Thursday, April 9, 2020

கொரோனா

#கொரோனா ..
நிறைய படிப்பினையை தந்திருக்கிறது வாழ்வை அதன் போக்கில் வாழ வேண்டும் ..பேராசையும் பெருமையும், பகட்டும்,போலித்தனமும், அல்ல வாழ்கை இயல்பாய் இனிதாய் இருப்பதை கொண்டு வாழு ..இருப்பது உனக்கானது மட்டுமில்லை பிறருக்கும் சேர்த்து என சொல்லியிருக்கிறது. அதிகாரம் ஆணவம்,திமிர் தான்தோன்றித்தனம் வீழ்ந்து தரைமட்டமாகும் என எச்சரித்திருக்கிறது .. வாழ்வை உயரத்திற்கு கொண்டுசெல்ல நிற்காமல் ஓடுகிறாயே எதற்கிந்த வீண்வேலை என செவிட்டில் அறைந்திருக்கிறது .. சாதி மதம் சமூகம் இனம் மொழி கடந்து மனிதமே வெல்லும் என புரிகிறமாதிரி சொல்லியிருக்கிறது .. 
..
அதிகாரம் ஆணவம் தான்தான் பெரியவன் என்ற நினைப்பை உடைத்து ஒன்றுமில்லை நீ என்ற உண்மையை போதித்திருக்கிறது ..
அதிகார திமிரில் ஆடிய நாடுகள் சப்தமின்றி கண்ணீரில் நிற்கிறது .. பணமும் பகட்டும் காட்டிய நாடுகள் குலைநடுக்கத்தில்.. எதையும் விலைபேசமுடியுமென்ற நினைப்பெல்லாம் மனதின் ஓரத்தில் ஒளிந்துக்கொண்டது ..
ஜோதிடம் சமயம் சடங்கு எல்லாம் பொய்யென்று புரிந்தது ..
கடவுள் பெயரைச் சொல்லி கலவரம் நடத்தியவர்களின் கயமைத்தனம் நொடியில் நொறுங்கியது .. தொலைநோக்கோடு திட்டம் தீட்டிய தலைவர்களால் கொஞ்சமேனும் மெச்சபட முடிகிறது .. நேருவையும் இந்திராவையும் பிடல் காஸ்ட்ரோவையும் கலைஞரையும் மக்கள் நன்றியோடு நினைவுகூர்கிறார்கள்..  சாமியையும் சாதியையும் தூக்கிபிடித்தவர்கள் கைத்தட்டவும் விளக்கேற்றவும் விம்மி அழவும் செய்கிறார்கள் ..
..
உறவின் பாலத்தை பலமாக்கியிருக்கிறது அன்பை தவிர வேறெதுவும் இங்கே பலனில்லை  என்றுணர வாய்ப்பு கிட்டியிருக்கிறது .. தனிமை துயரத்திற்கு மருந்தாகி ஆர்ப்பாட்டமிக்க வாழ்வை எளிமையாக்கி வாழ இது போதும் தேவையற்ற சுமைகளை சுமக்காதே.. இயல்பாய் வாழ பழகு பகட்டானவை எல்லாம் ஆபத்தானது .. இயற்கையோடு இணைந்து வாழு.. இல்லாத ஒன்றை கற்பனையாக்கி சாமிவேசம் கட்டிவைக்காதே .. எதுவும் இங்கே அதிகாரம் பெற்றதில்லை அமைதி அன்பு அணுசரனை ஈகை இவைதான் உயர்த்திபிடிக்கும் கல்வி அறிவு உன்னை கரைசேர்க்கும் மனிதன் மட்டும் வாழ அல்ல இந்த பூமி விலங்குகள் பறவைகள் கண்ணுக்குதெரியாத ஜீவன்கள் அனைத்தும் அதனதன் பாதையில் சென்றால் யாருக்கும் தீங்கில்லை .. மனிதனின் அகங்காரமும் ஆணவமும் தனக்கானது இந்த பூமியென்ற பேராசையும் தகர்தெறிந்து மீண்டும் மனிதத்தோடு வாழ பழகு எனச் சொல்லியிருக்கிறது ..
..
தொழிலுக்கொரு சமுதாயம் ..அவனவன் வேலையை அவன் செய்து பிழைக்கவேண்டும் 
அப்படிதான் சாஸ்திரம் சொல்கிறது. மழிக்க துவைக்க தனித்தனியாய் திரிந்ததுபோய் நீயே மழிக்கவும் துவைக்கவும் செய்கிறார் உன் கழிவை நீயே அப்புறப்படுத்துகிறாய் .. தும்மல் வந்தால் கடவுளை மறந்து மருத்துவரை மருந்தகத்தை நாடுகிறாய்.. காயத்துகட்டி மந்திரித்து விட்டவர்கள் யாரையும் காணோம் ஜகத்குருவெல்லாம் ஜாதையை மாற்றிக்கொண்டு கதவடைத்து  காணாமல் போனார்கள்..அல்லோலிய்யா இருக்குமிடம் தெரியவில்லை .. 
ஆனால் அறிவாயலம் திறந்திருக்கும் .. இதிலிருந்து பெரும் உண்மை தெரிகிறது .. மனிதன் சக மனிதனுக்கு உதவினால் வேறுபாடுகள் கலைந்து வேறுபாடுகளை உண்டாக்கிய சாதிமதத்தை கடந்து தெளிந்த நீரைப்போல தூயன்போடு சிந்தித்து செயல்பட்டால் அறிவின் அறிவியல் துணைக்கொண்டு எதையும் வெல்லலாம் ..
இயற்கை தன் பணியை செய்யட்டும் இயற்கையாய் இயல்பாய் இனிதாய் எளிதாய் வாழ்வோம் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment