Tuesday, July 31, 2018

பேரதிசயம்

பேரதிசயம்.. நாங்கள் தான் முன்னமே சொன்னோமே.. கலைஞர்.. பூமி கிழிந்து வந்த வினையென்று.. எதிர்ப்பிலேயே வாழ்ந்து .. எதிரிகளை ஒவ்வொன்று வீழ்த்தி நெஞ்சரத்தோடு வாழும் பேரதிசயம்.. கலைஞர் நீங்கள் நினைப்பதைப்போல வெந்ததை தின்று விதிவந்தால் செத்து போககூடியவரா.. எப்போது எங்கே எதை எப்படி கையாளவேண்டுமென்று அறிந்தவரை.. இறப்பு என்ன செய்துவிடமுடியும் .. இந்திய துணைகண்டம் கண்ட தன்னிகரில்லா தலைவர்.. இவரைப்போல வாழ்ந்தவர் யாருமில்லை அழிந்தார் அழிந்தது என்று கூக்குரலிட்டபோதும் கூட.. வீறுக்கொண்டு எழுந்த தன்னையும் தான் சார்ந்த இயக்கத்தையும் காத்தவர்.. முடிந்தது திராவிடம் என்றவர்களுக்கெல்லாம் முடிவுரை எழுதி தன்னை பெரியாரின் உண்மையான சீடனென காட்டியவர்.. வெற்றின் இறுமாப்போடு சிலர் வாழ்ந்திருக்கிறாரகள் அவர்களுக்கு தோல்வி வந்தால் சட்டென்று விழுந்து இடம்தெரியாமல் போய்விடுவர்.. ஆனால் தோல்விகளை உரமாக்கி.. வென்றுகாட்டவேண்டுமென்ற வேட்கையோடு வாழ்பவர்கள் சிலரே அவர்களில் தோல்விகளிலும் தம்மை சுற்றியே நகர்வை அமைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இல்லை ஆனால் கலைஞர் தன்னைச் சுற்றியே தமிழக அரசியலை இயங்கவைத்த #பேரதிசயம்.. .. போராளிகள் நிறைய வந்தார்கள்.. பெரியாரைவிடவா சிறந்த போராளி வேண்டும் .. ஆனால் அதிகாரத்தை அடையாமல் எதையும் சாதித்துவிட முடியாதென்ற உண்மையை உணர்ந்து தான் அண்ணா தேர்தல் அரசியலை கையிலெடுத்தார் ஆம்.. சாதி மறுப்பு சுயமரியாதை திருமணங்களை தகாத உறவென உசிசநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதுதான் சட்டபாதுகாப்பு தேவையென்பதை உணர்ந்து அதை இயற்றும் இடத்திற்கு நாம் வரவேண்டுமென்று திமுக உதயமானது.. காலம் அண்ணாவிற்கு கனியாமல் போனது.. அண்ணாவிற்கு பிறகு கலைஞரை தவிர்த்து யார் திமுக தலைமையை ஏற்றிருந்தாலும் திமுகவையே இல்லாமல் செய்திருப்பார்கள்.. கலைஞரின் தலைமை பகையிலிருந்து காத்ததோடு.. பெரியார் கண்ட கனவை நடப்பிலாக்கியது.. பெண்களுக்கு சொத்துரிமை .. அனைத்துசாதியினரும் அர்ச்சகராகலாம் இப்படி... 1970 லேயே அனைத்துசாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றியும் உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது மீண்டும் நீண்டநெடிய சட்டபோராட்டம்..அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியை தொடங்கி பயிறிசியளித்து 214 பேர் தேர்வாகிய நேரத்தில் திமுகவிடம் அதிகாரமில்லாமல் போனதும் ..ஜெயலலிதா கிடப்பில் போட்டார்.. காலம் கடந்தேனும் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்தாகிவிட்டது.. (தெய்வத்தைப் பார்ப்பனர் அர்ச்சிக்கும் நாட்டில் பஞ்சமும் நோயும் பெருகும் - திருமூலர்) .. கலைஞரை பொய் வழக்குகளால் சாய்த்துவிடலாமென்ற ஆரிய சூழ்ச்சி .. சர்க்காரியா தொடங்கி.. 2ஜி வரை .. எல்லாவற்றையும் சட்டத்தின் துணைக்கொண்டு வென்று #அறம்வெல்லும் என்பதை நிரூபித்து அசைக்கமுடியாத வலிமையோடு நிற்கிறார்.. போராட்டமே வாழ்வியலாக கொண்ட கலைஞர் ஒவ்வொருமுறையும் அதிசயக்கதக்க முறையில் மீண்டு ..இயக்கத்தை மீட்டெடுத்திருக்கிறார்..அதிகாரத்தில் இருந்த 19 ஆண்டுகளில் மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள்.. காலம்கடந்து பேசபடுவதாகவே இருக்கிறது.. இவர் முப்பதாண்டுகளுக்கு முன்பே கொண்டுவந்த திட்டங்கள் இப்போதுதான் வடமாநிலங்களில் கொண்டுவருகிறார்கள்.. இந்திய அரசியலில் பொதுவாழ்வில் அதிசயதக்க மனிதர்.. நெஞ்சுரமும் நேர்வழியும் வீழ்ந்துவிடாது காத்துநிற்கிறது.. இதுவரை கலைஞரைப் பற்றி கட்டிசமைத்த குற்றசாட்டுகள் பொய்யென .. கட்டியவர்களே களைய தொடங்கியிருக்கிறார்கள்.. குறிப்பாக இளைஞர்கள் கலைஞரை அறிய தொடங்கியிருக்கிறார்கள்.. கலைஞர் மட்டும் இல்லையெனில் வடமாநிலத்தை போல தமிழகம் தாழ்நிலையில் இருந்திருக்குமென உணர்கிறார்கள்.. இந்த கிழவனின் இருப்பு எப்படி பகைவர்களை அச்சம் கொள்ளவைக்கிறதென்று அறிகிறார்கள்.. எழுவருடமாய் ஆட்சியில் இல்லை இரண்டுவருடமாய் பேசுவதில்லை ஆனால் கலைஞரின் பெயர் உச்சரிக்காமல் பொழுது விடிவதுமில்லை சாய்வதுமில்லை.. .. #தமிழின_கண்ட_பேரதிசயம் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment