என்ன சாதித்தீர்கள் பிரதமர் அவர்களே ..
விளக்கு பிடிக்க சொன்னீர்கள் .. சொல்வது பிரதமர் ஏதேனும் காரணமிருக்கும் என தங்கள் கோட்பாடுகளை கடந்து வீட்டின் விளக்கை அணைத்துவிட்டு தீபம், மெழுகுவர்த்தி என
விளக்கேற்றினார்கள் ..சிலர் பயத்திலும் சிலர் பக்தியிலும் .. ஆனால் அறிவுடை சமூகம் வீட்டின் விளக்கை அணைக்காமல் ஒளிரவிட்டது .. ஒரு கிரகம் ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் வரும் என புதுகதை சொன்னது .. ஊரடங்கை மீறி தீபங்களோடு சிலர் ஊர்வலம் போனார்கள் .. வாசலில் வந்து நின்று டார்ச் அடித்தவர்களும் உண்டு சிலர் மெழுகோடு வந்து நடித்தார்கள் ரசிக்க முடியவில்லை .. பட்டாசு வெடித்து துயரத்தை கொண்டாடுகிறார்கள் .. உண்மையில் வெட்கமாக இருக்கிறது
மிக கச்சிதமாக கொரோனாவிற்கு மத சாயம் பூசி அருகில் நிற்பவரை கூட விரட்டுகிற நிலை.. கொரோனா எண்ணிக்கை கூடுகிறதே தவிர சரியான திட்டமிடல் இல்லை கூட்டமாக கூடி மகா கும்பமேளா செய்தால் கூட குற்றமில்லை ..
என்ன நடக்கிறது நாட்டில் ..
..
ஊரடங்க சொல்லிவிட்டு வீதியில் இறங்கி கைதட்டவும் விளக்கேற்றவும் செய்ததை தவிர நம்பிக்கையான வார்த்தைகளை காணோம்..
இந்திய பொருளாதார வீழ்ச்சியை கொரோனா மீது கட்டிவிடலாம் .. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதி நிறுத்திவைத்தாகிவிட்டது .. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி பணிக்காகவே செயல்படுத்தபட்ட தொகையை நிறுத்தியது ஏன் ..
நிதி ஒதுக்கீட்டில் கூட தென்னிந்தியா புறக்கணிக்கபடுகிறது ..
பேரிடர்கால நிதியில் கை வைத்த போதே எச்சரித்தார்களே.. ரிசர்வ வங்கியில் சுரண்டுவது தலைவேதனை தரும் என்ற "#பெருமக்களின்" பேச்சை எப்போது கேட்பீர் .. வரலாறு படித்தவர்களை பொருளாதார மேதைகளாக எண்ணிய பரந்த பாசிச சிந்தனை.. கல்வியாளர் என்ற பெயரில் ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் வரும் என்ற புழுகும் செயலுக்கு ஒப்பானது .. அறிவியல் ரீதியாக
செயல்பட வேண்டிய தருணங்களில் செவ்வாய் குளிருமென கதையடிக்கிறார்கள் .. இவர்களை எல்லாம் மதவெறியர்களெல்லாம் அறிவிலிக்கூட்டத்தின் செயல்களையெல்லாம் எப்போது புறந்தள்ள போகிறீர்..
..
இத்தனை ஆர்ப்பாட்டங்களால்/கொண்டாட்டங்களால் அறிவியல் ரீதியாக எந்த பயனுமில்லை இஸ்லாமிய கிருஸ்துவ பௌத்த கோட்பாடுகளை பின்பற்றும் நாடுகளில் கூட மத சடங்குகளை தங்கள் நம்பிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு
அறிவியல் துணையை நாடுகிறார்கள் .. மதம் நம்பிக்கை வழிபாடு இவையெல்லாம் தனிநபர் சார்ந்த விடயங்கள் அதை ஒட்டுமொத்த மக்களின் மீது திணிப்பது அரைவேக்காட்டுத்தனம்.. வளைகுடா நாடுகளில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் அந்த நாட்டு குடிமக்களை விட இந்தியர்களே அதிகம் ..வரும் நாட்களில் கூடலாம் ஆனாலும் அவர்கள் நோயாளியாக தான் பார்க்கிறார்கள் மதமோ, இனமோ, மொழியோ பார்க்காமல் மனிதர்களாக பார்க்கிறார்கள் .. ஆனால் இந்தியாவில் நோய் கூட மதமாகிறது .. இவையெல்லாம் களையபடவேண்டும் .. மதம் பார்த்தோ இனம்மொழி பார்த்தோ நோய் வரவில்லை மனித சமூகத்தின் அழிமதியே காரணம் ..
இனியேனும் நல்லதாய் செயல்படுங்கள் ..
..
அனைத்துக்கட்சி தலைவர்களோடு ஆலோசனை நடத்த தீர்மானித்திருப்பது நல்ல தொடக்கம் .. நம் கருத்துவேறுபாடுகளை கடந்து
ஒற்றை நோக்கோடு
பெருந்தொற்றை ஒற்றைகட்டாய் இணைந்து விரட்டியடிப்போம்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment