Sunday, January 28, 2018

திராவிடம்

திராவிடம்.. திராவிட கட்சிகளென்ற உடனேயே திமுகவும்,அதிமுகவும் இணைத்தே பேசபடுகிறது.. முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. திராவிட சித்தாந்தத்திலிருந்து வேகமாக வெளியேறிய கட்சி அதிமுக..எம்ஜிஆர் காலத்திலேயே இந்த மண்ணில் பாசிசம் வளர ஆரம்பம் குறித்தது மகோரா(எம்ஜிஆர்) தான் .. அதுவரை வெளிப்படையான போக்கு இருந்ததில்லை இந்துமுன்னணி இங்கே உருவாக காரணமாக இருந்தவர்.. எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் தன் கட்டுபாட்டில் கொண்டுவர அதிகம் சிரமம் எடுக்கவில்லையென்றே நினைக்கிறேன்.. இஸ்லாமியருக்கு முஸ்லீம்லீக் இருக்கும் போது இந்துமுன்னணி இருக்ககூடாதாயென அப்துல் சமத் இடமே கேட்டார் .. சிறுபான்மையினரின் அமைப்பிற்கும் .. இந்துத்துவா அமைப்பிற்குமான வேறுபாடு தெரியாமல் பேசினார்.. சுதந்திரத்திற்குமுன்பே லீக் உண்டென்பதும் ..அது மதவெறியை கையிலெடுத்ததில்லை என்பதும் தெரிந்தும் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டிற்கான துவக்கத்தை குறித்தார்... திமுகவில் இருந்தபோது தனக்கு பதவிவேண்டுமென தொடர்ந்து தொந்தரவு செய்து கலைஞர் பொருளாளர் பதவியை தந்தபோது பேராசான் பெரியார்.. கலைஞருக்கு என்னாச்சு தெரிஞ்சே சகதியில கால வைத்துவிட்டாரே என்றார் அப்போதே எம்ஜிஆரின் சுயரூபம் அறிந்தவராக இருந்தார்.. .. அதிமுகவோடு திமுகவை இணைத்து இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளென பொதுவான கருத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.. திராவிடத்தை வீழ்த்த .. குறிப்பாக அதிகாரத்தில் திராவிடமென்ற நிலையை உடைத்தெறியவேண்டுமென்பதற்காக ஆர்எஸ்எஸால் .கொம்புசீவபட்டு கொண்டுவரபட்டவர்தான் எம்ஜிஆர் எனும் மகோரா.. சோ அந்த பணியை திறம்பட செய்தார்.. தொடர்ந்து தோல்வியிலும் திமுகவை ஒன்றும் செய்துவிட முடியவில்லை.. காரணம் கலைஞர் அவர் கட்டிகாத்த விதம் அதைவிட ஜனநாயக ரீதியிலான கட்சி அமைப்பு .. ஒருமுறை சாவும் மறுமுறை நோவும் திமுகவின் தோல்விக்கு காரணமானாலும் தொடர்ந்து இந்த சமூகத்தின் மீதான அக்கறை திமுகவை வீழ்ந்துவிடாமல் காத்தது.. நிறைய வரலாற்றுப்பிழைகளை திமுகழகம் எடுத்திருந்தாலும் அதை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்காததற்கு திராவிடத்தின் வேர் பலமாக இருந்தது ஒரு காரணம்.. ஊடகத்தின் தொடர் எதிர்ப்பு தொடர்ந்து வரும் ஊழல் குற்றசாட்டுகள் .. அதில் ஒன்றில் கூட நிரூபிக்க முடியவில்லையென்றாலும்.. குற்றம் நிரூபிக்கபட்டவர்களை பரிசுத்த ஆவியைப்போல கொண்டாடுகிற பாசிச ஊடகவியலாளர்கள்.. நடுநிலையென்ற பெயரில் அதிமுகவோடு திமுகவை இணைத்தே பேசும் வழக்கத்தை மாற்றாத நேர்மையானவர்கள்..? இவைகளை/இவர்களை எல்லாம் கடந்தும் நிற்பதற்கு இந்த மண்ணின் ஈரமும்.. மக்களின் தெளிவும் மிகப்பெரிய காரணிகள்.. முதலில் இங்கே இந்து எனும் சொல்லே தவறென்று உணர தொடங்கியது பெரியாரின் பெரும்முயற்சிதான் காரணம்.. வர்ணாசிரம நிலைபாட்டை மிக தெளிவாக எடுத்துரைத்து.. இது பிராமண மதமென்ற உண்மையை மிக கவனமாக கையாண்டார் பெரியார்.. குலசாமிகளை கும்பிட்டுவந்தவன் நீ என்று அவனுக்கு சொல்லாமல் சொன்னார்.. இங்கே இந்த ஏற்றதாழ்வுதான் .. கிருஸ்துவனாக இஸ்லாமியனாக மாற்றியது .. அதோடு பூர்வகுடியானவனை .. எங்கிருந்தோ வந்தவன் ஏறிமிதிப்பதை அவனுக்கு புரியம்படியாக சொல்லி அதில் கடைசிவரை உரத்துநின்ற பெருங்கிழவன் பேராசானின் பெரும் தொண்டே இன்னமும் திராவிடம் இங்கே நிலைத்துநிற்க காரணம்.. .. திராவிடத்தை சொல்லாமல் இங்கே எதுவுமே நடக்காதென்பதின் சமீபத்திய உதாரணம் பொன்.ராதா.. ஆனால் இவர்கள் அதிமுக உட்பட தங்களை நிலைநிறுத்தலுக்காக உச்சரிப்பவர்கள்..தி.மு கழகமுமே மட்டுமே திராவிடர்களின் அரசியல் களத்திற்கான இயக்கம்.. இங்கே மற்றொன்றையும் சொல்லவேண்டும்.. ஏன் பார்பனர்கள் குறிப்பாக திமுக மீது கடும் வன்மம் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.. இந்தியாவிலேயே முதன்முதலில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்றது திமுக ஆட்சியில்தான் அதுவரை பண்டாரங்கள் கையிலிருந்த கோவில் அரசு நிர்வாகத்திற்கு வந்தது .. அதுவரை கோவிலை வைத்து பிழைத்தது கெட்டுபோனதே என்கிற கோபம் அவர்களை தொடர்ந்து எதிரான போக்கை கொள்ளவைக்கிறது. .. திமுக எதை செய்தாலும் அது ஆரியத்திற்கு எதிரானதாகவே அமையும்.. ஆரியத்திற்கெதிரான போரில்.. திராவிடம் என்றும் வெல்லும்.. .. Aalanci Spm ..

No comments:

Post a Comment