Friday, May 1, 2020

தலைவர் ஸ்டாலின்

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவு .. மத்திய அரசு 
நோயால் சாவதை விட பசியால் சாவு என்கிறதா..,,புரியவில்லை அன்றாடம் வேலைக்கு போனால் தான் சோறு என்கிற நிலையில் தொடர்ந்து மாதகணக்கில் ஊரடங்கை நீட்டித்து மக்களை பசியின் கொடுமையில் நிறுத்துகிறார்கள்.. மக்கள் படும் அவதியை உணராத அரசாய் திடீரென எந்த முன்னறிவிப்பின்றி ஊடரங்கை 21 நாட்கள் பிறகு 15 என தொடர்ந்து மூன்றாவது முறையாக நீட்டித்தால் சாலையோர மக்கள் ..தினக்கூலிகள், வறுமையின் பிடியில் வாழ்வோர் செலவிற்கு பணமின்றி என்னசெய்வதென அறியாமல் நிற்கிறார்கள் ..
..
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் 68,000 கோடி ஒதுக்கி நிவாரணம் அளித்திருக்கலாம் என்கிறார் .. மேனாள் மத்திய நிதியமைச்சர் குடும்பத்திற்கு உணவு பொருட்களும் ₹5,000 ரூபாயும் ஒதுக்கவேண்டும் என்கிறார் ஆனால் செவிடனைப்போல வீண்பிடிவாதத்தோடு அரசு மக்களை பசியில் கொல்லபார்க்கிறது .. கைதட்டியோ விளக்கேற்றியோ பசியை விரட்டிவிட முடியாது நல்ல திட்டங்கள் ஏதுமில்லாத அரசு .. சதா மக்களை பரபரப்பாக வைத்திருப்பதே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது குஜராத்தில் 5 கிலோ அரசி வாங்க 5 மைல் தொலைவிற்கு வரிசை இதை முன்மாதிரியாக கொண்டுதான் இந்திய ஒன்றியத்தை ஆள அனுமதித்தார்கள் 56 இன்ச் மார்புள்ளவர் தான் ஆள அருகதை என்றெல்லாம் பேசி கடைசியில் தெருவில் நிறுத்துவரை வாய்சவடால் பேசியே பொழுதை கழிக்கலாம் ..
..
அரசியல் கடந்து மனிதநேயத்தோடு ஒரு #தலைவனை காண முடிந்தததில் தமிழகம் பெருமை கொள்ளவேண்டும் .. #ஒருங்கிணவோம்_வா என்ற ஒன்றை வாக்கியத்தில் அனைவரோடும் கலந்துரையாடி கருத்து கேட்டு தேவையான உதவிகளை திமுகவினரை கொண்டு அவர்களுக்கு வழங்கி (மிகப்பெரிய நெட்வொர்க் )  லட்சக்கணக்கான மக்கள் தங்களின் இயலாமையை கருத்தை தேவையை பதிவு செய்கிறார்கள் .. தலைவரே நேரடியாக காணொளியில் கலந்துக்கொண்டு பேசி அவர்களின் குறைகளை கேட்கிறார் .. ஒரு தலைவன் எப்படி செயல்படவேண்டுமென அரசியல் செய்வோர்க்கெல்லாம் பாடமாய் திகழ்கிறார் .. வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் இந்த பேரிடர் காலத்தில் அவர்கள் படும் துன்பங்கள் அவர்களின் கோரிக்கைகள் தேவைகள் உதவிகள் எதுவென கேட்டறிந்து களைய முற்படுகிறார் சம்பந்தபட்ட துறைகளுக்கு கடிதமெழுதி துயர் களைய வேண்டுமென சொல்கிறார் .. தொடர்ந்து மக்களிடத்திலே உரையாடியதில் பசியோடு இருக்கிறோம் என்ன செய்வதென்றே தெரியவில்லை என மக்களின் உள்ளக் குமறலை கேட்டு பதைபதைத்து அதற்கு உடனே விடிவு காண்கிறார் ..26 நகரங்களில் மிகப்பெரிய சமயலறையை ஏற்பாடு செய்து தினம் ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்க உத்தரவிடுகிறார் .. பசியால் யாரும் இறந்தான்  தமிழகத்தில் என்ற நிலை வராமல் காத்துநிற்கிறார் ..  பெரியாரும் பேரறிஞரும் செதுக்கிய சமூக நீதியின் அடிச்சுவட்டை தலைமேல் கொண்டு தொலைநோக்கு திட்டங்களால் தமிழகத்தை மிளிர செய்த
பேரருளாளனும் எம்மை சரியான கையில் சேர்த்திருக்கிறார்கள் என்று உண்மையில் பெருமை கொள்கிறேன் ..
..
ஊடரங்கில் முழு ஊரடங்கென அறிவித்து ஒரே தினம் மக்களை தெருவில் அங்காடிகளில் நிறுத்தி இன்று சென்னையில் பெருங்கொள்ளை நோய் அதீதமாய் பரவ காரணமான அறிவுகெட்ட அரசும் ஆட்சியாளர்களும் செய்வதறியாது நிற்கும் போதும் .. திறம்பட செயல்பட்டு அருமையாக திட்டம் தீட்டி பொதுமக்களின் குறைகேட்கும் அரசனாய் உண்மையில் மக்களை ஆளுகிற தலைவனாய் தளபதி ஸ்டாலின் நிற்கிறார் ..

#அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".. 
என்றான் வள்ளுவன்..

துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளையெட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் தலைவனுக்குரிய தகுதிகளாகும்..
..
#தலைவர்_தளபதிஸ்டாலின் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment