Friday, January 26, 2018

குடியரசு

குடியரசு.... இன்றைய தினம் அண்ணல் அம்பேத்கரின் தினமாக கொண்டாடபடவேண்டும் இந்திய அரசியல் சாசனத்தை ஒழுங்குபடுத்தி வடிவமைத்து தந்தவர்.. சுதந்திர போராட்டத்தில் வெள்ளையருக்கு வெண்சாமரம் வீசியவர்கள்.. அவனை அடிதொழுதவர்கள் அதிகார மையத்தை கைப்பற்றிய பிறகும் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைக்க இந்த தாழ்த்தப்பட்டவர்தான் கிடைத்தார்.. ராமர்கதையை எழுத வால்மீகி .. மகாபாரதம் எழுத வியாசர் ..தேவைப்பட்டதைப்போல .. இன்றைய தினம் பெருவாரியாக தமிழகமெங்கும் மக்கள் கலந்துக்கொள்ளாத குடியரசுதினமாக கழிந்துக்கொண்டிருக்கிறது.. சென்றவருடம் முகநூலில் தங்கள் ப்ரோபைலில் தேசிய கொடியை வரைந்தவர்களில் 90 விழுக்காடு மௌனமாய் கடந்துச்செல்கிறார்கள்.. குடிமக்களுக்கான அரசாக இல்லாமல் ஒருசில கார்ப்பரேட்களுக்கான அரசாகவும் அவர்களின் தேவைக்காக மக்களை பிழிந்தெடுக்கிற அரசாக அமைந்ததும்.. மத்திய அமைச்சர்கள் கூட மதசார்ப்பின்மைக்கு எதிராக வெளிப்படையாகவே குரல் கொடுப்பதும்.. எதிர்ப்பவர்களை மாற்றுகருத்துடையோரை தேச விரோதிகளாக்கும் கூட்டம் .. வளர்ச்சிபாதையை விடுத்து மத சாம்ராஜ்யத்தை நிறுவ முற்படுவது பன்முக கலாச்சாரம் கொண்ட மண்ணில் எடுபடாது அது நல்ல/சிறந்த குடியரசை தராது.. பிறமொழிகளின் மீதான திணிப்பும் ..கல்வியில் மதத்தை திணிப்பதும் ஒடுக்கபட்ட மக்களை வாழ தகுதியற்றவர்கள் போல வேட்டையாடுவதும்.. இந்தியாவின் தனிதன்மையை இல்லாதாக்கும்.. கருத்து சுதந்தரத்தை மதிக்க தெரியாத .. பொய்களை கொண்டே கட்டமைத்த இதிகாசத்தை தூக்கிபிடிக்கிற நாடு முன்னேற்றமே காண இயலாது.. வளரும் நாடு பட்டியலில் சிறிய நாடுகள் நம்மை பின்தள்ளி முன்னேறும் நிலை.. நமக்கு சாதியும் மதமும் போதும் ..எதிர்ப்பவனை.. அவனுக்கு ஆதரவான குரலை கொலை செய்வதும் .. நீதியே வீதிக்குவந்து குறைச்சொல்வதும் ஜனநாயகத்தின் பேராபத்தை உணர்த்துகிறது.. .. கோமாளிகளும் கூத்தாடிகளும் வீரவசனம் பேசவைத்து தேசபற்றை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்ட நிலை மிகபெரிய அவலமாய் திரும்பி தாக்குகிறது. இந்த குடியரசு தினம் தமிழர்கள் மனதில் ரணத்தை/கீறலை வரைந்திருக்கிறது... தமிழ் மொழி பலகையை கூட எடுத்து அதில் இந்தியை வரைந்து (எழுதி) ஊர்வலம் விடுகிற செயல் தமிழ்மொழி மீதான வன்செயலாக கருதவேண்டியிருக்கிறது.. களவாணி அரசை கையாலாகாத அரசை இயக்கி தாங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்ள நினைத்து மத்திய அரசு செயல்படுவது.. பாஜக அரசுக்கு எதிர்வினையையே தரும்.. தொடர்ந்து தமிழ் மீதும் தமிழர்மீதும் .. தமிழினத்தின் மீதான கலாச்சார தாக்குதலை தொடர்ந்து செய்வது .. இந்தியா எனும் ஒருங்கிணைப்பை நிலைகுலைய செய்யும்.. .. ஆட்சியாளர்கள் அதை சரிசெய்ய வேண்டும் சிறிய கீறல் என விட்டால் அது மிகபெரிய அழிவைதரும்.. அதிகாரமும் பலமும் அடக்குமுறையும் நீண்டநாள் நிலைத்திருந்ததாக வரலாற்றில் எங்குமில்லை..இந்தியா நாடல்ல துணைகண்டம் பல்வேறு இனத்தின் மொழியின் வேர்களால் நிற்கிறது சில வந்தேறிகளின் கலாச்சாரத்தை தொடர்ந்து திணிக்க முற்பட்டால் அது வீங்கிவெடிக்கிற நிலையை ஏற்படுத்தும்.. அண்ணல் அம்பேத்கர் அரசியல்சாசன சட்டத்தை எழுதிமுடித்துவிட்டு சொன்னார் என் கைகளை பிடித்துக்கொண்டு சிலர் எழுதினார்கள்.. இதை கொளுத்தவேண்டுமென்றால் முதல் ஆளாக நான்தான் கொளுத்துவேன் என்றார்.. ஒருசாரராருக்கு மட்டுமே வளைந்து கொடுக்கிற சட்டமும் திட்டமும் செயலும் ஒற்றுமையை சிதைக்கும்.. .. கொஞ்சமேனும் மற்றவர்களும் வாழ வகைசெய்த சட்டவடிவை தந்த அண்ணல் அம்பத்கரை இந்நாளில் நினைவு கூர்வோம்.. .. குடிமக்களுக்கான அரசாய் #ஒருகுடியரசுவேண்டும்.. .. தோழர் ஆலஞ்சி.. Aalanci Spm

No comments:

Post a Comment