Friday, August 31, 2018
நாட்டின் கவுரவம்
ரூபாய் என்பது ஒரு தேசத்தின் நாணயம் மட்டும் அல்ல.
அது ஒரு நாட்டின் #கவுரவம். நாணயத்தின் மதிப்பு விழ ..விழ, நாட்டின் கவுரவமும் வீழ்கிறது
எங்கோ யாரோ பேசியது போல் தெரிகிறதா .. இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர்
சுஷ்மா சுவராஜ் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசினார்..
இன்றைய நிலை மிக பரிதாபகரமாக இருக்கிறது..
..
முட்டாள்கள் கையில் நாடு சென்றதன் விளைவு தேசத்தின் மதிப்பும் வெகு தாழே போய்க்கொண்டிருக்கிறது..
ஒற்றை இரவில் ₹1000..₹500 ஐ செல்லாதாக்கிய போது சில அறிவாளிகள்..? சபாஷ் புதிய இந்தியா பிறந்ததென்றும் .. சில மோடி ரசிகர்கள் ஆஹா இவரல்லவா இரும்புமனிதர்
ஒரே இரவிவ் கருப்புபணத்தை ஒழித்த கர்வயோகி என்றெல்லாம் கதைத்தனர்.. மக்கள் நடுத்தெருவில் நின்று தான் உழைத்து சிறுக சிறுக சேமித்ததை கூட எடுக்கமுடியாமல் வழியும் கண்ணீரோடு நின்ற போதும் .. ஐம்பது நாட்கள் நாட்டிற்காக பொறுத்துக்கொள்ள கூடாதா.. நாட்டை காக்க ராணுவவீரன் எல்லையில் மாத கணக்கில் நிற்கிறானே என்று ராணுவத்தில் தன் இனத்தையே சேர்க்காதவனெல்லாம் புத்தி சொன்னான்..
தன் உடல்நலிவிற்றிருந்த போதும் .. திரு.மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திற்கு வந்து தவறான முடிவை பிரதமர் எடுத்துவிட்டார் நாட்டின் பொருளாதாரம் அகலபாதாளத்திற்கு சென்றுவிடும் சிறுதொழில்கள் முடங்கும் என துள்ளியமாய் கணித்து .. கடைசியில் நாட்டுமக்கள் மாண்டுபோவார்களென்றார் ..
ஆம் எத்தனை உயிர்கள் போனது ..எவ்வளவுபேர் உடைமைகளை (தொழில்களை)இழந்து நடுத்தெருவிற்கு வந்தார்கள்
..
செல்லாதென்று அறிவிக்கப்பட்ட ரூபாய்களில் 99.3 விழுக்காடு நோட்டுகள் வங்கிக்கே திரும்ப வந்துவிட்டது .. அதாவது ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களின் கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற துணைபோனதுதான் நாம் கண்டது ..
முதன்முறையாக ஒரு முட்டாளை பிரதமராக தேர்வு செய்தமைக்காக உலகமே நம்மை பார்த்து சிரிக்கிறது.. 13,000 கோடி திரும்பவராத கருப்புபணத்திற்காக பணத்திற்காக 2,00,000 கோடி செலவு செய்த ஞான கிறுக்கனை நாம் பெற்றிருக்கிறோம்.. பொய் பேச்சை நம்பி அறிவாளிகளை வீட்டுகனுப்பியதற்கு நாடு
அவதிபடுகிறது ..
..
நாடு ..மதம் வர்ணம் மூடம் பேசுவோரிடம் சிக்கி
தன் முகத்தை இழந்து நிற்கிறது .. பாசிசத்தின் கோர பிடியில் தன் பன்முகத்தன்மையை மெல்ல இழக்கிறது இனியும் இவர்களை அனுமதித்தால்
இந்தியா சிதறுண்டு போகும் .. நாசக்காரர்கள் கையிலிருந்து இந்திய தேசத்தை காப்போம்
..
ஆலஞ்சியார்
Thursday, August 30, 2018
தளபதி..
குமுதம்.com கருத்துக்கணிப்பு நடத்தி தினகரன் தகுதியுள்ள தலைவரென சொல்கிறது ஸ்டாலினை விட தகுதியான முதலமைச்சராம்,.
பாவம் எரிகிறது வரதராஜன் வகையறாக்களுக்கு .. எங்கே திராவிடத்தின் கடைசி அத்தியாயம் கலைஞரோடு முடிந்ததென கூப்பாடு போட்டு பார்த்து திரு.ஸ்டாலினெனும் இரும்பு மனிதரை உருவாக்கி கழகத்தை வழிநடத்த இயக்கத்தை காக்க உருவாகியிருக்கிறார் என்ற உண்மையை உட்கொள்ள முடியாமல் நொண்டிக்குதிரையை பந்தயகுதிரைப்போல காட்ட நினைப்பதை எண்ணி சிரிப்பு வருகிறது..
..
எவ்வளவு வன்மம்.. இருக்காதா பின்னே
அண்ணாமலை செட்டியாரை சரிகட்டி குமுதத்தை ஆட்டையபோட நினைத்ததை தடுத்து .. அவரது வாரிசு ஜவஹர் பழனியப்பன் உரியதை தந்துவிட்டு ரிப்போர்ட் இதழோடு போய்விடுங்களென கலைஞர் சொன்னதை .. அன்று மொத்தமும் கிடைக்காமல் போய் குமுதம் இதழை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வழக்குகள் தொடுத்து .. அண்ணாமலை வாரிசை ஏமாற்ற நினைத்ததை தடுத்ததின் கோபம் இருக்காமலா போகும்..
திரு.அண்ணாமலை செட்டியாரின் பலவீனத்தை பயன்படுத்தி பார்த்தசாரதி கையகபடுத்தியதும்
ஜவஹர் வெளிநாட்டில் டாக்டராக சென்றதும் ஒட்டுமொத்த குமுதம் நிர்வாகமும் பார்த்தசாரதியின் கையில் வந்தது .. ஆம் திறக்கபடாத கதவுகளை ஆயுதமாக கொண்டவர்கள் இப்போது பதறுகிறார்கள் .. எங்கே இருப்பதும் சொத்தின் சொந்தகாரனிடமே போய்விடுமோ என்று பதறுவது தெரிகிறது..
..
திமுக தவிர்க்க முடியாத தமிழகத்தின் அரசியல் கட்சி .. எத்தனையோ இடர்பாடுகள் வந்தபோதும் அதையெல்லாம் கடந்து இன்று மக்கள் நம்பிக்கை கொள்கிற கட்சியாக திகழ்கிறது .. திரு.ஸ்டாலின் கம்பீரான தலைவராக கட்சியிலும் மக்களிடமும் தெரிகிறார் அனைத்துதரப்பினர் ஏற்றுக்கொள்கிற தலைவராக நிதானம் அரசியல் நேர்மை நாகரீக செயல்பாடுகளால் உயர்ந்து நிற்பவரோடு ..
எதற்குமே லாயக்கில்லாதவரை ஒப்பிடுவதிலிருந்தே தீராத பகை தெரிகிறது
பாசிசத்தின் சூழ்ச்சி வெளிப்படையாகவே இந்த கருத்துகணிப்பென்ற பெயரில் வெளிப்படுகிறது ..
..
யாரிந்த தினகரன்
அதிமுகவிலிருந்தே விரட்டபட்டு .. வழக்குகளுக்காக மத்தியில் ஆள்போரிடம் அஞ்சி கேட்காமலேயே ஆதரவு தந்து சிறியதொரு வட்டத்திற்குள் செயல்படுபவர் காசு கொடுத்து ஆட்களை திரட்டி .. திருட்டுபுத்தியில் குறுக்குவழியில் ₹20 டோக்கன் கொடுத்து நப்பாசை காட்டி வெற்றி பெற்றதால் தலைவனாக முடியாது .. தினகரனை இணைத்து பேசுவதே எமக்கு இழுக்கு .. காசு கிடைக்கிறதென்பதற்காக குமுதம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சரியல்ல .. அண்ணாச்சியின் கைகளிலிருந்து குமுதம் போன பிறகு திராவிடத்திற்கெதிரான போக்கும் கலைஞரை அவர்தம் குடும்பத்தை வசைபாடுவதும் குறிப்பாக கேவலப்படுத்துவமாகவே தலையாகபணியாக கொண்டு செயல்படுகிறது ..
..
எங்கள் எதிரிக்கென்று தகுதிகள் வேண்டும் அது நிச்சயமாய் தினகருக்கில்லை..
..
ஆலஞ்சியார்
Wednesday, August 29, 2018
மெரினா
அதிகம் பேச விட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது .. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதைவேண்டுமானாலும் பேசு என்று நாம் கொஞ்சம் அதிகமாகவே அனுமதித்துவிட்டோம்,.. கண்டதுகள் என்ன கதைக்கிறோமென்று தெரியாமல் உளறிவைக்கிறது..
..
மெரினா ..
திராவிட சுடுகாடாம் .. இங்கே புதைக்கப்பட்டடிருப்பவர்கள் .. இந்த திராவிட நாட்டை இந்திய துணைக்கண்டத்திலிருந்து மாற்றி .. புதியதொரு சிந்தனையை விதைத்தவர்கள்.. சுயமரியாதையை ஊட்டி மானமொன்றே பெரிதென வாழ வகை செய்தவர்கள் .. எதையும் போராடி பெறு என்று உரக்க சொல்லிவிட்டு சென்றவர்கள் இன்றைக்கு நீ பெற்றிருக்கிற உரிமைகள் அனைத்தும் முன்பு உனக்கு மறுக்கபட்டவைகள் .. கல்வி வேலைவாய்ப்பு என எதிலும் உன்னை உள்ளேயே விடாமல் அப்பன் தொழிலை பாரென்றவனிடம்.. நீ பார்ப்பு தொழில் பாரென்று கேட்க வைத்தவர்கள் .. விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்தவர்கள் .. மக்கள் வாழ்வில் ஒளியேற்றியவர்கள் .. மானமும் அறிவுமே மனிதர்கழகென்ற பேராசானின் வழியில் தமிழகத்தை வழிநடத்தியவர்கள் .. சிலர் இங்கே தவறான பாதையை வகுத்து பழி சுமந்திருந்தாலும் கடைசிவரை திராவிடத்தை கைவிட தயாராகவில்லை ..காரணம் இம்மண்ணில் இதை மீறி எது செய்தாலும் மக்களால் புறக்கணிக்கபடுவார்கள் என்றறிந்து அதன் சுவடுகளிலேயே பயணித்தவர்கள்..
இங்கே .. அண்ணாவும் கலைஞரும் உறங்குவது
சில பாசிச சித்தாந்தவாதிகளுக்கு வயிறு எரிகிறது.. அவர்களின் அதிகாரத்திற்கு அடிபணிந்து ..எங்கே வழக்கு விசாரணை சிறை என்று காலம் முழுவதும் களி திங்க நேரிடுமோ என அஞ்சுகிற சீமான் போன்ற அரைகுறை மனநிலைபாதிக்கபட்டவர்கள் புலம்பகிறார்கள்..
..
பிணத்தை வைத்து பிச்சையெடுக்கிறவர்கள் ஈழம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ..மேலைநாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிற இவனை போன்றவர்களை ஆரம்பத்திலேயே பல்லை பிடிங்கிருக்கவேண்டும் பெரியாரை விமர்சித்த போதே.. கலைஞர் பெருமகனை சிறுமைபடுத்த எண்ணிய போதே தக்க பதிலடி தந்திருந்தால் இன்றைக்கு வெறி கூடி குரைத்திருக்கமாட்டார்..
இளைஞர்கள் உரக்க கத்தி 60,000 ஆனைகளென புருடாவிட்டு வரலாற்றை சரியாக அறியாமல் கதைத்து .. தினம் ஒரு பொய் என பார்பன கும்பலை மகிழ்வித்து தம் மீதான வழக்குகளிலிருந்து தன்னை காத்துக் கொள்ள இவன் பேசுகிற பொய்பேச்சுக்கள் எல்லை மீறி செல்கின்றன .. இவனுக்கெல்லாம் பதில் தரவேண்டுமா என்று நினைப்பதுதான் இவரை போன்றவர்களின் வரம்பு மீறலுக்கு காரணம் ..
..
கொஞ்சகாலம் இவரைப்போன்றவர்கள் வெளியில் நடமாடாமல் பார்த்துக்கொண்டால் போதும் .. அடங்கி ஒடுங்கி போவார்கள் கொள்கைப் பிழைகள் .. பிழைப்பிற்காக பிணம் தின்பவர்கள் இவர்களால் இந்த தமிழ் சமூகம் ஒருதுளி நன்மை கூட அடைந்ததில்லை.. இவர்களை இன்னமும் இப்படியே பேச அனுமதிப்பதா என்பதை தி.மு.கழகத் தலைமை முடிவு செய்யவேண்டும் ..
..
மெரினா கடற்கரை திராவிட சித்தாந்தவாதிகள் உறங்குமிடம் .. திராவிட தேசத்தை செதுக்கிய சிற்பிகளின் உறைவிடம் மெரினா எமது நினைவுகளின் பாதுகாப்பிடம் ..
மெரினா எமது சுற்றுலாதளம் ..
மெரினா எமது சித்தாந்த சுவடுகளை தாங்கி நிற்குமிடம் ..
மெரினா தமிழர்களின் களஞ்சியம்..
மெரினா எமது நிலம் ..எமது உரிமை..
மெரினா எம் இனத்தின் சுவடுகளை தாங்கிநிற்குமிடம்
..
ஆலஞ்சியார்
Tuesday, August 28, 2018
தலைவராய் தளபதி
தந்தை பெரியார் கற்றுத் தந்த சுயமரியாதைக் கொள்கையில் இருந்து நாம் என்றும் பின்வாங்கக் கூடாது... தலைவர் தளபதி...
...
மிக தெளிவாக இதுதான் எங்கள் கொள்கை எங்கள் சித்தாந்தம் என தெளிவாக பொட்டில் அடித்தாற்ப்போல சொல்லியாகிவிட்டது திராவிட இயக்கம் எதற்காக தொடங்கப்பட்டதோ..
எதற்காக அரசியல் அமைப்பில் சட்டமியற்ற தேர்தல் அரசியல் தேவையென்று தி.மு.கழகம் தோன்றியதோ அந்த அடிப்படையிலிருந்து சற்றும் மாறாமல் சமூகநீதிக்காக .. தமிழினத்தின் மீதான தொடர்ந்து வரும் பகை விரட்ட. மக்கள் நலன் ஒன்றே உயிர்மூச்சாய் கொண்டு செயலாற்ற இதோ புதியதொரு தொடக்கத்தை தளபதி அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்..
..
நிறைய சந்தேகங்களை சிலர் வேண்டுமென்றே பரப்பி திமுகவை பலவீனமடைய செய்யும் செயலை தொடர்ந்து செய்துவரும் வேளையில் .. நாடும் மக்கள் இன்னல்களை களைய மிகப்பெரிய மாற்றத்தை .. சமூகநீதி மண்ணிலிருந்தே தொடங்க வேண்டுமென்ற யதார்த்தத்தை உணர்ந்தவராக .. நாடு முழுவதும் காவியை பூச நினைக்கும் மோடி அரசிற்கெதிராக .. போர் பிரகடனத்தை செய்திருக்கிறார் .. நாடு எதிர்பார்த்த நல்ல செய்தி இது.. தளபதியிடம் எதிர்பார்த்த ஒன்று தான் .. கலைஞரின் வார்ப்பு தவறாகாது என்று அறிவோம் .. தலைவராக பொறுப்பேற்று முதல் பேச்சிலேயே தெளிவு படுத்தி .. எங்கள் பாதை இதுதான் என ஊருக்கு சொன்ன செய்தி..
எமது இயக்கத்தின் நான்காம் தலைமுறை மிக துடிப்போடு முன்னெப்போதுமில்லாத அளவிற்கு செயல்படுமென்ற சேதி சொல்கிறது இதுவரை பார்த்த தளபதி வேறு இனி பார்க்க போகும் தலைவர் வேறு .. கொள்கையில் கிஞ்சுற்றும் விட்டுவீழிச்சி இல்லையென்று பகைவர் பதற பறைச்சாற்றியிருக்கிறார்..
“ எம்முளும் உளன் ஒரு பொருநன்!
திங்கள் வலித்த கால் அன்னோனே!!”
..
எதற்காக இந்த இயக்கம் .. ஏன் கட்டமைக்கபட்டது இதன் லட்சியம் கொள்கை என்ன.. என்பதறிந்து யார் நம் பகைவர் என்ற தெளிவோடு மிக நிதானமாக அதே நேரம் உறுதியோடு மிக நேர்த்தியாக செயல்படுவதை காட்டி தலைமைப் பொறுப்பேற்றவுடன் தான் நிகழ்த்திய முதல் உரையில் மக்களுக்கு சேதியாக சொல்லியிருக்கிறார்.. இதோ இதுவரை பார்த்த ஸ்டாலின் அல்ல நான் திராவிட மரபணுகளோடு கனவுகளை நிறைவேற்ற புதிதாய் பிறந்திருக்கிறேன்
இனி புதியவனை காண போகிறீர் என்றார்.. ஆம்
பெரியாரின் ஒளியில் அறிஞர் அண்ணாவின் வழியில் கலைஞரின் பயிற்சியில் .. நாடும் எம் இனமும் நலம் பெற .. சமதர்ம சமுதாயம் அமைத்திட இதோ.. சமூகநீதி நாட்டில் இருந்து புதியதொரு சூரியன்.. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வெளிச்சம் தர உதயமாகியிருக்கிறது..
கிழக்கு வெளுத்தது ..கீழ்வானம் சிவந்தது..
புதியதொரு விடியல் தொடங்கியது ..
#உதயசூரியன் எழுந்தான்..
#DMKThalaivarStalin ..
..
ஆலஞ்சியார்
Monday, August 27, 2018
திமுக..
என்னை கட்சியில் இணைக்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.. அழகிரி.
உண்மையில் பரிதாபமாக இருக்கிறது அழகிரி..
அஞ்சான்நெஞ்சன் அழகிரி பெயரை உனக்கு சூட்டியபோது கலைஞர் என்ன நினைத்திருப்பார் என தோன்றியது.. விதைத்தெல்லாம் முளைப்பதில்லை முளைத்ததெல்லாம் சுவைப்பதில்லை..
..
அழகிரியின் இன்றைய பேச்சு விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு கதைப்பதாக தெரிகிறது .. கையாலாகாததனத்தை மறைக்க தற்கொலை செய்துக்கொள்வேனென மிரட்டிவதைப்போல அழகிரியின் செயல்பாடு இருக்கிறது பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத ஒருவர் எந்த தகுதியின் அடிப்படையில் உரிமை கோருகிறார்.. நாளை நீதிமன்றம் சென்று கட்சி கொடியையோ சின்னத்தையோ ஊர்வலத்தில் பயன்படுத்த கூடாதென்று தடை வாங்கினால்
பரிதாபமாய் நிற்க வேண்டி வரும்.. கேலிக்குள்ளாக நேரிடும்
ஒரு பொதுக்குழு உறுப்பினர் கூட ..உடன் வர தயாராக இல்லை உம்மை உசுப்பிவிட்டோர் கூட கைகழுவ தொடங்கிவிட்டார்கள்.. எந்த பதவியும் வேண்டாம் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளுங்களென கெஞ்சி பார்த்தும் பலனில்லை என்றவுடன் .. தலைகேறிய சூடு ..பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் பேசி சிரிப்பை வரவழைக்கிறது.. மகா கேவலம்
..
தளபதி மிக சரியாக செயல்படுவதாகவே நினைக்கிறேன் ..அழகிரி போன்றோரை திரும்ப அழைத்தால் கட்சிக்கு கெட்ட பெயர்தான் வருமே தவிர நல்ல ஜனநாயக முன்னெடுப்பு தோற்றுபோகும் .. நிதானமாக மக்கள் செல்வாக்கோடு அதிகாரத்திற்கு வரவேண்டுமென்று தெளிந்த நீரோடை போல அரசியலை வடிவமைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில்
அழகிரியை போன்றவர்கள் அரவணைப்பதென்பது படுகுழியில் விழுவதற்கு சமம்.. முரட்டு பிடிவாதமும் திமிரும் தானென்ற அகந்தையும் கண்டதால் தான் இதுவரை கட்டிகாத்த பேரியக்கம் புதைக்குழிக்குள் செல்வதை விரும்பாமல் அழகிரியை நீக்கி .. கழகத்தை காப்பாற்றி தளபதியின் கைகளில் தந்திருக்கிறார் கலைஞர் பெருமகன்..
அழகிரி அவர்களே...ஓரமாய் ஒதுங்கி நில்லுங்கள்.. மெல்ல விலகி செல்வது தான் மரியாதையாக இருக்கும் இல்லையெனில் தமிழ் சமூகம் முன் அசிங்கபட நேரிடும் மாபெரும் தலைவரின் தலைவரின் மகன் இப்படி கேவலப்பட்டு நிற்பது பார்க்க சசிக்காது..
..
இதுவரை தளபதியின் மௌனம் நமக்கு நிறைய சொல்கிறது.. பேசி பெரியாளாக்க வேண்டாம்..அழகிரி நமக்கு தகுதியானவரில்லை செல்லாதகாசை வைத்துக்கொண்டு எதையும் அடையமுடியாது ..
கத்தி கத்தி கடைசியில் ஓய்ந்து போய்விடுவார் ..
மக்கள் விரும்பாத எவரும் அரசியலில் நிற்க முடியாதென்ற உண்மை அறிந்ததால் பேராசிரியர் பெருந்தகையின் வழிகாட்டுதலோடு நிறைவாக பணி செய்ய நிமர்ந்த நெஞ்சோடு நேர்வழியில் தமிழகம் காக்க தமிழினப் பெருந்தலைவரின் கனவுகளை நினைவாக்க.. மாபெரும் சுயமரியாதை இயக்கத்தை வழிநடத்த நான்காம் தலைமுறை தலைவனாய் வருகிறார் ..
..
தமிழகமே நெஞ்சுநிமிர்த்தி கைதட்டி வரவேற்கிறது ..
#DMKThalaivarstalin
..
ஆலஞ்சியார்
Sunday, August 26, 2018
தலைவா..
தலைவர்..
நீண்டதூர அரசியல் பயணித்தில் பல்வேறு படித்தளங்களை கடந்து .. மாபெரும் இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கிறார்.. எதிரில்லாத நிலையில் தலைவர் பொறுப்பை ஏற்கும் பாச தளபதிக்கு முதலில்நம் வாழ்த்துகள்
..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை முறைப்படி அதிகாரம் ஏற்கிறது நம் முன் நிற்கும் சவால்கள் .. இயல்பாக ஏற்படும் தடங்கல்கள்.. எதிரிகளால் ஏற்படும் சூழ்ச்சிகள் .. துரோகிகளால் வந்துசேரும் பழிகள் என நிறைய கடக்கவேண்டியிருக்கிறது .. மிகப்பெரிய ஆளுமையை இழந்து நிற்கிற வேளையில் மிக சிறப்பாக செயல்படுவாரென்ற நம்பிக்கையில்
தளபதியை நம்பி நிற்கிறோம்..
கொள்கையில் மாறாத போக்கும் வழிநடத்தும் போதும் .. வழி நடக்கும் போதும் திராவிட சித்தாந்தத்தின் சுவடுகளோடு .. பெரியார் தந்த ஒளியில் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் செப்பனிட்டு அமைத்த பாதையிலிருந்து பிரிந்து செல்லாமல் .. சமூகநீதியின் ஊற்று வற்றாமல் ..நடந்திட ..நம்மை நடத்திட வேண்டுமென்ற அவா சிறு கவலையோடு தொடர்கிறது..
..
கட்சியின் பொருளாளராக திரு.துரைமுருகன் தேர்வாகிறார் ..முதலில் நமது வாழ்த்தை சொல்வோம்..
நீண்டகாலம் கட்சியில் செயலாற்றி முதன்மைச் செயலராக தன்னை உயர்த்திக் கொண்டவர் அண்ணா கலைஞரின் நிழலையொட்டியே தமது அரசியலை கொண்டுசென்றவர் அந்த பதவிக்கு பொறுத்தமானவர்களில் ஒருவர் என்பதில் மாற்றுகருத்தில்லை ..
கலைஞரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர்
தளபதியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர் ஆனால் அவரின் சமீபத்திய நடவடிக்கைகள் அத்தனை ரசகரமில்லை.. மூத்த அரசியல்வாதியெனினும் இன்னும் முதிர்வடையைாத கிண்டல் கேலிப் பேச்சுகளை அதிகம்,.. பாஜகவைப் பற்றிய இவரது கணிப்பு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.. பாஜகவை எதிர்கட்சியே தவிர எதிரி கட்சியில்லையென்கிறார் .. இவரது இந்த பேச்சு திராவிட சித்தாத்தந்தின் அடித்தளத்தையே அசைக்கும் பாசிசத்திற்கு எதிராகதான் திராவிட இயக்கம் தோன்றியது ..
பார்ப்பனரை தவிர மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்காக தான் அவர்களின் உரிமையை மீட்டெடுக்கதான் திராவிட இயக்கமே தோன்றியது.. ஏன் பாஜகவோடு கலைஞர் கூட்டணி அமைக்கவில்லையா என கேள்வி எழும் .. அதற்கு கலைஞரின் பதிலையே தருகிறேன் "ஒட்டகத்தின் கழுத்தை நிமிர்த்திவிடலாமென நினைத்து ஏமாந்தேன்"..என்றார் .. பாஜகவின் கொள்கையென்பதே ஆர்எஸ்எஸின் கொள்கைகளை செயல்வடிவம் தர ஏற்படுத்திய அமைப்புதான்.. சமூகநீதிக்கெதிராக தான் பாஜகவின் செயல்திட்டங்கள் இருக்கின்றன/இருக்கும் .. பாஜக நமக்கெதிரான
எதிரான கொள்கையை கொண்டதென்பதை துரைமுருகனுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை.. எதிர்த்து நிற்பவர்கள் நம்மோடு இணைய கூடும் அது தேர்தல் அரசியலில் ஒரே கோட்பாட்டை இனத்தின் மீதான கொள்கைப்பிடிப்பை கொண்டவர்கள் இணையலாம்.. ஆனால் கொள்கை எதிரிகளோடு நம்மை நம் இனத்தை நமது சித்தாந்தத்தை அழிக்க அல்லது ஒடுக்க நினைப்பவர்களோடு.. நமது உரிமையை பிடிங்க நினைப்பவர்களோடு நம் மிதானபோக்கு நம்மையே நலிவடையச் செய்யும்.. நம் குழந்தைகளின் எதிர்காலத்தை சுரண்ட நினைப்பவர்களை எதிரிகளாகதான் கணக்கில் கொள்ள வேண்டும் இந்த தெளிவிருந்தால் போதும்..
தளபதி அவர்கள்
மிகப்பெரிய பொறுப்பை தந்திருக்கிறார்.. நல் வழிகாட்ட வேண்டுமே தவிர தவறான கொள்கை முடிவுகளை எடுக்க வழிசெய்யகூடாது .. தளபதியின் கரத்தை பலப்படுத்த துரைமுருகன் துணை நிற்பாரென இயக்கம் நம்புகிறது..
..
தளபதி மீதுள்ள நம்பிக்கை.. நாடும் மக்களும் அசைக்கமுடியாத பற்றோடு.. நல்லதை செய்வாரென நம்பியிருக்கிறார்கள் தி.மு.கழகத்தின் இரண்டாவது தலைவராக ஏகமனதாக தேர்வாகியிருக்கிறார்.. தளபதி முன்பு பேசியதை இப்போதும் நினைவிருக்கிறது..
"அறிஞர் அண்ணாவை போல் அறிவார்ந்தவனாக இல்லாமல் இருக்கலாம்.
கலைஞரைப் போல் பல்துறை வித்தகனும் அல்ல,ஆகவும் முடியாது.
ஆனால் தொண்டர்களின் உணர்வுகளால் ஊக்கங்கொண்டு முழுஅளவில் உழைப்பினை நாட்டிற்காக வழங்க என்னால் முடியும்.
..
நம்புகிறோம் தளபதியாரே..
நல்லதையே விதைக்கிறீர்
நல்லதே விளையும்..
வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்
Saturday, August 25, 2018
தளபதி ...
நிர்கதியாய்..நிற்கிறார் அழகிரி
..
அறிவின்மை.. கோபம்,அவசரபுத்தி,சொல்பேச்சு கேளாமை மூத்தோர் சொல்லை மதிக்காமல் தான்தோன்றித்தனமாய் தன்னால்தான் எல்லாம் என்ற அகந்தையில் சென்றதால் கேட்பாரற்று யாருமே கண்டுக்கொள்ளாத நிலையில் அழகிரி ..
..
மிகப்பெரிய அரசியல் ஆளுமையின் மகன் இந்தியாவே உற்று கவனிக்கிற அரசியல் சித்தாந்ததை உருவாக்கி தருகிற எதிர்ப்போரும் நிலைகுலைய செய்கிற மூத்த அரசியல்வாதியின் மகன் .. தந்தைச் சொல்லை மீறி தறிகெட்டுப்போய் வழிதெரியாமல் நிற்கும் அவலம் அசிங்கமாக இருக்கிறது.. அழகிரியை சிறுமைபடுத்தி இதோ பார் திராவிட சித்தாந்த பேராளுமையின் வாரிசு என கேலிபேசும் அவலநிலையை .. எதிரிகள் உள்ளுக்குள் சிரிப்பதேனோ விவரமறியா அழகிரிக்கு அவர் மகனுக்கும் தெரியவில்லை..
என் பின்னால் உண்மையான தொண்டர்கள் என்று சொன்னபோதே புரிந்தது பின்னால் யார் இருந்து இயக்குகிறார்கள் என்று.. கலைஞர் வெறுத்த விரட்டிய ஒருவரோடு .. எப்படி கலைஞரை நேசித்த விரும்பிய பின்தொடர்ந்த உடன்பிறப்புகள் செல்வார்கள் .. இது கூட தெரியாமல் என் பின்னால் உண்மையான தொண்டன் என்கிறார் .. செல்கிறவன் உண்மையான இயக்க தொண்டனாக இருக்கமுடியாது ..கொள்கை பிடிப்புள்ளவர்களோ .. கலைஞரை கழகத்தை நேசித்தவர்களோ உண்மையானவர்களோ நிச்சயமாக அழகிரி பின்னால் செல்லமாட்டார்கள் .. அது ஏனோ அவருக்கு புரியாமல் போனது..
..
யாரேனும் வருவார்களென காத்திருந்து உறுமீன் வரும்வரை காத்திருந்த கதையாய் யாருமே வராமல் போக .. தூது அனுப்புகிறார் கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் பதவி எதுவும் வேண்டாம் என செய்திகள் கசிகிறது ..
கலைஞரால் துரத்தப்பட்ட கலைஞர் அரசியல் செய்த தப்புகணக்காய் போன திமுக தோற்கும் என உளறிக்கொட்டிய இந்த விவரகேடை சேர்ப்பதென்பது திராவிட இயக்கத்திற்கு பெரும் இடைஞ்சலாய் அமையும் .. எக்காலத்திலும் நம்பிக்கைக்குரியவராய் இருக்கமாட்டார்..
சொத்தையைான பகுதியை வெட்டியெறிந்து விட்டுதான் சமைக்கவேண்டும் இல்லையெனில் கெட்டுபோகும் .. வாய்ப்புகள் தந்தும் தன் தகுதியை வளர்த்துக்கொள்ளாத .. வீண் விளம்பரங்களால் வாய்சவடால்களால் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளலாமென்ற அறியாமையை இந்த அறிவுடை இயக்கம் ஏற்றுக்கொள்ள தேவையில்லை.. நிதானமில்லாத முன்யோசனையற்ற அனுபவமோ பக்குவமோ இல்லாதவர் இப்போதைக்கு தேவையில்லை..
..
தளபதி தலைவராக எல்லா மாவட்டங்களும் முன்மொழிந்திருக்கின்றன.. பொருளாளர் யாரென்பது இரண்டுநாட்களில் தெரியும்..கொள்கையாளராய் .. திடமான உறுதியான செயல்பாட்டாளராய் கொள்கையில் கிஞ்சுற்றும் ஏற்றமிறக்கமில்லாத பிடிப்பானவராய் தளபதியின் கரம்கோர்த்து செயல்படும் மாவீரராய்.. எதற்கும் அஞ்சாத நேர்கொண்ட பார்வையுடவராய் வரவேண்டும் என்பதே எம் அவா... பாசிசத்திற்கு வெண்சாமரம் வீசாத நேரிய பார்வையுடையவராய்.. பகை எதுவென அறிந்தவராய்.. எதிரியை இனங்காணும் அறிவுடையோராய் ..வேண்டும் அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு வந்தால் பெரும் மகிழ்ச்சி.. ஜனநாயக இயக்கத்தின் வேர் ஆழ ஊடுறிவி இருப்பதால் நல்லவரை, திறமையானவரை,தேர்வு செய்யும் எமது இயக்கம்.. நம்பிக்கை வளர்ப்போம்
..
நல்லதை விதைப்போம்
..
ஆலஞ்சியார்
Friday, August 24, 2018
கலைஞர் நினைவேந்தல்
கலைஞர் நினைவேந்தல்..
திமுகழகம் சார்பில் நத்தப்படும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இந்திய அரசியல்கட்சி தலைவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்...
பாஜக தலைலர் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து சிலர் கோவபடுகிறார்கள் அவர்களின் கோபத்தை மதிக்கிறோம் .. இந்தியளவில் அரசியல்கட்சியை சேர்ந்தவர்களை அழைக்கும் போது அகில இந்திய காங்கிரஸ்.. மா.கம்யூனிஸ்ட் இந்திய கம்யூ. திரிணாமல் காங்கிரஸ் RJD .. .. என பல்வேறு இந்திய தலைவர்களை அழைக்கபடுகிறார்கள்.. கொள்கை எதிரிகளை எதிர்மறை கருத்தாளர்களை .. இன பகைவர்கள் என அனைத்துதரப்பினரும் பங்கேற்க வேண்டுமென்பதால் .. கட்சிமாச்சரியம் தாண்டி அழைக்கபடுகிறார்கள்..
..
பேரறிஞர் அண்ணாவிற்கு நினைவாஞ்சலி செலுத்தும்போது .. அண்ணாவின் தலைவர் பெரியார் மட்டுமல்ல ராஜகோபாலச்சாரியையும் இந்திராவையும் அழைத்து நடத்தியதை நினைவுகூறவேண்டியிருக்கிறது.. மாற்றுகட்சி தலைவர்களை அழைத்து .. மறைந்த தலைவரின் புகழ்பாட வைப்பது நல்ல நாகரீகம்.. அது அரசியலில் வினையாற்றாமல் இருக்கவேண்டும் .. பாஜகவை எக்காரணம் கொண்டும் பாஜகவோடு கூட்டணி இல்லையென்ற தளபதியின் உறுதிமொழியை நம்புவோம்..
..
கலைஞர் என்ற அரசியல் மேதையை குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவைக்கமுடியாது அவரது அரசியல் ஆளுமை தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் படிக்கபடவேண்டும் பாடமாக்கப்பட வேண்டும் .. தமிழக தலைவர் என்ற வட்டத்தை உடைத்து இந்திய பேரளுமை என விரித்து புகழ்பரப்ப .. உலகின் இவரைப்போல பல்துறைசார்ந்த வல்லுமைபடைத்த திறமையான தலைவர் இல்லையென்ற நிலையை எடுத்தியம்புவது நமது கடமையாகும் .. உலகின் தலைசிறந்த அரசியல் ஆளுமைகளில் ஒருவரென்ற பறைசாற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு பயன்படவேண்டும்.. வாழும் காலம்வரை கருத்துசுதந்திரத்தை காத்துநின்றவர் கலைஞர் பெருமகன்.. எதிரிகளும் பகைவர்களும் ஏன் துரோகிகளும்
பேசி புகழ இந்த அமர்வு வழி செய்யும் ...
..
வரட்டும் வந்து கலைஞர் புகழ்பாடட்டும்..
தேர்தல் அரசியலில் பாசிசசத்தை.. இந்தியாவின் ஈரத்தை உறிஞ்சும் காவிய சிந்தனையை.. சமூகநீதிக்கெதிராக சதிசெய்யும் பார்பனீயத்தை.. தமிழர்நலன்களை அடகுவைக்கும் காவுகேட்கும் துரோக கும்பலை வீழ்த்துவோம் அதில் சமரசமே இல்லை.. தளபதி அவர்கள் சொன்னதைப்போல இனி.. பாஜகவோடு எப்போதும் உறவில்லை..
இனி எந்தகாலத்திலும் பாஜகவோடு கூட்டணி இல்லை.. நினைவேந்தலுக்கு
பிஜேபியிலிருந்து ஒருவர் வருகிறார் அவ்வளவுதான்..
..
தளபதியை நம்புவோம்
..
ஆலஞ்சியார்
Thursday, August 23, 2018
எதிரிகளே கேளீர்
களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே"
போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்..
..
ஆம்..
பெருவீரன் கையில் கழகம்..
தளபதி படை தயாராகிறது.. பகைவர்களே ஓடியொளிந்துக் கொள்ளுங்கள்.. களம்காண எண்ணுவீர்களாயின் இருப்பும் அவிழ்ந்து போகும்.. இனி அஞ்சுவதில்லையென அஞ்சுகத்தின் பேரன் தயாராகிறான்.. நாடு விரும்பும் தலைவனாய் .. நல்லதொரு விடியலை தர.. நாடும் இயக்கமும் நம்புகிற தலைவனாய் வருகிறார் தளபதி..
..
ஒப்பாரி வைப்போரே.. ஊதுகுழலாய் சங்கிகள் குரல் ஒலிப்போரே.. பாசிசத்தின் அடிவருடிகளே..
திராவிடத்தின் பெயர் சொல்லி தீங்கிழைக்கும் கயவர்களே.. இது உண்மையான திராவிடத்தலைவன் உதயமாகிறான்
தமிழர் நலம் காக்க.. தமிழனின் போர்வாளாய்..
தமிழர்படை நடத்தும் தளபதியாய்.. பகையறுக்க தயாராகிறார்..
எதிரிகளே.. பலமறியாது மோதாதீர்.. இயக்கத்தை விட்டே திராவிட பெருங்கிழவனால்
விரட்டப்பட்டவர்களை வைத்து புதிய சூழ்ச்சி செய்ய நினைத்து மூக்குடைந்து போகாதீர்
..
கலைஞரிடம் நேரடி பயிற்சிப்பெற்ற தளபதியாய்
நீண்ட நெடிய அனுபவமும் தேர்ந்த முதிர்ச்சியும் நன்நெறியும்.. விடா முயற்சியும் எதிரியை சமயமறிந்து வீழ்த்தும் விவேகியாய்.. தலைநிமிர்ந்து நிற்கிறார்.. அகந்தையில்லா நற்குணமாய் ..அரவணைத்து செல்லும் பாங்கோடு.. எதிர்த்து நிற்போரின் சிம்மசொப்பனமாய் திகழ்கிறார்..
மீண்டும் சொல்கிறேன் புறநானூற்று சொல்லெடுத்து..
"எம்முளும் உளன் ஒரு பொருநன்!
திங்கள் வலித்த கால் அன்னோனே!!”
..
ஆலஞ்சியார்
Wednesday, August 22, 2018
தளபதி
கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் இருக்கின்றன .. அதை பிறகு சொல்கிறேன்.. அழகிரி..
..
கலைஞருக்கு நல்ல தொண்டனாகவும் இல்லை தகப்பனுக்கு நல்ல மகனாகவும் இல்லை .. கலைஞர் எதிலும் வெளிப்படையானவராக இருந்திருக்கிறார்.. கட்சியில் இருந்து மகனென்று பாராது வெளியேற்றியதை அவரே நேரடியாக ஊடகங்களை சந்தித்து சொல்லியிருக்கிறார்.. வீட்டிற்குள் வருவதை எதிர்க்காமல் ஆனால் தன்னை சந்திப்பதை விரும்பாமல் தாயை பார்க்க மகன் வருவதை தடுக்க விரும்பவில்லையென்று மிக தெளிவாக சுட்டிகாட்டி .. தனக்கு குடும்பத்தை விட கட்சிதான் பெரிதென மக்கள் அரங்கில் அறிவித்தவர்..
அவர் தன்னிடம் கடைசியாக பேசிய வார்த்தைகளென சொல்லி sympathy அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.. கலைஞரின் கடைசி காலத்தில் மிகவும் மனஉளைச்சல் தந்தவர் தனக்கு அதிகாரம் பதவி வேண்டுமென்பதற்காக எதையும் செய்ய துணிந்தவர்.. சொந்த சகோதரனையே .. பெற்ற அப்பன் முன்பு இன்னும் மூன்று மாதத்தில் செத்துவிடுவானென சொல்லி வேதனையடைய செத்தவர் .. பதவி தந்தும் அதை ஒழுங்காக திறமையாக நிர்வகிக்க தெரியாத கையாலாகாதவனாய்... கலைஞர் விதைத்து விளைந்ததில் சொத்தையாகிபோனவர்.. இவர் எந்த அடிப்படையில் திமுகவை குறை கூறுகிறாரென தெரியவில்லை.. திமுகவில் சொந்த கொண்டாட இது குடும்ப சொத்தல்ல என்பதை உணரவேண்டும்..
..
திமுகவிலிருந்து கலைஞராலேயே விரட்டப்பட்ட ஒருவரை ஆசைகாட்டி .. திமுகவை நிலைகுலைய செய்யவேண்டுமென்பதற்காக திராவிட அரசியலின் தொடர்ச்சிக்கு முட்டுகட்டை போடவேண்டும் .. ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வீழ்த்தபட்ட பாசிச சக்திகளின் பின்னால் ஒளிந்துக்கொண்டு பதவியெனும் பேராசைக்காக பெற்றவனையே தூற்ற நினைக்கிற கேடுகெட்ட பிறவியாக நிற்பது கண்டு பச்சாதாபமே வருகிறது.. திறமையை வளர்த்துகொள்ள தெரியாமல் .. தகப்பனின் நிழலில் சுகம்கண்டு .. அதே தகப்பனுக்கு நேரே பகைகொண்டு கழுத்தறுக்க நினைத்த துரோகத்திற்கு மன்னிப்பை வழங்கமாட்டார்கள்..
திமுக தொண்டர்கள் அழகிரியை ஏறக்குறைய புறந்தள்ளி..மறந்துபோய்விட்டார்கள்.. ஒரு பொதுக்குழு உறுப்பினர் கூட ஆதரிக்கவில்லை.
கட்சியிலிருந்து நீக்கபட்ட பழைய விசுவாசிகளை கூட்டி.. அதிமுகவிலிருந்து ஆட்களை வாடகைக்கு வாங்கி .. பேரணி நடத்த திட்டமிட்டிருப்பது தெரிகிறது.. எந்த கலைஞரின் தொண்டனும் திராவிட சிந்தையாளனும், தமிழகத்தின் முன்னேற்றத்தை விரும்புகிற நடுநிலையானவர்களோ அழகிரியை விரும்பவில்லை ..மாறாக அவரை ஊடகங்கள் தங்களுக்கு வழங்கபட்ட assignment வேலையை முடிப்பதற்கு விவாதமென்ற பெயரில் தூக்கிபிடிக்கின்றன.. இப்படி நிறைய பார்த்தாயிற்று.. கரைசேரமுடியாத துடுப்பில்லாத ஓட்டை விழுந்த படகில் ஏறி பயணம் செய்ய நினைக்கிற முட்டாளாய் தெரிகிறார் அழகிரி ..
..
விவாதங்களுக்கோ விமர்சனங்களுக்கோ இங்கே இடமில்லை தவிர்க்கமுடியாத சக்தியாக
மறுக்க முடியாதவராக உறுதியாகியிருக்கிறார் தளபதி.ஸ்டாலின் .. தமிழகம் காத்துநின்ற பொழுது விடிய தொடங்குகிறது.. சூரியனின் மறைவிற்கு பிறகு இருண்ட நிலம்.. கதிரவனின் வரவிற்காக காத்துநிற்பதைப்போல தமிழகமே எதிர்பார்த்து நிற்கிறது.. வெறுப்பை கக்கும் விசமதாரிகள் ஓரமாய் நிற்கவும் .. இல்லையெனில் .. வேகத்தில் அடிபட்டு தூக்கியெறியபடுவீர்கள்..இது இறுதி எச்சரிக்கை.. மக்களால் புறக்கணிக்கபட்ட எவரும் அரசியலில் இருக்குமிடமே தெரியாமல் புதைந்துபோனதாகதான் வரலாறு..
..
அழகிரி அவர்களே..அடங்கியிருக்கவும்.. இல்லையெனில் காலசுழற்சியில் அழிந்துபோவீர்.. தளபதி ஆளபோவதை காணதான் போகிறீர்.. அதுவரை
#வாய்மூடி_இருக்கவும் …
..
ஆலஞ்சியார்
Tuesday, August 21, 2018
யார் ..தலைவர்
யார் பொருளாளர்..
திமுகவின் பொருளாளராக யார் வருவார்களென ஊடகங்கள் தொடங்கி.. சமூகவலைதளங்கள் என விவாதம் களைகட்டுகிறது.. யார் வரலாமென ஆளாளுக்கு கருத்தை பதிகிறார்கள்.. திமுக போன்ற ஜனநாயக கட்சியில் தான் பொறுப்பிற்கு தேர்வாகிறவர்களைப் பற்றி அதிக கவலையோடு விவாதிக்கிறார்கள்.. அவர் வந்தால் நல்லது சிறுபான்மை சமூகத்திற்கு வழங்கலாம் மொழிப்போர் தியாகிக்கு வழங்கலாம் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு வழங்கலாம் .. இந்த முறை பட்டியலினத்திற்கு வழங்கவேண்டும் என கருத்துகள் பேசபடுகிறது.. கருத்துரிமைக்கு திமுக அளித்த அங்கீகாரம்/சுதந்திரம் இதில் வெளிபடுகிறது..
பேரெடுத்து சொல்ல வேண்டியதில்லை இங்கே திறமையாளர்கள் அதிகம்.. அரைகுறைகளோ அடிமைகளோ.. எதற்கும் உதவாத கோழைகளோ
திமுகவில் இல்லை.. அறிவுடையோர் .. பகுத்தறிவின் நிழலில் சமூக தொண்டாற்றுவோர் கொள்கைமதியாளர்கள்..திறமையும் அறிவும் ஒருங்கே பெற்றவர்கள் .. சுயமரியாதைகாரர்கள் சுயசிந்தனையாளர்கள்.. நீண்ட நெடிய அரசியல் பின்னணி கொண்டவர்கள் ..கடும் உழைப்பால் உயர்ந்த உன்னதர்கள்.. மொழியறிவு இனப்பற்று கொண்ட கொள்கை தங்கங்கள்.. இங்கே ஏராளம் ஏராளம்..
..
அடிமைகளை தலையாட்டி குனிந்து கும்பிடுபோடும் சுயநலவாதிகள் இங்கே இடமில்லை .. மானமுள்ள கூட்டம் இது யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற தெளிவும் யாரை தேர்ந்தெடுக்காதிருக்கவேண்டுமென்ற காரண அறிவும் கொண்டவர்கள் திமுகவினர்.. இந்த இயக்கத்தை அடுத்தகட்ட நகர்விற்கு செல்லும் போது ஏற்படும் தடங்கல்களை சோதனைகளை கடந்து சிறப்போடு செயல்படும் செயல்மறவர்களை திமுக பொதுக்குழு தேர்வு செய்யும்.. எப்படி பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு .. யார் யாரையெல்லாம் ஊடகங்கள் ஆருடம் சொன்னது ஆனால் பொதுக்குழு கலைஞரைதான் தேர்வு செய்தது.. கலைஞர் எப்படி திமுக என்ற பேரியக்கத்தை கட்டி காத்தாரே அதைப்போல தளபதியும் திமுகவை மிக சிறப்பாக வழிநடத்துவார் அவருக்கு துணையாக யாரை தேர்வு செய்யலாமென திமுக பொதுக்குழு முடிவு செய்யும்..
..
26.08.18 அன்று யார்யாரெல்லாம் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.. யாரெல்லாம் முன்மொழிந்து வழிமொழிந்திருக்கிறார்களென தெரிந்துவிடும்..பேராசிரியர் பெருந்தகையும் தளபதியும் ஆலோசித்து நல்லவரை முன்மொழிய கூடும்.. இங்கே வெளிப்படையான ஜனநாயக மரபுகள் உண்டு .. பொதுக்குழு அங்கீகாரமென்பது உச்சபட்ச ஜனநாயகம் திமுகவின் பொதுக்குழு என்றாலே விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது.. கலைஞர் தலைமையில் இருக்கும்போதே ..பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்தை அது எதிர்கருத்தாகினும் எடுத்துவைத்த வரலாற்று நிகழ்வுகள் நிறைய உண்டு தலைவனையே கேள்வி கேட்கும் அதிகாரம் கொண்டது.. வீரபாண்டியார் கோ.சி.மணி மதுராந்தகத்தார், நெல்லிகுப்பத்தார் போன்றோரெல்லாம் பொதுக்குழுவில் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவித்த வரலாறும் அதற்கு கலைஞர் விளக்கம் சொன்ன நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன .. இதெல்லாம் வேறு எந்த கட்சியிலும் காணமுடியாது..
..
நிச்சயமாக சரியான தேர்வாக வருங்கால நலன் கருதி தளபதியோடு இணைந்து செயலாற்றும் திறமையான தகுதியான .. கொள்கை உறுதிமிக்க நபர் தேர்வு செய்யபடுவார்.. ஆருடங்களை விடுத்து அமைதியாக இருங்கள்...
தளபதியின் கரத்தை வலுபடுத்துபவரே இனி.. பொருளாளராவார்..
..
ஆலஞ்சியார்
Monday, August 20, 2018
திமுக
திமுக..
திமுக தலைமைக்கு வருவதென்பது மிகப்பெரிய எதிரிபார்ப்பை ஏற்படுத்துகிற பதவி.. சில கட்சிகள் அல்லது அமைப்புகளின் தலைவராக வருவதும் வந்ததாக சொல்வதும் ஒரு செய்தி அவ்வளவுதான் ஆனால் திமுக போன்ற மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்திற்கு தலைவராக வருவதென்பது சரித்திரம்..
..
பொதுக்குழு கூடுகிறது.. மாவட்ட செயலர்கள் பரிந்துரைக்கிறவர்கள் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் .. பொதுக்குழு தேர்வு செய்யும் .. இதில் சிறப்பே யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் .. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் மாவட்ட செயலர் பரிந்துரை அவசியம் அவ்வளவுதான் .. இதுவரை 50 ஆண்டுகள் தலைவராய் இந்த பேரியக்கத்தை கட்டுகாத்தவர் கலைஞர்.. 1949 ல் திமுக தொடங்கப்பட்ட போது அண்ணா .. தந்தை பெரியார் தான் தலைவர் என்று அந்த பதவி நிரப்பபடாமல் பொதுசெயலராக தொடர்ந்தார் அண்ணா மறைவிற்கு பிறகு யார் முதல்வராவது என்ன பிரச்சனையில் கலைஞரிடம் போட்டியிட விரும்பாமல்... கலைஞரை மதியழகன் முன்மொழிய சத்தியவாணி முத்து வழிமொழிய... போட்டி உருவான போது போட்டியென்றால் நான் விலகிக்கொள்கிறேனென நாவலர் விலக.. தலைவர் கலைஞர் முதல்வரானார்.. கட்சி பதவிக்கு பொதுசெயலாளர் பதவிக்கு நாவலர் போட்டியிட போவதாக சொன்னபோது மீண்டும் ஒரு போட்டி தேவையில்லை என கருதி கட்சியும் தலைமையும் தலைவர் பதவியை உருவாக்கி தலைவராக கலைஞரும் பொது செயலராக நாவலரும் தொடர்ந்தனர் .. அதன் பிறகுதான் நாவலர் மந்திரிசபையில் சேர்ந்தார்..
..
கிளைச் செயலாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் என பல ஜனநாயக அடுக்குகள் கொண்ட பேரியக்கம் .. இங்கு எல்லோருமே தேர்வின் அடிப்படையில் பதவிக்கு வருவார்கள் .. இந்திய கட்சிகளின் வரலாற்றில் இத்தனை வெளிப்படையாக ஜனநாயக போக்கு எந்த கட்சிக்குமில்லை.. நியமன செயலாளர்களை கொண்டே அல்லது பொதுக்குழுவை கொண்டோ நடத்திட முடியாது .. நிறைய பகைகள் கைகலப்புகள் நடக்கிறதே மா.செ தேர்தலை நிறுத்திவிட்டு நியமன முறையை கொண்டு வரலாமே என்றபோது கடைசிவரை அவர்களுக்குள் தேர்வாகி வரட்டும் அதுதானே முறை என்றவர் கலைஞர்.. ஜனநாயகத்தின் அடித்தளத்தை மிக உறுதியாக கட்டமைத்திருந்தார் இன்று எல்லாவித எதிர்ப்பையும் மீறி .. காலம்கடந்து சில இயக்கங்களைப்போல/ கட்சிகளைப்போல கரைந்துவிடாமல் நிற்கிறதே .. அதற்கு கலைஞரின் ஜனநாயநெறிமுறைகள்/ வழிமுறைகள் தான் காரணம்.. திமுகவை அசைக்கமுடியாமல் போவதற்கும் இந்த ஜனநாயக நெறிபடுத்தல் காரணம்..
இந்தியாவிலேயே ஒரே ஜனநாயக இயக்கம் திமுக தான் பொதுவுடமை கட்சியில் சில நியமன பதவிகள்தான் ..பொலிட்பீரோ போன்ற உயர்மட்ட குழுவில் கூட இன்னமும் ஜனநாயகம் முழுமை பெறவில்லை..
..
தளபதி எதிரில்லாத தலைவராக தெரிகிறார் .. நிறைய எதிர்பார்ப்புகளோடு தமிழகம் காத்து நிற்கிற வேளையில் பொறுப்பிற்கு வருகிறார்
நல்ல தலைமையை.. தருவாரென நமிபிக்கையை தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறார்.. நாடும் இயக்கமும் அடுத்த தலைமுறையிடம் வந்திருக்கிறது.. தான் யாயாரோடு சேர்ந்து இயங்க போகிறாரென்பதை பொருளாராக யார் வரபோகிறாரென்பதை 28.08 2018 விடையளிக்கும்..
..
வாழ்த்துகள் தளபதி..
..
ஆலஞ்சியார்
Sunday, August 19, 2018
தலைவனாய் ..வா..
#தளபதியார்..
..
எளிதில்
எதுவும்
கிடைத்துவிடாது
அப்படியெனில்
இன்பம் இராது..
..
நீ..
செதுக்கப்பட்டவன்
ஒவ்வொரு முறையும்
எதிரிகள் தோற்கின்றனர்..
உன்னிடம்
..
அண்ணனை கொம்பு சீவி
அழகுபார்த்து
அய்யகோ..
அது நடக்காது
போனதால்..
வேறுவழியை
கையிலெடுக்கிறார்கள்..
..
பாசிசத்தோடு சேர்ந்தால் தான்
வெற்றிகிட்டுமாம்.
விவரகேடுகள்
ஊகவியலாளராய்
முகம்காட்டி
முனகுகிறார்கள்..
அறைக்குள் அமர்ந்துகொண்டு
ஆருடம் சொல்கிறார்கள்..
விளிம்புநிலை மக்கள் தொடங்கி
விற்பன்னர்கள் வரை
உன் வரவை எதிர்பார்பதறியாமல்..
..
உன்
ஒவ்வொர் அசைவும்
எதிரிகளை பதறவைக்கிறது..
உன் இருப்பு
தமிழனின் கையிருப்பு
தொலைத்துவிட்டால்
தேடுவது கடினமென அறிவார்கள்
பகைவரின் பகட்டுமொழியை
காதோர்க்க தயாரில்லை
இங்கே யாரும்..
..
உன்..
செயல்பாடுகள்
அமைதியாய் எதிரியை வீழ்த்தும் அழகு
மக்களை ஈர்க்கிறது..
இயக்கத்தின்
சுழற்சி.. நீ
..
மனிதனின் வெற்றி
அவன் செயல்களால்
நீ..
செயல் வீரன்..
வீரனாய் ..
தளபதியாய் உயர்ந்து
செயல் தலைவரானாய்..
இனி..
தலைவன்..
இயக்கத்தின்
நான்காம் தலைமுறையை
வழிநடத்தும் தலைவன்..
..
காலம் கனிந்து..
கையில் தானாய் வந்தது
உன் நிழலில்
இயக்கம் ...
எப்போதும் போல்
இயங்கும்..
..
உன் வாழ்வில் ..
நீ பெற்றதெல்லாம்..
போராடி பெற்றது..
..
தமிழகம்
உன்னை
உற்று நோக்குகிறது
ஆன்றோர்..அறிவில்
சான்றோர்...
உன்னை அரவணைக்க
காத்திருக்கிறார்கள்..
..
அடிமைகளின்
அறிவிலிகளின்
விவரகேடை
மடைமையை கண்டு
மக்கள் நொந்துபோனர்
கரைசேர ..
உன் வரவிற்காக
தமிழகமே
காத்திருக்கிறார்கள்
..
மாபெரும்
மக்கள் சபையில்
மதிப்புமிக்கோர்
#மகிழ்ச்சி கொள்கிறார்கள்
கொள்கைப் பிழைகள்
உன் முன்..
குலைந்து போகிறார்கள்
..
உன்னை
வீழ்த்தநினைத்தோர்..
வீழ்ந்து போகிறார்கள்..
நீ..
எளிமையானவன்..
யதார்தமானவன்..
இயல்பானவன்..
எல்லோர்..
இதயம் கவர்ந்தவன்..
ஆனாலும்
கொள்கையில்..
சுயமரியாதையில்
இயக்கத்தை..
கட்டிகாப்பதில்
#எஃகு_மனிதன்..நீ..
..
இன்னும் இருக்கிறது
உயரம்..உனக்காக
உச்சத்தை தொடும்வரை
போராடு..
பெறு..
அதுவரை..
போராடு.. போராடு..
அடையும் வரை.. போராடு
..
தலைவனாய் காண
தவமிருக்கிறது தமிழகம்..
..
வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்
Saturday, August 18, 2018
தளபதி..
மஞ்சள் துண்டுதான் கலைஞரின் அடையாளமென்று யாரோ அந்த அரைவேக்காட்டிடம் சொல்லியிருக்கிறார் பாவம்.. வான்கோழி மயிலாகுமா.. காக்கை குயிலாகுமா.. என்ன..
..
கலைஞரின் அடையாளம் நேர்வகுடோ.. லாவகமாய் துண்டை தூக்கிப்பிடித்து நின்று கதைப்பதோ அல்ல..உழைப்பு ..அந்த அயராத உழைப்பிலும் நேர்மை.. ஆழ்ந்த அரசியல் திறமை.. சாணக்கியம் ..பெரியாரின் உறுதி.. கடைசி தொண்டன் மீது காட்டிய அன்பு.. மொழி இனத்தின் மீதான பற்று.. எதையும் போராடி பெற வேண்டுமென்ற வெறி.. கடமை தவறாது கண்ணியத்தோடு.. மாபெரும் இயக்கத்தை கட்டுகோப்போடு.. இடர்கள் பலவந்தபோதும் நெருக்கடிகள் தந்தபோதும் .. துயரம் துரத்தியபோதும் மன உறுதியோடு கட்டிக்காத்த பேராளுமை.. கலைஞரின் தமிழ்..
கலைஞரை மஞ்சள் துண்டுக்குள் அடக்கிவைக்க நினைக்கும் முட்டாள்களே.. அவர் காட்டாறு..
..
கலைஞரின் அரசியல் வாரிசாக வேண்டுமெனில் .. நீண்ட உழைப்பும் நேரிய சிந்தனையும், நிதானமும் கொஞ்சமேனும் அரசியல் அறிவும் தேவை.. எதை எப்போது எப்படி செய்யவேண்டும் கையாளவேண்டுமென்றும்.. எப்போது பேசவேண்டும் என்பதைவிட எப்போது பேச கூடாதென்றும் அறிந்திருக்கவேண்டும்..
யார் பகையென்றும் எவரால் இந்த தமிழ் சமூகமும் நாடும் சூறையாட படுகிறதென்றும் .. எந்த சித்தாந்தத்திற்கெதிராக கலைஞர் காலமெல்லாம் செயல்பட்டாரோ ..அந்த பாசிச சித்தாந்தவாதிகளின் கைப்பாவையாய்.. திமுகவை உடைக்க நினைக்கிற சண்டாளித்தனத்தை முதலில் கைவிடவேண்டும்..
யாருக்கு ஆசையில்லை ஆனால் அதற்கான தகுதி வேண்டும் கடின உழைப்பில் எதுவும் வரவேண்டும் அப்பன் போனதால் அதிகாரம் வேண்டும் என நினைப்பது அரசியலில் சரிபடாது அப்படி வந்தவர்கள் .. சுவடே இல்லாமல் கரைந்துபோனதாக தான் வரலாறு..
எதுவும் இங்கே இலகுவாய் கிடைக்காது
..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை காலம் மிக அழகாய் கட்டமைத்திருக்கிறது செதுக்கியிருக்கிறதென்றுகூட சொல்லலாம்..
கலைஞரோடு நீண்டதொரு பயணம் .. மிக தெளிவான பாதை .. எத்தனை இடர்பாடுகளிலும் நெஞ்சுரத்தோடு கடந்துவரும் ஆற்றல்.. பகையறிந்து அதன் பலமறிந்து மோதும் விவேகம்.. நிதானத்தோடு நேர்பார்வையோடு.. எதிரிகளை கலங்கடிக்கும் திறன்.. தொண்டர்களின் பேராதரவு.. கட்சியில் ஒருமித்த எதிரியில்லாத தேர்வாக #தளபதி திகழ்கிறார்.. கலைஞரின் வாரிசாக மட்டுமல்ல
எம் இனத்தை காக்க வந்த கேடயமாய்.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த காலம் செதுக்கி தந்திருக்கிறது..
வீழ்த்த முடியாது இனி..
வீணர்களே.. யாரை முன் நிறுத்தினாலும் ..எந்த வேசம்கட்டினாலும்.. எத்தனை வஞ்சனை சூது செய்தாலும் இனி எழவே முடியாதவாறு ஆழப்புதைத்துவிடுவோம்..
..
இனி..
தளபதியே.. தமிழகத்தின் எதிர்காலம்
..
ஆலஞ்சியார்
Thursday, August 16, 2018
மாறன் திருமா
இன்று இவர்கள் பிறந்தநாள்
மாறன் திருமா..
..
திராவிட அரசியலில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர் மாறன் திமுகவின் இயக்கசெயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்தவர் ..
அண்ணா முதல்வரான பிறகு அந்த இடத்தை (நாடாளுமன்றஉறுப்பினர்) நிரப்ப மாறனை தான் தேர்வு செய்தார்.. ராஜாஜியும் காயிதே மில்லத்தும் தான் இவரை முன்மொழிந்தார்கள்..
நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கவும் முறைப்படுத்தவும் காரணமானவர்.. சிறந்த படிப்பாளி பன்முகதிறமையாளர் இவர் இயக்கிய மறக்கமுடியுமா திரைப்படம் மிகப்பெரியளவில் பேசப்பட்டது.. மிசாவில் சிறையிலிருந்த போது திராவிட இயக்கவரலாறு என்ற சிறப்புமிக்க வரலாற்றுநூலை எழுதினார்.. கலைஞரின் மனசாட்சியென அறியப்பட்டவர்..
..
திருமா
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக போர்வாளாக வலம் வந்தாலும் முதலில் இவர் இருந்ததென்னவோ திமுகவில் தான்.. ஒரு முறை சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். நேர்காணலில் பேராசிரியர் பெருந்தகை என்ன செஞ்சுகிட்டு இருக்கே என்ற போது லா படிக்கிறேன் என்றார் முதல்ல படி பிறகு பார்க்கலாமென்றார்..
அப்போது சென்றவர் தான் தன் சமுதாயமக்களின் நலனுக்காக ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார் ..
..
நிறைய விமர்சனங்கள் இருவரின் மீதும் உண்டு
மாறனின் சில தவறான முடிவுகளால் பாசிச சக்திகளோடு கைகோர்க்க, சில அருவறுப்புகளை ஆட்சியில் அமர்த்த வேண்டியிருந்தது ..
சுப்ரமணி அய்யர் மகள் மல்லிகாவை மணந்தும் தன் இருமகன்களுக்கு குடகுவிலிருந்து காவேரியையும்
தி இந்து விலிருந்து ப்ரியாவையும் கொண்டுவந்தாலும் திராவிட கொள்கைகளில் சமூக சமதர்ம கோட்பாடுகளில் கடைசிவரை இருந்தார் திராவிட சிந்தனையோடு செயல்பட்டார் இவரின் சமூக பங்களிப்பும் புறந்தள்ளிவிட்டு திராவிட வரலாற்றை எழுத முடியாது..
..
திருமா ஆரம்பகாலங்களில் இருந்த திடம் இப்போதெல்லாம் இல்லை நிறைய சமசரங்களை செய்துக்கொள்கிறார்.. சிலரோடு சேர்ந்து சில தவறாக முடிவுகளை அவசரகதியில் எடுத்ததின் விளைவு இன்றைய அவலங்களுக்கு காரணமென்பதை மறந்துவிட முடியாது..
இன்றைய தமிழக அவலங்களிலிருந்து மீண்டு வர முயற்சிக்கிற செயல் பாராட்டுக்குரியது
அடங்கமறு அத்துமீறு என்ற ஆரம்பகாலங்களில் பயணித்தாலும் இப்போது மிகவும் பக்குவப்பட்டவராக தமிழக அரசியலில் பயணிக்கிறார்..
இவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து சாதிய தலைவராக காண முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.. நல்ல இளந்தலைவர்கள் வரிசையில் இவர் பெயரும் இடம் பெறும்.. கால்நூற்றாண்டு தமிழக அரசியலில் சில முக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்தவர் இவரை மறுத்தும் தமிழக அரசியல் இல்லை..
..
இருவருக்கும் இன்று பிறந்தநாள்..
மாறனை நினைவுகூறுவோம்
திருமாவை வாழ்த்துவோம்..
#இன்னும்_உயரங்கள்இருக்கிறது_திருமா…
..
ஆலஞ்சியார்
திமுகவை கண்டஞ்சும்.. பாஜக
பிஜேபிகாரர்களுக்கு திமுக என்றால் அழகிரி தான் ஞாபகம் வருகிறதாம்.. வராதா பின்னே என்னதான் ஆடினாலும் கட்சியில் சிறு பிளவைகூட ஏற்படுத்த முடியாது .. காரணம் கலைஞரே நீக்கியவர் என்ற பழியொன்றே போதும் தவறானவரை தயார் செய்திருக்கிறீர்கள் அவசரகுடுக்கை ஆழ்ந்த அரசியல் அறிவின்மை ..பேராசை அரசியலின் அடிப்படை கூட தெரியாத பேதமை இதுதான் அழகிரி..
..
பாசிசம் திராவிடத்தின் மீதான தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக்கொண்டுதானிருக்கும்.. தங்களின் அடித்தளத்தை அசைக்கிற எதிர்கேள்வி கேட்டு பொய் புளுகு புரட்டு பித்தாலாட்டத்தை தோலுரித்து காட்டி ஆரியத்தை முகத்தை கிழித்தெறிகிற திராவிடச் சித்தாந்தத்தை அது அரசியல் அதிகாரம் பெற்று நிமிர்ந்து நிற்பதை கண்டு எரிச்சலால் தொடர்ந்து சதிகளோடு போர்தொடுத்து தோற்றுக்கொண்டே இருக்கும் ஆரியபடை ..
திராவிடம் அதிகாரத்தில் ஏறிய உடனேயே மெல்ல சிரித்து உள்ளுக்குள் பகையை வளர்க்க தொடங்கியது .. அண்ணா மறைவிக்கு பிறகு நாவலரை காட்டி உடைக்கலாமென்ற நினைப்பு மண்ணை கவ்வ.. மெல்ல ஊடுறுவி மகோராவை கொம்பு சீவி கட்சியை உடைத்தது சில கவர்ச்சி மாயையில் சிக்குண்ட தமிழன் நிழலை நிஜமென நம்பி வீழ்ந்தான்..பிறகும் திராவிடம் திரும்ப எழ தொடங்கி.. வீறுகொண்ட மோதல் போக்கை கண்டஞ்சி.. மெல்ல பகை வளர்க்கிறாரென கொல்ல பார்க்கிறானென உளவு செய்தியை கசியவிட்டு.. பதவி தலைமை ஆசைகாட்டி போர்வாளை பிடிங்கியது அப்போதும் தனிமைபடுத்த முடியவில்லை..
காரணம் இங்கே கொள்கைபிடிப்புள்ளவனும் இனப்பற்றாளனுமே அதிகம்..அதனால் தான் மக்களின் அவசரமுடிவுகளாலும்.. 'நோவாலும் சாவாலும் சட்டென்று இளகி எம்மை புறக்கணித்து தூர நிறுத்தினாலும் நம்பிக்கைகொண்டிருந்தான் நம் வாழ்வில் திமுகதான் ஒளியேற்றும் என உறுதியாய் நம்பினான்... இன்றைக்கு இந்தியாவை செதுக்கியவர்களில் திராவிடத்தலைவர்களின் பங்கைப்பற்றியெல்லாம் பேச தொடங்கியிருக்கிறார்களே அது திராவிடச் சிந்தையின் வெற்றி..
..
திமுக கண்டு இந்தளவு பதறுகிறார்களே ஏன் தெரியுமா.. திமுக என்பது ஆரிய கருத்தியலுக்கு எதிரானது .. ஆரியர்களின் வளர்ச்சிக்கு எதிரானது காலகாலமாய் வர்ணத்தை சொல்லி பிரித்து ..அவனை அடித்தமர்த்தி சுரண்டி பிழைத்தது நடக்காமல் போனதின் ஆத்திரம் .. திமுகவை தி.கவை கண்டால் எரிகிறான்.. பதறுகிறான்.. திமுகவை வீழ்த்தினால் மட்டுமே அடிமைகளை கொண்டு ஆட்சி நடத்தி உயர்பதவிகளை பார்பனர்கள் கொண்டு நிரப்பமுடியும் .. திமுக
சமூகநீதிக்காக போராடுகிற இயக்கம் பெரியார் காட்டிய பாதையில் பேராசான் அண்ணாவும் கலைஞரும் வழிநடத்தியதை வீழ்த்த எண்ணுகிறார்கள்..
..
தளபதியிடம் கழகம் வருவதை ஆரியர்கள் விரும்பாததிலிருந்தே.. திராவிட காப்பாளன் தளபதியென்று உறுதியாகிறது..
தளபதியின் கரம் கோர்ப்போம் ஆரியபகையை வீழ்த்துவோம்..
..
ஆலஞ்சியார்
Wednesday, August 15, 2018
தளபதியார்
திமுகவில் என்ன நடக்கிறதென்று நம்மைவிட எதிரிகளுக்கு அதிக அக்கறை..
நான் கலைஞரால் வளர்த்தெடுக்கபட்டவன்
சலசலப்பிற்கு அஞ்சமாட்டேன் கட்சியின் உள்ளும் புறமும் உருவாக்கபடும் சவால்களை வென்று காட்டுவேன்
தந்தை பெரியார் வழியில் பேரறிஞர் அண்ணா காட்டிய நெறியில் கலைஞர் காட்டிய வழியில் தொடர்ந்து நடைபோடுவோம் தொய்வின்றி..
தளபதி..
..
திமுகவிற்கு மு.க.அழகிரி ஆற்றிய பங்கு அதிகம் ..திரு.பொன்.ராதா
திமுகவை யாரும் உடைக்க வேண்டியதில்லை அதுதானாக உடைத்துவிடும் ..தமிழிசை..
மானமிகு சுப்புலெட்சுமி ஜெகதீசன் சொல்வதைப்போல பாஜக திமுகவை உடைப்பதற்கு முயற்சிக்கிறதென்பது இங்கு எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர்களின்..?
எண்ணம் ஈடேறாது.. காரணம் வரும்முன் காப்போமென்ற கிழவன் ..இதையெல்லாம் எதிர்பார்த்துதான் தளபதியை செதுக்கி தந்துவிட்டு போயிருக்கிறான்.. ஆரிய சூழ்ச்சியை அறிந்து பகைவரின் சூதறிந்து அதை எப்படி வெல்லதென்று பயிற்சி தந்துவிட்டுதான் பிரிந்திருக்கிறான்.. திராவிடக் கிழவன்... பாவம் தமிழிசையையும் ராதாவையும் விட்டு கதைப்பதை நிறுத்துங்கள்..
..
ஈரோட்டு பெருங்கிழவனின் அடியொற்றி.. அண்ணாவும் கலைஞரும் அமைத்த பாதை
தமிழர் நலனுக்கானது சில நேரம் சில குப்பைகள் வழியில் விழுந்தாலும் அதையெல்லாம் கடந்து .. திராவிட பாதையை சரி செய்துகொண்டே பயணிப்போம்.. தமிழகத்தில் பார்பனியத்தை காலூன்ற விடுவதில்லை என போர்முரசு கொட்டி எம் தளபதி படை நடத்த தயார்.. காவிகள் கூட்டத்தை கயவர்கள் தம்மை ..,காட்டி கொடுக்கும் துரோக கும்பலை வீழித்தி ..சிரித்துபேசி சங்கறுக்க நினைத்தவர்களை அடையாளம் கண்டு நேருக்கு நேர் முகத்திலேயே நாங்களும் வருவோம் என அச்சமூட்டி கலைஞரின் வார்ப்பு என தைரியமாய் நின்றாடும் எம் தளபதி.. எதிரிகளே நேருக்கு நேர் மோத திராணியற்று .. சொந்தத்தை பகையாக்கி சூழ்ச்சியெனும் வலைவிரித்து திராவிடத்தை வீழ்த்த நினைத்தால் பாவம் இருக்குமிடம் தெரியாமல் புதைந்து போவீர்..
கலைஞரல்ல தளபதி.. கலைஞரைப்போல்
கருணையின் உருவாய் பகையையும் மன்னிக்கும் பெரும் தயாளம் எமக்கில்லை ..
மன்னித்து மன்னித்து வளரவிட .. அத்தனை புனிதரில்லை நாங்கள் .. எதிரிகளே எச்சரிக்கை
மோடியின் முகத்திற்கெதிரேயே செய்ததற்கு நன்றி ..பார்த்துக்கொள்கிறோமென பேச எமக்கு ஈரோட்டு தைரியம் உண்டு .. பக்குவபட்டு நிற்பது மக்கள் சேவைக்கே தவிர .. எம்மை புறமிருந்து தாக்க நினைக்கும் கோழையை மன்னிப்பதற்கல்ல.. இனி பார்க்கதான் போகிறீர்
..
தமிழக நலனுக்கெதிராக தமிழ் மக்களின் உரிமைக்கெதிராக அடிமைகளை வைத்து பார்ப்பனியம் குளிர்காய்வதை தடுத்திட..
எமது உரிமைக்காக சமூக நீதிக்காக எம் மண்ணில் காவிகளின் நிழல்கூட படியாதவாறு பார்த்து கொள்ள..
பெருங்கிழவன் பேராசான் பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வகுத்த தந்த பாதையில் பயணிப்போம் தளபதியின் பின்னால்..
எதிரிகளே ஓடியொளிந்துக் கொள்ளுங்கள்..
..
தளபதிபடை_தரணியாளும்
..
ஆலஞ்சியார்
Tuesday, August 14, 2018
தளபதிபடை இனி.. தமிழகம் ஆளும்
ஒன்று நிச்சயம்
தளபதியை எதிர்க்கிறவர்கள் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவரென்றாலும் காலசுழற்சியில் கரைந்தே போவர்.. கழகம் தன் குடும்பத்தைவிட மேலானது உயிரானதென சொல்லிவிட்டு சென்ற தலைவர் நிழலில் நின்று யாரெல்லாம் நம் பகைவரென நமக்கு உணர்த்திய தலைவர்.. துரோகிகளையும் நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்.. அவர்களை கட்சியைவிட்டே விரட்டியுமிருக்கிறார்..
..
அப்பன் சொத்தில் பங்கு கேட்பதைப்போல எண்ணிக்கொண்டு கழகத்தில் உரிமை கோருபவர்களுக்கு இது .. கருணாநிதியின் சொத்தல்ல என சொல்ல வேண்டியிருக்கிறது.. கலைஞர் எம் தலைவர் எமது வழிகாட்டி இயக்கத்தை கட்டிகாத்தவர் ..
சமூகநீதியை வார்த்தெடுத்த சிற்பி .. ஜனநாயகத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட எதுவும் பயிற்சியோடும் பக்குவத்தோடும் உழைப்போடும் தேடி வரவேண்டுமென செய்தவர் .. கட்சியையும் குடும்பத்தையும் வெவ்வேறாக கண்டவர் அதனால் தான் அவரால் மகனென்று பாராது கட்சியை விட்டு நீக்கியதோடு அருகில் சேர்க்காமல் கட்சியா குடும்பமா என்றால் கட்சிதான் முக்கியமென ஊருக்கு உரக்க சொல்லமுடிந்தது..
..
படிப்படியாய் உயர்ந்து பக்குவத்தோடு வெற்றி தோல்வி இரண்டையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு செயல்படும் தளபதியார் குறுக்குவழியிலோ குடும்ப நிழலிலோ தனக்கான இடத்தை கேட்காமல் உழைப்பின் மூலம் எதுவும் கிடைக்கவேண்டும் அது தன் திறமைக்கு தகுதிக்கு கிடைத்ததாக இருக்கவேண்டுமென எண்ணி .. சிறப்பான செயல்பாட்டால் .. ஒவ்வொரு அடியாய் எடுத்துவைத்து இன்று உயரத்தை அடைந்திருக்கிறார் .. அவரை வீழ்த்த முடியாதென அறிந்த சில பகைவர் கூட்டம் தங்கள் அரிப்பை சொறிந்துக்கொள்ள கொள்ளைப்புற வழியில் கோல்மூட்டி தூண்டிவிட்டு சில சில்லறைபுத்தியாளனை கூர்தீட்டி குத்தபார்க்கிறது.. திமுகவை உடைக்கவேண்டுமென்ற நீண்டநாள் திட்டத்தை அரங்கேற்ற நேரம் பார்க்கிறது ..பாவம் கையிருப்பும் போகுமென அறியாமல் ..
மிக தெளிவாக செயற்குழுவில் பேசியவர்கள் தளபதியை தலைவராக ஏறக்குறைய முன்மொழிந்துவிட்டார்கள் ..அதுதான் நடக்கும்
ஒரு மாவட்ட செயலர் கூட துரோகிகளின் பக்கம் போக மாட்டார்கள் திமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களும் இயக்க நிர்வாகிகளும் தளபதியைதான் பின்துணைக்கிறார்கள்..
..
அப்பன் ஒளிந்துக்கொண்டு மகனை கொண்டு ஆசிரியரை கேலி செய்கிறாராம் அதற்கெல்லாம் இன்னும் வளரவேண்டும் விருந்துக்கு வந்தவர்கள் வடைபாயசத்தோடு கைகழுவி செல்லவேண்டுமே தவிர.. விளக்கம்தரகூடாது இவனெல்லாம் யாரென்றே கட்சிகாரனுக்கு தெரியாது.. நாங்கெல்லாம் மக்களுக்காக போராடிக்கொண்டிருந்தபோது மங்காத்தா படத்தை பற்றி சிந்தித்தவனெல்லாம் எங்க மயிறுக்கு சமம்.. ஆசிரியரை தகாத வார்த்தையில் விமர்சிக்கிறவர்களுக்கு இதுபோதும்.. உழைக்காமல் ஓசியில் பதவி ஆசையில் அப்பனும் மகனும் வந்தால் இங்கே இடமில்லை..
..
இன்று நேற்றல்ல கழகத்தை தகர்க்க துண்டாட.. பிரிவினைவாதிகளென பேசிபார்த்தார்கள் ஈ.வி.க.சம்பத்தை கொண்டு (பெரியார் குடும்ப வாரிசு) முயற்சித்தும்.. எம்ஜிஆரை வைகோவை ..பார்த்தாகிவிட்டது.. ஊழலென்றார்கள் நிரூபிக்கமுடியாமல் போனார்கள்.. எத்தனை சதிகள் துரோகங்கள் ..இதோ இப்போது மற்றொரு துரோகி.. கலைஞரின் மகன் அழகிரியை கொண்டு கொம்புசீவி பார்க்கிறது . இதையும் கடந்து வெல்வோம்..
..
தளபதி விரைந்து கழக பொறுப்பை ஏற்பதோடு .. கலைஞரால் தூக்கியெறியபட்ட கிழிசல்களை அடையாளம்படுத்தி ஒதுக்கிவைத்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து புதியதொரு அத்தியாயத்தை எழுதவேண்டும்.. தளபதியார் அவர்களே விரைந்து தலைமையேற்க வாருங்கள் சோகத்தை துக்கத்தை விடுத்து நாட்டின் மக்களின் நலன் கருதி ஊகங்களுக்கு இடமே தாராது .. கலைஞரின் முதுகில் குத்திய துரோகிகளை உடன்பிறந்தவரென்றாலும் அடையாளங்காட்டுங்கள் ..
நாடு நம்பியிருக்கிறது நல்லதை செய்வீர்களென நம்புகிறது .. இயக்கத்தை வழிநடத்த வாருங்கள்
..
"தி.மு.க. கெட்டியான பூட்டு கள்ளச்சாவி போட்டுவிடாமல் கழகத் தொண்டர்கள் காத்துக் கொள்ளவேண்டும்.. என்றார் பெரியார் ..
எவ்வளவு தீர்க்கத்தனம்..
கொள்ளையர்கள் போல் புறவழியே அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் மக்கள் செல்வாக்கில்லாதவர்கள் .. விரட்டிவீழ்த்துவோம் தளபதியின் கரம்கோர்ப்போம்
கழகத்தை காப்போம்.. தளபதியின் படைகொண்டு..
..
ஆலஞ்சியார்
Monday, August 13, 2018
தளபதி..
நான் திமுகவில் இல்லை..என்கிறார் கலைஞரால் புறத்தாக்கபட்டவர்..
..
கட்சி தலைமைக்கு நீங்கள் யாரையாவது பரிந்துரை செய்யுங்கள் என்றால் நான் நிச்சயமாக தளபதி.ஸ்டாலினை தான் பரிந்துரைப்பேன் .. இளம் வயதில் மாணவர்மன்றம்,தொடங்கி .. மிசாவில் கொடுமைகளை தாங்கி படிப்படியாக தன்னை உயர்த்திக் கொண்டவர் ..என்றார் கலைஞர் அவர்கள்..
சில ஊடகங்களும் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி ஒரு பின்னடைவைப்போல காட்ட நினைக்கிற பகைவர்களும் கட்சியால் நீக்கபட்டு சில ஆண்டுகளாய் மக்களால் மறக்கபட்ட ஒருவரை முன்னிறுத்தி கலகம் விளைக்க பார்க்கிறார்கள்.. இப்போதைய தி.மு.கழக நிர்வாகிகள் .. கட்சி தொண்டர்கள் யாரும் விரும்பாத ஒருவரை முன்னிலைபடுத்த என்ன காரணம்.. கலைஞர் கட்டிகாத்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடைபட்ட காலத்தில் மறைமுகமாக அனுபவித்துவரும் சலுகைகள் பார்பனியர்கள் உயர்பதவிகள் காலியாகுமென அஞ்சி மிகப்பெரிய எதிரியாக பெரியார் அண்ணா கலைஞர் வரிசையில் தளபதியார் வருவதை தடுக்க .. கலைஞர் குடும்பத்திலிருந்தே கலகத்தை கொண்டுவருகிறார்கள்..
..
கலைஞரால் கட்டம் கட்டபட்டு .. என் முகத்திலேயே முழிக்காதே என்று கூறுமளவிற்கு கிழவனின் மனதை ரணமாக்கியவரை.. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதவரை ஊடகங்கள் முட்டுகொடுப்பதேன்..? ஒட்டுமொத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் திரு.ஸ்டாலினை தலைவராக்க எந்தவித ஆட்சேபனை தெரிவிப்பதாக தெரியவில்லை..
யாரும் தலைமைக்கு எதிர்த்து போட்டியிட போவதாகவும் தெரியவில்லை.. ஒட்டுமொத்த இயக்கமும் .. திமுக அபிமானிகளும் நாட்டின் நலம் விரும்புவோரும் திரு.ஸ்டாலின் தலைமை தான் சரியானதென்கிறார்கள்.. எதிரிகள் கூட தளபதியின் தேர்வை குறை கூறவில்லை திடீரென்று கலைஞரின் மறைவிற்கு பிறகு கட்சியின் உரிமை கொண்டாட இது கலைஞரின் சொத்தல்ல.. கலைஞரின் மொழியில் சொல்லவேண்டுமெனில் சங்கமடமல்ல..
நீண்ட பங்களிப்பும் தொடர்ந்து கட்சிபணிகளை செய்து ..தலைவரின் கட்டளைகளை ஏற்று சிறைச் சென்று.. மக்களோடு மக்களாக பயணித்து ஒவ்வொரு நொடியும் நேர்மையான அரசியலை செய்து நேரடியாக மக்களின் செல்வாக்கோடு பதவிக்கு வரவேண்டுமென நினைப்பரோடு.. கொள்ளைப்புற வழியாக வீட்டிலிருப்போரிடம் கெஞ்சி மிரட்டி.. அழுது கட்சியின் பதவியை கேட்பது கலைஞருக்கு செய்கிற அவமானம்.. கடைசி நிமிடம் வரை போராளியாய் வாழ்ந்து ஒரு ஒப்பற்ற தலைவருக்கு இதைவிட கேவலத்தை தர முடியாது..
..
கட்சியின் தலைமைக்கு மிக சரியான தேர்வு திரு.ஸ்டாலின் மட்டும் தான்.. இந்த வேளையிலும் கலைஞருக்கு நன்றி கூற தமிழ்சமூகம் கடமைபட்டிருக்கிறது.. தன் விதையில் விளைந்ததென்றாலும் சொத்தையை அடையாளம் கண்டு குப்பையிலே எறிந்தைமைக்கு..
#நன்றி தலைவா..
கடைசியாய்..
கட்சியா குடும்பமா என்றால் நான் குடும்பத்தை துாக்கியெறிந்து கட்சியை காப்பேனே அன்றி எந்த நிலையிலும் இயக்கத்தை விட்டு கொடுக்கமாட்டேன்..
என்று மிக தெளிவாக அடையாளம் காட்டி
நாட்டிற்கும் சமூகத்திற்கும்.. இயக்கத்திற்கு பேருதவி செய்த பெருமகனின் வழியொட்டி
தளபதியை பின்துணைப்போம்..
பெரியார் அண்ணா கலைஞர் வரிசையில் தளபதி..
..
ஆலஞ்சியார்
Sunday, August 12, 2018
திமுக..
கட்சி தலைமை மீதும் தலைவர்கள் மீதும் உண்மையான பாசமுள்ள சுயமரியாதை தொண்டர்கள் ..திமுகவினர்
#மலையாள_மனோரமா நாளேடு புகழாரம்!..
..
ஆம் கவர்ச்சியிலோ.. அல்லது ஒரு வித மூளைச்சலவையிலே வந்த கூட்டமில்லை கொள்கையில் வார்த்தெடுத்த முத்துகள்.. இந்த மண்ணை நேசிக்கிறவர்கள் இனப்பற்றால் மொழிப்பற்றால் ஒருங்கிணைந்தவர்கள்.. கடமை கண்ணியம் கட்டுபாடோடு இயங்குகிறவர்கள் எத்தனை துயர் வந்தாலும் அடக்குதலுக்கு அஞ்சாதவர்கள்.. துணிவோடு பயணிப்பவர்கள்.. கலங்கிநிற்கிறபோதும் கோபத்தின் உச்சியிலும் கண்ணியம் காக்கிறவர்கள்.. எதிர்கருத்தையும் உள்வாங்கிறவர்கள் மதிக்கிறவர்கள் .. ஒரு இயக்கம் எப்படி இருக்கவேண்டுமென்பதையும் அதில் எந்தளவு ஜனநாயம் கட்டிகாப்பாற்ற படுகிறதென்பதையும் திமுகவை தொடர்ந்து கவனித்து வந்தால் தெரியும்..
..
இதோ முடிந்தது திமுக என்று சொன்னவர்கள் எழுதியவர்களை காணவில்லை.. ஆனால் திமுக இன்றும் உறுதியோடு நிற்கிறது.. பகைச் சொல்லி பழிச் சொல்லி போனவர்கள் .. தனிசுகம் தேடி பதவியை நாடி தனிக்கட்சி கண்டவர்களின் கட்சிகள் கரைய தொடங்கியிருக்கிறது.. அடிதட்டுவரை ஜனநாயகத்தின் வேரை விரிவடைய செய்யாததே காரணம் .. திமுகவில்
கிளைக்கழக தேர்தல் தொடங்கி கட்சியின் தலைமை பதவி வரை ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடைமுறை.. சிலர் கேட்பதுண்டு கீழ்மட்ட தேர்தலில் போட்டி பகை குரோதம் எல்லாம் எழுந்து அடிதடிவரை வந்து நிற்கிறதே தேவைதானா ..நியமன நடைமுறைதானே சிறந்ததென்ற போது.. யார் வரவேண்டுமென்று அவர்களுக்குள் தேர்வு செய்வது தான் சிறந்தது .. தேர்தல் முடிந்தவுடன் கட்சியின் கட்டுபாடு அவர்களை ஒருங்கிணைக்கும் என்பார் கலைஞர்.. யாரையாவது நியமித்தால் அவர்கள் கட்சி தலைமைக்கு வேண்டியவர்கள் ..மற்றவர்களை தூரவைப்பதை போன்ற தோற்றம் வரும்.. ஆம் நிறைய முறை கலைஞர் இதை செய்துகாட்டியிருக்கிறார்.. எதிர் எதிர் நின்று உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களை பொதுகூட்டத்திற்கு தன் காரில் அழைத்துவந்து நான் இருவருக்குமே பொதுவானவன் என்று பறைசாற்றுவார்.. உதாரணமாக தஞ்சையில் மன்னையும் மணியும் எதிரெதிராக நின்றவர்கள் தஞ்சை வரும் போதெல்லாம் இருவரையும் தன்காரில் ஏற்றிக்கொண்டு சேர்ந்துதான் பொதுகூட்டத்திற்கு வருவார்.. மணி/எல்ஜி.. இப்படி தான் நடக்கும் இதைபோல எல்லா மாவட்டங்களிலும் தலைமை பொதுவாக நடந்துகொள்ளும் என்பதை யாருக்கும் ஒருதலையாக நடக்காதென்பதையும் நான் எல்லோருக்கும் பொதுவானவன் என உணர்த்துவார் ..
..
திமுக திராவிட இயக்கத்தின் தேர்தல் அரசியல் களம் ..மக்களுக்கு சேவை செய்வதற்கும் நமதுரிமையை மீட்டெடுக்க .. அதை சட்டமாக்க அதிகாரம் வேண்டுமென்பதை உணர்ந்ததால் தான் சமூக அரசியலில் தேர்தல் அவசியமென்பதை உணர்ந்து அதில் உச்சபட்ச ஜனநாயகத்தை கொண்டு வந்தது.. சுயமரியாதை திருமணத்தை உச்சநீதிமன்றம் ஏற்காமல் தகாத உறவென்றதால் .. சட்டமாக்க வேண்டுமெனில் சட்டத்தை இயற்றுமிடத்தில் நாமிருக்க வேண்டும் என தீர்மானித்து பேரறிஞர்அண்ணா ..திமுகவை தொடங்கினார் .. கட்சியை கட்டுகோப்போடு சிறிதும் கடமை தவறாமல் நெறியோடும் கண்ணியத்தோடும் வழிநடத்தி.. இன்றும் மக்களால் நேசிக்கபடுகிற ஒரு கட்சியாக .. எல்லோராலும் வியக்கதக்கவகையில் கட்சியை நடத்தியிருக்கிறார் கலைஞர்...
இன்றைக்கும் இந்தியளவில் அனைவராலும் பாராட்டை பெற கலைஞரின் தலைமையே காரணம். இயக்கத்தின் வேரை உறுதியாக்கியிருக்கிறது .. ஆம் அதன் வேர்கள் இனம் மொழி,சுயமரியாதை சமூகநீதியென பரந்துவிரிந்து கிடக்கிறது.. அசைக்கமுடியாது இந்தியாவில் ஆக சிறந்த ஜனநாயக இயக்கம் திமுக..
..
கலைஞர் மிகச்சிறந்த ஜனநாயகவாதி..
..
ஆலஞ்சியார்
Saturday, August 11, 2018
கலைஞரின் வழியில்
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூன்று மாபெரும் சக்திகள் நம்மை வழிநடத்தும்!
-தளபதி மு.க.ஸ்டாலின்
..
மிக தெளிவாக இருக்கிறார் சரியாகவும் சொல்லியிருக்கிறார் நானென்ற அகந்தையில்லை என்னால் முடியும் அதேவேளை மூன்று முத்தான தலைவர்களின் வழிநின்று அவர்கள் ஆற்றிய பணியை .. இந்த சமூகத்திற்கு செய்வேன்
அனைவரோடும் கரம்கோர்த்து செல்வேன் என்கிறார்..
தமிழக அரசியல் இந்த முப்பெரும் தலைவர்களால் வடிவமைக்கபட்டிருக்கிறது திராவிடச் சிந்தாந்தமென்பதின் அடிநாளம் இவர்களின் சொல், செயல் .. நம் எதிரிகளை இனம்கண்டு நமது உரிமைகளை எங்ஙனம் பெறவேண்டும் எம் மக்களின் மீதான மறைமுக மற்றும் நேரடி தாக்குதலை எம் பகைவர் தொடர்ந்து செயல்படுத்துவர் பாசிசத்தின் கோரபற்களை எப்படி பிடிங்கியெறிவதென நமக்கு பாடம் நடத்தி சென்றிருக்கிறார்கள்..
..
கலைஞர் மீது எந்தளவிற்கு வன்மம் இருந்தால் அவர் வாழும் போது தொடர்ந்து பொய் பிரச்சாரங்களால் நம்மிடையே ஒருவித வெறுப்பை விதைத்துக்கொண்டே இருந்தார்கள்
அதையெல்லாம் பொருட்படுத்தாது பணி செய்துகிடப்பதே எமது வேலையென வாழும் நொடிகள் தோறும் எமது மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே சிந்தித்து செயலாற்றினார்.. இறந்த போது கூட ஆர்எஸ்எஸ் தலைமை அவர் மீது கொண்ட கோபத்தால் அவருக்குரிய மரியாதையை தர மறுத்ததோடு தர கூடாதென மாநில அரசிற்கு இடைஞ்சலை தந்து .. நீதிமன்றம் மூலம் பெற நேர்ந்தது.. மக்களின் கோபம் மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்துவிட கூடுமென நீதிமன்றமே சொன்னபோது 352 பிரிவை பயன்படுத்தி அரசை கலைத்துவிடுங்களென ஆர்எஸ்எஸ் வைத்தி சொல்லும் அளவிற்கு கலைஞர் மீது.. தமிழ் மக்கள் மீது வன்மம் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ்.. இந்த கிழவனின் மரணம் கூட அவர்களை தூங்கவிடவில்லை..
..
தளபதி.மு.க.ஸ்டாலின் ..
இனி இந்த தமிழ் மண்ணின் நம்பிக்கை இந்த இனத்தை காக்க.. மக்களை காக்க மானமுள்ள தமிழினத்தின் போர்வாளாய் .. எம் பகைவர் அஞ்சுகிற குலைநடுங்குகிற எம்படையாய் தளபதியாய் நிற்கிறார்.. காலம் கனிந்து நிற்கிற போதும் அமைதியாய் நீண்ட அனுபவத்தின் சுவடாய்.. பக்குவபட்ட அரசியல் முதிர்ச்சியாய் .. அரசியல் இலக்கணத்திடம் நேரடி பயிற்சிபெற்றவராய் கலைஞரின் அரசியல் நெளிவுசுழிவுகளை அருகில் இருந்து கண்டுபடித்தவராய்.. விருப்புவெறுப்பற்ற அனைத்து மக்களின் அன்பை பெற்றவராய் .. கட்சி இயக்கம்,கொள்கை தாண்டி எதிரணியில் நிற்போரிடமும் கரிசனம் காட்டும் அரசியல் தெளிவாய் .. அதேவேளை எம் மக்களின் மீதான அவர்தம் உரிமை மீதான பாசிச தாக்குதல் தடுத்து அரணாய் நின்று வேரடி மண்ணோடு பிடிங்கி வீழ்த்தும் ஆற்றல் கொண்டோராய் .. எம் தளபதி நிற்கிறார்..
பெரியாரின் உறுதியும் .. அண்ணாவின் பண்பும் கலைஞரின் செயலும் உழைப்பும் ஒருங்கே பெற்று தமிழகத்தை மிளிர செய்வார்.. அவரை நம்புவோம் பின்துணைப்போம் .. கட்சி பேதமின்றி இந்த தமிழ் சமூகம் அவரின் கரத்தை பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இல்லையெனில் ..
பார்பனீயம் நம்மை மீணிடும் பழைய சூழலுக்கு கொண்டுபோய் சேர்த்துவிடும் .. போராடி பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாய் இழக்க நேரிடும் கல்வி வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு என சமூகநீதியை இழக்க நேரிடும்.. சில கூத்தாடிகளை காட்டி நம்மை பல்லிளிக்க வைக்க முனையும்.. "திறக்கபடாத கதவுகளையும் மடிக்கபடாத விரிப்புகளையும்" ஆயுதமாய் கொண்ட வந்தேறி கூட்டம் நம்மை நம் சந்ததியின் எதிர்காலத்தை சுரண்டிவிடும்..
..
பெரியார் அண்ணா கலைஞர் காட்டிய வழியில் பயணித்தால் மட்டுமே தமிழகத்தின் தமிழர்களின் எதிர்காலம் சிறந்துவிளங்கும் அதைதான் தளபதி அவர்கள் சொல்லியிருக்கிறார் ..செய்துமுடிப்பார்.. நம்மிடையே இருக்கும் கசப்புணர்வை கலைந்து தளபதியோடு பயணிப்போம்..
..
பெரியார் வழியில் .. அண்ணாவின் கனவோடு
கலைஞரின் வகுத்து தந்த பாதையில் பயணிப்போம்.. இனி..
தளபதியே நம் தலைவர்..
..
ஆலஞ்சியார்
Friday, August 10, 2018
நல்லதொரு தொடக்கம்..
திமுக ..
தலைவர் கலைஞர் மறைவையொட்டி திமுக தலைமைப் பற்றி செய்திகள் சமூகவலைத்தளங்களில் நீண்ட பாரம்பரியம் கொண்ட பத்திரிக்கைகளில் நிறைய சேதிகளை தாங்கி வருகிறது.. ஸ்டாலின் தலைவராகவும் அழகிரிக்கு பதவியும் .. சிலர் கனிமொழி பெயரையும் .. இன்னும்,சிலர் துரைமுருகன் ராசா தொடங்கி பட்டியல் நீளுகிறது..
விபரம் தெரிந்த பத்திரிக்கையாளர்கள் கூட சில சமிக்ஞைகளை கொண்டு ஆருடம் சொல்ல தொடங்கிவிட்டார்கள் சில புலனாய்வு பத்திரிக்கைகள் திரில்கதைகளை சொல்கின்றன.
எல்லோருக்கும் ஒர் செய்தி..
திமுக மாபெரும் ஜனநாயக இயக்கம் சில வரைமுறைகள் இங்கே கடைப்பிடிக்கபடும் செயற்குழுவும் அதை தொடர்ந்து பொதுக்குழுவும் முடிவு செய்யும்..
..
அண்ணா மறைந்த போது ஏற்பட்ட அசாதாரண சூழல் இப்போதில்லை..அப்போது மிக கவனமாக திமுக கையாண்டது ஊடகங்கள் தூக்கிபிடித்த நாவலர் முதல்வர் பதவியில் பின் மாறியதும் .. பொதுக்குழு உறுப்பினர்கள் தலைவர் பதவியை ஏற்று புதிய சட்ட திருத்தம் கொண்டுவந்து தலைவராக கலைஞரும் செயலாளராக நாவலரும் தேர்வு செய்யபட்டதும் வரலாற்று நிகழ்வுகள்... திமுகவின் அனைத்து நடவடிக்கைளுக்கும் பொதுக்குழுவில் எதிர்ப்பும் ஆதரவும் வந்திருக்கிறது சில திருத்தங்களை தலைமை ஏற்றுக்கொண்ட வரலாற்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன
மிகச்சிறந்த ஜனநாயகத்தை தந்தது..
..
யார் வரவேண்டுமென சமூக வலைத்தளங்களில் அலச தேவையில்லை திரு.ஸ்டாலின் தவிர்க்க முடியாத சக்தியாக கட்சிக்குள்ளும் வெளியிலும் திகழ்கிறார்.. நீண்டநெடிய சமூகப்பணியையும் கட்சிப்பணியையும் கொண்டு மிளிர்கிறார் மக்கள் எதிர்பார்க்கிற திமுகவின் தலைமையாக வரகூடும் .. வருவார்..
மற்ற பதவிக்களுக்கு யாரை நிறுத்தவேண்டும் யாரை விலகி வைக்கவேண்டுமென்று அறியாதவரில்லை கட்சியின் பொதுக்குழுவில் யாரெல்லாம் என்னென்ன பதவிக்கு போட்டியிடுகிறார்கள் அல்லது விரும்பம் தெரிவிக்கிறார்கள் என்பதை இன்னும் சில நாட்களில் தெரியவரும்.. ஊகங்கள் பரிந்துரைக்கிற பெயர்களை ஒருவித எதிர்பார்ப்போடு காத்திருப்பீர்களேயானால் ஏமாற்றமே மிஞ்சும் காரணம் நீங்கள் எண்ணுகிறவர்கள் மட்டுமே,திமுக இல்லை இந்த இயக்கத்தில் நிறைய திறமையாளர்கள் தங்களின் செயல்பாட்டால் தங்களின் ஆளுமை நிரூபித்தவர்கள் மக்கள் செல்வாக்கு பெற்றோர் உண்டு எப்போது யாரை பயன்படுத்தவேண்டுமென்ற தெளிவு தலைமையேற்க இருப்போருக்கு உண்டென்பதை காலம் நமக்கு சொலலியிருக்கிறது..மிக தெளிவான பாதையில் சமரசமற்ற கொள்கையில் பகுத்தறிவு பகலவன் வகுத்துதந்த வழியில் திராவிட பெருவுடைப் பெருமகன் கலைஞர் நடந்த பாதையில் ..திமுக நிச்சயம் நடைப்போடும்.. சில கலகம் பிறக்காதா என ஏங்குவது தெரிகிறது.. உங்கள் ஆசை நிராசையாகும்... புதிய அத்தியாயத்தை திமுக எழுதும் அதுவும் வரலாற்று சாதனையாய் திகழும்.. ஜனநாயகத்தின் வேர் பலமாக இருப்பதால் திமுகவை யாராலும் அசைத்திட முடியாது.. அவர்களின் குள்ளநரித்தனங்கள் விலைபோகாது..
..
ஒன்றும் மட்டும் உறுதியாய் சொல்லமுடியும் ..
திமுகவின் பொறுப்பிற்கு வருகிறவர்கள் நல்ல திறமையுள்ளவர்களாக பொதுத்தொண்டின் நாடி அறிந்தவர்களாக சிறந்த பங்களிப்பை தரகூடியவர்களாக ..மக்கள் விரும்புகிறவர்களாக இருப்பார்கள் அவர்களை தான் திமுக பொதுக்குழு தேர்வு செய்யும் ..
ஜனநாயக வழியில்..
..
ஆலஞ்சியார்
Thursday, August 9, 2018
யாம் எந்தையும் இலமே
யாம் எந்தையும் இலமே
கலைஞர்..
தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர் அல்லது சிறந்த தலைவர் என்பதைவிட .. தமிழர்களின் தந்தை என்பதே மிகச்சரியாகும் மக்களின் நலன் மட்டுமே தன் வாழ்நாள் குறிக்கோளாய் கொண்டு ஒரு தகப்பனைப்போல எல்லோருக்கும் வேண்டியதை அவரவர் விரும்பம் என்பதைவிட எது அவர்களுக்கு தேவையென உணர்ந்து அதை செய்துகாட்டியவர்..
..
இடஒதுக்கீடு கேட்டு வன்னியர்கள் போராடுகிறார்கள் அவர்களை அழைத்து தனியாக கேட்டால் கொடுப்பது இயலாமல் போகும் பிற்படுத்தபட்டோர் ஆணைய அனுமதி கிடைக்காதென தெளிவுபடுத்தி மற்ற சில சமுதாயத்தவரையும் இணைத்து ஒதுக்கீடு வழங்கியவர்.. இஸ்லாமியர் இடஒதுக்கீடு ஆந்திரா அரசு சட்டத்தை ஹைதராபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்கிறது.. ஆனால் தமிழகத்தில் அதை வெற்றிகரமாக நடப்பிலாக்கினார்.. ஆம் முதலில் பிற்படுத்தபட்டோர் ஆணையத்திடம் சிறுபான்மையினருக்கு (இஸ்லாம் கிருஸ்துவமே ஜெயின்) எவ்வளவு வழங்கலாமென கேட்கிறார் அந்த ஆணையம் ..சிறுபான்மையினருக்கு 7.5 வரை வழங்கலாமென கூறுகிறது.. கலைஞர் அதில் அரை விழுக்காடை குறைத்துக்கொண்டு 7 விழுக்காடு வழங்குகிறார் வழக்கம் போல் பார்பனர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றம் போகிறார்கள்.. ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிகாட்டி தடை கேட்கிறார்கள்.. ஆனால் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்ததோடு உறுதி செய்கிறது முறையாக பிற்படுத்தபட்டோர் ஆணைய பரிந்துரையைதான் திமுக அரசு செய்திருக்கிறதென்று குறிப்பை தருகிறது..
அப்பனுக்கு தானே தெரியும் ..
..
இந்தியாவிலேயே குடிசைமாற்று வாரியம் அமைக்கிறார்.. இருக்க குடில் இல்லாதவன் ..
ஒழுகும் குடிலில் இருப்பவனை உயர்த்தி பிடிக்கிறார்..
கிராமபுற மாணவர்களின் கல்வி விழுக்காடு மிக குறைவாக இருப்பதுகண்டு அதிலும் உயர்கல்வியில் மிக குறைவு என்றறிருந்து..
முதல்பட்டதாரிக்கு உயர்கல்வி இலவசமென்கிறார்.. விவசாயிகள் படும் துயரம் கண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக இலவச மின்சாரம் தருகிறார்.. மத்திய தொகுப்பில் பிற்படுத்தபட்டோருக்கு 27 விழுக்காடு தரலாமென மண்டல் பரிந்துரையை பார்பனர் அழுத்தம் காரணமாக கிடப்பில் போடுகிறது .. காலம்பார்த்து வி.பி.சிங் பிரதமரானதும் அமல்படுத்த கோரிக்கை வைத்து வெற்றியும் பெறுகிறார்.. பாஜக மாணவர்களை தூண்டி தீக்குளிக்க எல்லாம் செய்தது கடைசிவரை நிறைவேற்ற வேண்டுமென்ற சொல்லி சாதித்தார்.. அதற்காக அவரை அழைத்து சென்னையில் விழா எடுத்து நன்றி காட்டினார்.. சமச்சீர் கல்வி ..பெண்களுக்கு சொத்தில் உரிமை..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
..
மக்களுக்கு எதை செய்யவேண்டுமென்று அறிந்திருந்து செயல்படுத்தியவர்.. அதேபோல
தமிழ் மக்களின் உரிமை மீதான தாக்குதலை தனியொருவராக இருந்து முறியடித்தநர். தமிழர் உரிமையை பார்பனீயம் பறிக்க முயலும் போதெல்லாம் அரணாக இருந்து தடுத்தவர்.. ஆரிய பகை அஞ்சிய பேராளுமை ..கலைஞர்..
ஒரு தகப்பனைப்போல தமிழ் சமூகத்தை காத்து நின்ற சாமி..
நல்ல தகப்பனாய் இந்த தமிழ் சமூகத்தை காத்துநின்ற தகப்பன்சாமி கலைஞர்
தந்தையை இழந்து நிற்கிறது தமிழ் சமூகமே..
..
யாம் எந்தையும் இலமே..
..
ஆலஞ்சியார்
Wednesday, August 8, 2018
நல்ல தலைவனாய்
தலைவா..
கண்ணீரோடு விடை தருகிறோம்..
அழுகையின் காரணம் புரியவில்லை.. நாங்கள் வாழ்வில் அழ கூடாதென்ற உழைத்த நின் பிரிவு கண்ணில் நீரை வரவழைக்கிறது..
ஆம் அழ கூடாதென்று தான் நினைத்தேன். எமது அழுகை ஆரியத்திற்கு பேரின்பம் தந்துவிடுமோ என்று கூட நினைத்தேன்..
உன்னை சந்தனபேழை வைத்தபோது .. ஓ..வென அறியாமல் கதறினேன்..
நாடே நாதியற்று நிற்பதைபோல ஒர் உணர்வு தமிழ் மண் இன்று துவர்க்கிறது மக்கள் விட்ட கண்ணீரால் ..கோடிக்கணக்காக மக்களின் இதயம் அழுததை இப்போதுதான் இந்திய துணைக்கண்டமே பார்க்கிறது..
உன் வரலாறு முழுக்க புதுமைகளை புரட்சிக்களை செய்து கொண்டே இருக்கிறது.. ஒருமுறை கூட நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத உனக்கு இரு அவையும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியதோடு வரலாற்றில் முதல் முறையாய் அவை ஒத்துவைக்கபட்டது..
..
உன் இருப்பிற்கு கதிகலங்கியவன் உன் இறப்பிற்கும் பதறுகிறான் .. இறந்தும் நீ போராடி பெற்றாய் மெரினாவை.. இறப்பில் கூட பதறுகிற பரதேசி கூட்டம் செய்த சூழ்ச்சியை முறியடித்து எமக்கு பாடமாய் அமைந்திட்டாய்..
நான் கூட இறுமாப்போடு இருந்தேன் நீ.. தமிழகத்திற்கு தான் தலைவனென்று..நாடே 26 மாநிலங்கள் விடுமுறை விட்டு உனக்கு அஞ்சலி செலுத்துகிறது.. நீ.. இந்திய துணைக்கண்டத்தின் பெருந்தலைவன்..
நாட்டின் விளிம்புநிலை மக்களுக்காக உழைத்தவன் நீ என்பதை இந்திய மக்களின் மௌனம் கலந்த கண்ணீர் சொல்கிறது..
..
எம் மாநிலத்தில் நீ பிறக்கவில்லையென கவலைபடுகிறார்கள் உன் இருப்பின் பலம் அறிந்த அயல் மாநிலத்தார் ஆனால் தமிழன் நீ இருக்கும் போது உன் அருமை தெரியாமல் இருந்தான்.. மறைந்த சிலநொடிகளிலேயே ஆரிய தாண்டவத்தை கண்டு அதிர்ச்சியானான்.. இருந்து கண் மூடி உறங்கிய நிலையிலும் இடஒதுக்கீட்டு வெற்றி சூத்திரத்தை பாடம் நடத்திவிட்டு போய்விட்டாய்.. உன்னால் பலன் பெறாத ஒரு தமிழ் குடும்பகூட இல்லை வெவ்வேறு வடிவில் திட்டத்தில் சமூகநோக்கில் செயலில் நீ.. நன்மை செய்துவிட்டு போயிருக்கிறாய்.. நேற்றுவரை குதறிக்கொண்டிருந்த தொலைகாட்சிகள் .. இன்று உன் பிரிவு கண்டு கண்ணீர் விட்டு கதறின..
..
ஒரு போராளியின் ஒரு தொலைநோக்காளனின், பகுத்தறிவாளின், ஒரு எழுத்தாளின்:,இலக்கியவாதியின், சமூக விஞ்ஞானியின், நல்ல நண்பனின், நல்ல உழைப்பாளியின்..
அரசியல்வாதியின் ஆட்சியாளனின்..நல்ல குடும்பதலைவனின்..
நல்ல மனிதனின் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென எமக்கு உணர்த்தியது உமது இறுதி நிகழ்வு .. உன் வாழ்வே எமது பாடம்
ஆம் படிப்பினை தரும்.. எதிரியை எம் இன பகையை வேரறுக்க.. துரோகியை அடையாளம்கண்டு வீழ்த்த.. எம் இனத்தின் மக்களின் மேம்பாட்டிற்கான சுயமரியாதையை நிலைநாட்ட.. விளிம்புநிலை மக்களின் உயர்த்த.. நல்லதொரு புதிய தொடக்கத்தை தொடங்க.. உன் வாழ்வெனும் ஆளுமைகொண்ட அத்தியையம் வழிகாட்டும்..
..
நீ..
தமிழ் குடிகளில்
தமிழர் நெஞ்சங்களில் வீற்றிருப்பாய்..
அப்பனாய்.. அம்மையாய்.. அருள் தரும் இயற்கையாய்.. காவலாய்..
சென்று வா.. அப்பனே..
..
ஆலஞ்சியார்
Tuesday, August 7, 2018
போய் வா.. ஆசானே
போய்விட்டாயா
என்பதாண்டுகாலம்
எமை சூழ்ந்த காரிருளை நீக்கிய சூரியனே
உழைத்து உழைத்து களைத்து போய்விட்டாயா
இனியேனும்..
தம்மை காத்துக்கொள்ள தம்பிகளே தயாராகிக்கொள்ளுங்களென சொல்லி போய்விட்டாயா..
நீச்சல் கற்று கொள்ளும் வரை தான்
கட்டுமரம்..
இனி.. எதிர்நீச்சல் போடு என
போய்விட்டாயா..
..
அய்யனே..
அமுதே..
அழகுகோனே..
அமிர்தமே..
அன்பே..
எமதருமை தமிழே
எமதாளுமையே..
என்ன அவசரம்..
நூறை கடக்க இன்னும் சில ஆண்டுகள் தானே
அதற்குள்.. என்ன அவசரவேலை..
என் உயிரை யாராலும் பறிக்க முடியாதென்றாயே..
யாசித்து பெற்றால்தான் உண்டென்றாயே..
வாசில் நின்று அழுது யாசித்தானா..
கொடுத்துவிட்டாயா..
..
எங்கள் சூரியனே..
எதிரிகளை சுட்டெரிக்கும் உன் பேச்சு..
உன் இருப்பு எம் பகைவரை இருப்புகொள்ளாமல் தவிக்க வைத்ததே..
இனி ..
நீ கற்று தந்ததை
நாங்கள் சுழற்றுவோம்..
பெரியாரின் சீடரே
பேரறிஞரின் தம்பியே..
எம் இனத்தின் காவலே..
நின் பணி தொடர்வோம்..
நீ..
வகுத்து தந்ததே எமது பாதை..
நீ.. மறையவில்லை
காலமாய் எம்மோடு இருக்கிறாய்..
..
எங்கள் வானில்
நிரந்தர சூரியன்..
நீ..
தொடாத உச்சமில்லை.
இனி எவரும் உன் உயரத்தை
தொட போவதுமில்லை..
உன் உச்சம் இயற்கை தந்தது..
..
நன்றி!..
மு.க..
இத்தனை காலம்
காவலாய் நின்றெமை காத்தமைக்கு..
..
போய் வா..எம் தலைவா..
..
ஆலஞ்சியார்
Monday, August 6, 2018
கலைஞரின் விழுதுகள் நாங்கள்
கலைஞர் எனும் ஆளுமையை இருவேறு கூறுகளாக பிரித்துபார்த்தால் அவர் ஆற்றிய தொண்டு சமூகநலன் கொண்டதாகவே இருக்கும் மற்றொன்று அவரின் அரசியல் சாணக்கியம்.. சமகாலத்தில் இந்திய துணைகண்டம் கண்டிராத அதிசயமாக அமையும், வெவ்வொரு விடயத்திலும் பகுத்தறிவு துணைக்கொண்டு மிக சாதூர்ய காய்நகர்த்தல் ஒரிரு வார்த்தைகள் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்து புதியதொரு பாதையை வகுத்து தந்துவிடும்.. காலம்கடந்தும் செயல்படுகிற தேவைபடுகிற திட்டங்களாக அமைந்திடும்..52 ல் திரைபடத்தில் மனிதனை மனிதன் இழுக்கலாமா என்று கேள்வி கேட்டு ..நீங்க சென்னை மேயரா வந்தவுடன் மாத்திடுங்க என்பார் .. ஆம் எழுபதுகளிலேயே மாற்றி சாதனை புரிந்தவர் இந்தியா நடப்பிலாக்க 30 ஆண்டுகள் ஆனது.. இதொரு எடுத்துகாட்டுதான்..
..
தமிழக அரசியலை துல்லியமாக கணித்தவர்.. எந்தவொரு அமைப்போ கட்சியோ ஆரம்பிக்கும் போது சுருக்கமாக சிலர் வார்த்தைகளில் கருத்திடுவார்.. மதிமுகவிற்கு மறுபடியும் திமுக என்றார்.. அதிமுகவை பற்றி பேசும் போது.
நடிக்கருக்கான கட்சி சினிமா கவர்ச்சி கட்சி மேக்கப்பில் ஜொலுக்கிறது கொள்கை எனும் ஆணிவேர் இல்லை காலம் கடந்து நிற்காது கலைந்து மறைந்து போகும் என்றார்
..
எத்தனை நிதர்சனம் எவ்வளவு துல்லியமான கணிப்பு ஆம் எம்ஜிஆர் தனது அபிமானத்திற்காக தொடங்கபட்ட கட்சி அது கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்தது எழுபதுகளில் சினிமாவின் தாக்கம் தமிழக மக்களை மையம் கொண்டிருந்த காலம்.. சினிமாவை பொழுபோக்காக காணாமல் வாழ்வியலாக நம்பிய ஜனங்கள் நடிப்பை நிஜமென்ற நம்பிய மக்கள் அரிதாரம் பூசியவன் ஆண்டவனாக நடித்தாலும் அவன் ஆண்டவனில்லை என்கிற யாதார்த்தத்தை புரிந்துக்கொள்ளாத காலம் நேரமாக ஆக வேசம் கலையுமென்பதை உணர்கிற போது மெல்ல கரைய தொடங்கியிருக்கிறது .. இப்போது கூட கவர்ச்சியை தேடுகிற தனிமனித மோகத்தை தலைமையேற்க கெஞ்சிகிற சூழல் ..
..
திமுகவின் கொள்கை ஆணிவேர் மக்களின் இதயங்களில் பதிந்ததால் தான்.. நிறைய வேறுபாடுகளிலும் திமுக தொடர்ந்து நிற்க முடிகிறது..எத்தனை விதமான எதிரிகள் அருகிலிருந்து அன்பாய் நடித்தவன் குரல்வளையில் கத்திவைக்கிற போதும் ஆணிவேர் வீழாது காத்துநின்றது..
அரசியலில் சமரசங்கள் தவிர்க்கமுடியாதென்றாலும் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இயக்கம் ஒடுக்கபட்ட சமூகத்தை கை தூக்கிவிடவும் பிற்படுத்தபட்டவனின் உரிமைகளை காத்து ஆதிக்கம் செலுத்துவோரின் கோரபற்களை பிடிங்கி எறிந்தும்.. பாசிசத்தின் கோரதாண்டவத்தின் நிழல்கூட பாடாதவாறு காத்துநிற்க முடிந்தது.. தனிமனிதனை நம்பி அல்ல இயக்கம் இங்கே கொள்கை மறவர்கள் சமூகநீதியை பற்றிபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் சரியான நபரை காலம் தேர்வு செய்கிறதே தவிர யாரையும் யாரும் இங்கே எடுத்தியம்ப முடியாது..
கருத்துசுதந்திரம் இங்கே பேணபடுகிறது அடிமைகளை வளர்த்துவிடவில்லை.. முரண்பட்ட கருத்தாயினும் இயக்கத்தில் பொதுவெளிகளில் விவாதங்களில் வைக்கமுடியும்.. தனிமனித விமர்சனங்கள் தவிர்த்து சுதந்திரமாக யாரும் கருத்திட முடியும்.. எதிராளிகளின் கருத்தை கூட காதோர்க்கும் கண்ணியம் இங்கே உண்டு அடக்குமுறை,திமிர்,அடிமைத்தனம், இவையெல்லாம் இங்கே காணமுடியாது..
காலங்கள் கடந்தும் திமுக வலிமையோடு இருப்பதற்கு அதிலும் தேர்தல் தோல்விகளின் போதும்.. அதே கம்பீரம் குறையாமல் நடைபோட .. சலவை செய்த கரைவேட்டியோடு வலம் வரமுடிகிறதென்றால் .. கலைஞர் சொன்னதைப்போல கொள்கையெனும் ஆணிவேர் அழியாமல் காத்துநிற்கிறது ..
..
அதிமுகவின் கவர்ச்சி கலைந்து மறைந்து போகிறது.. ஆனால் திமுக கொள்கையால் கட்டமைக்கபட்டது காலம் கடந்தும் நிலைத்துநிற்கிறது.. கலைஞரின் சுணக்கம் எங்களை கலங்க செய்யவில்லை.. இயற்கையின் நீதியை அறிவோம்.. எம்மோடு அவரின் சுவடுகள் எப்போதுமிருக்கும்.. எம் இனத்தை காக்கும்.. வயது மூப்பு உடல் ஒத்துழையாமை எம்மை பதற செய்வது இயல்பு .. எதிரிகளே கனவுகாணாதீர்.. எம்மை வீழ்த்த முடியாது ஏனெனில் எமது சித்தாந்தம் இயற்கை/ பகுத்தறிவு சமூகநலன் இனத்தின் மானம் சார்ந்து நிற்பது .. பெரியாரும் பேரறிஞரும் முத்தமிழறிஞரும் எம்மை வடிவமைத்திருக்கிறார்கள்.. எத்தனை நூற்றாண்டு பின்னிட்டாலும் எம் கொள்கைகளின் வேர் ..ஆழ ஊடுறுவியிருக்கிறது..
..
வீழ்ந்துவிடமாட்டோம்
..
ஆலஞ்சியார்
Sunday, August 5, 2018
தளபதி படை இனி .. தமிழகம் ஆளும்
அதிமுகவில் மக்களை கவரக்கூடிய தலைவர்கள் இன்று இல்லை; ஏற்கெனவே இருந்த தலைவர்கள் கூறிய அறிவுரைகளின்படி நாம் நடந்து வருவதால் அதிமுக வெற்றிபெற்று வருகிறது"
மதுரை பொதுக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
..
அவர்களுக்கு புரிகிறது இனி எழவே முடியாதென்று யாரையாவது இறக்குமதி செய்து காப்பாற்றிகொள்ளலாமென்ற சிந்தனை சமீபகாலமாக அதிமுக அமைச்சர்களிடையே நிலவுகிறது இதன் பின்னில் பாஜக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.. மக்கள் செல்வாக்கென்று இவர்கள் நினைக்கிற சினிமா கவர்ச்சியை முன்னிறுத்த ரஜினியின்
வரவை/திணிப்பை செய்யலாமா என்றெண்ணுகிறார்கள்.. காலம்கடந்தபோய்விட்டது அறியாமல்..
ரஜினியை மட்டுமல்ல கமல்ஹாசனையும் கட்சியில் சேர்த்துக்கொண்டால் கூட கரைசேராது..
..
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பது ஆட்சிமாற்றம் ..அதிமுக முகவரியில் யார் வந்தாலும் கட்டியிருப்பதை அவிழ்த்துவிடுவார்கள் சரிந்த பலத்தை சரிசெய்ய தற்போதைக்கு முடியாது ..தொடர்ந்து அடிமைத்தனத்தோடு மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கொஞ்சமும் லஞ்சையின்றி பாஜக கேட்பதற்கு முன்பே செயல்படுத்த துடிக்கிறார்கள் .. மக்கள் நலனைவிட எவ்வளவு கொள்ளையடிக்கலாமென்ற ஒற்றை சிந்தனையை தவிர வேறேதுமில்லை.. மக்களைப்பற்றியோ அவர்கள் படும் துன்பங்கள்பற்றியோ எள்ளளவேணும் கவலைபடாமல் நடக்கிற ஆட்சியை இதுவரை தமிழகம் கண்டதில்லை..
..
ரஜினியின் திணிப்பை பாஜக திட்டமிடுவதாக செய்திகள் வருகிறது ரஜினி அரசியல் ஆசையின் இறுதிசடங்கை செய்திட நல்ல வாய்ப்பு மக்களுக்கு கிடைத்திருக்கிறது தனித்துவத்தோடு வந்தால் கூட சில ரசிகமணிகளில் ஆதரவு கிடைக்கலாம்..இல்லையேல் படுபாதாளத்தில் விழுந்த கதையாக போய்விடும்,.. தமிழக அரசியல் முகம் வேறுமாதிரியானதென்பதை பாஜக மற்றும் ரஜினி அறிவார்கள் எங்கிருந்தோ வந்து திடீரென ஒருவர் தலைமையேற்பதா என சிலர் எதிர்க்க தொடங்கியிருக்கிறார்கள் .. அடிமட்டத்தில் இதன் சத்தம் அதிகம் கேட்க தொடங்கியிருக்கிறது அதன் வெளிபாடுதான் கவர்ச்சியான முகமில்லையென்ற அமைச்சரின் பேச்சு ஏற்கனவே பாஜகவின் ஊதுகுழல் மாபா.பாண்டியராஜன் கொண்டு மெல்ல நூல்விட்டு பார்க்கிறது அடிமை அமைச்சர்களை ரெய்டு வருமானவரி சோதனையென மிரட்டி வைக்கலாம் ஆனால் வெகுமக்களின் எதிர்ப்பை காரணமே இல்லாமல் ரஜினி சுமக்க நேரிடும்..
..
அதிமுக ரஜினியோடு கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்யலாம் எதுவானாலும் திமுகவின் வெற்றியையோ தளபதியை வளர்ச்சியையோ தடுத்திட முடியாது காரணம் மக்கள் விரும்புகிற நேசிக்கிற நல்ல தலைவராக மக்கள் மனங்களில் திகழ்கிறார்.. திமுகவின் வெற்றியை தடுக்க ஒருவகை திசைதிருப்பல் நாடகம் அரங்கேற்றுகிறார்கள்.. ரஜினி என்பது பாஜகவின் இன்னொரு முகம் என்பதை தமிழர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்..
இனி நிறைய கூத்து கட்டுவார்கள் அவர்கள் எண்ணம் ஈடேறாது..
..
#தளபதிபடையே_இனி_தமிழகம்_ஆளும்..
...
ஆலஞ்சியார்
Saturday, August 4, 2018
யாரிந்த சீமான்
முதலில் சீமானை நல்ல மருத்துவரிடம் காட்டுங்கள் .. கருணாநிதியை ஏன் பார்க்க போனேன் .. ஏனென்றால் நான் நல்லவன்.. சீமானின் தில்லுமுல்லுகள் நாடறிந்தது அவரை வளர்த்துவிட்டதில் பெரியார் தி.கவிற்கு பெரும் பங்கிருப்பதை மறுக்கமுடியாது ..யாரிவன் எங்கிருந்து வருகிறாரென்பது அறிவோம்..
ஈழப்போரில் பிரபாகரனின் இறுதி உறுதிசெய்யபட்டதும் சீமான் தன்னை ஈழ விடுதலையின் மொத்த குத்தகைகாரனைப்போல காட்டிக்கொள்கிறார்
கலைஞர் மற்றும் ஜெயலலிதா அரசு இருந்தபோது அடக்கிவாசித்து இப்போது ஆரியர்களின் கைக்கூலியாய் திராவிடத்தை ஒழிப்பதற்காக புறப்பட்டிருக்கிறார்.. முதலில் இவனுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லையென்று தான் நினைத்தோம்.. கலைஞரை வந்து பார்த்துவிட்டு போய் மகா யோக்கியனைப்போல கலைஞரை துரோகி என்று சொல்லும் போது பேசாமல் இருக்கமுடியாது..
..
யார் தடுத்தாலும்/ நினைத்திருந்தாலும் விடுதலைப்புலிகளை கருவறுக்கவேண்டுமென்ற இலங்கை அரசின் முடிவை தடுத்து நிறுத்த முடியாது காரணம் சார்க் மாநாட்டில் எடுத்த / ஒப்புக்கொண்ட தீர்மானத்தின்படி இலங்கையில் நடக்கும் தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய உள்ளிட்ட ஏனைய நாடுகள் ஆதரவளிப்பளிதென்ற முடிவு..
காங்கிரஸ் என்றில்லை பாஜக ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும் .. பிரபாகரின் தான்தோன்றித்தனமும், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஆண்டன் மறைவிற்கு பிறகு தடுமாறியதும்.. கூட இருந்தவர்களை ஒவ்வொருவராக கொன்று அதிகாரமமதையில் கடைசியில் கருணாவை கொல்ல நினைத்தது தப்பி சிங்களவனிடம் அடைக்கலம் புகுந்தபோதே தனக்கான நேரம் குறிக்கபட்டதை பிரபாகரன் அறிந்திருந்தார் அதனால்தான் முல்லிவாய்க்கால் நோக்கி மக்களை நகர்த்தி மனிதகேடயமாக மாற்றியதே இனத்தின் பேரழிவிற்கு காரணமானதே தவிர.. இதில் கலைஞரின் பங்கு/செயல் எங்கிருந்து வந்தது.. கலைஞரின் ஆலோசனையை எப்போதுமே ஏற்காததே பிரபாகரின் பின்னடைவிற்கு காரணம்.. எல்லாநேரத்திலும் தோக்கு(துப்பாக்கி) காக்குமென நம்புவது போராளிக்கு தகுந்ததல்ல ..எப்போது தோக்கை கீழே வைக்கவேண்டுமென்று அறிந்திருக்கவேண்டும்
..
ஈழ விடுதலை வரலாற்றில் நிறையபேர் பங்களிப்பதை செய்திருக்கிறார்கள்.. பல்வேறு பிரிவுகளாக இருந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கபட்டதோடு.. அவர்களை கொன்று ஒரு சர்வாதிகாரியைப்போல நடந்துக்கொண்டவர் பிரபா.. உமா மகேஸ்வரன் என்ன காரணத்திற்காக கொல்லபட்டாரென இன்றைய நவீன தமிழ்தேசிய பிள்ளைகளுக்கு தெரியுமா.. கல்யாணம் செய்துகொள்ள கூடாதென்ற விதியை மீறியதால் ..ஆனால் காலபோக்கில் விதிகள் மாற்றபட்டது.. பிரபாகரனின் மறுபக்கம் மிக மோசமானதாக இருந்ததை மறுக்கமுடியுமா.. எதிர் கருத்துடையவர்களை அவர்கள் ஈழப்போராளியாக இருந்தாலும் கொல்வதை தன்னை மீறி யாரும் வளர்ந்துவிட கூடாதென்றுதானே நினைத்தார்..
மலையக தமிழர்கள், கொழும்பு இஸ்லாமிய தமிழர்களையெல்லாம் எப்போதாவது அரவணைத்திருக்கிறாரா.. ஈழமக்களின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்திருக்கிறாரா..
போராளியாக இருந்தவர்களின் இன்றைய வாழ்க்கை எப்படியிருக்கிறதென்பதை இங்குள்ள தம்பிகள் அறிவார்களா..
..
ஒருவித பதட்டத்தோடு மக்களை வைத்திருந்து கடைசியில் கொன்று போட்டதுதான் மிச்சம் ..
இப்போது கூட துரோகம் என்ற சொல்லை பயன்படுத்துபோதுதான் நிறைய கிளறவேண்டியிருக்கிறது.. சீறிசபாரத்தினத்தை கொன்ற நிகழ்வு .. பச்சிளம் குழந்தையையும் திரும்ப வந்து கொன்றதெல்லாம் பேச ஆரம்பித்தால் பிரபாவின் தோற்றம் மாறிபோகும்..
மாத்தையா ஏன் கொல்லபட்டார்.. ஈழம் மலர்ந்தால் அவர்தான் முதல் ஜனாதிபதி என்று பேசியது யார்..? பிரபாவை போராளியாக காட்டி நின்றதில் பெரும்பங்கு திராவிட இயக்கத்திற்கே உண்டு நாடே பயங்கரவாதியாக சித்தரித்தபோதும் (ராஜீவ்படுகொலையின்போது) காத்து நின்றதும் மௌனமாய் பலி சுமந்ததும் திமுகவும் கலைஞரும் தான்..
..
உண்மையில் ஈழ தமிழ் மக்களுக்காக அதிகம் செய்ததும் அதிகம் துயரபட்டதும் அதிக விலைகொடுத்ததும்.. அதிகமாக இழப்பை சந்தித்ததும் திமுகதான் கலைஞர்தான்.. பிரபாகரனை எம்ஜிஆர் கைது செய்த போதுகூட சட்ட துணையை வழங்கியது திமுகதான்.. ஆனால் இன்றைக்கு சில விவரகேடுகள் ஈழத்தை வைத்து பிழைக்கும் .. சொகுசாய் வாழும் கேடுகெட்டவர்கள் கலைஞரை குறைகூறுகிறார்கள்..
கலைஞரை குறைகூற எவனுக்கும் தகுதியில்லை..
..
ஆலஞ்சியார்
Friday, August 3, 2018
விலைபோகும் ஊடகங்கள்
விலைபோகும் ஊடகங்கள்..
கொஞ்சம் ஆழ்ந்தோசித்தால் அவர்களின் நோக்கம் நமக்கு விளங்கும்.. மெல்ல மெல்ல ஊடகங்களை ஆக்கரமிக்கிறார்கள் ..
ஊடகவியலாளர்களை சந்திக்கவே அஞ்சுகிற மோடி.. தமிழக ஊடகவியலாளர்கள் சந்தித்து இருப்பதின் பின்னில் மிகப்பெரிய திட்டம் இருக்கிறது.. யாருமே கண்டுக்கொள்ளாத பாஜகவை முன்னிலைபடுத்த ஊடகங்கள் கேட்டுக்கொள்ளபட்டிருக்கிறது.. ஊடகவிவாதங்களில் பாஜக முகம் இல்லாமல் இருக்க கூடாதென்று அறிவுறுத்தபட்டிருப்பதாக தெரிகிறது.. பிரியாணி அண்டாவை தூக்கிகொண்டு ஓடிய பாஜகவினரை பற்றி வாய்திறக்காத ஊடகம் .. பாஜக இறக்குமதியின் பிரியாணி சண்டைக்கு திமுகதானென வரிந்துகட்டி விவாதம் நடத்துவதும் திமுகவினர் இல்லாதபோது நடத்துவதும் ஊடகஅறமா என்று விளக்கவேண்டும்..
..
அதுமட்டுமல்ல கருத்துசுதந்திரம் என்ற பெயரில் வன்மங்களை கொட்டிதீர்க்கிறார்கள்..
அவர்கள் மிக தெளிவாக சிறுபான்மையினர் மற்றும் தலித்விரோத போக்கை கையிலெடுத்து ஆடுகிறார்கள்..
அவர்கள் நோக்கம் திராவிடம் என்ற சொல்லை தமிழ்மண்ணிலிருந்து அகற்றவேண்டும் கொஞ்சம் கடினமான பணி ஆனால் அதற்கான துவக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள் ..
இரண்டுமூன்று ஆண்டுகளுக்கு முன் சமூகஆர்வலர்கள் என்ற பெயரில் வலம்வந்த கருத்துரையாளர்கள் முகமூடியை கழட்டிவிட்டு நேரடியாகவே தலித்விரோத போக்கை/குரோதத்தை வெளிபடையாகவே காட்டியிருக்கிறார்கள்..
ஊடகங்கள் வேண்டுமென்றே நடுநிலையாளர்களை, சமூகநீதியாளர்களை, புறக்கணிக்கிறது இதுநல்லபோக்கல்ல.. இவை எல்லாவற்றிக்கும் பின்னால் ஆர்எஸ்எஸ் எனும் இந்து தீவரவாத அமைப்பு பின்னில் இருப்பதும் அதை இயக்கும் பார்பனகும்பல் என்பது தெளிவாகதெரியும்..
திராவிட இயக்கங்கள் இன்னும் அதிகமாக பார்பனீய எதிர்ப்பை காட்டவேண்டிய நேரம்வந்துவிட்டது ..
முழுமூச்சாக எதிர்ப்பை ..மிகசத்தமாக கையிலெடுக்கவேண்டும் வெறுமனே பெரியார்மண் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காலம்கடந்த ஞானோதயமாக முடியும்..
..
இந்துத்துவாசக்திகள் குறிப்பாக இடைசாதிகாரர்களை தூண்டிவிட்டு அவர்கள் பின்னால் நின்று வேடிக்கைப்பார்பார்கள்..
இதை நீங்கள் கண்கூடாகவே காணலாம் எந்த பிராமணனைவது காவிதுண்டோடு ஊடகத்தில்/ வெளியில் தெரிவார்களா என்றால் இல்லை ஆனால் இடைசாதிகாரன் காவிதுண்டோடுதான் வருவான் ..
அவர்கள் மிக சதூர்யமாக நகர்ந்துக்கொள்வார்கள் ..,
..
திராவிட இயக்கங்கள் மிக சத்தமாக செயல்படவேண்டிய தருணம்..
தொடர்ந்து தாக்குதலை ..தமிழர்களின் தொலைகாட்சிகளில் ஆரியர்கள் புகுந்துக்கொண்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக ஆதித்தனைரின் தந்தி படும்பாடு நமக்கெல்லாம் கண்கூடாக தெரிகிறது..
இனியும் காலதாமதமின்றி எதிர்ப்பை அதிகதிகமாக வேகமாக,விவேகத்கோடு எடுத்தியம்பியவேண்டும்.. பாஜகவை தூக்கி நிறுத்த அல்லது அதைப்பற்றியே பேசவேண்டுமென்பதற்காக ஊடகங்களை ஒருவித மிரட்டலோடு அணுகுகிற முறை ஆபத்தானது .. இம் மண்ணில் சாதிய மோதலை மதவெறியை தூண்டுவதும் மெல்ல பாசிசத்தின் சித்தாந்தத்தை மண்டையில் ஏற்றுவது போன்ற பணிகள் நடைபெறுகிறது அதில் ஒன்றுதான் இந்தியை படிக்க ஆர்வம் காட்டுவதாக பொய்செய்தியை வெளியிடுகிறார்கள்.. திமுக ஆட்சிக்கு வரும் என்பதை உணர்ந்து அதற்கெதிரான கூட்டுசதியில் ஊடகங்களின் பங்கை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.. ஏன் சந்தித்தோமென்று இவர்கள் வெளிப்படையாக சொல்லாதவரை இவர்கள் மீதான நம்பிக்கை சந்தேகத்திற்குரியதுதான்
நெருக்கடிகாலத்தில் கூட இவ்வாறு ஊடகங்கள் விலைபோனதாக தெரியவில்லை கருத்துசுதந்திரம் மறுக்கபட்டபோதுகூட ஆளும் கட்சிக்கெதிரான போக்கை ஊடகங்கள் கைவிடவில்லை.. இப்போதைய சூழல் ஜனநாயகத்தின் நான்காம்தூணை பாசிசம் எனும் கரையான் அரிக்க தொடங்கியிருக்கிறது ..
நிச்சயமாக மோடியுடனான இவர்களின் சந்திப்பிற்கு நாட்டுநலனுக்கானதில்லை.
..
ஆலஞ்சியார்
Thursday, August 2, 2018
நல்ல தலைவர்
தளபதி.. உயர்கிறார்..
ஒரு தலைவனுக்கான தகுதி எப்படி வரையறுக்கபடுகிறதென்பதை கவனிக்கவேண்டும் ..
சமகாலத்தில் இப்படியொரு தெளிவான வளரும் தலைவரை காணமுடியவில்லை நேர்மை.. எதுவும் முறையாக மக்கள் அங்கீகரிப்பில் வரவேண்டுமென்ற பிடிவாதம் பதவி மக்கள் அளித்ததாக வேண்டுமென்ற உயர்நோக்கு.. தளர்ந்து நிற்கும் நேரத்திலும் கடமையறிந்து செயலாற்றல்
தனிநபர் பகைமறந்த அரசியல் .. நாகரீக செயல்பாடு நல்ல தலைவராக திரு.ஸ்டாலினை நம்மில் நிறுத்தியிருக்கிறது..
..
தலைவர் உடல்நலியுற்று இருக்கிறார் அந்த நிலையிலும் மக்கள் மீது இந்த அரசு திணித்த சொத்துவரிக்கெதிராக போராட்டத்தை முன்னெடுக்கிறார்.. இயக்கத்திற்குள் புகுந்த கயவர்களால் பிரியாணி கடை அடித்து நொறுக்கபடுகிறது.. சம்பந்தபட்டவர் நீக்கபடுவதோடு பாதிக்கபட்ட கடை ஊழியரை/ முதலாளியை சந்தித்து தனது வருத்தத்தை பதிவு செய்வதோடு வேண்டிய உதவிகள் செய்யபடுமென்கிறார்.. தலைவர் மருத்துவமனையில் இருக்கும் போது கூட தா.பா உடல் நலிவுற்று மருத்துவமனையில் என்றவுடன் சென்று பார்க்கிறார்.. பகைமை அரசியல் என்பது எம்ஜிஆரெனும் கயமை கொண்டுவந்து நம்மிடையே விட்டது .. கலைஞரை யாரேனும்,சந்த்திதால் அவரை கட்சியில் கட்டம்கட்டி அவரது பதவியை பிடிங்கி.. ஒருவித சாடிஸ்ட் மனபான்மையோடு எம்ஜிஆர் நடந்துகொள்வார்.. அது பின்வரும் நாளில் அதே குரோத மனபான்மையோடு நடந்துகொள்ள வைத்தது பின் வந்த ஜெயலலிதா கேலி கிண்டல் செய்வதை ரசித்ததோடு அவர்களுக்கு பதவி வழங்க அது தொடர்கதையானது.. நாகரீக அரசியல் என்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல அவரோடு இணைபவர்களுக்கும் தொற்றிக்கொண்டது..
..
இப்போது தான் மெல்ல மெல்ல
நல்லதொரு அரசியல்களத்தை காணமுடிகிறது அதன் தொடக்கத்திற்கு காரணம் நிச்சயமாக தளபதி.ஸ்டாலின் காரணம் ஆவார்.. முதிர்ச்சியான அரசியலை .. களத்தில் கருத்தில் கொள்கையில் மட்டுமே எதிரியே தவிர.. தனிப்பட்ட விடயத்தில் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்.. பெரியார் அண்ணா காமராஜர் கலைஞர் போன்றவர்களின் அரசியல் பண்பாட்டை மீட்டெடுத்திருக்கிறார்.. ஆம்.
எவ்வளவுதான் எம் இன எதிரியானாலும் ராஜாஜியோடு கொண்ட நட்பில் பேராசான் பெரியார் நேர்மையை கடைபிடித்தார்.. ராஜாஜியின் இளம் விதவை மகளை கண்டு குழந்தையை படிக்க வை என்று சொல்லி ..அவரின் மறுமணத்திற்கு காரணமாக இருந்தார்.. கலைஞரின் தாயார் அஞ்சகம் அம்மையார் மறைந்த போது முதல் ஆளாக கலைஞருக்கு முன்பே வீட்டுவாசலில் நின்றவர் காமராஜர் .. தன் மகன் திருமணத்தின் போது காமராஜர் வருவதற்காக மேடைவரை கார் வருவதற்கு ஏற்பாடு செய்து உடல் முடியாமல் இருந்த போதும் வந்து வாழ்த்தவேண்டுமென விரும்பியவர் கலைஞர்..
காமராஜர் மரணத்தின் போது மூத்த சகோதருக்கு அருகில் இருந்து கடமையை செய்வதுபோல செய்தவர் கலைஞர் ..
நல்ல ஆரோக்கியமான அரசியல்களத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக குரோதத்தை தொண்டர்களிடையே இரண்டாம்கட்ட தலைவர்களிடையே வளர்த்து மகோரா எனும் எம்ஜிஆர்.. நம்மிடையே பிடித்த பிணி தொலைந்ததைப்போல .. ஜெயலலிதாவோடு காழிப்புணர்வு அரசியல் ஒழிந்து நல்லதொரு தொடக்கம் முளைத்திருக்கிறது.. பன்னீரும் எடப்பாடியும் கலைஞரை நேரில் காண வருவதும்.. தலைவரென விளிப்பதும் நல்ல அறிகுறிகள்..
..
நல்ல தொடக்கம் வந்திருக்கிறது நல்லவர். நம்பிக்கையானவர் முற்போக்கு சிந்தனையாளர்
நல்ல அரசியலை நேர்மையோடு கையாள்கிறவர் பகைமை பாராட்டாதவர் கிடைத்திருக்கிறார் .. ஆம் தளபதி மிக நேர்த்தியான அரசியலை எடுத்திருக்கிறார்.. நல்ல தொடக்கம் மக்கள் இவரை பின்துணைத்தால் நல்ல சூழல் உருவாகும்,தமிழகம் நலன் பெறும்..
..
#விடிகிறது..
..
ஆலஞ்சியார்
Wednesday, August 1, 2018
எழுந்து..வா..தலைவா
எழுந்துவா தலைவா..
காவேரி மருத்துவமனையில் திரண்டிருந்த கூட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் ஒ்வொரு மூலையிலும் இந்த வார்த்தை ஓங்கி ஒலித்தே கொண்டே இருக்கிறது..
எழுந்து வா தலைவா..
..
இந்த மனிதரை விமர்சித்தவர்கள்.. அரைகுறை தெளிவோடு கோபம் கொண்டவர்கள் புரிதலின் பிழையாய் நின்றவர்கள் .. கடந்த ஐந்து தினங்களாய் வியந்து நிற்கிறார்கள் .. இந்த மனிதரையா நாம் தவறாக பிரிந்துகொண்டு ஏசினோம் என்று ஒரு வித தவிப்போடு நிற்கிறார்கள்... ஆம் சாதனைகளை மட்டுமல்ல இவர் பயணித்த பாதையில் யார் பயணித்திருந்தாலும் இடறியிருப்பார்கள்.. இருக்குமிடமே தெரியாமல் புதையுண்டிருப்பார்கள் .. எத்தனை சூழ்ச்சிகள் கூட இருந்தவனே ..நண்பனாய் நம்பியவனே .. ஆரிய சூழ்ச்சியில் விழுந்து வளர்த்தகடா மார்பில் பாய்ந்த கதையாய் போனதும் ..கூட இருந்தவர்கள் முதுகில் குத்தியபோதும்.. பொய்வழக்குகள் .. அதுவும் மக்களை நம்பவைத்து தோல்வியை தந்ததும் .. எழவே முடியாதவாறு ஊழல் குற்றசாட்டை சுமத்தி வழக்குகளால் அலைகழித்த போதும் சறுக்கிவிடாமல் நிச்சயம் ஒருநாள் மக்கள் உணர்வர் என்ற நம்பிக்கையோடு தம்மோடு பயணித்தவர்களை அரவணைத்து ..அண்ணா கண்ட கட்சியை கட்டிகாத்து ஆலமர விருட்சமாய் நிற்கிறார்..
..
அப்பப்பா எத்தனை மனஉளைச்சல் சொந்த மகனை மிசாவில் கைதுசெய்து சிறையில் அடைத்தபோதும் மகளை 2ஜி வழக்கில் கைது செய்து திகாரில் அடைத்தபோதும் அறம் வெல்லும் என்று உண்மை எப்போதும் தோற்காதென்ற நம்பிக்கையோடு கழகத்தை காத்துநின்றவர்.. தமிழர்கள் வாழ்வில் இன்றைக்கு கொஞ்சமேனும் மெச்சபட்டதுண்டெனில் அது கலைஞரின் சிந்தனையில் உதித்தது.. இவரின் தொலைநோக்கு பார்வை இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாய் இருப்பதை இப்போதுதான் உணர தொடங்குகிறார்கள்.. எப்படி சாத்தியமாயிற்றென்று ஆச்சர்யமாய்(வியப்ப்போடு) பார்க்கிறார்கள் ஒரு அரசியல் தலைவன் எப்படி செயலாற்றவேண்டுமென்று கலைஞரை கண்டுபடிக்கவேண்டும் .. குடும்பமா கட்சியா என்றால் கட்சியே பிரதானமென்ற சூத்திரம் அறிந்திருந்தல் ..எழுந்ததிலிருந்து உறங்க செல்லும் வரை இயக்கத்தைப்பற்றிய சிந்தனை.. மக்களுக்கு என்ன செய்யலாம் எதை விரைந்து முடிக்கவேண்டும் எதுவெல்லாம் பாதகமாகும் எதை செய்யகூடாதென்ற விவரத்தோடு மிக தெளிவான அரசியல்பாதையை வகுத்து பின்தொடர்ந்து வருகிறவர்களுக்கு தெளிவை தந்தவர் ..
..
இதோ இந்த கிழவன் வயது மூப்பினால் தளர்ந்து படுக்கை கிடுக்கும் போது கூட எதிரிகள் பதறுகிறானென்றால் இவரின் இருப்பு அவனுக்கு எவ்வளவு பயத்தை தந்திருக்கும் .. ஆரியம் கண்டு மிரளும் சிம்மம் கலைஞர்.. உறவாடி பார்த்தார்கள்.. உற்றவனை பகைவனாக்கி பார்த்தார்கள் கூட இருந்தவனை கொண்டு கொலைவாளை தூக்க வைத்தார்கள்
அதிகாகத்தை பயன்படுத்தி அழிக்கபார்த்தார்கள்.. பொய்களை வழக்காக்கி பார்த்தார்கள் .. ஊடகத்தில் மூலம் சிறுமைபடுத்த நினைத்தார்கள்.. முடியவில்லை..
கலைஞர் நேர்வழிநின்று வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசியல் பயணத்தை ..நெஞ்சுரத்தோடு செய்தார்.. ஊளையிடுபவர்களின் இரைச்சலை புறந்தள்ளி பெரியாரின் பார்வையில் மக்களுக்கு என்ன செய்யலாம் என்று நாளும் சிந்தித்து செயல்படுத்தி.. மக்களின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய்..கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயனபடுத்தி மக்களுக்கு நல்லதை செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி.. நல்ல சேவகனாய் உழைத்தார்.... மக்கள் வாழ்வு மேம்பட ஓயாத உழைத்தவரை..
மக்கள் ஒருமித்த குரலில் அழைக்கிறார்கள்
..
#எழுந்துவா_தலைவா..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)