வெளிநாடுகளிலிருந்து 30 லட்சம் இந்தியர்கள்
நாடு திரும்ப தூதரகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் அவர்களை மோடி திரும்ப அழைத்து வருகிறாரென பத்திரிக்கைகள்
மோடியை ரட்சகன் ரேஞ்ச்க்கு புகழ்கிறது இதெல்லாம் நாம் பார்த்ததுதான் ..
கொரோனா தொற்றின் தாக்கம் பல நாடுகளில் வேலைவாய்ப்பை வெகுவாக பாதித்ததும் நாடு விட தயாராக இந்திய சமூகம் .. இவர்களின் பெரும்பாலோனார் சுற்றுலா விசாவில் வந்தவர்கள் பணிநீக்கம் செய்யபட்டவர்கள் விசா காலாவதியானவர்கள் பொருளாதார நெருக்கடியில் குடும்பத்தை நாட்டிற்கு அனுப்புகிறவர்கள் .. இவர்களை இந்திய அரசு சொந்த செலவில் அழைத்துவர வில்லை மாறாக விமான செலவை அவர்களே ஏற்க வேண்டும் அதோடு தாயகம் வந்தவுடன் அவர்களின் பரிசோதனை மற்றும் தனிமைபடுத்துதல் செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் .. இதுதான் இவர்கள் ஆட்சியின் லட்சணம் ..
..
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இதுபோன்ற பேரிடர் காலங்களில் உகாண்டா வியட்நாம் கம்போடியா குவைத் போன்ற நாடுகளிலிருந்து தம் மக்களை அழைத்துவந்த போது அப்போதைய அரசு பெருமை பீத்திக்கொள்ளவில்லை மாறாக எந்த தொகையும் பெறாமல் அழைத்துவந்து தங்கள் இருப்பிடம் செல்லும் வரை ரயில் பயணத்தையும் ஏற்பாடு செய்தது ஆனால் மக்கள் சொந்த செலவில் வருவதை கூட "காப்பாளன் மோடி" என கதைவிடுகிறார்கள் ..
இவர்கள் லட்சணம் இப்போதுதான் நாட்டுமக்கள் அறிய தொடங்கியிருக்கிறார்கள் நடந்தே தங்கள் ஊருக்கு 600, 700 கிலோமீட்டர் குழந்தை குட்டிகளோடு சாப்பிட கூட வழியில்லை சொந்த மண்ணை பார்த்துவிட வேண்டுமென நடந்தே வருகிறார்கள் இன்று தரை வழி மார்க்கமாக சென்றால் இடையூறுகளை அதிகாரிகள் செய்வார்களென ரயில் பாதையில் வந்தவர்கள் சிதறி கிடக்கிறார்கள் கேட்கவே நடுங்குகிறது .. இவர்களை எல்லாம் சொந்த மாநிலத்தில்
கல்வியை வேலைவாய்ப்பை தராமல் மதவெறியையும் அடிமைத்தனத்தையும் ஊட்டி இன்று அல்லல்பட காரணமானவர்கள் .. குஜராத்தை வியக்கதக்க மாற்றம் செய்திருப்பதாக பொய்கதை பேசி நாட்டை/மாநிலத்தை குடிடிசுவராக்கி வைத்திருக்கிறார் இவரை தான் இந்த ஊடகங்கள் வானளாவி புகழ்ந்தன ..
..
நாடெங்கும் அபயகுரல்கள் மெல்லியதாய் கூட ஆள்பவர்கள் காதில் விழவில்லை .. புலம்பெயர் மக்களை கூட காசு கொடுத்து ரயில் பயணம் செய்ய சொன்னவர்கள் .. காங்கிரஸ் தலைவர்
சோனியா அவர்கள் வீடு திரும்ப ஆகும்செலவை காங்கிரஸ் ஏற்கும் என்றவுடன்
மத்திய மாநில அரசு ஏற்குமென்றார்கள் ..
மதுக்கடைகளை திறந்து மக்களை மகிழ்விக்கிறார்கள் இனி எவனும் கொரோனாவால் செத்தான் என சொல்ல கூடாது .. கர்நாடகம் ₹45 கோடியா தமிழகம் ₹150கோடி வசூல் .. நீண்ட வரிசை சரக்குகளை பள்ளிகூடங்களில் வைத்து விநியோகம்.. வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு அப்பன் குடிக்க போனான் .. அம்மாவும் மகளும் தீக்குளித்தார்கள் .. நல்லவேளை கொரோனா உயிரிழப்பில்லை .. நாம் எங்கே போகிறோம் நம் ஆட்சியாளர்கள் அதிகார வெறிப்பிடித்தவர்கள் நாட்டை சூறையாடுகிறார்கள் .. சொல்லமுடியாமல் மக்கள் துயரத்தில் .. இக்கட்டான காலகட்டத்தில் கூட இவர்கள் ஆட்சியாளர்களாக இல்லை வியாபாரிகளாக கொள்ளையடிப்பவர்களாக
எரிகிற பிடிங்கியது வரை லாபம் என செயல்படுகிறார்கள் .. வெளிநாடுவாழ் இந்தியனும் சொந்த மண்ணின் வாழ்பவன் எவருமே இந்த அரசுகளால் நிம்மதியாக இல்லை துயரமே அடைகிறார்கள் ..
..
No comments:
Post a Comment