Saturday, April 18, 2020

எது அரசியல்

எது அரசியல் ..
அரசு இதுவரை என்ன செய்தது செய்ய தவறியது எது என சுட்டிகாட்டி கொட்டி திருத்துவது எதிர்க்கட்சியின் கடமை .. ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என முதல்வர் புலம்புவது ஏன் .. முன்னுக்குபின் முரணாக பேசுவதும் வாய் திறந்தால் பொய் மட்டுமே சொல்வதும் செய்யாததை செய்துவிட்டதாகவும் 
நடக்காத ஒன்றை நடத்துவிட்டதாகவும் தொடர்ந்து பொய்யை தவறான தகவலை தருவது அரசுதானே தவிர திமுக அல்ல..
கொரோனா பரிசோதனைக்கு ராபிட்கிட் போன மாதமே வந்துவிடும் என சொன்னது என்னானது.. சீனாவிலிருந்து வந்ததா. சட்டீஸ்கர் அரசு வெளிப்படையாக 
ரேப்பிட் டெஸ்ட்  கிட்  விலை ₹355+ GST அறிவித்திருக்கிறது அதைபோல் தமிழக அரசு அறிவிக்கலாமே.. எதிர்க்கட்சிதலைவர் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த அனுமதி மறுத்தீர்கள் சரி .. தலைமை செயலகத்தில் அதிகாரி மத "பெரியவர்கள்" எல்லாம் கலந்துக்கொண்டு கலந்துரையாடியது ஏன் .. 
மதுரையில் இறந்த ஜல்லிகட்டு மாட்டின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துக்கொண்டு "சமூகவிலகலை" கடைப்பிடித்தார்களே அதெல்லாம் எதில் வரும் இந்த ஆட்சியின் பெருமையிலா.. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே நோய் பரப்புகிறார்களென பாசிச பாஜகவின் குரலை சுகாதாரத்துறை செயலரே ஓங்கி ஒலித்தாரே இதையெல்லாம் முதல்வர் எடப்பாடி அறிவோடுதான் நடந்ததா ..இதுவரை சரியான புள்ளிவிபரங்களை தர மறுப்பது ஏன் .. மருத்துவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் மருத்துவர்கள் மரணம் இதெல்லாம் கண்டிக்காமல் கடந்துபோக வேண்டுமா ..
உண்மையில் ஸ்டாலின் சரியாக வழிநடத்துகிறார் ரேப்பிட் கிட் எவ்வளவுக்கு வாங்கினீர்கள் என்ற பதில் அளிக்க அஞ்சிதான் ஸ்டாலினுக்கு பதில் அளிக்க போவதில்லை என்கிறீர் ..எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதில் தர மறுப்பது மக்களுக்கு உண்மையை சொல்ல மறுப்பதற்கு சமம்.. மக்கள் தேர்ந்தெடுத்து  முதல்வராக வரவில்லை அதனால் எதைப்பற்றி கவலைபடாமல் வாய்க்கு வந்ததை பேசி 
எஜமான் மோடிக்கு விசுவாசமாய் தமிழர்நலனை தமிழக நலனை அடகுவைத்து வாழ்கிறீர் ..
அடிக்கிற காற்றில் கோபுர உச்சியில் சறுகுகள் கூட வரும் ஆனால் கலசம் ஆகமுடியாது .. 
..
பிரதமரின் தொகுதியில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானோர் பேருந்துகளில் அனுப்பிவைக்கபட்டுள்ளார்கள் நல்லது இதே போல் வீடு திரும்ப முடியாமல் தத்தளிக்கும் மும்பையில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கலாம் .. தன் தொகுதியில் தத்தளித்தவர்களை உதவியது போல் அனைவருக்கும் உதவினால் தான் தான் பொதுவானவன் என அறியபடுவீர்கள் .. அதிகம் பேசுகிற செயல்படுவதில் மந்தநிலையில் தான் பிரதமரை சர்வதேசம் காண்கிறது .. தொடர்ந்து ஊரடங்கு செயல்படுத்துவதில் தவறில்லை ஆனால் தின வருவாயில் குடும்பம் நடத்துவோரைப் பற்றி பிரதமர் கவலைபட்டதாக தெரியவில்லை .. உலக சந்தையில் எரிப்பொருள் விலை வீழ்ச்சியடைந்தும் சில பெருமுதலாளிகளுக்காக விலைகுறைப்பு செய்யாமல் இருப்பதிலிருந்தே இந்த அரசு சாமனிய மக்களுக்கானதில்லை என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.. தமிழக அரசிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றிய அரசிற்கும் கூட சிறந்த எதிர்க்கட்சி தலைவராக திகழ்கிறார்
மாநில அரசிற்கு ஆலோசனையை வழங்கி இந்திய ஒன்றிய அரசிடம் வாதிடுவதற்கு பெயர் அக்கறை.. இதெல்லாம் புரிந்தால் நல்ல நிர்வாகத்தை தரலாம் தொடர்ந்து தவறுகளை சுட்டிகாட்டியும் ஆரம்பம் முதலே மறுத்தும் பின் கடைபிடித்தும் ஸ்டாலின் சொன்னதுதான் சரியென கடைசியல் நிரூபணம் ஆகிறது .. மருத்துவ உபகரணங்களே போதிய அளவில் இன்னும் தட்டுபாடுகள் என்ற நிலையில் மூன்று நாட்களில் கொரோனாவை ஒழித்துவிடுவோம் என முதல்வர் சொல்வதற்கு பெயர் தான் அரசியல் உளறல் .. பொய்கணக்குகளை சொல்லாதீர் தவறான புள்ளிவிபரங்களை சொல்லாதீர் பரிசோதனையை அதிகபடுத்துங்கள் என ஸ்டாலின் சொல்வது அரசியல் செய்வதல்ல
..
#இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்..
(குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்) என்ற குறளுக்கொப்ப மத்திய மாநில அரசை தொடர்ந்து எச்சரித்தும் கண்டித்தும் பாராட்டியும் கவனத்திற்கு கொண்டுவந்தும் தன் கடமையை சரியாக செய்கிறார் எதிர்க்கட்சி தலைவர் தளபதி.ஸ்டாலின் .. நல்ல தலைவராக நாட்டின் மீதும் நாட்டுமக்களின் மீதும் அன்பும் அக்கறையும் கொண்ட தலைவராக திகழ்கிறார் 
#தளபதி_ஸ்டாலின்
..
#தலைவர்

No comments:

Post a Comment