இந்து அறநிலையத்துறையிடமிருந்து 10 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு .. கல்யாண மண்டபங்களை கொரோனாவிற்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவிட்டதும் ராகவேந்திரா மண்டபம் பாரமரிப்பு பணியில் இருப்பதாக அறிக்கை.. காங்கிரஸ் கட்சி தலைவர் தலைவர் திருமதி.சோனியா புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ரயிலில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்றவுடன் மத்திய அரசு இறங்கி வந்து இலவசமாக செல்ல அனுமதி.
இவ்வளவு தான் இவர்கள் நாட்டுபற்று தேசநலன் ..
..
திருப்பதி கோயில் நிர்வாகம்.ஒப்பந்த பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது இடர்காலங்களில் பணியில் இருந்து விலக்குவதை ஏழுமலையானே பொறுப்பானா..?.. அறநிலையத்துறையிலிருந்து 10கோடியை நிவாரணத்திற்கு கொடுப்பதால் என்ன குறைந்துவிட போகிறது .. முதலில் எதிர்த்து இந்துமுன்னணியும் கிச்சா அய்யரும் குரல் கொடுக்க தினமலர் கோபால் ஜி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர .. விரைந்து விசாரணைக்கு வந்தது உடனே தமிழக அரசு 47 கோயில்களிலிருந்து 10 கோடியை நிவாரணத்திற்கு கேட்டதை திரும்பபெறுவதாக தமிழக மனுதாக்கல் செய்ய வழக்கு முடித்துவைக்கபட்டது ..
..
தேசத்தின் நவீன பாதுகாவலன் ரசினியின் மண்டபம் பராமத்து பணியில் இருப்பதால் அடுத்தபடத்தில் மக்களை காப்பாற்றி ராகவேந்திராவில் தஞ்சமடைய செய்து உணவும் பொருளும் வழங்குவதாக காட்சி அமைக்கபடும் ரசிகமணிகள் கைதட்டுங்கள் .. இடர்காலங்களில் கூட உதவ முன்வரவில்லை இவர்களெல்லாம் தமிழர்கள்/தமிழக நலன் காப்பவர்களென வரிந்து கட்டி நடுநிலையாளர்கள் வக்காலத்து வாங்குவார்கள் .. அரசு கேட்பதற்கு முன்பு அறிவாயலத்தில் கலைஞர் அரங்கை பயன்படுத்திக்கொள்ளலாம் என திமுக நகராட்சிக்கு கடிதம் எழுதியதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும் ..
..
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உண்ண உணவின்றி செல்ல பணமின்றியும் தவித்து நிற்கும் வேலையில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு /இடத்திற்கு செல்ல கட்டண வசூல் செய்வதெல்லாம் பெரும் கொடூரமனம் படைத்த ஆட்சியாளர்களால் தான் முடியும் .. பிரதமர்நிதி PM CARE என பெருந்தனக்காரர்கள்
பெரும் முதலாளிகள் நடிகர்கள் தொடங்கி முடிந்ததை அனுப்பிவைத்த சாமானியர்கள் ஏராளம் .. இவையெல்லாம் என்ன ஆனது .. பாஜகவின் கணக்கிற்கு சென்றுவிட்டது அரசின் தணிக்கைக்கு வராத பணம் கள்ளபணமாய் தானே கணக்கெடுக்க வேண்டும் ...தனியார் தொண்டு நிறுவனம் கூட வருமான கணக்கை காட்டவேண்டும் ஆனால் பிரதமர் நிதி குறித்து கேட்டால் பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் இல்லை ..
கூலித்தொழிலாளர்கள் குடும்பத்தோடு பிழைக்கவந்தவர்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி வந்தவர்கள் திரும்பி செல்ல பணமின்றி தவிக்கும் போது கருணை உள்ளத்தோடு நடந்துக்கொள்ள வேண்டிய அரசு அதை செய்ய மறுத்ததும் .. "தயா" உள்ளத்தோடு காங்கிரஸ் அந்த செலவை ஏற்கும் என அறிவித்தவுடன் விழித்தெழிந்து மத்திய அரசு 85% ம் மாநில அரசு 15% செலுத்துமென பிரதமர் அறிவிக்கிறார் .. அரசை இயக்க எதிர்க்கட்சி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் .. ஜனநாயகத்தில் மிருகபலத்தோடு ஆள்வோருக்கு அதிகாரத்தை அளிக்க கூடாதென்று இப்போது புரிந்திருக்கும் ..
இங்கே தமிழகத்திலும் அம்மா உணவகத்தில் உணவு இலவசமென அறிவித்துவிட்டு இப்போது கட்டணம் வசூலிக்கிறார்கள் ..
..
#ஒருங்கிணைவோம்_வா திட்டத்தை இன்னும் முனைப்பாக எடுக்க வேண்டும் தன்னார்வர்களை அழைத்து பேசி அவர்களையும் இணைத்து செயல்படுவதென முடிவு நல்ல நிர்வாகத்தின் தரும் .. தமிழகம் நல்ல எதிர்க்கட்சியை கொண்டிருக்கிறது ஓயாது உழைக்கும் ஒப்பற்ற தலைவராக தளபதி .. மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார் அடிக்கடி அரசு செயல்பாடுகளை மாற்றி, என்ன திட்டம் அவர்களிடத்தில் இருக்கிறதென அவர்களுக்கு தெரியாத சூழலில் தான் எடப்பாடி அரசு முட்டாள்கள் கையில் நாடு சிக்கி தவிக்கிறது
..
#அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.. என்றான் வள்ளுவன்
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்..
மக்கள் பசி போக்க திமுக செயல்படுபவதை பாராட்டுவதோடு உடன்,ஒத்துழைப்போம் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment