தன்னார்வர்கள் உதவிகள் வழங்க தடையில்லை.. நேற்று தடை செய்துவிட்டு திமுக
வழக்கு பதிவு செய்தவுடன் தடையில்லையென பின்மாறுகிறது .. சுயம் இல்லை தானாக முன்கூட்டியே திட்டமிடும் திறன் இல்லை ..பிறமாநில அரசுகளைபோல தானாக முடிவெடுக்கு அதிகாரமில்லை .. எல்லாவற்றுக்கும் மத்திய அரசின் கட்டளைக்கு காத்திருக்கும் அவலம் .. சுயமரியாதையை, மாநிலகளுக்கு அதிகாரத்தை வழங்கிட வேண்டும் என்ற திராவிட இயக்கத்தில் மூல கொள்கையான "சுயாட்சியை" தூக்கி குப்பையில் போட்டுவிட்டு பதவி சுகத்திற்காக பரத்தையை போல மானங்கெட்டு நிற்பது படுகேவலம் ..
..
28-04-74 அன்று மயிலை பொதுக்கூட்டத்தில் #பேரருளாளன்_கலைஞர் பேசியபோது
“நீ மாநில சுயாட்சி கேட்கிறாய் ஆகவே உன் அரசாங்கத்தைக் கலைக்கிறேன்” என்று டெல்லியிலிருந்து உத்தரவு வருமேயானால் , அதைவிட என்னுடைய வாழ்க்கையிலே "புனிதமான வரலாற்று நிகழ்வு" வேறு எதுவுமே இருக்க முடியாது” .. பத்தாண்டுகளுக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து பாருங்கள் .. இந்த சுயாட்சி அதிகாரத்தை எல்லா மாநிலங்களுக்கும் தான் கேட்கிறோம் என்றார்
இன்று கல்வி, மொழி, கலை,நிதி, என எல்லாவற்றிலும் சுயத்தை இழந்து நிற்கிறோம்,
இதற்கு நாமும் ஒரு காரணம் என்றே சொல்லவேண்டும் .. நேர்மை பேசி மக்கள் ஆதரவோடு தான் இந்த ஆட்சியை அகற்ற வேண்டுமென காத்திருந்தது பேராபத்தை தந்திருக்கிறது .. நேர்மையாக ஆட்சிக்கு வராதவர்களை அதே சூழ்ச்சியில் வீழ்த்துவது கூட "அறம்"என்று அறியாமல் போனது அபத்தமாகிவிட்டது .. மக்களுக்கு பெருந்துயரை தரும் ஆட்சியை தொடரவிட்டதும் கூட நம் மீது பழியாகிப்போனது .. வரலாற்று பிழை ..
..
மத்திய மாநில அரசுகள் இது போன்ற பேரிடர் காலங்களில் கூட மத அரசியலை முன்னெடுப்பது கண்டிக்கதக்கது .. ஒரு முறை அமித்ஷா எங்களால் ஒரு விடயத்தை வைரலாக்க முடியும் அதற்கான IT கட்டமைப்பு எங்களிடம் உண்டு என்றார் அதைதான் மிக கச்சிதமாக செய்துவருகிறது ..கொரோனா பாதித்தவர்களை நோயாளியாக பார்க்காமல் மதம் சாயம் பூசி அதை சுகாதாரத்துறை செயலரை கொண்டே பரப்பவதுதான் ஹைலைட் .. இதெல்லாம் வேறெந்த மாநிலத்திலும் நடக்கவில்லை ஆர்எஸ்எஸை கௌண்டு மாநகராட்சி உதவிகளை வழங்குவதெல்லாம் இங்குதான் நடக்கிறது ..
தன்னார்வு நிறுவனங்கள் உதவிகரம் நீட்டுவது
ஆளும்தரப்பை அவ்வளவாக பாதிக்காது ஆனால் திமுகவின் செயல்பாடுகள் .. விரைந்து நிவாரணபொருட்களை அதிலும் ஸ்டிக்கர் ஒட்டாமல் வழங்குவது அதிமுகவை அரசை கதிகலங்க செய்திருக்கிறது .. அதனால் தான் தடை என அறிவித்து பின் வழக்கென்றவுடன் பின்மாறியது ..
..
திமுக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது
ஆரம்பத்திலிருந்தே முககவசம் கையுறை போதிய அளவில்லை என்ற எச்சரிக்கை செய்ததும் ,தனித்திருக்கும் அவசியத்தை சட்டமன்றத்தில் எடுத்துரைத்ததும், வரும் முன்காப்பதே சாலசிறந்ததென்ற அறிவுரை .. தமிழக அரசு செயல்படவில்லையென்றால் செயல்பட வைக்கும் என்ற தளபதியின் எச்சரிக்கையையும் பலன் தந்தது திமுக இணையத்தள அணி தன்னார்வு தொண்டர்கள் கட்சிகள் உதவுவதை தடுக்க நினைத்ததை அரசின் கையாலாகாத செயலை மக்களிடம் உடன் கொண்டு சேர்த்ததும் அரசு இறங்கிவரவேண்டிருந்தது .. திமுகவின் செயல்பாடு மெச்சதகுந்தது .. அது தொடரவேண்டும் .. இந்த கேடுகெட்ட பாஜக பினாமிகளை அடிமைகளை மக்களிடத்திலிருந்தே/ அதிகாரத்திலிந்து கீழிறக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.. அடிமைத்தனம் ஒழிந்து அறநெறியோடு கூடிய சுயாட்சி மலரந்திடும் வரை போராடிக்கொண்டே இருப்போம்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment