கருப்புச்சட்டை போட்டால் பகுத்தறிவு என்று எந்த சயின்ஸ் புக்ல இருக்கு என கேட்கிறார்கள் .. அத்திவரதர் வந்தால் நல்லது நடக்கும் என்றீர்களே நடந்ததா என சுப.வீ. அய்யா கேட்கிறார் விஐபி டிக்கெட் எடுத்து தரிசித்தார்களென கேள்வி எழுப்பியிருக்கிறார்.. காங்கிரஸ் திமுக ஆட்சியில் இலங்கை தமிழர்கள் கொல்லபடவில்லாயா என புலம்பிதீர்த்திருக்கிறார்.. தினகூலிண்னே நாங்க என்ன செய்யமுடியும் பிழைப்புக்கு என்ன வழி..
ஏதாவது பாஜக திட்டம் இருக்கா என கேட்டவருக்கு எல்லாத்திற்கும் காரணம் தேசதுரோகி ஈவேரா
என புலம்புகிறார்கள்
இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டுமா என நண்பர்கள் கேள்வி எழுப்பினர் .. அறியாமையில் திரிகிறவர்களை நல்வழிபடுத்தல் கூட அறம் தான் ..
..
பகுத்தறிவு என்பது எதுவென அவர் புரிந்துக்கொள்ள எளிதான விளக்கம் தரலாம் மாட்டுக்கறி சாப்பிடுவது புரோதம் அதிகரிக்கும்
மாட்டு மூத்திரம் குடித்தால் கிருமிகள் வரும் என்பது தான் பகுத்தறிவு ..ராமர் சிலை வைத்தால் குற்றம் ஆனால் மற்றவர்களுக்கு சிலை வைத்தால் அது பகுத்தறிவா என கேட்கிறார் .. ராமர் சிலையைச் சொல்லி பிழைப்பு நடத்தாதே என சொல்வது கூட அறிவார்ந்த விடயம்தான் .. "கும்பிடுகிறேன் சாமி" ன்னு சொல்லாதே
சொல்றது கூட பகுத்தறிவுதான்
ஈரோட்டில் பெரியார் சிலை திறப்பில் அய்யா உங்களை போல சிலை இல்லையென சிலர் சொன்னபோது ..மேலே ஏன் பாக்குற கீழ பாரு என்ன எழுதியிருக்கு கடவுள் இல்லை கற்பித்தவன் முட்டாள் வணங்குகிறவன் காட்டுமிராண்டி .. அதை தான் தேவை முகம் தெளிவல்ல.. அதை எழுதாமல் போனால் வள்ளலாரைப்போல சாமி ஆக்கிவிடுவார்கள் என்றாரே அது தெளிவு பகுத்தறிவு .. கருப்புசட்டை ஏன் தெரியுமா .. துக்கத்திற்கான உடையாக இந்த சமூகம் கருப்பை கொண்டிருந்தது உழைக்கிறவன் சுரண்டபடுகிறான் உழைப்பை சுரண்டுகிறவன் செமையா வாழ்கிறான் இது மாறுகிறவரை கருப்பை அணியவேண்டும்.. நிறத்தில் (கலர்) கூட அரசியல் இருப்பதை அறிவாரா..
..
இலங்கை தமிழர் பிரச்சனையில் நிறைய விளக்கம் கொடுத்தாயிற்று .. வெளிநாட்டில் விவகாரத்தில் மாநில கட்சியால் செய்ய முடிகிற அனைத்தையும் செய்தது திமுக .. கடைசி போரில் புலிகளின் கணக்குகள் தட்டியதும் மனித கேடயமும் அறிவார்ந்த ஆலோசனையை புறக்கணித்ததும். ப.சிதம்பரம் எவ்வளவோ சொல்லியும் கடைசிவரை தமிழகத்தின் ஆதரவாளர்களை நம்பியதும் பேரழிவை தந்தது .. தோக்கு தூக்கியவன் அழிவு தோக்கால் என்பதை போல கடைசியில் விவேகமற்ற போராட்டம் சகோதர பகை ஜனநாயக பாதையை நோக்கி நகராமை இப்படி நிறைய பின்னடைவுகள் இவையெல்லாம் நிறைய விவாதித்தாயிற்று அப்போதெல்லாம் மனநல சிகிச்சையில் இருந்தாரா..
அத்திவரதரை சென்று பார்த்தவர்களில் திராவிட குடும்பங்களும் உண்டு யாரை நிர்பந்திப்பதல்ல அவரவர் உரிமையை நம்பிக்கையை ,கருத்தை, சுதந்தரத்தை எதையாவது சொல்லி நசுக்குவதல்ல .. எதிர்கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது அதற்கு வாய்பளிப்பது கூட கடமை என்று சொல்வது திராவிடம் ..
..
பெரியார் பெயரை கேட்டாலே கதறுகிறார்கள் என்றால் எந்தளவு பார்பனீயத்தை அடித்து துவசம் செய்திருப்பார் .. கல்வி வேலைவாய்ப்பில் தாங்கள் மட்டுமே சிறந்தவர்கள் தங்களுக்குமட்டுமே எல்லா தகுதியுமிருக்கிறது என்று காலகாலமாய் ஏமாற்றி வந்தவர்களுக்கு இடைசாதி கடைசாதிகாரனெல்லாம் படித்து "உத்யோகம்" பார்க்க வந்ததில் எரிச்சல் இவர்களின் பேச்சில் தெரிகிறது .. பாசிசம் அதிகாரத்திற்கு வந்ததற்கு பிறகு இவர்களின் திமிர் வெளிப்படையாக தெரிகிறது தாங்கள் சொல்வதை கேட்கும் ஆட்சி, அடிமைத்தனத்தில் ஊறிப்போன ஊழல்வாதிகள் பதவி சுகம் கொண்டு தலையாட்டும் இவர்களால் எதை பேசினாலும் கேட்க மாட்டார்களென்ற எண்ணமும் இப்படி உளறவைக்கிறது .. ஆனால் ஒவ்வொருமுறையும் அறிவுடைசமூகம் இவர்கள் முகத்தை கிழித்தெறிகிறது ..
இங்கே பெரியாரை பேசாமல் கலைஞரை பேசாமல் எதுவும் நடக்காது .. வெளிச்சம் தேவையென்றால் கூட திராவிட பேரரக்கர்களைப் பற்றி தான் பேசவேண்டும் ..
..
ஆனால்
No comments:
Post a Comment