ஏன் கதற வேண்டும் ..
பத்திரிக்கை செய்தித்துறையில் #அவர்கள் மட்டுமே ஆண்டுவந்தது தகரும்போது வரும் இயல்பான கோபம் அதைகூட தைரியமாய் சொல்வதற்கு வக்கற்று மாரி மதன்களை களம் இறக்குகிறார்கள் ..நேர்மையாக நெஞ்சுயர்த்தி பேசுவது பண்டே
பழகமில்லாத ஆரிய கூட்டம் #குணசேகரன்களை கண்டால் பதறி அழுகிறார்கள் ..
ஊடகங்களின் அவாள்களின் ஆதிக்கம் இப்போதும் முழுமையாக குறைந்திடவில்லை எனினும் நம்மவர்களின் வளர்ச்சி எரிச்சலை தருகிறது..
தொலைக்காட்சி ஊடகத்தின் தேவையை முழுமையாக புரிந்துக்கொண்ட முதல் தமிழன் மாறன் .. சன்டிவியின் வளர்ச்சியும் அதன் வேகமும் பதறவைத்தது இத்தனைக்கும் அது ஒரு கட்சியின் டிவியாக தான் இருந்தது .. மாறன் மறைவிற்க்கு பிறகு மல்லிகாக்கள் கையில் வந்ததும் தன் நிறத்தை மாற்றியது ஆனாலும் நாம் கலங்கவில்லை வீரபாண்டியன்களை உருவாக்கி வைத்திருந்தோம்..தொலைக்காட்சி ஊடகம் பரிணாம வளர்ச்சியடைந்த போது நிறைய செய்தி ஊடகங்கள் நம்மவர்களால் கையாளபடுதலால் அவர்கள் கோபபடுவது இயல்புதானே..
..
நம் வீட்டு பிள்ளைகள் செய்தியாளராக, செய்தி ஆசிரியராக,செய்தி நிறுவனத்தை நிர்வகிப்பவராக வந்ததும் பொறுக்கமுடியாமல் புலம்பகிறார்கள் அதிலும் இரவல் குரலில் ..
இந்த நிலைக்கு திராவிடம் முக்கிய காரணம்
நம் பிள்ளைகளை குலக்கல்விக்கு விடாமல்
கல்வி தந்தது முதல்பட்டதாரிக்கு கல்விக்கட்டணத்தை ரத்து செய்தது நீ விரும்புகிற துறையில் உன் திறமையை காட்ட களம் அமைத்து தந்தது .. ஆனாலும் திமுகவை விமர்சித்துதான் பெரும்பாலான ஊடகங்கள் ஆனால் திமுக கதறவில்லை,பதறவில்லை தன் கடமையை செவ்வனே செய்கிறது.. ஆனால் மோடியை பாஜகவை,சனாதனத்தை பிராமணத்தை விமர்சிக்கும் போது
அவர்களுக்கு உதறல் வருகிறது..
..
என்ன சொல்ல வருகிறார்கள்
ஊடகம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படவேண்டுமென்றா.. பாசிசத்திற்கு வால்பிடிக்கவேண்டுமா.. இவர்கள் செய்யும் அலுச்சாட்டியங்களை கண்டுக்கொள்ளாமல் கைதட்டவேண்டுமா .. மோடியையும் பாஜகவையும் பார்பனீயத்தையும் கொண்டாட வேண்டுமா.. ஊடகத்தின் குரல்வளையை நெறித்து ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜனநாயக மூச்சை நிறுத்தவேண்டுமா.. இவையெல்லாம் இங்கே நடத்திடமுடியாது
சனாதனத்திற்கெதிரான திராவிட மண்ணில் கொஞ்சம் புளிக்கும்.. பெரியாரின் உழைப்பு திராவிட இயக்கம் பலனால் நேடிய கல்வியால் சமூகநீதியை பேசுவதை தொடர்ந்து எவ்வளவு முயற்சித்தும் பொய்யை பரப்பியும் கலவரத்தை தூண்டியும் மதவெறியை சாதிவெறியை நடத்தியும் அவர்களால் இறுதியில் வெற்றிபெற முடியாமல் போவதற்கு சிறதேனும்,காரணிகளில் இன்றைய முதல்தலைமுறை ஊடகவியலாளர்கள் ..
பின்னே கோபம் வரத்தானே செய்யும்.
..
இவர்கள் குற்றம்சாட்டும் ஊடகவியலாளர்கள்
நேர்மையோடு நடக்கவில்லைதான் .. எதையும் அறநெறியோடு அணுகவில்லைதான் இன்னும்,சொல்லபோனால் திமுகவின் வெற்றியை தடுப்பதில் தடைபோடுவதில்
முனைப்போடு செயல்பட்டவர்கள் தான் ஆனாலும் அவர்கள் மீது பாசிசவாதிகளின் வன்மம் நிறைந்த குற்றச்சாட்டை பழியை அவர்கள் மீது எரியும் தனலை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கமுடியாது ஏனெனில் இவர்கள் நம் பிள்ளைகள்
இவர்களை உயரத்தில் ஏற்றதான் திராவிடம் பாடுபட்டது இனியும் தொடர்ந்து உழைக்கும்..
..
No comments:
Post a Comment