Monday, January 15, 2018
வாழ்க வசவாளர்கள்
வைரமுத்துவிற்கு நன்றி..
எத்தனை கொடூர முகங்கள் இங்கே உலவியதென அறிய தமிழை ஆண்டாள் பயன்பட்டிருக்கிறது.. இங்கே ஆண்டாளை பேசலாமா என சொல்லிகிறவர்கள் வைரமுத்துவோடு நிற்பதில்லை.. கூடவே திராவிடத்தை ..திமுகவை கலைஞரை திட்டுகிறார்கள் .. நல்லவன் போல் நடித்தவனெல்லாம் இப்போது வெளியே தெரிகிறான்.. ஆலகால விசத்தை கக்குகிறான்..
எது எப்படியோ இவர்களை மக்கள் முன் நிறுத்த நல்வாய்ப்பானது.. வைரமுத்துவின் தமிழை ஆண்டாள்...
..
திருப்பதி நாராயணன் என்ற கபோதி தாம்தூம் என குதிக்கிறது வனவாசத்தில் கலைஞரை திருட்டுரயிலேறி வந்தவரென எழுதியிருப்பதாக மேற்கோள்காட்டி .. கண்ணதாசன் ஆய்ந்து எழுதியதென சப்பைகட்டி எழுதியிருக்கிறார்.. முதலில் வனவாசத்தை படித்துவிட்டு வரட்டும் அதன் பிறகு நடந்ததென்ன அவர் அறிந்திருக்கவில்லை.. கண்ணதாசன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு சைதை கோர்ட்டில் தொடரப்பட்டு .. கண்ணதாசன் நேர்நின்று வாய்வழி வந்த செய்தியை எழுதினேன் என மன்னிப்பு கேட்டது தெரியுமா.. பிறகு மானநஷ்டஈடு வேண்டாமென கலைஞர் பெருந்தன்மையோடு நீதிபதியிடம் எழுத்து மூலம் தந்து #மன்னித்ததும் தெரியுமா.. அன்று அவருக்காக வாதாடிய கோபலகிருஷ்ணன் என்ற வழக்கறிஞர் .. பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாகி ஓய்வு பெற்றவர்.. இதெல்லாம் இந்த கபோதிக்கும்... தொடர்ந்து திருட்டுரயில் என சொல்லி வருபவர்களுக்கும் தெரியாது..
..
துக்ளக் விழாவில் குருமூர்த்தி மிக முக்கியமான இரண்டு விடயங்களை பற்றி பேசினார்.. ஒன்று திராவிடர் டின்என்ஏ வில் பார்பன (இந்து) எதிர்ப்பிருக்கும்.. மற்றொன்று ரஜினியும் பாஜகவும் இணைந்தால் ஆட்சியை பிடித்துவிடலாம்..
இரண்டாவது சொன்ன விடயத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில் திமுக இனி ஆட்சிக்கு வரமுடியாதென்கிறார்.. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகப்பெரியளவில் மோசடிக்கு தயாராகி இருக்கிறார்களோ என சந்தேகம் வருகிறது ரஜினிக்கென்று பெரிய ஆதரவு இல்லையென்பது பாஜக இருக்கிற இடமே தெரியாத கட்சி .. எதை வைத்து இப்படி சொல்கிறாரென சந்தேகம் வருகிறது.. ஒருவேளை வாக்குபதிவு இயந்திரம் இருக்கிறதென்ற நம்பிக்கையா.. எதற்கும் கவனத்தோடு இருக்கவேண்டும்.. அவர்களே தமிழர்களை ஒட்டுமொத்த திராவிடர்களை இந்துக்கள் இல்லையென சொல்லியிருக்கிறார் அது உண்மைதானே. .திராவிடர்களின் ஆரிய எதிர்ப்பும்.. (தமிழர்களின் பார்பன எதிர்ப்பு) இயல்பாகவே இரத்தத்தில் ஊறிப்போனதுதான்
அதை குருமூர்த்திகளால் மாற்றமுடியாது ..
..
எந்தவொரு விடயமானாலும் எதிர்ப்பை சரியான ஆதாரங்களோடு மறுக்கவேண்டும் கடுமையாக விவாதம் செய்யவேண்டும் மறுத்து தி முகவையும் கலைஞரையும் வம்பிக்கிழுத்து அநாகரீகமாக பேசுவது நல்லதிற்கில்லை .. கருத்து சுதந்திரத்திற்கு திமுக மதிப்பளிக்குமென்பதால் எதையாவது பேசலாமன்றால் பதிலடி அவர்கள் பின்பற்றும் அதே பாணியில் வரும்..
கலைஞரை பழித்தவர்களை நிறைய பார்த்தாயிற்று .. உண்மை வென்றே இருக்கிறது.. நீதி நின்று கொல்லும்..
.
சிறிய எதிர்ப்பை கூட ஊடகங்கள் துணையோடு பெரிதாக்கி காட்டுகிறார்கள் ஆனால் இங்கே ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை காட்டும் என தெரியவில்லை.. பொய்களும் போக்கிரித்தனமான பேச்சுகளும் ..இவர்கள் மட்டுமே யோக்கியர்களை போல சித்தரிப்பதும்
மட்டுமே இவர்களின் பலம்.. ஆனால் தமிழகம் வேறுமாதிரியான களமென்பதை திருப்பதிகளும் மூர்த்திகளும் கவனத்தில் கொள்ளவேண்டும்.. திராவிட கொள்கையாளர்களையும் திமுகவையும்
கலைஞரையும் வசைபாடுவோருக்கு .. நேர்மையோடு நிதானத்தோடும் நாகரீகமாகவும் சொல்கிறோம்.
..
#வாழ்க_வசவாளர்கள் ..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment