வழிபாட்டுத்தளங்களை திறக்க வேண்டுமென ஜலீல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் .. வழிபாட்டுதளங்கள் என்பது கோயில் மசூதி தேவாலயம் அடங்கியது தான் ஆனால் வழக்கை தொடர்ந்திருப்பவர் ஜலீல் .. கேட்கவே வேண்டாம் ஏற்கனவே தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் உலகெங்கும் கொரோனா தாக்கம் வெகுவாக பரவி வரும் வேளையில் தப்லிக்ஜமாத் கூட்டத்தை நடத்தி .. அதை நாகபட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அன்சாரி ஜாவஹிருல்லா போன்றவர்கள் தவிர்த்திருக்கலாம் என பேசினார்கள் .. இவர்களால் தான் பரவியதென இந்துத்துத்வாவும் ஊடகங்களும் வெகு விரைாக பரப்பி அண்ணன் தம்பி மாமன் மச்சானை போல வாழ்ந்தவர்கள் தெருவிற்குள் வராதவேறு தடுப்பக்களை எல்லாம் ஏற்படுத்தி மனதில் மெல்லிய பிரிவை ஏற்படுத்தினார்கள் .. இன்னும் 13 நாட்களே பெருநாளைக்கு மிஞ்சி உள்ளநிலையில் நீதிமன்றம் இருதினங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டிருக்கிறது .. ஏற்கனவே இஸ்லாமிய இளைஞர்கள் சில அமைப்புகளால் சரியான பாதையிலிருந்து வழிமாற்றம் செய்யபட்டு உணர்ச்சி பிழம்பில் திரிகிறார்கள் .. வெள்ளிக்கிழமை ஜூம்மா வை தெரியாமல் தொழ முற்பட காவல் துறை வந்து தடியடியெல்லாம் நடந்தது .. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருக்க நிலையில் ..அரசாள்வோரின் திறமையற்ற நிர்வாகத்தால் எண்ணிக்கை அதிகரிக்கிற சூழலில் பெருநாள் தொழுகையை காட்டி வழக்கு தொடர்ந்திருப்பது
உண்மையில் இவர்களின் நோக்கம் என்ன என்பதை கேள்விக்குறியாக்கியிருக்கிறது ..
..
உலக இஸ்லாமிய நாடுகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே தொழுதுக்கொள்ளுங்களென அறிவுறுத்தி பள்ளிவாசல்கள் காலவரையின்றி மூடபட்டு
கொரோனைவை விரட்ட எல்லா கொண்டாட்டங்களையும் விலக்கி/தவிர்த்து செயல்படும் போது தமிழகம் மட்டும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு காப்பிரைட் எடுத்ததை போல செயல்படுவது அறிவீனம்
ஏற்கனவே இஸ்லாமியர்கள் மீது சட்டென்று அவதூறை பரப்ப தயாராக இருக்கும் ஊடகங்கள் சங் அமைப்புகள் இதை கொண்டாடுவார்கள் .. வழிபாடு என்பது அவரவர் விருப்பம் அதை பிற சமூக மக்களுக்கும் சொந்த சமூகத்திற்கு இடைஞ்சல் செய்து நடத்துவதை தவிர்க்கவேண்டும் பேரிடர் காலங்களில் நோக்கம் நோயை விரட்டுவதாக இருக்கவேண்டும் ..
..
மனுவில் வழிபாட்டுதளங்கள் என்கிற போது எல்லா மதத்திற்கும் பேசுவதை போல தெரியும் ஆனால் ஊடகங்கள் அதை ரம்ஜான் பெருநாளுக்காக தொடரபட்டதாக பேசும்.. உண்மையில் அமைதியாக இந்த ரமலானை கடந்து போவதுதான் அறிவுடை செயல் . வரும் 15 ,16 தேதிகளில் தமிழக அரசு முடிவெடுக்குமென நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது எதுவாகினும் தவிர்த்து கொள்ளல் என்பதே சமூதாயத்திற்கும் நாட்டுக்கும் செய்கிற நல்லவிடயம் .. இது தேவையில்லாத வழக்கு .. உலகெங்கும் தெய்வங்களின் ஆலயங்கள் மூடபட்டு மருத்துவத்தின் துணையோடு மக்கள் போராடி வென்று வரும் வேளையில் சில சமூக புல்லுறுவிகள் இக்கட்டான சூழலை உருவாக்குகிறார்கள் உண்மையில் இவர்களுக்கு அக்கறையெல்லாம் இல்லை ..
பெயரெடுப்பதற்கும் வீம்புக்கும் செய்கிறார்கள் ..
ஏற்கனவே தமிழக உலமா சபை இந்த வருட தராவிஹ் தொழுகை பெருநாள் தொழுகையெல்லாம் தவிர்க்க சொல்லியிருக்கும் போது சில சமூகவிரோதிகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை சமுதாயம் கண்டிக்க வேண்டும்
..
No comments:
Post a Comment