலில் இதெல்லாம் காண வேண்டியிருந்தது 
நல்ல முன்மாதிரிகளை தொலைத்துவிட்டு சில்லறைக்கு வாக்கை விற்றதன் விளைவின் எச்சம் இது .. கழிவுகள் கரைகள் நம்மை ஆக்கரமித்து சுவர் எழுப்பி ஜனநாயகத்தின் முகத்தை கோரமாக்கியது ..
..
இவரென்றில்லை நிறைய பேர் பூம்பூம்மாடுகள் தான் ..  தன் எஜமானின் வாசிப்பிற்கு தலையாட்டி நன்றி காட்டி அவனை பிழைக்க வைக்கும் மாடுகள் .. அலங்கரித்து நிற்க வைத்து கயிற்றை இழுத்தால் தலையாட்டும் பதவியெனும் அலங்காரம் பேசவைக்கிறது ஆம் தலையாட்டவைக்கிறது .. 
CAA வை பற்றி புரிதல் இல்லாமல் இல்லை ஆனால் பசிக்குமே என்ன செய்ய .. 
வெகுமக்கள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள் அவர்களின் அச்சம் நியாயமானதென பேச தொடங்கியிருக்கிறார்கள் இஸ்லாமியர் தவிர்த்து என்பதில் தான் அவர்களின் கவலை தெரிகிறது.. பார்பன சமூத்தவர்களில் கூட இவர்களின் கவலையை உணர்ந்து கதைக்கிறவர்கள் உண்டு சுமந்த்.ராமன்
இஸ்லாமிய சமூகத்தினர் நடத்துகிற இந்த போராட்டம் அவர்களின் வேதனையின் வெளிப்பாடாகவே இந்துக்கள் பார்க்கிறார்கள் . தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் மட்டும் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் போராடி வருகின்றனர். இந்த CAA NCR NPR அனைத்து  இந்தியர்களுக்கானதாகவே பார்க்க வேண்டிய ஒன்றே அல்லாமல் முஸ்லிம்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை நாம் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.... 
..
இந்தியன் எக்ஸ்பிரஸ் 
அமைதியாக தங்கள் தெருவுக்குள் போராடி கொண்டு இருந்த பொதுமக்கள் எந்த விதத்திலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை. ஆனால் காவல்துறை அங்கு சென்று கலைந்து செல்லுமாறு அத்துமீறிய போதுதான் பிரச்சினை ஏற்பட்டது..தற்போதைய நிலையில் இது மற்றொரு ஷாஹீன் பாங்காக உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஷிப்ட் முறையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு போராட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது என சொல்கிறது .. உண்மையும் கூட தங்களின் இருப்பின் மீது அச்சம் வரும் போது இழப்பதற்கு ஒன்றுமில்லை உயிரைதவிர என்கிற போது இவைதான் நடக்கும்..
..
உச்சநீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் "கருத்து வேறுபாட்டை தேசிய விரோதமாக கருத கூடாதென சொல்கிறார் போராடுவது கருத்து வேறுபாட்டை சொல்வதும் அவர்கள் உரிமை என்கிறார் ..
ஆனால் நிலோபர் கபில் CAA தேவை என கருத்திட்டு தன் பதவியை காப்பாற்றி கொள்ள பெரும் முயற்சியெடுக்கிறார் ..
காயத்தை குருதியை கொண்டு கழுவ முயற்சிக்கிறார் 
பாவம் ..வேறென்ன சொல்ல..
..
ஆலஞ்சியார்

Saturday, February 15, 2020

போராடு..

#பிணத்திற்கு_முன்_உணவுதட்டை_வைக்காதேஎன்றார் ..மௌலானா ரூமி அவர்கள் ..
..
தமிழக இஸ்லாமிய சமூகம் அதை தான் செய்கிறது .. எடப்பாடி மீதான நம்பிக்கை என்பது பிணத்தின் முன் உணவுதட்டை போல 
நேற்று நடந்த துன்பயியல் சம்பவம் அதை தொடர்ந்து விடிய விடிய போராட்டம் மக்களின் ஒற்றுமை கண்டு ஒருநிமிடம் மகிழ்ந்தாலும் சேர்ந்திருப்பவர்கள் "கோடாரிகாம்புகள் " என்கிற பயமும் வருகிறது .. பாக்கர் போன்ற சமூக துரோகிகள் இடையில் சமானத்தை முன்னெடுத்து பேச்சுவார்த்தையில் அரசின் நியாயத்தை ..? பேசியதாக அறிய முடிகிறது  உ.பி.யைபோல இங்கேயும் அடித்தமர்த்தலாம் என்ற நினைப்பை தமிழகம் தடுத்துநிறுத்தும் என்ற நம்பிக்கையை எடப்பாடி தலைமையிலான அடிமை அரசு பொய்பிக்க தொடங்கியிருக்கிறது .. துப்பாக்கிசூட்டையே காலையில் தான் தெரிந்துக்கொண்டேன் என்ற முதல்வர் பெற்ற பெரும்பாக்கியம் நமக்குண்டு 
சென்னையிலும் ஒரு ஷாகின் பாக்  உருவாகிவிடுமோ என அஞ்சுவதின் காரணம் தான் இந்த கலவரம் .. எச்.ராசா போன்ற தேசவிரோதிகள் 98 ல் கோவை கலவரகாரர்கள் மீண்டும் தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கலவரம் செய்ய வந்துவிட்டதாகவும் தமிழக அரசு இரும்புகரம் கொண்டு தடுக்கவேண்டுமென ட்வீட் செய்கிறார் .. திட்டமிட்டே இஸ்லாமியர்களை  CAAவிற்கெதிராக போராடுவர்களாக பிரித்துகாட்டவேண்டுமென்ற நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள் .. பெண்கள் குழந்தைகளோடு போராட்டகளத்தில் தங்களின் எதிர்காலம் குறித்த கவலையில் நிற்கவைத்த அரசும் போராடுபவர்களை தடியடி நடத்தி தங்களின் விசுவாசத்தை காட்டும் அடிமைகளும் வாய்த்தது நமது கேடுகாலம்..
..
இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பிற சமூக மக்களும் களத்தில் நிற்பது ஆறுதலான விடயம் .. பெரியார் மண் என பெருமை பேசி திரிந்தோம் இங்கேயேயும் அடக்குமுறையை ஏவி கலவரபூமியாக்க நினைத்து அதை அரங்கேற்ற திட்டம் வகுத்து தந்திருக்கிறார்கள் ..இந்த அரசை எவ்வழியிலேனும் தூக்கியெறிந்திருக்க வேண்டும் நேர்மை பேசி காலதாமதம் செய்த திமுகவும் இங்கே குற்றவாளி கூண்டில் .. அதிமுக அரசை இவர்கள் வைத்திருப்பதே தங்களின் தேவைகள் நோக்கங்கள் கொள்கைகள் சித்தாந்தங்கள் இவற்றை நிறைவேற்றதான் நேரடியாக களம்கண்டு வென்றிட முடியாதென அறிவார்கள் அதனால் தான் இனியொரு வாய்ப்பு கிடைக்காது என்பதால் இவர்களை பயன்படுத்தி தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் ..
..
தன்னெழுச்சியாக ஏற்பட்ட இஸ்லாமியர்கள் ஒற்றுமையை சிலர் தங்களின் செல்வாக்கிற்காக தங்களின் அமைப்பு லேபிலில் காட்ட ஆர்வம் காட்டுவது அயோக்கியத்தனம் ..சரியாக ஒருங்கிணைக்கபடாத சமூதாயமாக முஸ்லிம்களின் பரிதாபகரநிலையில் எத்திநிற்கிறது.. காயிதெ மில்லத் போன்ற ஆளுமைகளை உருவாக்க தவறியதும் பொறுப்பிற்கு வந்தவர்களின் சுயநல பதவிமோகமும் பிரிவினைகளில் தொடங்கி கடைசியில் "எண்ணிக்கையில் அடங்காத" இயக்கங்களாக உருபெற்று நிற்கும் அவலம்.. இஸ்லாமிய வாக்குவங்கிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதென்ற உண்மை விளங்கியதால் சம்பிரதாயத்திற்காக அரசியல் கட்சிகள் கைகோர்க்கின்றன.. அதிலும் சிலர் ஆளும் அரசிற்கு ஆதரவாக வெண்சாமரம் வீசி தங்களின் வளத்தை மேம்படுத்திக்கொள்ள முனைகின்றனர் .. உண்மையில் நாதியற்ற சமுதாயமாக மாறிவருகிறதோ என்ற அச்சம் வருகிறது .. ஒரே குடையின் வராதவரை எந்தவித மாற்றமும் நிகழபோவதில்லை ..
எதிரி யாரென்று தெரியும் யார் துரோகி என்றும் அறிவீர்.. எதிரியை வீழ்த்தும் வல்லமை யாருக்கிருக்கிறதென தெளிவாய் உணர்ந்து 
அவர்களை பின் துணைக்க வேண்டும் .. இல்லையெனில் விழலுக்கு இறைத்த நீரைப்போல வீணாகிவிடும் ..
..
#பிணத்திற்கு_முன்_உணவுதட்டை_வைக்காதீர்
..
ஆலஞ்சியார்

Friday, February 14, 2020

காதல்

காதல் 
உள்ளில் துளையிட்டு ஊடுறுவும் உணர்வு 
அகத்தில் அமர்ந்து மெல்லியதாய் எப்போதும் புன்சிரிக்கும்.. மறந்து திரிந்தாலும் இடையிடையே பெருமூச்சோடு ஜீவனை வெளிகாட்டும் .. 
வாழ்வின் இறுதிவரை நம்மோடு சேர்த்தணைத்தே நடக்கும் .. பலமுறை பூத்தாலும் முதல் முறை மொட்டாகி நின்றதே அத்தருணம் வாழ்வில் எல்லாநிலையிலும் உம்மை கண்ணீர் கசியவிடும் .. கல்வெட்டைப்போல நெஞ்சில் வரைந்த வரிகள் 
அழிக்கமுடியாத திரவியமாய் நிற்கும்.. காதல்
உன்னை புதுப்புதித்துக்கொள்ள உதவும் ..
..
மலரும் நினைவாய் .. சில வருடம் முன்பு
ஒருநாள் பழரசக்கடையில் தனியே அமர்ந்து 
ராசாவின் இசையை ரசித்து மகிழ்ந்திருந்த போது எதிரில் வந்து நின்று நானிங்கே அமரலாமா என்றவுடன் நாடிதுடிப்பு அடங்கியதைப்போல பிரமையில் நான்.. நடுதரவயது கூடவே 15 வயது மகளோடு சின்னசிரிப்போடு நலமா  நான் யாரென்று தெரிகிறதா என்றபோது மீண்டும் பிறந்ததைப்போல உணர்ந்தேன் .. எப்படியிருக்கிறாய் பையன் என்னபடிக்கிறான் இடையில் ஒருமுறை உன்னை பார்த்தேன் ஜவுளிகடையிலிருந்து வீட்டம்மாவை அழைத்துக்கொண்டு டூவீலரில் வெளியேறியதை பார்த்தேன் .. சிலநிமிடம் அடைமழைப்போல் கொட்டி தீர்த்தாள் .. என் மகள் இளையவள் 8 ல படிக்கிறாள் பெரியவ இந்த வருடம் +2 முடிக்கிறா .. 
மீண்டும் எப்படியிருக்கே .. நிலைகுலைய வைத்தது என்னை அவளின் வரவும் பேச்சும் ..
..
அரும்புமீசை காலத்தில் அறிந்தும் அறியாத வயதில் ஒருநாள் திடீரென காதல் கடிதம் தந்து 
அதை பிரித்து படிப்பதற்குள் நெஞ்சில் பட்டாம்பூச்சிகள் வண்ண மினுக்கி பறந்ததெல்லாம் வந்து போனது ஆசை வார்த்தை பேசி அழகுதமிழில் சிணுங்கி ஆற்றங்கரையில் விரல் கோர்த்து நடந்தும்.. ஆற்றுமணலில் புத்தகத்தால் முகமூடி படுத்திருந்தவேளையில் நெற்றியில் முத்தமிட்டதெல்லாம்.. மழைநின்று இலைசிந்தும் நீரில் நனைந்தபடி அன்பாய் பரிமாறிய முத்தங்கள்.. நிறைய கதைத்தும் மௌனமாய் சிலநிமிடங்கள் விழிகள் பார்த்தும் பேசிய ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தது..
அதிகால பனிமூட்டத்தில் மனமகிழ காத்துநின்றதெல்லாம் வாழ்வின் வசந்தங்கள்
கண்ணீர் கசிய கடைசியாய் பேசிவிட்டு போனதெல்லாம் வந்துபோனது .. நிறைய கதைக்கவேண்டும் போலிருந்து அக்கம்பக்கம் பார்க்காமல் அழவேண்டும் போலிருந்தது நீண்ட மௌனம் சொல்லாத வார்த்தைகள் காலம்கடந்த ஞானம் இவையெல்லாம் இழப்பையே தரும் .. அடாவடியாய் அழுத்தமாய் 
கடைசிவரை நின்றிருக்கலாம் விடமுடுயாதென  போராடி இருக்கலாம் நமக்கான வாழ்வை நாமே வாழ்ந்து பார்த்திருக்கலாம் .. பொய்யான முகமூடியோடு வாழ பழகாமல் மெய்யாய் நாம் நாமாய் இருந்திருக்கலாம் .. 
..
திரும்ப முகத்தெதிரே கை சுடக்கிய போது ஞானம் கலைந்து சிரித்துவைத்தேன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.. கடந்தகால நினைவுகள் தவிர்த்து எல்லாம் பேசினாள்.. பையன் பைக்கில விரசா போறான் 
என்ற அக்கறை கூட வந்தது திரும்பவும் பாதாம்கீர் வரவழைத்து குடித்தோம்.. நேரமாறது நான் கிளம்பட்டா .. என்ற போது 
Still love you என்றேன் தலையில் கொட்டி ..
நீ திருந்தமாட்டே எனச் சிரித்து வரேன் என சென்றவள் வாசல் அருகில் நின்று திரும்பி எனை பார்த்து தலையசைத்த போது ..
மீண்டும் அதே பட்டாம் பூச்சிகள் வண்ணமாய் மின்னின..
..
காதல் உள்ளில் துளையிடும் உணர்வு
..
ஆலஞ்சியார்

Saturday, February 8, 2020

தஞ்சையில் தமிழ்

தஞ்சை பெருவுடையார் கோவிலில் 
தமிழ் ஒலித்தது ..

கடவுளால் தேவங்கிரி மொழியை மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றும், தமிழ்மொழி அந்த மொழியுடன் இணையாக நிற்க முடியாது' என்ற வாதத்தை பழமைவாதிகள் முன் வைத்தார்கள் ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்காமல் நிராகரித்தது ..இதை இந்தியன்எக்ஸ்பிரஸ்  நாளிதழ் இது ஆரிய... திராவிட வேறுபாடு என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது ..
குறிப்பாக தமிழ் நாட்டில் 
மத நம்பிக்கையை தாண்டி .பார்பனர்களுக்கு எதிராகவே இது போன்ற குரல்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து ஒலிப்பதை உணரமுடியும் 
திராவிட ஆரிய பகை என்பது இங்கே உணர்வோடு பின்னியது ராணவனை அசுரனாக தமிழினத்தவனாக காட்டியதும் அது வடமாநில மக்கள் ஏற்கும் ராமனுக்கு எதிராக சித்தரிக்கபட்டதும் காரணம் ..
..
கடவுளுக்கு எல்லா மொழியும் தெரியவேண்டாமா ஒருமொழி மட்டுமே வணக்கத்திற்குரியதென்பதும் அதே போல் குறுப்பிட்ட பிரிவினர் மட்டுமே அதை பேசி கடவுளை தாலாட்ட முடியுமென்பதெல்லாம் அறிவுடை செயலா.. கடவுளோடு பக்தன் தனக்கு புரிந்த மொழியில் பேசுவதோ கேட்பதோ தானே சரி இடையில் எதற்கிந்த இடைதரகு வேலை.. அதிலும் குறிப்பிட்டவர்கள் தவிர பிறர் சென்றால் தொட்டால் அபிஷேகம் செய்தால் தீட்டென்றால் கூடாது பாவசெயல் என்றால் பிறகெப்படி அவர் ஏற்றதாழ்வுகளை கொண்டாடுகிற போதிக்கிற செயலை செய்துவிட்டு கடவுளாக முடியும் .. இதற்கெல்லாம் வேதவிற்பன்னர்களிடம் பதில் இல்லை
..
முஸ்லிம்கள் அரபுமொழியில்தானே தொழுகை நடத்துகிறார்கள் என்ற வாதம் வைக்கபடுகிறது 
பொருள் புரிந்து ஒதுகிறார்கள் அதில் கூட யார் வேணிடுமானாலும் வழிபாட்டை தலைமையேற்கலாம் என்ற நிலை உண்டு .. அதை விட அவர்களுக்குள் யாரும் அதை எதிர்க்கவில்லை என்பது கவனிக்கவேண்டியவிடயம் .. தமிழில் பிரசங்கங்கள் செய்யபடுகிறது..
அதற்காக முழுமையாக ஏற்பதாக பொருளில்லை..
..
சிந்து சமவெளியில் வாழ்ந்த பல சமய நம்பிக்கை கொண்ட மக்களிடையே கடவுள் இருந்ததற்கான தடயங்கள் இதுவரை கண்டெடுக்கபடவில்லை பிறகு வழிவழியாக வந்த மக்கள் பயம் காரணம் 
பல்வேறு குல தெய்வங்களை வழிபாடு செய்து வந்ததாக அறிய முடியும் அவை  பல்வேறு கடவுள்களை கொண்டதாக இருந்தது ஆரியர் வருகைக்கு பிறகே அதை சனாதனத்தில் மூழ்கி ஏற்றதாழ்வுகளை வரையறுத்து குறிப்பிட்ட வர்க்கம் மட்டுமே கடவுளின் தொண்டுக்கென சொல்லி கடவுளை கும்பிட கூட தீட்டு விதித்து பிரித்து வைத்ததும் நடந்தது  ஆங்கிலேயர் வரவிற்கு பிறகே
இவைகள் ஒருங்கிணைக்கபட்டு" இந்து " என்ற அடைக்குள் வந்தது .. இவர்கள் கூறும் வேதங்களில் கூட சரியான வழிபாட்டுமுறைகள் சொல்லபடவில்லை இவர்களாக ஏற்படுத்திய ஆகமவிதிகள் பார்பன நலன் சார்ந்து அவர்களின் பொருளாதாரம் மேம்பட அவர்களே உருவாக்கியதே தவிர அதில் எதுவும் உண்மையில்லை .. குறிப்பாக பார்பனர்களுக்கே கடவுள் வேதம் என்பதெல்லாம் புரட்டு என்று தெரியும் அதுதான் தம்மை மேம்படுத்தி காட்ட ஒரேவழி என்பதால் விட்டுகொடுக்க மறுக்கிறார்கள் ..
எல்லோரையும் அர்ச்சகராக ஆக்கிவிட்டால் அவனே கடவுள் இல்லை என சொல்லிவிடுவான் என பெரியார் சொன்னார் ..
அதுதான் கடைசியில் நடக்கும் ..
..
மதம் மறந்த மனிதமே என்றும் நிலைக்கும் 
..
ஆலஞ்சியார்

Thursday, February 6, 2020

ரஜினி

வேறு வழியில்லை அந்த உச்ச நடிகருக்கு 
66 லட்சம் அபராதத்தை கட்டி அவரை விடுவித்ததின் பின்னில் வருமானவரித்துறை மூலம் மிரட்டி CAA விற்கு ஆதரவாக பேசவேண்டும் என்ற நிபந்தனையோடு பாஜக தப்பிக்கவிட்டிருக்கிறது ..விஜய் ரெய்டுக்கு பின்னிலும் ரஜினி இருப்பதாகவும் Front Line இணை ஆசிரியர் ஆர்.ராதா கிருஷ்ணன் சொல்கிறார்  ரஜினியை வைத்து இனி பயனில்லை என்றவுடன் விஜய் மிரட்டபடுவதாகவும் சொல்லபடுகிறது ..
..
நாய் வேசம் போட்டவன் குலைக்கதான் வேண்டும் 
பாஜகவின் பிடியில் ரஜினி மிரண்டுகிடப்பது அவரின் பேச்சு உணர்த்துகிறது .. மாணவர்கள் போராட்டத்தை சிறுமைபடுத்த முயல்கிறார் மதபோதகர்கள் அவர்களை தூண்டிவிடுவதாகவும் அதை புரிந்து நடந்துக்கொள்ளவேண்டுமென பாஜகவின் குரலை பதிவு செய்து தான் முழு சங்கியாகவே மாறிவிட்டதை சொல்கிறது .. இன்னமும் அரசியலை படிக்கவில்லை மக்களை திடீரென திசைதிருப்பிவிடலாமென சில சொல்வதை நம்பிக்கொண்டு இடையிடையே வந்து பேட்டி தந்து அதை கூட முழுமையாக்காமல் ஓடியொழிகிற இவர் மக்களை காக்க வருவாராம் ..
..
தமிழ்நாடு விழுப்புணர்வு கொண்ட மாநிலம் வடக்கில் காவல் துறை அதிகாரியை கூட ஷூவை கழட்டவைத்தாலும் அது செய்தியாக கூட வராது ஆனால் இங்கே சிறுவனை அழைத்து செருப்பை கழட்டச்சொன்னால் அடிவிழும் வன்கொடுமை வழக்குவரும் .. சுயமரியாதையை தேசமிது இங்கே சங்கிகளுக்கு இடமில்லையென ஒவ்வொருமுறையும் தமிழ் தேசம் சொல்லிக்கொண்டே இருக்கிறது .. எத்தனை பித்தலாட்டங்கள் செய்தாலும் இங்கே பருப்பு வேகாது .. ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நின்று நிதானமாக பதில் சொல்ல வக்கில்லாதவர் சுயபுத்தியற்று சொல்லிக்கொடுத்ததை வாந்தியெடுத்துவிட்டு ஓட்டம் பிடிக்கிறவர் .. 
முஸ்லிம்களுக்கு பிரச்சனை வந்தால் முதல் ஆளாய் நிற்பாராம் ..உ.பியிலும் டெல்லியிலும் குஜராத்திலும் முஸ்லிம் வேட்டையாடியபோது எங்கு சென்றார் .. கமலை கூட சிறந்த நடிகர் என காலம் பேசும் ஆனால் ரஜினியின் வீழ்ச்சி மிக பரிதாபமாகவே இருக்கும் .. அரசியல் அறிந்து பேசவேண்டும் .. ஆர்எஸ்எஸ் குரலை உயர்த்துவதற்கு ஒரு அடங்கிய அடிமை கிடைத்திருக்கிறார் .. போராட்டம் செய்வது மாற்றுகருத்தை சொல்வதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமை ..  இதெல்லாம் கூடாதென்பது பாசிசத்தின் குரல் ..  மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு படிக்கபோக சொல்கிறது அதேபோல் மாணவர்கள் தன்படத்தை பார்க்க வீட்டில் பணத்தை கேட்டும் கேட்காமலும் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்து தரும் பணத்தில் கொழித்துக்கொண்டு புத்தி சொல்வதுதான் கொடுமை இனி தன் படத்தை மாணவர்கள் பார்க்காதீர்கள் சொல்லவேண்டும் அதுதான் சரி 
ஒருமுறை பம்பாய் (மும்பை) சென்றால் மதராஸி என்கிறான் கர்நாடகாவிலே மராட்டி என்றும் தமிழ்நாட்டில் கன்னடன் என்றும் சொல்கிறார்கள் நான் எங்கே போறது  ..எங்கேயோ கேட்ட குரலாய் இருக்கிறதா .. ரஜினி சொன்னது தான் இன்று பாஜகவின் பைத்தியக்காரத்தனத்திற்கு காவடி தூக்குகிறார் ..
..
ஆலஞ்சியார்

Wednesday, February 5, 2020

தலைவர் தளபதி

தலைவனை காலம் சமைக்கும்..
தானாகவோ சிலரால் திணிக்கப்பட்டோ ஒருவன் உருவானால் காலம் அவனை கண்டுக்கொள்ளாது மட்டுல்ல எழ முடியாதவாறு வீழ்த்திவிடும்.. சிலர் பிரபலமாய் காட்சி தரலாம் புகழின் உச்சத்தில் கூட இருக்கலாம் ..அவர் கூட இருப்பவர்கள் ஆளுமைகளாக கூட இருக்கலாம் ஆனால் அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போகும் நிறைய வந்தார்கள் போனார்கள் சுவடே இல்லாமல் காலம் அழித்துவிடும் .. நல்ல தலைவர்களை மக்களை நேசித்த மக்களோடு கலந்த .. மக்களின் மேம்பாடொன்றே தங்களின் பணியென பயணித்த .. விளிம்புநிலை மக்களின் மேலேற்றிவிட சமூகத்தின்பால் அக்கறையும் பொறுப்பும் உணர்ந்து செயலாற்றுவோர் காலம் கடந்தும் போற்றபடுவார்கள் ..
..
மக்களின் தலைவன் மக்களை நேசிக்கிறவான இருக்கவேண்டும் ..மக்கள் நேசிப்பதாய் எண்ணி கால் வைத்தால் புதையுண்டு போவீர்கள்.. எல்லா காலகட்டத்திலும் மக்களின் துயர்துடைக்க ..நானிருக்கிறேன் என நம்பிக்கை தருகிறவர்களை காலம் கொண்டாடும்.. சில தலைவர்களே வரலாறாய் மாறுகிறார்கள் .. பெரியார் அண்ணா கலைஞர் .. இப்படி சிலர் மட்டுமே காலம்கடந்தும் கண்கள் கசிய மக்கள் கதைக்கிறார்கள் .. வாழும் போதும் மறைந்தவிட்டபோதிலும் மக்கள் நெடுநாள் நேசிக்கிறார்களெனில் மக்களின் வாழ்விற்காக முன்னேற்றத்திற்காக கடுஞ்சொல்லால் ஏசினாலும்,
கல்லெறிந்தாலும், பகைகொண்டாலும், தோல்வியையே தந்தாலும் எம்கடன் பணிசெய்து கிடப்பதே என தொடர்ந்து தொண்டாற்றியவர்களையே .. சூழ்ச்சி நயவஞ்சகம்
துரோகம் பழிச்சொல் என வேட்டையாடப்பட்டாலும்
தாயைப் போல மறந்து தொடர்ந்து மக்கள் சேவையை முன்னெடுத்தால் மறைந்தும் மக்கள் மனதில் வாழ்வார்கள் ..
..
தளபதி..
மக்களை நேசிக்கிற மக்கள் நேசிக்கிற தலைவராக வருகிறார் .. அய்யாவின் நேர்மை, அறிஞரின் அரவணைப்பு,பேரருளாளனின் உழைப்பு இவை மூன்று சேர்ந்த கலவை .. எதையும் நேர்மையோடு மக்கள் தரும் ஆதரவில் அதிகாரம் வரவேண்டுமென்று காத்திருந்து தொண்டாற்றி கழகத்தவர்களை அரவணைத்து அதிலும் தேவைப்படும் போது களையெடுத்து .. தளபதியாய் இருந்து படை நடத்தாமல் தானே இறங்கி வேலைபார்க்கும் உழைப்பு ..மக்களின் கருத்தை நேர்நின்று கேட்டு இடைதரகரில்லாமல் காதோர்த்து
செவ்வனே பணியாற்றும் அழகு .. தலைவன் என்பவன் மக்களை சந்திப்பவனாக எதையும் எதிர்க்கொள்ளும் துணிவுள்ளவனாய், மக்களின் துடிப்பை உணர்ந்தவனாய் பகையறிந்து படையோட்டும் வீரனாய் தளபதியாய், எது சரியென உணர்ந்து செயலாற்றவேண்டும்.. அய்யாவின் தொலைநோக்கு சிந்தனையை கையிலேந்தி இயக்கத்தை வழிநடத்துகிறார் ..
..
அய்யா அறிஞர் ஆசான் வழியில்.. நிச்சயமாய் இடம் பெறுவார் .. உழைப்பவனை உன்னதனை, காலம் கடந்து பேர் செல்லும் .. வரலாறு நல்ல தலைவனை கொண்டாடியே தீர்க்கும் ..
இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவனை நாடு கண்டுக்கொண்டது .. கலைஞர் பட்டை தீட்டிய வைரமாய் மின்னுகிறார் தளபதி.ஸ்டாலின்
..
நம் தலைவர் ஸ்டாலின் பெருமையோடு சொல்வோம்.. குறித்துக்கொள்ளுங்கள் தளபதியை
#வரலாறு_போற்றும் ..
..
ஆலஞ்சியார்

Monday, February 3, 2020

தளபதி

உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் பலன் உண்டு கிடைக்கிறவனை கொண்டு நடத்தினால் பலனில்லை பேரறிஞர் அண்ணா
..
திமுக பெரியளவிலான மாற்றத்தை முன்னெடுக்கிறது பாராட்டபடவேண்டிய விடயம் தலைமைக்கழக செயலாளர் பதவியிலிருந்து டி.ஆர்.பாலு விடுவிக்கபட்டபோதே எண்ணியதுதான் 
நிறையபேர் மாற்றத்திற்கு உள்ளாவார்கள் சேலம் வீரபாண்டியும் மாற்றபட்டிருக்கிறார் ..முன்பு ராமநாதபுரம் செயலரும் மாற்றபட்டபோது சில முணுமுணுப்புகள் எழுந்தன "நீண்டநெடிய கட்சிபாரம்பரிய " என்று கதைத்தவர்கள் உண்டு 
ஆனாலும் கட்சி நலன் கருதியும் ஒரே இடத்தில் மாவட்ட தலைமை "நிற்பது" சூழற்சிக்கு உகந்ததாகவோ ஜனநாயகதன்மை நீர்த்துபோவதாகவோ தான் அமையும் .. அவர்கள் மீது பெரும் மரியாதை உண்டு கழகத்தின் கண்ணின் மணியாய் இருப்பவர்கள் தான் ஆனாலும் இன்னும் கூடுதலாய் பணிசெய்ய புதியதொரு மாற்றம் அவசியம் ..
..
தேர்தலுக்கு ஒருவருடம் முன்பே களையெடுக்கும் பணி நல்லது யாரையும் குறைகூறாமல் இன்னும் அதிவேக செயல்பாடு தேவை என்பதறிந்து சிலரை மாற்றியும் சிலரை கூடுதல் பொறுப்பிலும் நியமித்து 
தலைவர் தன் ஆளுமையை உணர்த்தியிருக்கிறார் 
இனியும் பொறுப்பதற்கில்லை என்று சில சமிஞ்சைகளை தந்து தங்கள் நலம் அல்ல இயக்கத்தின் வெற்றி மட்டுமே தற்போதைய தேவையென உணர்ந்து பம்பரமாய் சுழன்று கழகப்பணி செய்ய அனைவரும் தயாராவோம்
இக்கட்டான நிலையில் தமிழகத்தை பாசிச பிடியிலிருந்து மீட்டெடுக்க மக்களின் பேரன்பு பேராதரவோடு தளபதியை அறியணையேற்றுவதே நமது குறிக்கோளாய் செயல்படுவோம் 
..
பிரசாந்த் கிஷோர் 
மாபெரும் அரசியல் இயக்கத்திற்கு தேவையா என விமர்சனங்கள் திமுக ஆதரவு நிலைபாட்டாளர்களிடமிருந்தே வருகிறது ..
திமுக வெற்றியில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் இருந்தது.. யாரை எங்கே வைக்கவேண்டுமென்று தெரியும் .. 
சர்க்காரிய கமிஷனில் கலைஞருக்காக வாதாடியவர் தஞ்சாவூர் ராமசாமி ஐயர் (அப்போது யாரும் முனிவரவில்லை) வாதாட தனக்கு எதுவும் வேண்டாம் என்றவர்..  கலைஞரின் நண்பர்களாக நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி..
எம்ஜிஆர் இவரை கலைஞரின் நண்பர் என்பதால்
தனக்கு வைத்தியம் பார்க்க அனுமதிக்கவில்லை இவரின் மாணவர் கானு (ஜப்பான்) என்பவரை அழைத்தார் ..
கலைஞருக்கு நிறைய பிராமண நண்பர்கள் உண்டு சாவி, பாலசந்தர் டாக்டர் கோபால் .. சொல்லிக்கொண்டே போகலாம் .. திமுக 
பார்பனீயத்திற்கு எதிரானவரே தவிர பார்ப்பனர்களுக்கு எதிரான இயக்கமல்ல..
இன்றைக்கு சிறிய ஆதரவென்றாலும் சில பணிகளை செவ்வனே செய்ய சில முயற்சிகளை எடுத்தாக வேண்டும் ..அதைதான் தலைவர் செய்கிறார்..
ஐம்பதாண்டு கால அரசியல் அனுபவமும் நேர்மையான அரசியலை கையிலெடுத்து வாய்ப்புகள் வந்த போதும் கண்ணசைத்தால் போதும் அதிமுகவை உடைத்து ஆட்சியை அமைக்கலாம் என்ற நிலையிருந்தும் மக்களின் ஆதரவும் விருப்பம் அது தனக்கு வாய்ப்பை வழங்கும் அப்போது ஆட்சி அமைக்கலாம் என்ற நேர்மை எதற்கும் அஞ்சாத எதற்கும் வழங்கிநிற்காத துணிவும் ..பாசிசத்தை வீழ்த்த சரியான பாதையை 
தேர்வு செய்து பயணிக்கும் தலைவருக்கு  தெரியாதா ..எதை எப்படி கையாளவேண்டுமென்று .. தலைவரை நம்புவோம்
..
தளபதி  
மக்களின் பேரன்பு ..
தமிழகத்தின் நம்பிக்கை..
..
ஆலஞ்சியார்

அப்துல்வாஹித்

நானும் வாஹிதும் ..
..
மறக்கமுடியாத நினைவுகள் ..
வாஹித் 
திடீரென ஒருநாள் அண்ணே நாளைக்கு நாம சென்னை போறோம் பூபதி வரேன்னுயிருக்காரு நாமே போய் கனிமொழியை பாத்துட்டு வந்திடுறோம் .. என்னப்பா திடீரென்று எனச் சொல்லி முடிப்பதற்குள் திருச்சி வந்திடுன்னே நாம இங்கிருந்து புறப்பட்டு சென்னை போயிடுவோம் .. நான் தஞ்சையிலிருந்து வந்திடுறேனே.. இல்லைன்னே இங்கே வந்திடுங்க இங்கிருந்து கிளம்பிடுவோம் .. அன்பின் நிழல் பாசமழை பேரன்பு கொண்ட நட்பு .. கட்சிகாரன் என்ற ஒற்றை பிணைப்பு இவ்வளவு இறுக்கமாக கட்டிபோடுமா என்ன.. அப்துல் வாஹித் ..
..
திடீரென ஒரு நாள் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலை என தகவல் தொலைப்பேசியில் அழைத்து கேட்கிறேன் அவரின் இணையரும் தம்பியும் நிலைமையை சொல்லும் போதே அடக்கமுடியாத அழுகை .. நினைவில்லை அபாயகட்டத்தில் தான் என்ற போது எந்த வேலையும் ஓடவில்லை .. தினம் அழைப்பதும் தகவல் வருவதுமாக நாட்கள் சென்றுக் கொண்டே இருந்தது எங்கள் பன்னாட்டு திமுக அமைப்பு செயலாளர் புதுக்கோட்டை பஷீர் அக்கறையோடு விசாரித்துக்கொண்டே இருப்பார் ..
நாட்கள் கடந்தன நினைவு வரவில்லை சிலமாதம் கடந்து ஒருநாள் வேறோரு எண்ணில் இருந்து தகவல் I Am Waheed ..  anne 
சட்டென்று சுதாரிப்பதற்குள் அழைப்பேசியில் அழைப்பு அண்ணே நான் தான் வாஹித் பேசுறேன்னே ..நினைவு திரும்பியவுடன் உங்களையும் பஷீரையும் தான் நினைவிற்கு வந்தது 
உங்கள் நம்பரை தேடி பேசுகிறேன் என்றார் கலங்கி 
என்னையா இப்படி தவிக்க விட்டுட்டியே என்ற போது கரைந்தார் ஒரு குழந்தையைப்போல .. தன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்ல பஸ் ஏறியபோது நண்பர் வா டூவீலரிலேயே போகலாமென அழைத்து சென்ற போது விபத்து நடந்து தலையில் பலமான அடி பலத்த காயம் .. தொடர்ந்து சுயநினைவிழந்து சிலமாதங்கள் கோமாவில் ..இப்போதுதான் சுயம் தெளிந்து 98% விழுக்காடு நினைவு திரும்ப தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்..
..
இப்படியொரு மனிதனை காண்பதறிது ..அண்ணே குவைத்திற்கு ஆள் வருதுன்ணே மணப்பாறை முறுக்கு அனுப்பிருக்கேன் போய் வாங்கிக்கண்ணே.. ஆள் வருதுண்ணே கறுப்புசட்டை அனுப்பிருக்கேன் வாங்கிக்கண்ணே.. 
எதைச்சொன்னாலும் உடனே செய்வார் வாஹித் இவரோடு நம்பர் வேணும் இப்ப தேடி அனுப்புறேன்னே  சொல்லி சில நிமிடங்களில் தொலைப்பேசி எண் வந்துவிடும்.. கழகம் தலைவர் தளபதி இதுமட்டுமே சுவாசமாய் சுழன்று செயலாற்றுபவர் .. மீண்டு வந்திருக்கிறார் பழையதுபோல் அதைவிட வீரியத்தோடு நம்மோடு பயணிப்பார் .. 
தம்பி அப்துல் வாஹித் நட்பின் இலக்கணம் 
..
ஆலஞ்சியார்

Wednesday, January 29, 2020

நொண்டி குதிரை ரஜினி

வரிஏய்ப்பு ரஜினி..
சினிமாவில் தான் சேர்த்த சொத்துக்கெல்லாம் சரியான வரியை  செலுத்தியதில்லை இவரென்றில்லை நிறைய பேர் பிரபலங்களாய் இருப்பவர்கள் வெள்ளையில் கொஞ்சமும் கறுப்பில் நிறையவும் வாங்குவதைதான் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.. வியாபார சந்தையில் கிராக்கி இருப்பதை காசாக்க நினைக்கும் எண்ணம் அதை சரியாக பயன்படுத்தி நாலுகாசு பார்த்த கூட்டம் பெரிய பிம்பத்தை கட்டமைத்து கொண்டாடும் .. சில தோல்விகள் போதும் இருந்த இடம்தெரியாமல் போக .. நிழலை நம்பும் மிகப்பெரிய சந்தையில் இது போன்ற வரிஏய்ப்புகள் புதிதல்ல .. ஆனால் தன்னை "பரமயோக்கியன்" எனச் சொல்லி திரிபவர்கள் மற்றவர்களுக்கு ஒழுக்கத்தை நேர்மையை போதிப்பதும் கேலிக்கூத்து .. 
..
சினிமாவை கேளிக்கையாக பார்த்து ரசித்து கடந்து போகவேண்டுமே தவிர தூக்கிவைத்து கொண்டாடுவதால் நாடு "கழிசடைகளை" முன்னிறுத்தி அரசியல் செய்து வந்திருக்கிறது .. "மகாயோக்கியன் " என்ற "வேசம்"கட்டல் நிழலை நிஜமென்று நம்பவைத்தல் 
மூடத்தை விட ஆபத்தானது .. சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தி சமூக அவலங்களை படம்பிடித்துகாட்டி விழிப்புணர்வை தரலாமே தவிர 
அதை,அதில் நடித்தவர்களை பின்பற்றுவது பேராபத்தை தருமென காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது .. சினிமா நாடகம் கூத்து இவையெல்லாம் கலைவடிவங்களாக காணவேண்டுமே தவிர அதில் சொல்லபடும் சேதியை கேட்டு புரிந்து தெளிவுபெற வேண்டுமே கொண்டாடலாமே தவிர.. அரசியலில் பொதுவாழ்விற்கான தகுதியாக கருதிடகூடாது ..
பொதுவாழ்விற்கு வருவதற்கு சினிமாவில் நடித்தால் மக்கள் அதிகம் ரசிக்கிற கலைஞனாக இருந்தால் போதும் என்பது அறிவிலித்தனம் .. 
சினிமா பொழுதுபோக்கு அவ்வளவுதான் .. அரிதாரம் கலைத்துவிட்டால் மவுசு போய்விடும் .. யாருக்கும் அரசியல் பார்வை இருக்கலாம் யார் வரவேண்டும் வரகூடாதென்ற அறிவும் விமர்சனமும் கூட அவசியம் தேவை .. பொதுவாழ்விற்கு  வர தொண்டாற்றும் மனபான்மை வேண்டும் மக்களோடு இரண்டறகலந்து அவரது விருப்புவெறுப்புகளை உணர்ந்து ..நீண்டகாலம் பயிற்சியும் உடன் எப்போதுமிருப்பேன் என்ற உணர்வை மக்களுக்கு தரவேண்டும் ..கட்சியே தொடங்காமல் நேரடியாக முதல்வர் கனவோடு வருகிறவர்கள் அவர்களை மிகப்பெரிய இயக்கத்தோடு ஒப்பிடுவது (ஒப்பீடே தவறு) அவரால் தனித்தன்மையோடு நல்லாட்சி தரமுடியுமென பேசி திரிவதெல்லாம் வாக்குவங்கியே இல்லாத சில அலப்பரைகளின் "குமாரசாமி கூட்டல்" கணக்கை போல தப்பாகி போகும் ..
..
வாடகை பாக்கி தரமாட்டேன் வரிபாக்கியை செலுத்தமாட்டேன் கட்சி தொடங்கமாட்டேன் ஆனால்
அரசியல் பேசுவேன் அதிலும் யாரோ எழுதிக்கொடுத்ததை அது சரிதானா என யோசிக்காமல் பேசி "அறிவாளி"யாக நடித்து கைத்தட்டல் பெறுவேன் .. சுயசிந்தனையற்ற ஜடமாய் சிலர் பின்னின்று இயக்கவதற்கு "தலையாட்டி" பொம்மையாய் ஏற்கனவே பதிவேற்றபட்டதற்கிணங்க செயல்படும் ரோபோவாய் இருந்தால் மக்கள் மன்றம் மௌனமாய் அடி தரும்..எழ முடியாதவாறு .. இதுவரை சேர்த்து வைத்த எல்லாம் போகும் புகழ் பணம்  பெயர் எல்லாம் போகும் ..
..
அரசியல்/மக்கள் சேவை என்பது சமூகநலன், வாழும் நிலம் குறித்த அக்கறை, ஏற்றதாழ்வற்ற எல்லாருக்குமான சரிநிகர் உரிமை, தன்னலமற்ற சேவை,கடும் உழைப்பு .. விருப்புவெறுப்பிலும் தொடர்பணி,தொலைநோக்கு சிந்தனை விளிம்புநிலை மக்களின் உரிமை உயர்வு .. போகும் பாதை குறித்த அறிவு இவையாவும் வேண்டும் இன்னும் பல.. ஆனால் எதுவுமற்ற போதை தரும் புகழ் ஒன்றே போதுமென கருதினால் காகிதகப்பலை போல முழ்க நேரிடும் ..
..
நொண்டிகுதிரை..
..
ஆலஞ்சியார்