Tuesday, January 2, 2018

உறைபனியில் விரைத்து போவீர்

கருநாடகம் தமிழகம் தெலுங்கானை கேரளம் இன்னும் பிற பகுதி மக்கள் தங்களை அதிகாரத்திற்கு வரவோ ..உங்கள் அசுத்தமான வகுப்புவாத பிரிவினை அரசியலை செய்யவோ விடமாட்டோம்.. பிரகாஷ்ராஜ்.. .. ரஜினியிடமிருந்து மாறுபடுகிறார்.. கர்நாடகாவை கன்னடர்கள் ஆளவேண்டுமென சொன்னவர்.. இப்போது பாஜகவை நேரடியாக விமர்சிப்பதில் முனைப்பு காட்டுகிறார்..குறிப்பாக தென்னிந்தியாவை தேசிய நீரோட்டத்திலிருந்து இயல்பாக பிரிந்துநிற்பதை சொல்கிறார் என நினைக்கிறேன்.. நடிகர்கள் கருத்து சொல்வது சமீபகாலங்களில் அதிகளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கமல் தொடங்கி ரஜினிவரை..அரசியலில் ஆர்வம் காட்டுவதை வரவேற்கவேண்டும் அது நல்ல அரசை நிறுவ உதவலாம் இங்கே யாரும் கருத்தை கூற விமரிசிக்க உரிமை உண்டு.. ஆனால்.. ஆட்சி அதிகாரம் முதல்வர் கனவென்று வரும்போதுதான் சில கேள்விகளை நாம் எழுப்பவேண்டிருக்கிறது.. எப்போதிலிருந்து மக்கள் மீதான அக்கறை வந்தது ஏன் இதுவரை இந்த நொடிவரை..மக்களின் பிரச்சனைகளுக்காக போராடவோ போராடுகிறவர்களை ஊக்குவிக்கவோ அல்லது எதிர்ப்பை பதிவு செய்யவோ இல்லை.. போகிற போக்கில் முதல்வராக வேண்டுமென்பது எந்தவகை நியாயம்.. ரஜினி என்றில்லை கமலோ இன்னும் வர இருக்கிற .. விஜயோ யாராக இருந்தாலும் தமிழக மக்களின் தேவைகள் அவர்களுக்கான உரிமைகள் இங்கு நிலவும் அடிப்படை ஜீவதார உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை யாராவது செய்திருக்கிறீர்களா.. .. அது என்ன மற்றவர்களை அயோக்கியர்கள் போலவும் தாங்கள் மட்டுமே நேர்மையானவன் காட்டுகிறீர்.. நடிகர்கள் மட்டுமே சிறந்தவர்களை போல ஏன் சுவர் எழுப்புகிறீர்கள்.. சினிமாவில் நல்லவனாக நடித்தால் நிஜத்தில் ஒழுக்கமானவன் கரைப்படியாதவன் என்கிற மாயபிம்பத்தை இன்னும் எத்தனை நாளைக்கு கட்டியெழுப்பிக்கொண்டிருப்பீர்.. சினிமா கதாநாயகனை நல்லவன் என்ற காலம் மலையேறிவிட்டது இப்போதெல்லாம் சினிமாவில் கூட ஆன்டி ஹீரோ தான் அதிகம் கவரபடுபவராக இருக்கிறார் .. சினிமாவில் புழங்காத கறுப்புபணம் உண்டா .. எத்தனை பேர் நேர்மையாக சம்பாதித்திருக்கிறீர்.. முறையாக வரி செலுத்தியிருக்கிறீர்..ஏன் எம்ஜிஆரே.. வரி ஏய்ப்பு செய்தவர்தானே.. கடைசியில் சொத்தை விற்று கட்டுவதாக நம்பவைத்தார் பிறகுதான் தெரிந்தது ஜானகிக்கு விற்று வரி கட்டியதாக செய்தி வெளியானது.. ஏமாற்றுகாரர்களின் உலகம் தானே சினிமா.. அங்கிருந்து யோக்கியம் பேச வந்திருப்பவர்கள்.. நல்ல நடிகர்கள்.. பாவம் நிழலில் நடிப்பை ரசித்தவர்கள் நிஜத்தில் வெறுப்பான் என்பதை அறிந்திருக்கவில்லை.. 70 களில் இருந்த சினிமா மோகம்.. இப்போதெல்லாம் இல்லை என்கிற உண்மை விளங்க ரஜினி போன்றவர்களுக்கு தரபோகும் தோல்வி இனி எவரும் முதல்வர் கனவோடு கோடம்பாக்கத்திலே திரிய கூடாது.. .. ஆன்மீகம்.. மதத்தின் பால் தீவிர நம்பிக்கை கொண்டவர்களை இதே இடத்தில் அழுத்தி பிடித்து நகரவிடாமல் இருக்க செய்யும் ஒரு வித்தை.. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் இதில் சமரசமே யாருக்குமில்லை.. ஆனால் சாதி மதமற்ற என்ற சொற்சொடர் இங்கே அடிபட்டு போகிறது..மதம் தலைக்கேறாவிட்டால் ஆன்மீகம் செயலிழந்து போகும்.. மதச்சார்பின்மை இல்லை என்பதிலிருந்தே ஆன்மீக போர்வையிலிருந்து வெளிவருகிறது மதம்.. மதம் தலைக்கேறி விஷமம்.. நேரடியாக மோத தெரியாது இவர்களால்.. அறுபதாண்டுகளாக உறைந்து கிடக்கும் திராவிடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என பிதற்றுகிறார்கள்.. பாவம் உறைபனியில் சிக்கி மூர்ச்சையாகி போவார்கள்.. .. உறைபனியில் பிணமாவீர்.. .. Aalanci Spm வரைகலை.. நன்றி தோழர் Ganesh Tiger..

No comments:

Post a Comment