Saturday, February 8, 2020

தஞ்சையில் தமிழ்

தஞ்சை பெருவுடையார் கோவிலில் 
தமிழ் ஒலித்தது ..

கடவுளால் தேவங்கிரி மொழியை மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றும், தமிழ்மொழி அந்த மொழியுடன் இணையாக நிற்க முடியாது' என்ற வாதத்தை பழமைவாதிகள் முன் வைத்தார்கள் ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்காமல் நிராகரித்தது ..இதை இந்தியன்எக்ஸ்பிரஸ்  நாளிதழ் இது ஆரிய... திராவிட வேறுபாடு என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது ..
குறிப்பாக தமிழ் நாட்டில் 
மத நம்பிக்கையை தாண்டி .பார்பனர்களுக்கு எதிராகவே இது போன்ற குரல்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து ஒலிப்பதை உணரமுடியும் 
திராவிட ஆரிய பகை என்பது இங்கே உணர்வோடு பின்னியது ராணவனை அசுரனாக தமிழினத்தவனாக காட்டியதும் அது வடமாநில மக்கள் ஏற்கும் ராமனுக்கு எதிராக சித்தரிக்கபட்டதும் காரணம் ..
..
கடவுளுக்கு எல்லா மொழியும் தெரியவேண்டாமா ஒருமொழி மட்டுமே வணக்கத்திற்குரியதென்பதும் அதே போல் குறுப்பிட்ட பிரிவினர் மட்டுமே அதை பேசி கடவுளை தாலாட்ட முடியுமென்பதெல்லாம் அறிவுடை செயலா.. கடவுளோடு பக்தன் தனக்கு புரிந்த மொழியில் பேசுவதோ கேட்பதோ தானே சரி இடையில் எதற்கிந்த இடைதரகு வேலை.. அதிலும் குறிப்பிட்டவர்கள் தவிர பிறர் சென்றால் தொட்டால் அபிஷேகம் செய்தால் தீட்டென்றால் கூடாது பாவசெயல் என்றால் பிறகெப்படி அவர் ஏற்றதாழ்வுகளை கொண்டாடுகிற போதிக்கிற செயலை செய்துவிட்டு கடவுளாக முடியும் .. இதற்கெல்லாம் வேதவிற்பன்னர்களிடம் பதில் இல்லை
..
முஸ்லிம்கள் அரபுமொழியில்தானே தொழுகை நடத்துகிறார்கள் என்ற வாதம் வைக்கபடுகிறது 
பொருள் புரிந்து ஒதுகிறார்கள் அதில் கூட யார் வேணிடுமானாலும் வழிபாட்டை தலைமையேற்கலாம் என்ற நிலை உண்டு .. அதை விட அவர்களுக்குள் யாரும் அதை எதிர்க்கவில்லை என்பது கவனிக்கவேண்டியவிடயம் .. தமிழில் பிரசங்கங்கள் செய்யபடுகிறது..
அதற்காக முழுமையாக ஏற்பதாக பொருளில்லை..
..
சிந்து சமவெளியில் வாழ்ந்த பல சமய நம்பிக்கை கொண்ட மக்களிடையே கடவுள் இருந்ததற்கான தடயங்கள் இதுவரை கண்டெடுக்கபடவில்லை பிறகு வழிவழியாக வந்த மக்கள் பயம் காரணம் 
பல்வேறு குல தெய்வங்களை வழிபாடு செய்து வந்ததாக அறிய முடியும் அவை  பல்வேறு கடவுள்களை கொண்டதாக இருந்தது ஆரியர் வருகைக்கு பிறகே அதை சனாதனத்தில் மூழ்கி ஏற்றதாழ்வுகளை வரையறுத்து குறிப்பிட்ட வர்க்கம் மட்டுமே கடவுளின் தொண்டுக்கென சொல்லி கடவுளை கும்பிட கூட தீட்டு விதித்து பிரித்து வைத்ததும் நடந்தது  ஆங்கிலேயர் வரவிற்கு பிறகே
இவைகள் ஒருங்கிணைக்கபட்டு" இந்து " என்ற அடைக்குள் வந்தது .. இவர்கள் கூறும் வேதங்களில் கூட சரியான வழிபாட்டுமுறைகள் சொல்லபடவில்லை இவர்களாக ஏற்படுத்திய ஆகமவிதிகள் பார்பன நலன் சார்ந்து அவர்களின் பொருளாதாரம் மேம்பட அவர்களே உருவாக்கியதே தவிர அதில் எதுவும் உண்மையில்லை .. குறிப்பாக பார்பனர்களுக்கே கடவுள் வேதம் என்பதெல்லாம் புரட்டு என்று தெரியும் அதுதான் தம்மை மேம்படுத்தி காட்ட ஒரேவழி என்பதால் விட்டுகொடுக்க மறுக்கிறார்கள் ..
எல்லோரையும் அர்ச்சகராக ஆக்கிவிட்டால் அவனே கடவுள் இல்லை என சொல்லிவிடுவான் என பெரியார் சொன்னார் ..
அதுதான் கடைசியில் நடக்கும் ..
..
மதம் மறந்த மனிதமே என்றும் நிலைக்கும் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment