Wednesday, January 29, 2020

நொண்டி குதிரை ரஜினி

வரிஏய்ப்பு ரஜினி..
சினிமாவில் தான் சேர்த்த சொத்துக்கெல்லாம் சரியான வரியை  செலுத்தியதில்லை இவரென்றில்லை நிறைய பேர் பிரபலங்களாய் இருப்பவர்கள் வெள்ளையில் கொஞ்சமும் கறுப்பில் நிறையவும் வாங்குவதைதான் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.. வியாபார சந்தையில் கிராக்கி இருப்பதை காசாக்க நினைக்கும் எண்ணம் அதை சரியாக பயன்படுத்தி நாலுகாசு பார்த்த கூட்டம் பெரிய பிம்பத்தை கட்டமைத்து கொண்டாடும் .. சில தோல்விகள் போதும் இருந்த இடம்தெரியாமல் போக .. நிழலை நம்பும் மிகப்பெரிய சந்தையில் இது போன்ற வரிஏய்ப்புகள் புதிதல்ல .. ஆனால் தன்னை "பரமயோக்கியன்" எனச் சொல்லி திரிபவர்கள் மற்றவர்களுக்கு ஒழுக்கத்தை நேர்மையை போதிப்பதும் கேலிக்கூத்து .. 
..
சினிமாவை கேளிக்கையாக பார்த்து ரசித்து கடந்து போகவேண்டுமே தவிர தூக்கிவைத்து கொண்டாடுவதால் நாடு "கழிசடைகளை" முன்னிறுத்தி அரசியல் செய்து வந்திருக்கிறது .. "மகாயோக்கியன் " என்ற "வேசம்"கட்டல் நிழலை நிஜமென்று நம்பவைத்தல் 
மூடத்தை விட ஆபத்தானது .. சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தி சமூக அவலங்களை படம்பிடித்துகாட்டி விழிப்புணர்வை தரலாமே தவிர 
அதை,அதில் நடித்தவர்களை பின்பற்றுவது பேராபத்தை தருமென காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது .. சினிமா நாடகம் கூத்து இவையெல்லாம் கலைவடிவங்களாக காணவேண்டுமே தவிர அதில் சொல்லபடும் சேதியை கேட்டு புரிந்து தெளிவுபெற வேண்டுமே கொண்டாடலாமே தவிர.. அரசியலில் பொதுவாழ்விற்கான தகுதியாக கருதிடகூடாது ..
பொதுவாழ்விற்கு வருவதற்கு சினிமாவில் நடித்தால் மக்கள் அதிகம் ரசிக்கிற கலைஞனாக இருந்தால் போதும் என்பது அறிவிலித்தனம் .. 
சினிமா பொழுதுபோக்கு அவ்வளவுதான் .. அரிதாரம் கலைத்துவிட்டால் மவுசு போய்விடும் .. யாருக்கும் அரசியல் பார்வை இருக்கலாம் யார் வரவேண்டும் வரகூடாதென்ற அறிவும் விமர்சனமும் கூட அவசியம் தேவை .. பொதுவாழ்விற்கு  வர தொண்டாற்றும் மனபான்மை வேண்டும் மக்களோடு இரண்டறகலந்து அவரது விருப்புவெறுப்புகளை உணர்ந்து ..நீண்டகாலம் பயிற்சியும் உடன் எப்போதுமிருப்பேன் என்ற உணர்வை மக்களுக்கு தரவேண்டும் ..கட்சியே தொடங்காமல் நேரடியாக முதல்வர் கனவோடு வருகிறவர்கள் அவர்களை மிகப்பெரிய இயக்கத்தோடு ஒப்பிடுவது (ஒப்பீடே தவறு) அவரால் தனித்தன்மையோடு நல்லாட்சி தரமுடியுமென பேசி திரிவதெல்லாம் வாக்குவங்கியே இல்லாத சில அலப்பரைகளின் "குமாரசாமி கூட்டல்" கணக்கை போல தப்பாகி போகும் ..
..
வாடகை பாக்கி தரமாட்டேன் வரிபாக்கியை செலுத்தமாட்டேன் கட்சி தொடங்கமாட்டேன் ஆனால்
அரசியல் பேசுவேன் அதிலும் யாரோ எழுதிக்கொடுத்ததை அது சரிதானா என யோசிக்காமல் பேசி "அறிவாளி"யாக நடித்து கைத்தட்டல் பெறுவேன் .. சுயசிந்தனையற்ற ஜடமாய் சிலர் பின்னின்று இயக்கவதற்கு "தலையாட்டி" பொம்மையாய் ஏற்கனவே பதிவேற்றபட்டதற்கிணங்க செயல்படும் ரோபோவாய் இருந்தால் மக்கள் மன்றம் மௌனமாய் அடி தரும்..எழ முடியாதவாறு .. இதுவரை சேர்த்து வைத்த எல்லாம் போகும் புகழ் பணம்  பெயர் எல்லாம் போகும் ..
..
அரசியல்/மக்கள் சேவை என்பது சமூகநலன், வாழும் நிலம் குறித்த அக்கறை, ஏற்றதாழ்வற்ற எல்லாருக்குமான சரிநிகர் உரிமை, தன்னலமற்ற சேவை,கடும் உழைப்பு .. விருப்புவெறுப்பிலும் தொடர்பணி,தொலைநோக்கு சிந்தனை விளிம்புநிலை மக்களின் உரிமை உயர்வு .. போகும் பாதை குறித்த அறிவு இவையாவும் வேண்டும் இன்னும் பல.. ஆனால் எதுவுமற்ற போதை தரும் புகழ் ஒன்றே போதுமென கருதினால் காகிதகப்பலை போல முழ்க நேரிடும் ..
..
நொண்டிகுதிரை..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment