செயல்படாத அரசும்
செயல்படும் எதிர்க்கட்சி தலைவரும் ..
கொஞ்சமேனும் இருந்த நம்பிக்கைகள் பொய்த்துபோய்விட்டனவோ என ஆளும் கட்சி பிரமுகர்களே கவலைக்கொள்கிற நிலையில் தமிழக அரசு நிர்வாகம்.. யாருக்கும் இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது அரசு அதிகாரிகள் கூட முதல்வரை மதிப்பதில்லை என்பது அவர்கள் தரும் மரியாதையில் தெரிகிறது.. எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாதென்ற அறிவு கொஞ்சமும் இல்லை .. இன்றைய அவலநிலைக்கு முழுகாரணமும் எடப்பாடியின் தலைமையிலான அரசு என்றால் மிகையில்லை .. அரசு இயந்திரம் சரியாக செயல்படாததும் அதிகாரிகள் எடப்பாடியை மதிப்பதில்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது ..முன்கூட்டியே எதிர்க்கட்சி தலைவர் எச்சரித்தும் அதை கண்டுக்கொள்ளாமல் வயதானவர்களுக்கு தான் வருமென கிண்டல் செய்தவர்கள் இன்று கைபிசைந்து நிற்கிறார்கள்.. சொல்வதை ஏற்பதில்லை சுயசிந்தனையும் இல்லாத முட்டாள்கள் கையில் காலம் நம்மை சிறை செய்திருக்கிறது .. திடீரென முழு ஊரடங்கென அறிவித்து மக்கள் ஒன்றுகூடலை செயற்கையாக ஏற்படுத்தி இன்று அதீத பரவலுக்கு காரணமானதும் மக்களின் பசி தீர்க்க முடியாமல் ஒரு அரசு இயங்குவதும் காலகொடுமை என்பதை தவிர சொல்வதற்கொன்றுமில்லை .. இக்கட்டான கால கட்டத்தில் மதுபானகடைகளை திறந்து
மேலும் சங்கடத்தை ஏற்படுத்துவது தேவையில்லாதது ..
..
இந்த அரசை நம்பி பலனில்லை என முடிவெடுத்து மிக சிறந்த நிர்வாகத்தை அரங்கேற்றியிருக்கிறார் .. ஒரு அரசு பேரிடர் காலங்களில் எப்படி செயல்படவேண்டுமென மிக அழகான வடிவமைப்போடு திட்டங்களை செயல்படுத்துகிறார் #மாண்பிமை_எதிர்க்கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் .. #ஒருங்கிணைவோம்_வா…
மக்களின் குறைகளை தேவைகளை தீர்க்க வேண்டிய அரசு வருவாயை அதிகரிக்கும் செயல்களில் கவனம் செலுத்துகிறது இலவசமாக உணவு தருகிறோம் என்றவர்கள் அம்மா உணவகத்தில் காசுக்கு சோறு என்றார்கள் ..ஆனால் திமுகவோ நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவு என்ற இலக்கோடு சமையல் கூடங்களை இயக்குகிறது .. தொலைபேசியில் அழைத்து குறைச்சொன்னால் சொன்னவன் யாரென்றெல்லாம் பார்க்காமல் தேவையான பொருட்களோடு கதை தட்டுகிறார்கள் .. கேட்டால் கிடைக்கும் என நம்பிக்கையை விதைக்கிறார்கள் .. பல்வேறு ஊடகங்கள் பலசார்பு அமைப்புகள் எதிர்கருத்தை கொண்டவர்கள் பரமவைரியாக நினைத்தவர்கள் கூட தளபதி.ஸ்டாலின் செயல்பாடுகளை பாராட்டுகிறார்கள்
புகழ்கிறார்கள்.. மக்களின் தேவையறிந்தவனே சிறந்த தலைவனாக முடியும் மக்களோடு எப்போதும் இணைந்து செயல்படுபவனே ஆள தகுதியானவன் ..
..
பல்வேறு அமைப்புகள் வணிகர்கள் தன்னார்வலர்கள் என அவர்களின் குறைகளை தேவைகளை கேட்டறிந்து #ஒருங்கிணைவோம் என செயல்படுகிறார்.. நல்ல தலைவன் தன்னலமற்ற சேவையை முன்னெடுப்பான்
குறைகளை அறிதலோடு முடிந்துவிடவில்லை எப்படி தீர்ப்பதென்று எண்ணி அதை நிறைவேற்றும் கடமை தமக்குண்டு என வியக்கதக்கவகையில் செயல்படும் தலைவர்
உண்மையில் கலைஞரை நினைவில் கொள்கிறேன் .. விவசாய கடனை தள்ளுபடி செய்தபோது உடனிருந்தவர்கள் அதிகம் அதிமுககாரர்கள் தான் பயனடைகிறார்கள் என்ற போது அவர்களை நான் விவசாயிகளாக பார்க்கிறேன் என்றார் அந்த பெருமகன் ..
..
ஆம் இப்போது கூட சிலர் உண்மையில் உதவி கரம் நீட்டுகிறார்களா என சோதித்தும் பார்க்கிறார்கள் .. கேட்பவன் யார் என்று பார்பதில்லை உதவி கேட்பவனின் நிலையை உணர்ந்து தாயுள்ளத்தோடு செயல்படுகிறார்
தளபதி .. இன்னல்பட்டு அழும்குரலை அறிந்து உதவும் பேரன்பாளராய் ஓடிவந்து உதவும் உன்னதராய் தெரிகிறார் .. ஆம்
#தளபதி_தாயுமானவர் ..
..
இதிலிருந்து யாரிடம்
நம்மை ஒப்படைக்க வேண்டுமென நாம்
அறிந்துணர வேண்டும் நம்மை ஆள தகுதியானவர் யாரென்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..
#அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று..
என்றான் வள்ளுவன்
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.. அது நம்க்கே வினையாகும் ..
..
#தளபதி_தலைவர்
..
No comments:
Post a Comment