Wednesday, February 5, 2020

தலைவர் தளபதி

தலைவனை காலம் சமைக்கும்..
தானாகவோ சிலரால் திணிக்கப்பட்டோ ஒருவன் உருவானால் காலம் அவனை கண்டுக்கொள்ளாது மட்டுல்ல எழ முடியாதவாறு வீழ்த்திவிடும்.. சிலர் பிரபலமாய் காட்சி தரலாம் புகழின் உச்சத்தில் கூட இருக்கலாம் ..அவர் கூட இருப்பவர்கள் ஆளுமைகளாக கூட இருக்கலாம் ஆனால் அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போகும் நிறைய வந்தார்கள் போனார்கள் சுவடே இல்லாமல் காலம் அழித்துவிடும் .. நல்ல தலைவர்களை மக்களை நேசித்த மக்களோடு கலந்த .. மக்களின் மேம்பாடொன்றே தங்களின் பணியென பயணித்த .. விளிம்புநிலை மக்களின் மேலேற்றிவிட சமூகத்தின்பால் அக்கறையும் பொறுப்பும் உணர்ந்து செயலாற்றுவோர் காலம் கடந்தும் போற்றபடுவார்கள் ..
..
மக்களின் தலைவன் மக்களை நேசிக்கிறவான இருக்கவேண்டும் ..மக்கள் நேசிப்பதாய் எண்ணி கால் வைத்தால் புதையுண்டு போவீர்கள்.. எல்லா காலகட்டத்திலும் மக்களின் துயர்துடைக்க ..நானிருக்கிறேன் என நம்பிக்கை தருகிறவர்களை காலம் கொண்டாடும்.. சில தலைவர்களே வரலாறாய் மாறுகிறார்கள் .. பெரியார் அண்ணா கலைஞர் .. இப்படி சிலர் மட்டுமே காலம்கடந்தும் கண்கள் கசிய மக்கள் கதைக்கிறார்கள் .. வாழும் போதும் மறைந்தவிட்டபோதிலும் மக்கள் நெடுநாள் நேசிக்கிறார்களெனில் மக்களின் வாழ்விற்காக முன்னேற்றத்திற்காக கடுஞ்சொல்லால் ஏசினாலும்,
கல்லெறிந்தாலும், பகைகொண்டாலும், தோல்வியையே தந்தாலும் எம்கடன் பணிசெய்து கிடப்பதே என தொடர்ந்து தொண்டாற்றியவர்களையே .. சூழ்ச்சி நயவஞ்சகம்
துரோகம் பழிச்சொல் என வேட்டையாடப்பட்டாலும்
தாயைப் போல மறந்து தொடர்ந்து மக்கள் சேவையை முன்னெடுத்தால் மறைந்தும் மக்கள் மனதில் வாழ்வார்கள் ..
..
தளபதி..
மக்களை நேசிக்கிற மக்கள் நேசிக்கிற தலைவராக வருகிறார் .. அய்யாவின் நேர்மை, அறிஞரின் அரவணைப்பு,பேரருளாளனின் உழைப்பு இவை மூன்று சேர்ந்த கலவை .. எதையும் நேர்மையோடு மக்கள் தரும் ஆதரவில் அதிகாரம் வரவேண்டுமென்று காத்திருந்து தொண்டாற்றி கழகத்தவர்களை அரவணைத்து அதிலும் தேவைப்படும் போது களையெடுத்து .. தளபதியாய் இருந்து படை நடத்தாமல் தானே இறங்கி வேலைபார்க்கும் உழைப்பு ..மக்களின் கருத்தை நேர்நின்று கேட்டு இடைதரகரில்லாமல் காதோர்த்து
செவ்வனே பணியாற்றும் அழகு .. தலைவன் என்பவன் மக்களை சந்திப்பவனாக எதையும் எதிர்க்கொள்ளும் துணிவுள்ளவனாய், மக்களின் துடிப்பை உணர்ந்தவனாய் பகையறிந்து படையோட்டும் வீரனாய் தளபதியாய், எது சரியென உணர்ந்து செயலாற்றவேண்டும்.. அய்யாவின் தொலைநோக்கு சிந்தனையை கையிலேந்தி இயக்கத்தை வழிநடத்துகிறார் ..
..
அய்யா அறிஞர் ஆசான் வழியில்.. நிச்சயமாய் இடம் பெறுவார் .. உழைப்பவனை உன்னதனை, காலம் கடந்து பேர் செல்லும் .. வரலாறு நல்ல தலைவனை கொண்டாடியே தீர்க்கும் ..
இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவனை நாடு கண்டுக்கொண்டது .. கலைஞர் பட்டை தீட்டிய வைரமாய் மின்னுகிறார் தளபதி.ஸ்டாலின்
..
நம் தலைவர் ஸ்டாலின் பெருமையோடு சொல்வோம்.. குறித்துக்கொள்ளுங்கள் தளபதியை
#வரலாறு_போற்றும் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment