உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் பலன் உண்டு கிடைக்கிறவனை கொண்டு நடத்தினால் பலனில்லை பேரறிஞர் அண்ணா
..
திமுக பெரியளவிலான மாற்றத்தை முன்னெடுக்கிறது பாராட்டபடவேண்டிய விடயம் தலைமைக்கழக செயலாளர் பதவியிலிருந்து டி.ஆர்.பாலு விடுவிக்கபட்டபோதே எண்ணியதுதான்
நிறையபேர் மாற்றத்திற்கு உள்ளாவார்கள் சேலம் வீரபாண்டியும் மாற்றபட்டிருக்கிறார் ..முன்பு ராமநாதபுரம் செயலரும் மாற்றபட்டபோது சில முணுமுணுப்புகள் எழுந்தன "நீண்டநெடிய கட்சிபாரம்பரிய " என்று கதைத்தவர்கள் உண்டு
ஆனாலும் கட்சி நலன் கருதியும் ஒரே இடத்தில் மாவட்ட தலைமை "நிற்பது" சூழற்சிக்கு உகந்ததாகவோ ஜனநாயகதன்மை நீர்த்துபோவதாகவோ தான் அமையும் .. அவர்கள் மீது பெரும் மரியாதை உண்டு கழகத்தின் கண்ணின் மணியாய் இருப்பவர்கள் தான் ஆனாலும் இன்னும் கூடுதலாய் பணிசெய்ய புதியதொரு மாற்றம் அவசியம் ..
..
தேர்தலுக்கு ஒருவருடம் முன்பே களையெடுக்கும் பணி நல்லது யாரையும் குறைகூறாமல் இன்னும் அதிவேக செயல்பாடு தேவை என்பதறிந்து சிலரை மாற்றியும் சிலரை கூடுதல் பொறுப்பிலும் நியமித்து
தலைவர் தன் ஆளுமையை உணர்த்தியிருக்கிறார்
இனியும் பொறுப்பதற்கில்லை என்று சில சமிஞ்சைகளை தந்து தங்கள் நலம் அல்ல இயக்கத்தின் வெற்றி மட்டுமே தற்போதைய தேவையென உணர்ந்து பம்பரமாய் சுழன்று கழகப்பணி செய்ய அனைவரும் தயாராவோம்
இக்கட்டான நிலையில் தமிழகத்தை பாசிச பிடியிலிருந்து மீட்டெடுக்க மக்களின் பேரன்பு பேராதரவோடு தளபதியை அறியணையேற்றுவதே நமது குறிக்கோளாய் செயல்படுவோம்
..
பிரசாந்த் கிஷோர்
மாபெரும் அரசியல் இயக்கத்திற்கு தேவையா என விமர்சனங்கள் திமுக ஆதரவு நிலைபாட்டாளர்களிடமிருந்தே வருகிறது ..
திமுக வெற்றியில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் இருந்தது.. யாரை எங்கே வைக்கவேண்டுமென்று தெரியும் ..
சர்க்காரிய கமிஷனில் கலைஞருக்காக வாதாடியவர் தஞ்சாவூர் ராமசாமி ஐயர் (அப்போது யாரும் முனிவரவில்லை) வாதாட தனக்கு எதுவும் வேண்டாம் என்றவர்.. கலைஞரின் நண்பர்களாக நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி..
எம்ஜிஆர் இவரை கலைஞரின் நண்பர் என்பதால்
தனக்கு வைத்தியம் பார்க்க அனுமதிக்கவில்லை இவரின் மாணவர் கானு (ஜப்பான்) என்பவரை அழைத்தார் ..
கலைஞருக்கு நிறைய பிராமண நண்பர்கள் உண்டு சாவி, பாலசந்தர் டாக்டர் கோபால் .. சொல்லிக்கொண்டே போகலாம் .. திமுக
பார்பனீயத்திற்கு எதிரானவரே தவிர பார்ப்பனர்களுக்கு எதிரான இயக்கமல்ல..
இன்றைக்கு சிறிய ஆதரவென்றாலும் சில பணிகளை செவ்வனே செய்ய சில முயற்சிகளை எடுத்தாக வேண்டும் ..அதைதான் தலைவர் செய்கிறார்..
ஐம்பதாண்டு கால அரசியல் அனுபவமும் நேர்மையான அரசியலை கையிலெடுத்து வாய்ப்புகள் வந்த போதும் கண்ணசைத்தால் போதும் அதிமுகவை உடைத்து ஆட்சியை அமைக்கலாம் என்ற நிலையிருந்தும் மக்களின் ஆதரவும் விருப்பம் அது தனக்கு வாய்ப்பை வழங்கும் அப்போது ஆட்சி அமைக்கலாம் என்ற நேர்மை எதற்கும் அஞ்சாத எதற்கும் வழங்கிநிற்காத துணிவும் ..பாசிசத்தை வீழ்த்த சரியான பாதையை
தேர்வு செய்து பயணிக்கும் தலைவருக்கு தெரியாதா ..எதை எப்படி கையாளவேண்டுமென்று .. தலைவரை நம்புவோம்
..
தளபதி
மக்களின் பேரன்பு ..
தமிழகத்தின் நம்பிக்கை..
..
No comments:
Post a Comment