பொதுநலனையும் பொறுப்பையும் உணர்ந்து செயல்படுகிறார் தளபதி ஸடாலின் .. ஆரம்பம் முதலே அமைதியான நேர்மையான அரசியலை கையிலெடுத்து வருகிறவர் ..நீண்ட அனுபவம் அவரை தொலைநோக்கோடு சிந்திக்க வைத்தது .. சட்டமன்றத்தில் தனிமைபடுதல் தனிமைப்படுத்தலை தொடர்ந்து வலியுறுத்தியவர் அரசு செவிசாய்க்க மறுத்தபோதும் தொடர்ந்து தன்கடமையை செய்தார் .. இன்று இந்தியாவே தன்னை தனிமைபடுத்திக்கொண்டிருக்கிறது.
..
திராவிடத்தால் வீழ்ந்தோம் எனச் சொல்லி திரிந்தவர்கள் யாகம் செய்ய சொல்லியும்
கடவுள் வைரஸ் அவதாரம் எடுத்திருக்கிறாரென துக்ளக் அறிவாளிகள் நம்மை மடமைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில்
திராவிடத்தின் நான்காம் தலைமுறை தலைவர் மருத்துவ அணியை நியமனம் செய்கிறார் .. கலைஞர் அரங்கை தற்காலிய மருத்துவ முகாமாக்க அனுமதியளிக்கிறார் .. தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடையே கலந்துரையாடுகிறார் .. கட்சிகாரர்களை களப்பணிக்கு தயார் செய்கிறார் .. சுணக்கம் காட்டி தாமதபடுத்தலை தவிர்க்கிறார் நேரடியாக இயக்கத்தினரை தொடர்புக்கொண்டு கேட்டறிகிறார் .. இளைஞரணி எந்த ந்ரமும் தொடர்புகொள்ள தொலைப்பேசி எண்ணை அளிக்கிறது .. மக்கள் பணியில் எப்போதும் போல் நிறைந்து நிற்கிறது ..
அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படவேண்டிய நேரம் .. அனைத்துக்கட்சி கூட்டத்தை காணொளியில் நடத்தலாம் என தளபதி சொல்வதை அரசு ஏற்கவேண்டும் .. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தருவோம் என தளபதி ..
..
ஆனால் இந்திய ஒன்றியத்தின் வடமாநிலங்களில் நிலை மோசமாக இருப்பதை ஊடகங்கள் வெளிச்சம் போடுகிறது.. பஞ்சம்பிழைக்க சென்றவர்கள் உயிருக்கஞ்சி சொந்த ஊருக்கு நடந்து செல்கிறார்கள் ..அப்படி வந்தவர்கள் மீது பூச்சிமருந்தை தெளிக்கிறது பாஜக அரசு இதை யாரும் கண்டிக்க மறுப்பது எந்தளவிற்கு நம்மிடம் மனிதம் செத்துக்கொண்டிருக்கிறதென்பதை காட்டுகிறது .. வடமாநிலங்களில் பெரியாரை போல ஒருவர் பிறக்காதது இன்றைய அவலங்களுக்கு காரணம் .. மனிதர்களை சிந்திக்கவிடாமல் கடவுள் வேதம் மதம் என போதை ஏற்றி .. கல்வியறிவை பகுத்தாயும் பண்பை தெளிவை தராமல் குறுகிய வட்டத்திற்குள் இருக்க செய்து மனிதம் வளர்க்காமல் மதம் வளர்த்ததின் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள் ..
..
விழிப்புணர்வோடு தமிழகம் ..
இந்த கட்டமைப்பை உருவாக்கி திராவிட இயக்கதலைவர்களுக்கு நன்றி..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment