Monday, April 27, 2020

வரனெ அவெசமுண்டு

"வரனெஅவேசமுண்டு"..
மலையாள திரைப்படம் நேற்றுதான் பார்த்தேன் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படம்.. சுரேஷ்கோபி ஷோபனா துல்கர் காய்த்ரி பிரியதர்ஷன் (இயக்குநர் பிரயதர்ஷனின் மகள் அவருக்கு மலையாளத்தில்  முதல்படம்) 
"சிலப்போ நமக்கு முன்பே அம்மே விவாகம் கழிக்கும் " என மகள் தன் காதலனோடு சொல்வாள்..
விவாகரத்து பெற்ற தாய் தனக்கு இயல்பாக எழும் காதலை மிக அழகாக படமாக்கியிக்கிறது மலையாள கரை ..
நிம்மி என்ற நாயின் பெயர் .. நல்ல பழகிட்டா எந்த பெயரை சொல்லி அழைத்தாலும்வரும் என சிறுவன் சொல்ல பிரபாகரா என சுரேஷ் கோபி அழைக்க ஓடிவருகிறது .. 
எப்படி பிரபாகரன் பெயரை வைக்கலாம் என சிலர் பொங்குகிறார்கள் .. சாதாரணமாக கடந்து போகவேண்டிய விடயத்தை பெரிதாக்கி நல்ல விளம்பரம் தந்திருக்கிறார்கள் .. 
சீமான் போன்றவர்கள் காட்சியை நீக்கவேண்டுமென எச்சரிக்கிறார்கள் .. இவர்கள் எல்லாம் எங்கிருந்தார்கள் கொரோனா தொற்று மிகப்பெரிய அழிவை சமூகத்திடையே,ஏற்படுத்துகிறது பசியால் வாடுகிற மக்களை காக்கவோ அவர்களுக்கு உதவவோ செய்யாமல் இலங்கை பிரபாகரனின் பெயர் ஒருபடத்தில் வைத்ததற்கு இங்கே வீறுகொள்கிறார்கள் .. 
..
திரௌபதி படத்தில் ஆணவ கொலை செய்யும் பாத்திரம் கூட "பிரபாகரன்" பெயரில் தான் அப்போதெல்லாம் எங்கே போனார்கள் ..  இலங்கை அரசியல் தமிழகத்தில் நீர்த்துபோய் பலகாலமாகிவிட்டது இங்கே யாரும் இலங்கை தமிழர்களைப்பற்றி கவலைக் கொள்வதில்லை.. இலங்கை தமிழ்மக்கள் மெல்ல இயல்புவாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் .. புலிகள் இயக்கம் மிகப்பெரிய கட்டுமானம் ஆனால் தங்களின் அகந்தையால் சிதறிப்போனது விவேகமற்ற செயல்,யாரை நம்புவதென்று கூட தெரியாத தெளிவற்ற பார்வை .. உலகமே விழித்துக்கொண்டு தீவிரவாத செயலுக்கு எதிராக போர்குணம் கொண்டபோது போராட்டகளத்தை ஜனநாயகபடுத்தாமல் வீம்புக்கு எதிர்த்து நின்று கடைசியில் மனித கேடயங்கள் வீழ்ந்த போது அதுவரை கட்டிகாத்தெல்லாம் தகர்ந்தது ..
சிலர் தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் என்கிறார்கள்.. இலங்கை மலையக தமிழர்கள் கூட பிரபாகரனை தலைவனாக ஏற்கவில்லை .. 
சிலர் அண்ணாவோடு ஒப்பிட்டு தங்களை சிறுமைபடுத்திக்கொள்கிறார்கள் .. #பேரறிஞர்அண்ணா மிக சிறந்த ஜனநாயகவாதி மாபெரும் அரசியல் ஆளுமை விவேகமுள்ள தலைவர் ஒப்பற்ற தலைவரோடு "சிலதுகளை"
ஒப்பிடாதீர்கள்
..
மலையாளிகள் பிரபாகரன் என்கிற பெயரை அதிகளவில் வைத்துக்கொள்வார்கள் 
இதில் என்ன தவறை கண்டார்கள் .. இனியும் புலிகள் பிரபாகரன் ஈழமென கதைத்துக்கொண்டிருந்தால் நிலைகுலைந்து போகவேண்டிவரும் .. தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை எல்லாம் தராது மக்கள் தெளிவுபெற தொடங்கிவிட்டார்கள் .. ஈழத்தை சொல்லி பிழைக்கிறவர்கள் வன்மதில்களுக்குள் வாழ்கை நடத்துவதை அறிவார்கள் இலங்கை போராடியவர்கள் சோத்திற்கு வழியின்றி வழக்கு சிறை என காலம்கழிக்கும் போதும் இங்கே ஈழ வியாபாரிகள் நல்ல லாபம் பார்த்தார்கள் ..
..
சினிமாவில் பெயரிடுவதற்கே போராடுகிறளவில் தான் இவர்களின் அறிவும் அரசியலும் .. 
ஈழப்போருக்குப் பிறகு பெருமளவில்
தமிழ்தேசியம் பேசுகிறவர்கள் யாரும் மத்திய மாநுல அரசின் தமிழ்விரோதபோக்கை கண்டுக்கொள்வதில்லை.. ஈழம் காசு மணி துட்டு இவ்வளவுதான் இவர்கள் அறிந்தது..
 #விவரகேடுகள்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment