Saturday, January 20, 2018
எச்சரிக்கை
இன்னமும் நம்பிக்கை இருக்கிறது ..
..
திரு.ஸ்டாலின் செயல் தலைவராக ஏற்று ஓராண்டு நிறைவடைந்தும் இன்னமும் கட்சியின் நிர்வாகம் அவ்வளவு செம்மையாக இல்லை கட்டுபாடுடன் கூடிய கட்சி என்ற பிம்பம் சிதறுகிறது பத்திரிக்கையாளர்கள் முன்பில் பழக்கடை ஜெ.அன்பழகனும்.. பொன்முடியும் நடந்துக்கொண்ட விதம்.. ஸ்டாலின் கையை பிடித்து அழுத்தியும் சீறுகிற அன்பின் செயல் அவ்வளவு ரசகரமாக இல்லை.. ஆண்டாள் விடயத்தில் ஜெகத்ரட்சகனின் அறிக்கையில்
திருமதி.துர்கா ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாலேயே ஜீயர் உண்ணாவிரதத்தை முடித்ததாக வரும் செய்தி எவ்வளவு நம்பகதன்மையென்று தெரியவில்லை .. சின்ன சின்ன விடயங்களில் கூட கவனமாய் செயல்படும் திராவிட பெருந்தலைவனின் உக்தியை ..சரிவர செயல்படுத்தாமல் போவது வருத்தத்தை மட்டுமல்ல
இயலாமையையும் காட்டுகிறது..
..
89 உறுப்பினர்கள் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் செயல்பாட்டில் சிறிது சுனக்கம் தெரிவதாக வரும் செய்திகள் திட்டமிட்டு பரப்பபடுவதாக இருப்பினும்.. அதை கண்டுக்கொள்ளாமல் நகர்வது நல்ல பலனை தராது.. அதீதமான நேர்மை அரசியலுக்கு சரிவராது .. அப்பனை கண்டு படித்தததை ..காலாட்டிக்கொண்டே இருக்கவேண்டுமென வாழ்ந்து காட்டிய அரசியலின் நவீன அரிச்சுவடியை ஒரு முறை எடுத்து புரட்டிபாருங்கள்.. எதிர்களை நம்மை சுற்றி இயங்கவைத்து எல்லா வினைகளுக்கும் எதிர்வினையாற்றிய திராவிட பெருவுடையார் கலைஞரின் செயலை மூளையில் ஏற்றுங்கள்..
உங்கள் ஆத்திக நம்பிக்கையை மூலையில் போட்டுவிட்டு திராவிட சொன்ன சமநிலையை கையிலெடுங்கள்.. எதற்கும் ஒரு எல்லை உண்டு சிலவற்றை காலம் தீர்மானிக்கும் ஆனால் சிலவற்றை நாமே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டால் வழி தெரியும்.. ஒவ்வொருமுறையும் வரும் நல்வாய்ப்பை தவறவிடல்.. என்பது அரசியலின் இறுதிக்கான யாத்திரையாகும்.. தானாக கனிவது சுவை கூடுதல் என்றாலும்.. சிலவற்றை அடைத்து வைத்து/ புகைப்போட்டு கனிய வைக்கவேண்டும் காலத்தின் தேவைகருதி..
இன்றைய சூழல் தமிழகத்திற்கு மட்டுமல்ல திமுகவிற்கும் நல்லதாக இல்லை.. தலைமைக்கு கட்டுபடாத யாராயினும் தூக்கியெறியுங்கள்.. இப்போதைக்கு ஒரு வெற்றி மிக மிக அவசியம் அது திமுகவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்.. ஆரியர்களின் செயல்கள் எதுவாயினும் அதற்கு எதிர்வினையாற்றுங்கள்..
அவர்களுக்கு திராவிடத்தின் தோல்வியென்பது திமுகவின் அழிவில் என நம்புகிறார்கள் என்பதை உணர்ந்தால் பயணத்திற்கான பாதை தெளிவாக தெரியும்..
..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைமை பொறுப்பை காலம் தந்திருந்திருக்கிறது.. நீண்ட கால பயிற்சியும்..நல்ல தலைமை தருமென்ற எதிர்பார்ப்பும் பொறுப்புணர்ந்து செயல்படும் ஆற்றல் உண்டென்று நம்பி .. எந்தவித
எதிர்ப்பும் இல்லாமல் கையில் கிடைத்திருக்கிறது.. கையில் கிட்டிய கனியை தவறாவிடாதீர்.. இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.. தவறவிடில் வேறொரு தலைமையை காலம் தேர்வு செய்யும் அந்த தலைமை .. பாசிசத்திற்கு சிம்மசொப்பனமாய் இருக்கும்..
..
மீண்டும் சொல்கிறேன்...
நம்பிக்கை பொய்த்துவிடவில்லை..
இன்னமும் உம்மீது நம்பிக்கை இருக்கிறது
தமிழகத்தின் எதிர்காலம் நீயென்று.
..
#எச்சரிக்கை..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment