Saturday, April 11, 2020

மதுவந்தி..

மதுவந்தி
கருப்புச்சட்டைகாரர்கள் தான் தேவைபடுகிறார்கள்.. என்னை விமர்சித்து பிரபலபடுத்திய கருப்புச்சட்டைகாரர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார் .. மொட்டை பாப்பாத்தி என்ற நிலை இல்லாமல் செய்ததில், விதவை மறுமணத்தை  செய்துகாட்டி பார்பனீய சமூக பெண்களை #புதியவார்ப்புகள் ஆக்கியதில் 
பெரும்பங்கு திராவிட இயக்கத்திற்குண்டு..
..
வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரிகளென்ற ஜகத்குரு பெரியவா அருளுரையையெல்லாம் கிடப்பில் போட்டு .. தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கெட்டுகிடக்கிறதென்ற நாற்றமெடுத்த சிந்தனையை தூரிவீசி .. பள்ளியின் தாளாளராக மதுவந்தியும் இருப்பதற்கும் கருப்புச்சட்டைதான் உதவியது ..
அரைகுறை அறிவும் தன் குலம் காக்கும் என்ற திமிரும் வழக்கு விசாரணை தீர்ப்பென வந்தாலும் "பாப்பாத்தி" என்ற நிலை காக்குமென நாமெல்லாம் கண்டதுதான் அதனால் தான் உளறியவுடன் மன்னிப்பும் கூடவே அவர் உளறவில்லையா இவர் என்னசெய்தார் ..மன்னிப்பு கேட்டாரா என திரும்பவும் உளறிவிட்டு போயிருக்கிறார் .. ஒரு பள்ளியை நிர்வகிக்கிறவர் ஒன்பது கோள்களும் நேர்க்கோட்டில் வராதென்ற உண்மையை கூட அறிந்திராமல் உளறியதும் அதை நியாயபடுத்த தன் சாதியை  பேசுகிறார்களென சிம்பதி உருவாக்குகிறார் ..
வாய்தவறி வந்துவிட்டதென்பதை ஏற்போம் .. ஆனால் அதை தலைக்கனத்தோடு சொல்வதை தான் நாம் விமர்சிக்க வேண்டியிருக்கிறது ..
..
மதுவந்தி மட்டுமல்ல எச்.ராசா மாலன்,பானுகோமஸ்,பத்ரி, ராகவன்.. உட்பட எல்லோரும் விபரகேடுகள் தான்.. தங்களுக்கு எல்லாம் தெரியுமென நம்பிக்கொண்டிருப்பது தான் மிகப்பெரிய நகைச்சுவை .. தங்களை உயர்ந்தவர்களாக ,மெத்த படித்தவர்களாக இத்தனை காலம் நம்பவைத்தததின் விளைவு இன்று இவர்களின் வெளிப்படுத்தல்கள் முகத்தை கிழித்தெறிகிறது .. கல்வி தங்களுக்கு மட்டுமே என்றிருந்ததை உடைத்து அனைத்து தரப்பினரும் கல்வியறிவில் பெருத்தவெற்றியை பெற இவர்கள் நிலை பரிதாபத்திற்கு சென்றுவிட்டது.. விளக்கத்தோடு அதிலும் தெளிவோடு அறிவோடு விவாதிக்க நாம் கற்றுக்கொண்டோம் ..பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் அமைத்து தந்த செப்பனிட்ட பாதையில் நமது வெற்றி இலகுவானதும் இவர்கள் உண்மை "நிறம் " வெளியே வருகிறது .. பேராசான் சொன்னதைப்போல அவர்கள் படிப்பாளிகள் அறிவாளிகள் அல்ல என்றது எவ்வளவு உண்மை ..  கல்வியை வியாபாரமாக்கியவர்  அதன் தரம் உலகத்தரமென்றெல்லாம் விளம்பரபடுத்தி "பெரும்காசு" சேர்த்தவர்கள் இன்று அடிப்படை அறிவுகூட இல்லாதவர் என்று நிரூபிக்கிறார் .. அவரை இன்னமும் பேசவிடுங்கள் அவர்களின் "தரம்" உலகுக்கு தெரியும் அவரின் கல்வி நிறுவனத்தை நோக்கிய  நமது மக்களின் பார்வை திசைமாறும் .. 
..
மதுவந்தி தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு
சத்தியத்திற்கு உண்மைக்கு கட்டுபடுபவள் என்கிறார் அது அவரின் விருப்பம் .. சங்கரராமன் கொலையும், ராஜப்பா  குருக்கள் 100 சவரன் நகை கொள்ளையும் திருச்செந்தூர் ராஜமணி உண்டியல் உடைக்கபட்டதெல்லாம் கூட நம்பிக்கையில் தான் வந்தது .. திருப்பதி வேதபாடசாலையில் ஐந்து பேருக்கு கொரோனா தாக்கி 470 மாணவர்கள் தனிமைபடுத்தபட்டிருக்கிறார்கள் 
தப்லிக் ஜமாத் சென்றவர்கள் தனிமைபடுத்தபட்டிருக்கிறார்கள் புனிதவெள்ளிக்கு வாடிகன் கதவடைக்கபட்டதெவ்லாம் கூட நடந்தது .. 
மதம் அல்ல பிரச்சனை நோயை தடுக்க வேண்டிய நேரத்தில் அரசில் பேசிக்கொண்டு அதற்கு இவ்வளவு போட்டாரென தவறான கணக்கை சொல்லி சொதப்பாமல் இருந்தால் போதும் .. திமுக 1949 ல் தொடங்கபட்டபோது 48 பேர் என்கிறார் அதுகூட  தவறான தகவல்  15 பேர் என்பது வரலாறு .. தயவு செய்து நிறைய படியுங்கள் மதுவந்தி..
எதிர்மறையாளர்களின் கருத்தையும் உள்வாங்குங்கள் மாற்று சித்தாந்தத்தையும் அறிந்துக்கொள்ளுங்கள் மீண்டும் மீண்டும் தவறான தகவலை தராதீர்கள் .. மாற்றான் தோட்டத்திலும் நல்ல மல்லிகை உண்டு ..
அறிவு தேடுவதுதான் சிறந்த கல்வி..
அறிவு கண்களை திறக்கும் .. மடமையெனும் இருள் அகலும் .. 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment