Wednesday, April 15, 2020

ஸ்டாலின்

பிரதமருக்கு சில கேள்விகள்..? திரு.ஸ்டாலின் .. ஆனீலி
அதற்கான பதிலை இதுவரை பிரதமர் அலுவலகமோ பாஜகவோ தரவில்லை ..
எழு அறிவுரைகளை சொன்னதோடு முடிந்து போனதா ..அவர்கள் எதிர்பார்பது அறிவுரைகளை அல்ல பேருதவிகளை உணவு பணம் பொருளுதவிகள் இவைகளுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை மத்திய பட்ஜெட்டில் இருக்கும் 30 லட்சம் கோடியில் 65,000 கோடியை மக்களுக்கு 5000 வீதம் பகிர்ந்தளிக்கலாம் என்ற ப.சிதம்பரத்தின் ஆலோசனை பிரதமருக்கு புரியவில்லையா.. உயிர்காக்கும் கருவிகளை மாநிலங்களுக்கு எப்போது தரபோகிறீர்..
என அடுக்கடுக்காய் கேள்வியை எழுப்பி 
அறிவுரையை அல்ல ஆறுதல் உரையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார்..
#தளபதி_ஸ்டாலின் கேள்விகளில் அக்கறையும் 
இந்த அரசின் கையாலாகாதனமும் வெளிச்சம் போட்டுகாட்டுகிறது ..    
..
ஜார்கண்டிலிருந்து 1500பேர் 28 பேருந்துகளில் குஜராத்திற்கு செல்கிறார் .. மும்பை பந்த்ராவில் ஆயிரம்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல குவிந்தனர் .. ஆனால் மோடி நம்மை பார்த்து உலகம் வியக்கிறதென வழக்கம் போல் "பொய்" பேசுகிறார் .. சரியான திட்டமிடல் இல்லாமல் திடீரென ஒருநாள் ஊடரங்கென அறிவித்து அதை 21 நாட்கள் என்றும் பிறகு நீட்டி மே 3 வரை என்றால் அன்றாடம்காய்ச்சிகள் வருவாய் இன்றி பெருநகரங்களில் தவிப்பது எப்படி முடியும் இதற்கெல்லாம் என்ன நிவாரணத்தை வைத்திருக்கிறார் பிரதமர் .. வாய்ச்சொல்லில் எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம் இல்லையென்றால் காங்கிரஸ் ஆட்சியில் என திசை திருப்பலாம் கொரோனை தொற்றே முஸ்லிம்களால் தான் என "சாயம்" பூசலாம் இதை தவிர ராமாயணமும் மகாபாரதமும் பார்த்துக்கொண்டிருந்தால் பசி மறந்து போகும் .. 
எதாவது நல திட்டங்கள் இந்த அரசு செய்ததுண்டா .. தொலைநோக்கு பார்வையில் கடந்த ஐந்து வருடங்களில் செய்ததுண்டா ..? திலகருக்கு சிலை வைக்க தெரிந்தவர்களுக்கு மருத்துவம் கல்வி கட்டமைப்பை இன்னும் பலப்படுத்த யோசனையாவது உதித்ததுண்டா ..?  இவர்கள் ஆளும் மாநிலங்களில்  மருத்துவ கட்டமைப்பு Clinical structure பரிதாபகரம் என்பதை மறைக்கமுடியாமல் திணறுவதையும் திராவிட இயக்கம் குறிப்பாக திமுக ஆட்சியில் கலைஞரின் தொலைநோக்கு மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரியென இந்தியாவிற்கே வழிகாட்டி விடிவெள்ளியாக திகழ்கிறதே இதையெல்லாம் கண்டு படிக்கவேண்டாமா..
..
மதமும் சாதியும் கலவரமும் மட்டுமே சிந்தனையில் இருந்தால் இந்தியாவை வளர்ச்சிபாதையில் எப்படி கொண்டுசெல்லமுடியும்.. புராணம் சமயம் நம்பிக்கை என்பதெல்லாம் தனிநபர் நம்பிக்கை அதை வைத்து அரசியல் செய்வதும் அதிகாரம் செய்வதும் நாட்டை முன்னேற்றத்திற்கு எடுத்துச்செல்லாது ..கடவுள் நம்பிக்கையற்ற #கலைஞர் அவர்களின் #கருணைதான் இன்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலையை மெச்சபடுத்திக்கொண்டிருக்கிறது .. எல்லா மதங்களும் தங்கள் கோட்பாடிலிருந்து விலகி வரதொடங்கியிருக்கிறது.. இதுவரை கட்டிசமைத்த முடநாற்றங்களை மெல்ல தூக்கியெறிய தொடங்கியிருப்பது புதியதொரு உலகம் சமைக்க உதவும் ..இயற்கையின் பேரழகு புதிய தொடக்கத்தை குறிக்கலாம் ..
சமயம் சடங்கு வேதம் வழிபாடெல்லாம்  மனஅழுத்தத்தை வேறுபாட்டை விதைக்கவே பயன்பட்டதே தவிர மனிதநேயத்தை மக்களிடம் பேரன்பை ஒற்றுமையை .. மனிதில் மனிதத்தை விதைக்க மறந்து போனது ..
..
இந்த மத்திய மாநில அரசுகளை இயக்க 
விழிப்புணர்வை தந்திட ..எச்சரிக்கை செய்ய .. செயல்பட வைக்க ..திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவன் அயராமல் இயங்கிக்கொண்டிருப்பது ஒருவித ஆசுவாசம்..நிம்மதி..
ஒன்றுபட்டு பெருந்தொற்றை வென்றுகாட்டுவோம் .. எளியவர்க்கும் வறியவருக்கும் நம்மால் ஆனதை தந்துதவி மனிதம் வளர்ப்போம் ஆட்சியும் அரசும் ஆள்வோரும் அலட்சியபடுத்தினாலும், நாம் மீண்டுவருவோம் .. 
#புதியவார்ப்புகளாய்  
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment