Friday, April 3, 2020

கொரோனா

வல்லரசுகளும் வளர்ந்த நாடுகளும் கொரோனாவிடம் தோற்றுபோகின்றன..
எல்லாம் எம்மிடம் உண்டு அதிநவீன ஆயுதங்கள் உலகமே தங்கள் காலடியில் தங்களின் பார்வையில் தான் வளரும் நாடுகளும் ஏழைநாடுகளும் .. அய்க்கிய நாடுகள்சபையில் நாங்கள் சொல்வதுதான் நடக்கும் .. பிடிக்காதவர்களை தங்களுக்கு அடிப்பணியாத/வழங்கிநிற்காத நாடுகளுக்கு 
பொருளாதாரதடை .. ஆயுதகுவியலையும் நவீன தொழில்நுட்பத்தையும் நாங்களே விற்போம் நாங்களே யாரை எங்கே  வைக்கவேண்டுமென தீர்மானிப்போம்  என்ற அகந்தையும் திமிரும் அடிப்பட்டு கிடக்கிறது ..
..
உலகின் மிகப்பெரிய ராணுவம் .. கல்வியில் விஞ்ஞான ஆய்வில் தனிநபர் வருமானத்தில் முன்னிலை வகிக்கிறது .. மருத்துவ ஆய்வுகளுக்காகவும் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கிறது.. உலகின் தரம் வாய்ந்த
மருத்துவ உபகரணங்கள்/மருந்துகள் உண்டு ஆனாலும் தோற்று நிற்கிறது .. கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் அமெரிக்க திணறுவதை உலகம் கவனிக்கிறது .. ஆயுதம் குவியலை விரும்பியவர்கள் மருத்துவத்தை தனியாருக்கு தாரைவார்த்தின் துயரம் இன்று செய்வதறியாது கடைசியில் மரணத்தின் எண்ணிக்கை கூடுவதில் முடிகிறது .. ஒழுக்கமின்மை, மூடநம்பிக்கை, கடவுள் புனிதம் 
என்ற ஏமாற்று .. இவையாவும் மிகப்பெரிய விலைகொடுத்தபிறகே உணரமுடிகிறது ..
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 
மிக கவனமாக கையாளவேண்டிய விடயத்தை 
கேலிகூத்தாக்காக நினைப்பதை எண்ணுகையில் நிலைமை மோசமாகுமென அஞ்சவேண்டியிருக்கிறது ..
இன்னமும் சில அறிவிலிகள் விளக்கை அணைத்துவிட்டு விளக்குபிடிக்க சொல்கிற நிலை .. எதையும் அறிவுக்கொண்டோ, அறிவியல் கொண்டோ,யதார்த்த்தின் நிலையறியாமலோ போனால் .. அமெரிக்காவை பின்னுக்குதள்ளி மரணத்தின் முன்நிற்க வேண்டிவரும்,.
..
விழிப்புணர்வும்,தனிமைபடுதலும், தனிமைப்படுத்துதலும், முறையான மருத்துவமும், மீள்வோம் என்ற நம்பிக்கையும் வேண்டும் அதைவிடுத்து மூத்திரம் குடி,சாணியை தெளி பிராத்தனை செய் நேர்ச்சி செய், விளக்குபிடி என்றெல்லாம் செய்வது அறிவுடைமை இல்லை .. நம் நாட்டின் கேடு இது மதவெறிபிடித்தவர்கள் கையில் நாம் .. மீண்டுவருவோம் ..
மனிதன் தானாகவும் தனக்காவும் பிறக்கவில்லை என்றார் பெரியார் .. நாமும் வாழ மற்றவர்களும் வாழ தான் இந்த பூமி தனிமைபடுவோம் .. தேவைகளை தவிர வேறெதற்கும் வெளியில் வராமல் பார்த்துக்கொள்வோம் .. அரசும் ஆள்வோரும் 
விவரகேடுகளாக போனதில் நாமே காரணம் ..
அறிவுடையோரை புறக்கணித்ததின் விளைவுதான் இப்படிபட்ட கூத்துகள் ..
இன்னும் என்னென்ன காணவேண்டி வருமோ..
..
விளக்குபிடிக்கிற சொல்கிறவர்கள்  அறிவிலிகள் .. மக்களை சந்தித்து கொரோனா விழிப்புணர்வை உருவாக்கியும் மக்களுக்கு சேவை செய்கிறவர்களுக்கு உதவியையும் தெம்பையும் தன்னம்பிக்கையும் ஊட்டுகிற பேராளுமை திராவிடத்தின் தலைவன் தருவது #அறிவுடைமை .. மருத்துவர்களை தொடர்புக்கொள்கிறார் தன் கட்சியினரை தொடர்புக்கொண்டு களப்பணியை கேட்டறிகிறார்.. இதுதான் இப்போதைய தேவை 
மாறாக கைதட்டு விளக்கு பிடி என்பதல்ல
..
ஏப்ரல்5.. இந்திய முட்டாள்கள் தினமாகுமோ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment