Saturday, May 9, 2020

தலைவர்

'பெட்ரோல், டீசலை 'சீப்பா'கொடுத்தால் வண்டி வாகனம் அதிகமாகி விடும்'_
எம்.எல்.ஏ. செம்மலை!..
"குடி"பிரியர்களின் கோரிக்கையை  ஏற்று மதுகடை திறப்பு செல்லூரார்..
..
சுற்றி முட்டாள்களை வைத்துக்கொண்டால் தான் புத்திசாலியாக தெரிவோம் என்று சொல் உண்டு .. அதை மிகவும் சரியாக கடைப்பிடித்தார் ஜெயலலிதா ஆனால் பாருங்கள் ஜெயலலிதாவை மிகசிறந்த ஆளுமையை போல ஊடகங்களும் நடுநிலைகளும் கடைசிவரை கட்டிகாத்து நின்றன .. சிறந்த நிர்வாகியாகவோ நேர்மையாளராகவோ ஜெயலலிதாவை சொல்லமுடியாது .. தொலைநோக்கோடு எதையும் செய்திடவில்லை .. ஆனால் காழ்ப்புணர்ச்சியில் நல்ல திட்டங்களை செயல்படாமல் நிறுத்தியதும் சரியானததென்று கடைசிவரை உணராமல் போனதும்தான் நடந்தது சமச்சீர் கல்வியை தடுத்திட என்னவெல்லாமோ செய்ததும் நாம் கண்டதும் தான் ..சிறந்த நிர்வாகியாக இருந்ததுமில்லை நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தலையில் கொட்டியும் ரத்து செய்தும் இவரின் நிர்வாகத்தை கண்டித்துமிருக்கிறது .. டான்சி வழக்கில் தண்டனையிலிருந்து தப்ப சொத்தை திருப்பி தருகிறேன் என நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக சொல்லி தண்டனையிலிருந்து மீண்டதெல்லாம் வரலாறு .. தான் இட்ட கையெழுத்தையே போலி என்றவர் .. கடைசிவரை சசிகலாவின் "கீ"கொடுத்த பொம்மையாக இருந்தார் ஒருகட்டத்தில் செயலிழந்தும் போனார் .. தன்வாழ்வை சரியாக அமைத்துக்கொள்ள தெரியாத, தன் பொதுவாழ்வை கூட நேர்மையோடு கட்டமைக்க தெரியாதவர் தான் ஆனால் அவரை இந்த சமூகம் கொண்டாடியது தான் விந்தை .. 
..
இவரின் அமைச்சரவையில் முன்பிருந்தவர்கள் கூட நாவலர் போன்ற முன்னோடிகள் கூட ஒருகட்டத்தில் தங்களின் "திறமையை" வெளிகாட்டி தலைகுனிந்து நின்றார்கள் சிறந்த நிர்வாகியாகவோ ஆளுமையாகவோ அவர்களின் பங்களிப்பு இருந்ததா என்றால் வியப்பே மிஞ்சும்.. இப்போதைய அமைச்சர்கள் 
சொல்லவே வேண்டாம் முதல்வராக இருப்பவருக்கே அதற்கான தகுதி இல்லையென்கிற போது என்ன சொல்ல .. அண்ணாவிற்கு பிறகு அதிகம் புத்தகம் படித்தவன் நான் என்றபோது கடைசியாக படித்த புத்தகத்தின் பெயரை கேட்டபோது அது..வந்து.... உள்ளே இருக்கு என வடிவேலு காமெடியை ஞாபகபடுத்தியவர் ..சேக்கிழாரின் கம்பராமாயணத்தை கரைத்து குடித்தவரின் அமைச்சர் பெருமக்களின் பெருமைகளை சொல்லவேண்டுமா என்ன..? 
..
இவர்களை போன்றவர்களை உயர்த்தி பிடித்ததில் பாசிச சிந்தனையாளர்களுக்கும் பெரும்பங்குண்டு அவர்களுக்கு திராவிடம் ஆட்சியில் இருப்பதை பொறுக்கமுடியவில்லை அதற்காக எதைவேண்டுமானாலும் உயர்த்தி பிடிக்கலாம் சகதியை கூட சந்தனம் எனலாம்..
அறுவறுப்பை அழகென்கலாம்.. முட்டாளை அறிவாளியாக்கி திருடர்களை தேவதூதர்கள் ஆக்கலாம் .. திமுகவை தவிர்க்க வேண்டும் அதற்காக எந்த கழிசடைகளையும் ஆதரிக்கலாம் .. நீதிமன்றத்தால் "திருடி " என தீர்ப்பு தரபட்டாலும் "புண்ணியம் கோடி செய்த புனிதர்"என பெயர் சூட்டலாம்  .. அரசை கொண்டே #திருடிக்கு மணிமண்டபம் கட்டலாம் .. அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி கூட்டுக்கொள்ளை அடித்தாலும் .. திராவிடத்தை வீழ்த்த வேறு ஆள் கிடைக்காதென்பதால் கொண்டாடுவோம் .. 
..
தமிழகம் கண்ட மோசமான அவல ஆட்சி நடக்கிறது தன்மானமில்லாத கேவலமானவர்களை கொண்டு சதியை அரங்கேற்றுகிறார்கள் .. 50 ஆண்டுகாலம் போராடி பெற்றதெல்லாம் பறிபோகிறது ..வெளிப்படையான கொள்ளை .. ஊழல் சர்வசாதாரணம்.. கொஞ்சமும் கூச்சமின்றி பொய்யை சொல்லி ஏமாற்றும் அயோக்கியத்தனம் .. நிர்வாக குளறுபடிகள் நாளை என்ன நடக்கும் முதல்வருக்கே தெரியாது ..அதிகாரிகள் யாரும் முதல்வரை பொருட்டாகவே மதிப்பதில்லை .. தமிழகம் பேரிடரில்/பேராபத்தில் .. இவர்கள் ஏறியபடவேண்டியவர்கள் இவர்கள் கொள்கை சித்தாந்தம் எரிக்கபடவேண்டியவை .. நல்லதொரு தலைமையை நாம் தவறவிட்டதன் விளைவை அனுபவிக்கிறோம் ..மாற வேண்டும் ..
சில அரைகுறைகளின் இனம் மொழி பகை என உளறுதல் கேட்கும் ..அவையாவும் பாசிசத்தின் புதிய குரல்கள் அவைகளை புறக்கணிப்போம் ..
..
மக்கள் அவதியுறும் போதும் அருகில் நின்று காத்தருளும் கனவான்கள் ..ஒருங்கிணைவோம் வா என குரல் கொடுக்கும் தயை உள்ளம் .. அரசியல் நேர்மை அயராத உழைப்பு அனைவரையும் நேசிக்கும் பண்பு .. சிறந்த தலைமை நேர்மையான நிர்வாகம் பொறுப்புணரிச்சியோடு அணுகும் ஆற்றல் அனைவரையும் அரவணைத்து வழிநடத்து பேராளுமை இவையெல்லாம் ஒருங்கிணைந்த தலைவர் திரு.ஸ்டாலின் ..
#நாம்_பெற்ற_பேறு..
அறியணையேற்றுவோம் 
கொண்டாடுவோம் 
முட்டாள்களிடமிருந்து நாட்டை மீட்டெடுப்போம் ..
தலைவர்.ஸ்டாலின் #காலம்_தந்த_கொடை ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment