Tuesday, January 30, 2018
திராவிடம் தந்த திமிர்..
பொன்னரும் தமிழிசையும் ஆதங்கபட்டதாக செய்திகள் உலவுகிறது.. அவ்வளவு வெளிப்படையாக எல்லாம் பேசிவிட மாட்டார்கள்.
தொடர்ந்து இழிவு படுத்தபட்டாலும் அவர்கள் மனதுக்குள் புழுங்குவார்களே தவிர அதை வெளியில்காட்டி தங்கள் சகாக்களை கையொழிய மாட்டார்கள்..
உண்மையில் எச்.ராசாவை விட பாஜகவிற்காக நல்லமுறையில் உழைப்பவர்கள்.. சாண் ஏற நினைக்கிற போது முழம் சறுக்கும்.. அந்த வேலையை ராசா மிக கச்சிதமாகவே செய்வார்..தங்கள் பகுதிகளில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை வளரவிடாமல் செய்வதில் பார்பனீயம் மிக கடமையோடு வேலைசெய்யும்.. நாகர்கோவிலில் இனி பொன்னருக்கு பழைய மரியாதை கிடைக்குமா என தெரியவில்லை ..
..
இந்து நாடார் இன மக்களில் ஏனெனில் கிருஸ்தவ நாடார்களில் பெரும்பாலானோர் பாஜகவை ஏறெடுத்தும் பார்பதில்லை .. இவர்கள் மதமாறிவிட்டார்களென சொல்லி மனதில் வன்மத்தை கொட்டி இந்து நாடார்களில் சிலரை பாஜக அவர்கள் பக்கம் இழுத்தது.. முன்பெல்லாம் காங்கிரஸில் இருந்தவர்கள் பாஜகவிற்கு இடம்பெயர மதம் சார்ந்த உணர்வை ஊட்டியதே மிக முக்கிய காரணம்..
பின்னர் அது தொடர்ந்து பாஜக தலைமை வரை வர காரணமாகியதும் வழக்கம் போல் பார்பனர்கள் அவர்களை இல்லாதாக்கும் அல்லது வளரவிடாமல் உயர் நல் பதவிகளுக்கு வந்துவிடாமல் பார்த்துக்கொண்டனர்..
நட்டுவைத்த வேலுக்கு கிடைத்த மரியாதை.. நாகர்கோவில் பொன்னுக்கு கிடைக்கவில்லை..
காரணம் எல்லோரும் அறிந்ததுதான் ..
..
தொடர்ந்து தமிழக பாஜகவில் ராசாவின் குறிக்கீடு அளவிற்கதிகமாக இருக்கிறது .. ஒரு கட்டத்தில் தேசிய செயலராக நியமித்து கேரள பொறுப்பை வழங்கிய பின்னரும் தமிழக அரசியலில் .. குறிப்பாக பாஜக நிர்வாகத்தில் அதீத தலையீடும்.. நாடார் இன தலைவர்களை ஒருபடி தாழே .. வைத்ததும் பொன்னரையும் தமிழிசையும் தங்கள் நட்புவட்டத்தில் பேசவைத்து அதை கசியவிட்டிருக்கிறார்கள்..
அதுதான் நானும் திராவிடன் தான் என்கிற வெளிப்படையான அறைகூவல்.. அய்யா சுப.வீ சொன்னதைப்போல பாஜகவில் யாருக்கோ சேதி சொல்லியிருக்கிறார்.. காரணம் பார்பனர்களுக்கு பிடிக்காத ஒரு சொல் உண்டெனில் அது திராவிடம் தான்... திராவிடம் என்ற பெயரை கேட்டாலே கொதிக்கிற எண்ணெய் சட்டியில் விழுந்தைப்போல துடிப்பார்கள்.. அவர்களுக்கு பிடிக்காத வார்த்தை திராவிடம்.. நூறாண்டுகளாய் அவர்களை துரத்துகிற .. வேட்டையாடுகிற தூக்கத்தில் கூட பதறவைக்கிற சொல் .. அதை கையிலெடுத்து பொன்னர் ஆடும் போதே உள்புகைந்தது வெளிவர ஆரம்பித்துவிட்டது.. ஆம் தகுதியிருந்தாலும் கீழே அழுத்தி அவர்மீதே ஏறிநின்று கோரதாண்டவம் ஆடுவதை யார்தான் பொறுப்பார்கள் ..
..
பாஜக என்பதே பார்பனர்களுக்கான கட்சி .. அது இந்துக்களுக்கானதென்று சொல்லி திரிந்தாலும் நிர்மலா சீதாராமன்களுக்கே கௌரவம் கிடைக்கும்.. இங்கே பெயருக்கு தமிழிசையை தலைவராக வைத்துவிட்டு ராசாவை கேட்டுதான்.. அல்லது சொல்படிதான் எதுவும் நடக்கும்.. தமிழக பாஜகவில் தமிழிசைப்போல கடுமையாக உழைத்தவர்கள் யாரும் இல்லையென்றே கூறவேண்டும் சமூகவலைதளங்களில் கடுமையாக தாக்குதல் நடந்தும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டேயிருந்தவர்.. வானதியை போல அல்லாமல் அப்பழுக்கற்றவராக வலம் வருகிறார்.. ஆனால் இவர்கள் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நேர்மையாக இருந்தாலும்.. பாஜகவில் இரண்டாம் நிலைதான்..
..
இன்றல்ல...,எப்போதுமே நாடார்களை பார்பனர்கள் தாழ்ந்தே பார்த்துவந்திருக்கிறார்கள்...இன்று உழைப்பால் உயரத்தை எத்தியவர்களென்றாலும் அந்த இடைவெளி தொடரதான் செய்கிறது... பனை மரத்தின் மீது இருக்கும் நபர்.. அவ்வழியே பாப்பான் சென்றால் .. மரத்தை மட்டையால் அடித்து ஒலி எழுப்பவேண்டும் கீழே நடந்து செல்கிற பாப்பான் நகர்ந்து செல்வார் .. நாடாரின் நிழல் கூட தீட்டென்று சொன்னவர்கள்... தலித் மக்களை தொட்டால்தான் தீட்டு... சாணரை பார்த்தாலே தீட்டென்றவன்... இன்றைக்கு நானும் திராவிடன் என பார்பனன் செவியருகே உரக்க சொல்கிறாரே.. மானமிகு பொன்னர் அது இந்த திராவிடம் தந்த தைரியம்
..
மானத்தோடு வாழத்தான் திராவிடம் கற்றுதந்தது...
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment