Tuesday, May 12, 2020

தவைவர்

தொழிலாளர்கள் சாலைகளில் நடப்பது எனக்கு வேதனை அளிக்கிறது - மோடி கண்ணீர்..
ஆம் அதற்காக  என்ன செய்தீர்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் வண்டி கூலி கேட்டவர் தானே இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்..
கொரோனாவோடு வாழ பழகிக்கொள்ளுங்கள் என்கிறீர்..  உலகமெங்கும் கொரோனாவோடு போராடி வாழ பழகி கொண்டார்கள் ஆனால் பசியோடு வாழ தான் மக்கள் இன்னும் அறியவில்லை .. நடந்தே வீடு திரும்பும் 4 வயது சிறுமி சாப்பிட்டு இரண்டுநாளாகிறதென்கிறாள் கும்பி எரிகிறது.. சைக்கிளில் 1400 கிலோமீட்டர் பயணிக்கிறான் இந்தியாவின் எதிர்கால இளைஞன் சாப்பிட வழியில்லை .. ரயிலில் அடிப்பட்டு குடும்பத்தோடு இறந்து போவதெல்லாம் எசமானர் அறிவாரா தெரியவில்லை .. 
குஜராத் மாடல் என "பொய்" சொன்னதாக தான் இதுவரை அறிந்திருந்தோம் இப்போதுதான் தெரிகிறது நீலிக்கண்ணீர் பசி போக்கும் நம்ப வைக்கும் அழுதுக்கொண்டே சொன்னால் நம்பிவிடும் இளகிய மனம்படைத்த மக்கள்.. முடியாமல் போனால் மதம் பேசி மயக்கலாம் இதுதான் குஜராத் மாடல் .. வளர்ச்சிபாதை தெரியாது நிர்வாக திறமை அதெல்லாம் தேவையில்லை வாய்கிழிய வீரவசனம் பேசி திடீரென கரைந்து கூனிகுறுகி மக்கள் முன் நின்றால் கடந்ததையெல்லாம் மறநிதுவிடுவார்கள் என்ற சூத்தரம் நன்கு அறிந்ததால் பிரதமராய் இருக்கிறீர் ..
..
மக்கள் நிம்மதி இழந்து வெகுநாட்களாகிவிட்டது.. சமயம் சமூகம் சார்ந்த தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வேட்டையாடுதல் .. வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களை எப்போதும் கண்டுக்கொள்ளாத ஆரிய சமாஜன கூப்பாடுகளுக்கு செவிசாய்த்து ஆட்சி நடத்துகிறீர் .. சில பெரும் முதலாளிகளின் பார்வைமட்டும் உம் கண்ணுக்கு தெரியும் .. சிறுதொழில்களை முடக்கி முதலாளியாய் வலம்வந்தவனை தொழிலாளியாக்கிய பெருமை வேறெந்த பிரதமருக்கும் வாய்க்கவில்லை .. வீழ்ந்த பொருளாதாரத்தை நிமிர்த்த வல்லுநர்கள் சொல்லை செவிசாய்க்காமல் மீண்டும் மீண்டும் அகலபாதாளத்தில் நிறுத்திவைத்துதான் சாதனை .. ஆட்சியில் இருக்கும் போதே வெறுக்கபடுகிறவராக இருப்பது அறியாமல் இல்லை .. இதுவரை முதலமைச்சர்களிடையே கலந்துரையாடல் செய்து என்ன சாதித்தீர் ..பிரதமரோடான கலந்துரையாடல் வீண் என கேரள முதல்வர் வெளிப்படையாகவே சொல்லிவிட்டு தன் பணிகளை செய்ய தொடங்கினார் இந்தியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த மாநிலமாக கேரளம் திகழ்கிறது இந்தியாவிற்கே Excellent Paradigm 
சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது ..
பிரதமரோ வழக்கம் போல சுயசார்பில் வென்றுகாட்டுவோம் எனச் சொல்லி வாழபழக சொல்கிறார்.. ஊடரங்கை நீட்டித்து வாழ பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்
..
மாநிலத்தில் ஒரு எதிர்க்கட்சி எப்படி செயல்பட வேண்டுமென திரு.ஸ்டாலின் தன் நிர்வாகத்தால் செய்துகாட்டுகிறார் பசியோடு யாரும் உறங்க செல்ல கூடாதென்ற உயர்பண்பு .. உதவி என கேட்போருக்கு உடனடியாக அந்தந்த மாவட்ட வட்ட பிரதிநிதிகளை கொண்டு உதவிட செய்தல் .. புற்றுநோய்க்கு மருந்து கிடைக்கவில்லை என்றவுடன் உடனே ஏற்பாடு செய்கிற நாடாளுமன்ற உறுப்பினர் .. கேட்டதும் கிடைக்கிறது என மக்கள் மனதிருப்தி கொள்கிறார்கள் ஒவ்வொருநொடியும் மக்களைப் பற்றிய சிந்தனை மக்கள் நலன் காக்க தவறிய அரசை கண்டித்துவிட்டு சும்மா இருந்துவிடாமல் உடனடியாக தானே களத்தில் இறங்கி அனைத்து தரப்பினரையும் காணொளியில் அழைத்துப் பேசி அவர்களின் துயர்துடைக்கும் கரமாய் திகழ்கிறார் .. பொதுவாழ்விற்கு வந்துவிட்டபிறகு அதிகாரம் அளிக்கவில்லையென்றாலும் மக்கட்பணி செய்து கிடப்பதே அறம் என செயல்படும் தலைவர் .. தலைவர்கள் எப்படி 
செயல்படவேண்டமென்ற இலக்கணத்தை எங்கள் #பேரருளாளன்_கலைஞரிடம் படித்தவர் 
நல்ல தலைவனை கொண்டாடுவோம்..
மாநிலத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டும் பெருந்தலைவராய் திகழ்கிறார் .. அன்று ராகுலை முன்மொழிந்த போது சில மாநில கட்சிகள் பதவி ஆசை கொண்ட சுயவிரும்பிகள் எதிர்த்தார்கள் அன்று அனைவரும் ஏற்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது .. 
..
#தலைவர்_ஸ்டாலின்
..
#MISSION_MKS2021

#MISSION_DMK2021
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment