Tuesday, January 9, 2018
எங்கள் கிழக்கு இவன்
ஜெய் பீம்..
இந்த கோசம் இப்போது அதிகம் முன்னெடுக்கபடுகிறது பட்டியல் இனத்தவரால் நன்று .. ஆனால் வேண்டுமென்றே பெரியாரை தவிர்த்து அம்பேத்கரை முன்னெடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள் அது இந்த மண்ணில் எடுபடாது..
அம்பேத்கரும் பெரியாரும் சமதட்டில் என்பது கூட ஏற்க முடியாதது காரணம் .. வெகுமக்களிடம் கொண்டு சேர்க்கபடாத எந்த புரட்சியும் பலனளிக்காது.. இங்கு தான் பெரியார் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் .. சாமானியனிடம் அவன் சுரண்டபடுவதை .. அவனுக்கு உணர்த்தி அவன் இடுப்பு வேட்டியை இறுக கட்ட சொன்னவர்.. அவன் தோளில் துண்டணிந்தால் நீயும் அணியென்றவர்..
இங்கே சரிசமாக கருத்தை சொல்லமுடிகிறதே.. இன்னும் சொல்லப்போனால் அதிகளவில் பேச எழுத முடிகிறது இதெல்லாம் வடமாநிலங்களே நடத்திட முடியுமா அம்மணமாக்கி அடித்தே கொல்வான்.. ஏன் இந்த மாற்றத்தை அம்பேத்கரால் கொண்டுவரமுடியவில்லை..
விடை மிக எளிது அவர் படித்தவர்களுக்கு போதித்துக்கொண்டிருந்தார்.. பெரியாரோ சாமானியரிடம் சென்றார்.. இதனால் அம்பேத்கரை குறைவாகவோ தாழ்த்தியோ எடைபோடுவதாக பொருள் இல்லை .. பெரியாரை புறக்கணித்து அம்பேத்கரை முன்னெடுப்பது சரியல்ல என்பதற்காக .. அம்பேத்கரால் முடியாததை செய்தவர் பெரியார்..
அந்த பெருங்கிழவன் இல்லையென்றால் பட்டியலின மக்கள் .. நினைத்துபார்க்கவே முடியாது.. என்பதை ரஞ்சித் போன்றவர் உணரவேண்டும்.. உங்கள் படங்களில் அம்பேத்கரையே பேசுங்கள்..கவலையில்லை. காரணம் பெரியாருக்கு விளம்பரம் தேவையில்லை
..
தலித் என்ற சொல்லை கூட நாம் பயன்படுத்த கூடாது ..தலித் என்பதன் பொருள் ஏழ்மை.. அரிஜனென சொல்லவேண்டுமென காஞ்சி சங்கரராமன் புகழ் ஜெயேந்திரர் சொன்னதால் .. நாமும் தலித் என்ற சொல்லை பயன்படுத்துகிறோமே தவிர.. இல்லையெனில் பட்டியலினத்தவர் அல்லது பள்ளர் பறையரென்றே அழைக்கலாம்.. பெரியாரே பள்ளர் பறையரென அழைப்பது மேல் சூத்திரன் என்றழைப்பதை விட என்றார்..
..
பெரியார் காந்தியை எதிர்த்தார் ஆனால் ஒரு கட்டத்தில் அம்பேத்கரை தலைவரென்றார் அம்பேத்கரோ .. என் இனத்தை சேர்ந்தவனை குளித்தில் குளிக்கவோ குனிந்து அள்ளி குடிக்கவோ கூடாதென்கிறான்.. ஆனால் பெரியாரால் தமிழகம் இதெல்லாம் நடந்ததென்றார்.. காரணம் பெரியார் மக்களிடத்தில் சென்று அவன் செருப்பு வீசிய போதும் அவனோடு நின்று பேசியவர் அவனுக்கு புரிகிற மாதிரி பேசினார் அதனால் தான் இங்கே நீங்க கூறுகிற ஜெய்பீம் ஆட்களெல்லாம் சட்டையை மடித்துகட்டி மீசையை முறுக்கி பேசமுடிகிறது.. வடநாட்டில் மீசைவைத்தாலே அம்மணாக்கி அடிப்பான்.. அம்பேத்கரால் சட்டத்தை இயற்றமுடிந்தது ஆனால் மக்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை..
..
பட்டியிலின தலைவர்களை திராவிடம் முன்னெடுக்கவில்லையென்பதை ஏற்க முடியாது .. அயோத்திதாசரை.. இரட்டைமலையாரை அதிகம் பேசபட, படித்தறிய உதவியது திராவிடம் தான் .. இன்றைக்கு ரஞ்சித் போன்றவர்கள் பெரியாரை வேண்டுமென்றே விலக்கி வைப்பதன் பின்னில் அப்பட்டமான ஆரியசூழ்ச்சி அடங்கியிருக்கிறது.. இதோ இசைக்கு சாதியில்லையென்கிறார்களே அவர்களுக்கெதிராக ஏன் வாய்திறக்கவில்லை..தண்டபாணி தேசிகர் பாடியதாலேயே தீட்டுபட்டதென கழுவ சொன்னவர்களுக்கு எதிராக நின்றது பெரியார்..
குடியரசு அன்று கலைஞர் எழுதியது வரலாறு..
..
இப்போது கடைச்சாதிக்கார்களை கொண்டு வலை பின்னுகிறார்கள்.. பாவம்.. அது அறுந்த வலையென்று அவாளுக்கு தெரியாமல் போனது..
சாணக்கியனின் சூழ்ச்சிகள் இங்கே எடுபடாது..
..
#பெரியார்_கிழவனல்ல_எங்கள்கிழக்குதிசை
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment