Monday, January 1, 2018

திராவிடம்

கருத்தரங்கம்.. திராவிட இயக்கத்தைப் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்வதற்காக இதுபோன்ற கருத்தரங்கள் கலந்துரையாடல்கள் தெருமுனைப் பிரச்சாரங்கள் .. திண்ணைப் பேச்சுகள் நடத்தப்படவேண்டும் .. இன்றைய தலைமுறையினரிடம் .. குறிப்பாக திராவிடம் ஏன் என்ற ஒருவகை கசப்பை விதைக்க தொடங்கியிருக்கிறார்கள்.. திராவிடம் மொழிசார்ந்ததாகவோ.. நிலம் சார்ந்தததாகவோ கணக்கிட்டு நம்மை பிரித்தாள ஆரியர்கள் திட்டமிட்டே தமிழர்கள் தமிழ் என்ற குறுகிய வட்டத்திற்குள்.. மொழிவாரியான சிந்தனைக்குள் திணித்து நம்மை சுருக்க பார்க்கிறார்கள் இதன் மூலம் .. அவர்களின் வெற்றி அல்லது பலன் அதிகரிக்கும்.. த்ராவித் என்ற சொல்லியிருந்தே திராவிடம் என்ற முழுமை வந்ததாக சொல்கிறார்கள்.. ஆரியர்களிடமிருந்து நம்மை பிரித்துக்கொள்ள ஒரு பொது சொல் தேவைபட்டது அது த்ராவத் என்ற சமஸ்கிருதத்தை நம் மீது திணித்தனர். ஆரியர்கள் தங்களை தனித்து இனம் காண பொது சொல்லை பயன்படுத்தினர்... திராவிட மொழிகளில்.. தமிழ் தெலுங்கு மலையாளம் .. கன்னடம் துளு.. இவையாவுமே தமிழிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.. காரணம் தமிழை ஒத்து ஒலி ஒசை ..மற்றும் மூலப்பொருள் தமிழை சார்ந்தே இருக்கும் குறிப்பாக .. மலையாளம் தெலுங்கில்.. கலந்த சமஸ்கிருத சொல்லை நீக்கிவிட்டால் அது தூய வடிவிலான தனித்தமிழ் சொற்களாக வரும். எப்படி சாதிய பிரிவினையை ஆரியர்கள் கையாண்டார்களோ அதே பாணியை தான் மொழியில் தொடங்கியிருக்கிறார்கள் அது அரசியலாக்க படுகிறது..மொழிவெறியை ஊட்டி இனத்தின் மீதான தாக்குதலை தொடுத்திருக்கும் வேளையில் இது போன்ற கருத்தரங்கள் மக்களின் அறியாமையை நீக்க பேருதவியாக இருக்கும்.. .. .. திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக்கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில்விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.. .. திராவிடம் .. இன்றைக்கு குறிப்பாக பார்பனர்களால் தமிழகத்தில் கடுமையாக எதிர்க்கபடுகிற .. அல்லது அவர்களை பயம் கொள்ள செய்கிற விடயமாக இருக்கிறது .. காரணம் பார்பனர்களை குறிப்பாக அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்து .. தமிழர்களின் உரிமைகளை.. மீட்டு தந்தது.. இன்றைக்கு மரியாதையோடு பேச எழத எதிர்த்து குரல் கொடுக்க முடிகிறதென்றால் அது திராவிடம் பெற்று தந்ததே.. நமக்கான உரிமைகளை போராடி பெற்று தந்தது திராவிடம்.. அது அரசியல் காரணங்களுக்காக .. சில கட்சிகள் பயன்படுத்தியிருந்தாலும் பயன்பட்டிருந்தாலும் பொதுவாக சாதித்தது மிக அதிகம் .. மண் சார்ந்த மொழிசார்ந்த விடயங்களில் திராவிட ஒருங்கிணைப்பு அதிவேக செயல்பாட்டால் .. ஆரியர்கள் தங்களை சுருக்கி கொண்டதும்.. அடிக்கடி துள்ளி குதித்தாலும் மேலெழும்ப முடியாதவாறு ..அழுத்தி அவர்களை பிடித்திருப்பது பெரியாரும் .. அவரின் சிந்தனைகளும் தான்.. .. கிழவனின் தொலைநோக்கை எல்லாவற்றிலும் காண முடியும்.. சமூகம் சமுதாயம் கல்வி பெண்ணுரிமை சாதிய ஒழிப்பு சமதர்மம்.. அடிமைத்துவத்திலிருந்த விடுதலை.. பேசும் உரிமை..போராடும் துணிவு .. இனத்தின் மீதான தாக்குதலிருந்து பாதுகாப்பு ...சொல்லிக்கொண்டே போகலாம் இன்றைக்கும் பெரியாரின் சொல் செயல் தான் நம் பொது எதிரியிடமிருந்து காக்கிறது.. இன்றைக்கு குறிப்பாக பார்பனர்கள் திராவிடம் என்ற சொல்லை எதிர்ப்பதற்கு நம்மிடமிருந்தே அம்புகளை தயார் செய்கிறார்கள்.. பாவம் அறியவில்லை அந்த அம்புகளே அவர்களை தாக்குமென்று.. .. இக்கட்டான காலகட்டங்களில் இது போன்ற அறிவுசார் கருத்தரங்கள் புரிந்துணர்வை தரும் நம் உணர்வின் மீது தொடுக்கபடும் தாக்குதலை முறியடிக்கும்..திராவிடம் என்பது தமிழ் மொழியை மூலமாக கொண்ட இனத்தின் அடையாளம்.. தமிழ் மொழியின்,இதன் கிளை மொழிகளின் பொதுபெயர்.. பார்பனர்களை பதற செய்யும் ஒற்றைச் சொல்.. எம் இனத்தின் பெயர்.. திராவிடம்.. .. Aalanci Spm.. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment