Sunday, March 29, 2020

பிரதமர் நிவாரணம்

இந்திய ஒன்றியத்தின் பிரதமரும் தமிழ்நாட்டின் முதல்வரும் நிதி கேட்கிறார்கள் 
கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க போதிய நிதி ஆதாரமில்லாததால் மக்களிடம் கையேந்துகிறார்கள் வல்லரசாக்குவேன் என்ற பிரதமரும் அவரின் தலையாட்டியும் ..
..
நாட்டின் பிரதமர் இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனாவை கட்டுபடுத்துவது பெரும் சவாலாக உள்ளது என்கிறார் .. இதைவிட அதிக மக்களை கொண்ட சீனா சிறப்பாக திட்டமிட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது .. ஆனால் பிரதமரின் அறிவிப்பை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் திருச்சியிலும் உ.பி.யிலும் இன்னும் பிற பகுதிகளிலும் சாமி ஊர்வலங்களும் பெரும்கூட்டத்தோடு சாமிசிலை கொண்டு கொண்டாடி தீர்க்கிறார்கள் .. ஆனால் அதெல்லாம் காவல்துறைக்கு கண்ணில் படாது .. சில மதம் தலைக்கேறிய அறிவிலிகள் 
அசுரவதம் நடப்பதாக சொல்லி தங்களை தாங்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள் .. கொத்துகொத்தாய் மரணங்கள் உலகமே செய்வதறியாது வழிபாட்டுதலங்களை மூடிவிட்டு தெய்வங்கள்..? ஓய்வில் .. 
தொடர்ந்து ஓய்வின்றி மருத்துவர்களும் செவிலியர்களும் மக்களை காக்க போராடிவருகிறார்கள் .. இங்கே மடையர்கள் பல்லக்கு தூக்கி சாவை வரவேற்கிறார்கள்..
..
திடீரென இரவு உத்தரவு போடுகிறார் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு எப்படி சென்று சேர்வார்களென முன்யோசனை இல்லாமல் பிழைக்க தினக்கூலிக்காய் சென்றவர்கள் பெரும்கூட்டமாய் நெடும்பயணம் மேற்கொள்கிறார்கள் டெல்லியிலிருந்து பீகாரை நோக்கி .. இந்த அரசிடம் எந்த திட்டமிடலும் இல்லை .. திடீரென ஓரிரவில் பணமதிப்பிழப்பு செய்த மகான் திடீர் ஞானோதயம் வந்து உலகமெங்கும் இரண்டுமாதங்களாகவே ஆட்டுவிக்கும் கொரோனாவைபற்றி அறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் வந்தும்  குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதிஸ் கவனம் செலுத்தி.. கடைசியில் வேறு வழியின்றி கைமீறிவிடும் என்ற நிலை வந்தவுடன் தொலைக்காட்சியில் தோன்றி நள்ளிரவு முதல் ஊரடங்கு 21 நாட்கள் என்றார் ..மக்கள் அவதியில்..
..
இந்திய பொருளாதாரம் கடும்வீழ்ச்சியில் என அறிந்தும்,  தொடர்ந்து வல்லுநர்களால் 
எச்சரிக்கபட்டும் இங்கே மதம் ஆட்சி செய்தது .. வரலாறு படித்தவர்கள் நிதித்துறையை கையாண்டதில்  கடைசியில் தெருவில் நிறுத்தியிருக்கிறார்கள்.. வாராகடனையும், சில கொழுத்த தொழிலதிபர்களுக்கு பல்லாயிரம் கோடிகளும், தள்ளுபடியும் செய்துவிட்டு இன்று மக்களிடம் நிதி கேட்கிறது மத்திய அரசு .. இந்திய குடிமக்கள் என நம்மால் நிரூபிக்க முடியாமல் போனாலும் சரி .. உதவியென கேட்டுநிற்கும் அரசிற்கு நம்மால் இயன்றதை வழங்குவோம்
..
தருவோம் நம் மக்களின்,உயிர்காக்க 
பிரதமரின் நிவாரண நிதிக்கு .. மக்களின் உயிர் முக்கியம் .. தலையில் சுமையோடு  கைக்குழந்தைகளையும் அழைத்து கொண்டு சாலை வழியாக தொடர்ந்து பயணித்து உயிர் பயத்தோடு செல்லும் எம் சகோதரனை /சகோதரியை காக்க ..
பசியில் தெருவில் உறங்கும் முகவரியில்லாத பெருமக்களை காக்க .. செய்வதறியாது யாரிடமும் யாசகம் கேட்க அஞ்சும் எம் எளிய மக்களை காக்க ..மதங்களும் சாதிகளும் கடவுளும் கைவிட்டாலும் மனிதனின் பெரும் முயற்சி பெரும்சாவில் இருந்து காக்கும் மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையில்.. ஒன்றுபட்டு இந்தியாவில் கொரோனாவை அழித்தொழிக்க அரசோடு இணைவோம் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment