Thursday, January 11, 2018

வைரமுத்து..

திரு.. வைரமுத்து.. தங்களைைப்பற்றி நான் அறிந்த கொண்ட பொழுது தமிழ்சினிமாவின் மூலம்தான்.. பெரிய தாக்கத்தையெல்லாம் தரவில்லை அப்போது .. வயல்வெளில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது காதில் வந்துவிழுந்த பொன்மாலை பொழுது .. புதியதாய் இருந்தது அது சினிமாவிற்கான இலக்கியம்..? என்பதால் கடந்து போய்விட்டேன் ..குங்குமம் என்று நினைக்கிறேன்.. #இதுவரை_நான் எழுதிய போதுதான் கவனிக்க தொடங்கினேன் .. அதில் தன்னை தமிழனாய் திராவிடனாய்.. நிறுத்த முயற்சித்ததும்... எமது திராவிடத்தின் பெருமை பேச .. பெரியாரின் நீதி பேச பகுத்தறிவு பேச ஒரு சினிமா பாடலாசிரியர் கிடைத்துவிட்டாரென்றளவில் மகிழ்ந்ததுண்டு.. ஆனால் பாருங்கள் சினிமாவிற்காக சமரசம் செய்துகொண்டீர்கள் .. அம்மி கொத்துவதையே சிறந்ததென கையாண்டீர்.. சிறந்த சிற்பியாக வரவேண்டியவர் பாவம் பிழைக்க தெரிந்தவராக வலம் வருகிறார்.. ஆனாலும் நம்மளவன் என்ற இறுமாப்பு இருந்தது.. இடையிடையே கள்ளிக்காட்டையும் கருவாச்சியையும் தந்து நானிருக்கிறேன் என்றீர் மகிழ்ச்சி கண்டோம்.. சிறந்த பிழைக்க தெரிந்தவரென அடிக்கடி காட்டிக்கொண்டே வந்தீர்.. ஆனாலும் தமிழால் கட்டிபோட்டதால் கடந்து போனோம்.. .. நட்டுவைத்த வேலில் பொட்டு வைத்த போதே எதையும் தின்பீர் என அறிவு சொல்லியது.. விருதுகள் பாராட்டுகள் .. இத்யாதிகளுக்காக இடுப்பு வேட்டி கழன்று விழுவது கூட தெரியாமல் அம்மணமாய் நிற்பேன் என்பது மறவனுக்கு இழுக்கு.. தமிழனுக்கு பேரிழுக்கு.. அஞ்சாமை சொன்ன திராவிடத்தை அசிங்கபடுத்திவிடாதீர்.. கருத்தில் தவறில்லை என்கிற போது .. கண்டவனும் தலைமீது ஏறிநின்று கொட்டுவதை எப்படி ஏற்கமுடியும்.. கருப்பனென்கிறான் ஒருவன் நெருப்பைப்போல் சுட்டெரித்திருக்க வேண்டாமா ஏன் அதற்கு உங்கள் வியாபார தமிழ் தடைபோடுகிறதா.. பதவிகள் பட்டங்கள் விருதுகள் இவையெல்லாம் நம் மானத்தின் முன் ஒன்றுமில்லாததவை.. .. உங்கள் மீது கல்லெறிகிற கபோதிகள் கூட்டம் வைத்தி மீது சிறு கண்டனத்தை கூட பதியவில்லை.. பாப்பான் மீது சிறிய கறை கூட விழாதவாறு கடந்து போகிறார்கள்.. உங்கள் பாரதிராஜாவை போல அரிவாளை எடுக்க சொல்லவில்லை தமிழ் அம்பை எடுங்கள்.. தாயை பழித்தவனை தாய் தடுத்தும் விடேன் என்ற கலைஞரின் வசனத்தை நினைவுபடுத்துகிறேன்.. எம் பேராசானை.. ஆசான் என கூறிக்கொள்கிறீர்.. இது தான் நீங்கள் கற்றதா.. உங்களின் #கள்ளமௌனம் தமிழ் இனத்தை அவமானபடுத்துகிறது.. .. இன்னும் கடுமையான வார்த்தையில் தங்களை திட்டவேண்டுமென்று கூட தோன்றுகிறது.. வைரமுத்து எதிர்ப்பை கூட பதிவு செய்யாமல் கடந்து போக நினைப்பது மானமுள்ளவரின் செயல் அல்ல.. கவிஞர் கண்ணதாசனில் வரிகளோடு முடிக்கிறேன்.. புரிந்தால் சரி.. "மானமொன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது எங்கள் சமுதாயம்.. மரணபயங்கரம் நெருங்கி வந்தாலும் மாறிவிடாது ஒருநாளும்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment