Sunday, February 16, 2020

பூம்பூம் மாடு

#காயத்தை_குருதியைக்_கொண்டு_கழுவாதே என்றார் மௌலானா ரூமி அவர்கள் ..
..
பூம்பூம் மாடு..
இன்றைய சூழலில் CAA தேவை என்கிறது
வாணியம்பாடி தந்த பூம்பூம்மாடு ..
சில நேரங்களில் சில மனிதர்கள் தங்களின் நிலைபாட்டில் உறுதியோடு நிற்பதில்லை யாரென்றே அதுவரை அறியாதவர் ஒருநாள் கடைவீதிகளில் "ரௌடிபேபியாக" வலம் வந்து கடைகளை அடித்து உடைத்து ஜெயலலிதாவிடம் "நல்லபெயர்" எடுத்து யாரிவர் என கேட்கவைத்து இவ்வளவு துணிவா என கட்சியில் சீட் கிடைத்து .. வென்று அமைச்சரானார் .. தமிழக அரசியலில் இதெல்லாம் காண வேண்டியிருந்தது 
நல்ல முன்மாதிரிகளை தொலைத்துவிட்டு சில்லறைக்கு வாக்கை விற்றதன் விளைவின் எச்சம் இது .. கழிவுகள் கரைகள் நம்மை ஆக்கரமித்து சுவர் எழுப்பி ஜனநாயகத்தின் முகத்தை கோரமாக்கியது ..
..
இவரென்றில்லை நிறைய பேர் பூம்பூம்மாடுகள் தான் ..  தன் எஜமானின் வாசிப்பிற்கு தலையாட்டி நன்றி காட்டி அவனை பிழைக்க வைக்கும் மாடுகள் .. அலங்கரித்து நிற்க வைத்து கயிற்றை இழுத்தால் தலையாட்டும் பதவியெனும் அலங்காரம் பேசவைக்கிறது ஆம் தலையாட்டவைக்கிறது .. 
CAA வை பற்றி புரிதல் இல்லாமல் இல்லை ஆனால் பசிக்குமே என்ன செய்ய .. 
வெகுமக்கள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள் அவர்களின் அச்சம் நியாயமானதென பேச தொடங்கியிருக்கிறார்கள் இஸ்லாமியர் தவிர்த்து என்பதில் தான் அவர்களின் கவலை தெரிகிறது.. பார்பன சமூத்தவர்களில் கூட இவர்களின் கவலையை உணர்ந்து கதைக்கிறவர்கள் உண்டு சுமந்த்.ராமன்
இஸ்லாமிய சமூகத்தினர் நடத்துகிற இந்த போராட்டம் அவர்களின் வேதனையின் வெளிப்பாடாகவே இந்துக்கள் பார்க்கிறார்கள் . தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் மட்டும் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் போராடி வருகின்றனர். இந்த CAA NCR NPR அனைத்து  இந்தியர்களுக்கானதாகவே பார்க்க வேண்டிய ஒன்றே அல்லாமல் முஸ்லிம்களுக்கு மட்டுமானது அல்ல என்பதை நாம் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.... 
..
இந்தியன் எக்ஸ்பிரஸ் 
அமைதியாக தங்கள் தெருவுக்குள் போராடி கொண்டு இருந்த பொதுமக்கள் எந்த விதத்திலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை. ஆனால் காவல்துறை அங்கு சென்று கலைந்து செல்லுமாறு அத்துமீறிய போதுதான் பிரச்சினை ஏற்பட்டது..தற்போதைய நிலையில் இது மற்றொரு ஷாஹீன் பாங்காக உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஷிப்ட் முறையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு போராட முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது என சொல்கிறது .. உண்மையும் கூட தங்களின் இருப்பின் மீது அச்சம் வரும் போது இழப்பதற்கு ஒன்றுமில்லை உயிரைதவிர என்கிற போது இவைதான் நடக்கும்..
..
உச்சநீதிமன்ற நீதிபதி உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் "கருத்து வேறுபாட்டை தேசிய விரோதமாக கருத கூடாதென சொல்கிறார் போராடுவது கருத்து வேறுபாட்டை சொல்வதும் அவர்கள் உரிமை என்கிறார் ..
ஆனால் நிலோபர் கபில் CAA தேவை என கருத்திட்டு தன் பதவியை காப்பாற்றி கொள்ள பெரும் முயற்சியெடுக்கிறார் ..
காயத்தை குருதியை கொண்டு கழுவ முயற்சிக்கிறார் 
பாவம் ..வேறென்ன சொல்ல..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment