#பிணத்திற்கு_முன்_உணவுதட்டை_வைக்காதேஎன்றார் ..மௌலானா ரூமி அவர்கள் ..
..
தமிழக இஸ்லாமிய சமூகம் அதை தான் செய்கிறது .. எடப்பாடி மீதான நம்பிக்கை என்பது பிணத்தின் முன் உணவுதட்டை போல
நேற்று நடந்த துன்பயியல் சம்பவம் அதை தொடர்ந்து விடிய விடிய போராட்டம் மக்களின் ஒற்றுமை கண்டு ஒருநிமிடம் மகிழ்ந்தாலும் சேர்ந்திருப்பவர்கள் "கோடாரிகாம்புகள் " என்கிற பயமும் வருகிறது .. பாக்கர் போன்ற சமூக துரோகிகள் இடையில் சமானத்தை முன்னெடுத்து பேச்சுவார்த்தையில் அரசின் நியாயத்தை ..? பேசியதாக அறிய முடிகிறது உ.பி.யைபோல இங்கேயும் அடித்தமர்த்தலாம் என்ற நினைப்பை தமிழகம் தடுத்துநிறுத்தும் என்ற நம்பிக்கையை எடப்பாடி தலைமையிலான அடிமை அரசு பொய்பிக்க தொடங்கியிருக்கிறது .. துப்பாக்கிசூட்டையே காலையில் தான் தெரிந்துக்கொண்டேன் என்ற முதல்வர் பெற்ற பெரும்பாக்கியம் நமக்குண்டு
சென்னையிலும் ஒரு ஷாகின் பாக் உருவாகிவிடுமோ என அஞ்சுவதின் காரணம் தான் இந்த கலவரம் .. எச்.ராசா போன்ற தேசவிரோதிகள் 98 ல் கோவை கலவரகாரர்கள் மீண்டும் தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கலவரம் செய்ய வந்துவிட்டதாகவும் தமிழக அரசு இரும்புகரம் கொண்டு தடுக்கவேண்டுமென ட்வீட் செய்கிறார் .. திட்டமிட்டே இஸ்லாமியர்களை CAAவிற்கெதிராக போராடுவர்களாக பிரித்துகாட்டவேண்டுமென்ற நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள் .. பெண்கள் குழந்தைகளோடு போராட்டகளத்தில் தங்களின் எதிர்காலம் குறித்த கவலையில் நிற்கவைத்த அரசும் போராடுபவர்களை தடியடி நடத்தி தங்களின் விசுவாசத்தை காட்டும் அடிமைகளும் வாய்த்தது நமது கேடுகாலம்..
..
இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பிற சமூக மக்களும் களத்தில் நிற்பது ஆறுதலான விடயம் .. பெரியார் மண் என பெருமை பேசி திரிந்தோம் இங்கேயேயும் அடக்குமுறையை ஏவி கலவரபூமியாக்க நினைத்து அதை அரங்கேற்ற திட்டம் வகுத்து தந்திருக்கிறார்கள் ..இந்த அரசை எவ்வழியிலேனும் தூக்கியெறிந்திருக்க வேண்டும் நேர்மை பேசி காலதாமதம் செய்த திமுகவும் இங்கே குற்றவாளி கூண்டில் .. அதிமுக அரசை இவர்கள் வைத்திருப்பதே தங்களின் தேவைகள் நோக்கங்கள் கொள்கைகள் சித்தாந்தங்கள் இவற்றை நிறைவேற்றதான் நேரடியாக களம்கண்டு வென்றிட முடியாதென அறிவார்கள் அதனால் தான் இனியொரு வாய்ப்பு கிடைக்காது என்பதால் இவர்களை பயன்படுத்தி தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் ..
..
தன்னெழுச்சியாக ஏற்பட்ட இஸ்லாமியர்கள் ஒற்றுமையை சிலர் தங்களின் செல்வாக்கிற்காக தங்களின் அமைப்பு லேபிலில் காட்ட ஆர்வம் காட்டுவது அயோக்கியத்தனம் ..சரியாக ஒருங்கிணைக்கபடாத சமூதாயமாக முஸ்லிம்களின் பரிதாபகரநிலையில் எத்திநிற்கிறது.. காயிதெ மில்லத் போன்ற ஆளுமைகளை உருவாக்க தவறியதும் பொறுப்பிற்கு வந்தவர்களின் சுயநல பதவிமோகமும் பிரிவினைகளில் தொடங்கி கடைசியில் "எண்ணிக்கையில் அடங்காத" இயக்கங்களாக உருபெற்று நிற்கும் அவலம்.. இஸ்லாமிய வாக்குவங்கிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதென்ற உண்மை விளங்கியதால் சம்பிரதாயத்திற்காக அரசியல் கட்சிகள் கைகோர்க்கின்றன.. அதிலும் சிலர் ஆளும் அரசிற்கு ஆதரவாக வெண்சாமரம் வீசி தங்களின் வளத்தை மேம்படுத்திக்கொள்ள முனைகின்றனர் .. உண்மையில் நாதியற்ற சமுதாயமாக மாறிவருகிறதோ என்ற அச்சம் வருகிறது .. ஒரே குடையின் வராதவரை எந்தவித மாற்றமும் நிகழபோவதில்லை ..
எதிரி யாரென்று தெரியும் யார் துரோகி என்றும் அறிவீர்.. எதிரியை வீழ்த்தும் வல்லமை யாருக்கிருக்கிறதென தெளிவாய் உணர்ந்து
அவர்களை பின் துணைக்க வேண்டும் .. இல்லையெனில் விழலுக்கு இறைத்த நீரைப்போல வீணாகிவிடும் ..
..
#பிணத்திற்கு_முன்_உணவுதட்டை_வைக்காதீர்
..
No comments:
Post a Comment