வேறு வழியில்லை அந்த உச்ச நடிகருக்கு
66 லட்சம் அபராதத்தை கட்டி அவரை விடுவித்ததின் பின்னில் வருமானவரித்துறை மூலம் மிரட்டி CAA விற்கு ஆதரவாக பேசவேண்டும் என்ற நிபந்தனையோடு பாஜக தப்பிக்கவிட்டிருக்கிறது ..விஜய் ரெய்டுக்கு பின்னிலும் ரஜினி இருப்பதாகவும் Front Line இணை ஆசிரியர் ஆர்.ராதா கிருஷ்ணன் சொல்கிறார் ரஜினியை வைத்து இனி பயனில்லை என்றவுடன் விஜய் மிரட்டபடுவதாகவும் சொல்லபடுகிறது ..
..
நாய் வேசம் போட்டவன் குலைக்கதான் வேண்டும்
பாஜகவின் பிடியில் ரஜினி மிரண்டுகிடப்பது அவரின் பேச்சு உணர்த்துகிறது .. மாணவர்கள் போராட்டத்தை சிறுமைபடுத்த முயல்கிறார் மதபோதகர்கள் அவர்களை தூண்டிவிடுவதாகவும் அதை புரிந்து நடந்துக்கொள்ளவேண்டுமென பாஜகவின் குரலை பதிவு செய்து தான் முழு சங்கியாகவே மாறிவிட்டதை சொல்கிறது .. இன்னமும் அரசியலை படிக்கவில்லை மக்களை திடீரென திசைதிருப்பிவிடலாமென சில சொல்வதை நம்பிக்கொண்டு இடையிடையே வந்து பேட்டி தந்து அதை கூட முழுமையாக்காமல் ஓடியொழிகிற இவர் மக்களை காக்க வருவாராம் ..
..
தமிழ்நாடு விழுப்புணர்வு கொண்ட மாநிலம் வடக்கில் காவல் துறை அதிகாரியை கூட ஷூவை கழட்டவைத்தாலும் அது செய்தியாக கூட வராது ஆனால் இங்கே சிறுவனை அழைத்து செருப்பை கழட்டச்சொன்னால் அடிவிழும் வன்கொடுமை வழக்குவரும் .. சுயமரியாதையை தேசமிது இங்கே சங்கிகளுக்கு இடமில்லையென ஒவ்வொருமுறையும் தமிழ் தேசம் சொல்லிக்கொண்டே இருக்கிறது .. எத்தனை பித்தலாட்டங்கள் செய்தாலும் இங்கே பருப்பு வேகாது .. ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நின்று நிதானமாக பதில் சொல்ல வக்கில்லாதவர் சுயபுத்தியற்று சொல்லிக்கொடுத்ததை வாந்தியெடுத்துவிட்டு ஓட்டம் பிடிக்கிறவர் ..
முஸ்லிம்களுக்கு பிரச்சனை வந்தால் முதல் ஆளாய் நிற்பாராம் ..உ.பியிலும் டெல்லியிலும் குஜராத்திலும் முஸ்லிம் வேட்டையாடியபோது எங்கு சென்றார் .. கமலை கூட சிறந்த நடிகர் என காலம் பேசும் ஆனால் ரஜினியின் வீழ்ச்சி மிக பரிதாபமாகவே இருக்கும் .. அரசியல் அறிந்து பேசவேண்டும் .. ஆர்எஸ்எஸ் குரலை உயர்த்துவதற்கு ஒரு அடங்கிய அடிமை கிடைத்திருக்கிறார் .. போராட்டம் செய்வது மாற்றுகருத்தை சொல்வதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமை .. இதெல்லாம் கூடாதென்பது பாசிசத்தின் குரல் .. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு படிக்கபோக சொல்கிறது அதேபோல் மாணவர்கள் தன்படத்தை பார்க்க வீட்டில் பணத்தை கேட்டும் கேட்காமலும் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்து தரும் பணத்தில் கொழித்துக்கொண்டு புத்தி சொல்வதுதான் கொடுமை இனி தன் படத்தை மாணவர்கள் பார்க்காதீர்கள் சொல்லவேண்டும் அதுதான் சரி
ஒருமுறை பம்பாய் (மும்பை) சென்றால் மதராஸி என்கிறான் கர்நாடகாவிலே மராட்டி என்றும் தமிழ்நாட்டில் கன்னடன் என்றும் சொல்கிறார்கள் நான் எங்கே போறது ..எங்கேயோ கேட்ட குரலாய் இருக்கிறதா .. ரஜினி சொன்னது தான் இன்று பாஜகவின் பைத்தியக்காரத்தனத்திற்கு காவடி தூக்குகிறார் ..
..
No comments:
Post a Comment