Sunday, January 14, 2018

தமிழ்ப் புத்தாண்டு

ஏன் பார்ப்பனர்களும், பாரதிய ஜனதாவும் ஏன் தமிழர் பண்பாட்டை கலாச்சாரத்தை எதிர்க்கிறார்கள் .. ஏன் பார்ப்பனர்கள் பொங்கலை கொண்டாடுவதில்லை சற்று யோசித்தால் பிடிகிட்டும் ..இன்று அதிகாலை எனது நண்பர் மகர சங்கராந்தி வாழ்த்துகள் சொன்னார்.. இன்றைக்கு கூட காலை முகநூலை திறந்தவுடன் சங்கராந்தி வாழ்த்தை சொல்லி எம் மீது கலாச்சார திணிப்பை செய்தது.. .. தமிழகத்தை தவிர்த்து பிறமாநிலங்களில் கொண்டாடப்படும் மகா சங்கராந்தியை நம் மீது திணிக்கும் நடவடிக்கையாக தான் பொங்கலோடு சார்ந்த விழாக்களை தடைசெய்து சிதைக்க எண்ணுகிற செயலாகதான் தோன்றுகிறது ஜல்லிக்கட்டு மீதான பிடிவாத போக்கும் பொங்கல் விடுமுறையை கல்வி நிறுவனத்திற்கு வழங்காததும் கலாச்சாரத்தை அழிக்கும் செயலாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.. இப்போது கூட கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை இல்லை .. அறுவடைநாளோடு சூரியனின் கதிர்திருப்பத்தை (Solstice) இணைத்து நம் மீதான கலாச்சாரப்போரை தொடுக்கிறார்கள்.. (சங்கராந்தி) சங்கரமண என்ற சமஸ்கிருத சொல்லிற்கு நகர தொடங்கு என பொருள் அதாவது தொடக்கம் என்றும் பொருள் கொள்ளலாம்.. அதாவது ஆண்டில் தொடக்கம் ஆனால் அதை ஆண்டின் தொடக்கமாக ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.. இதிலிருந்து ஒரு உண்மையும் தெரியும் தமிழறிஞர்கள் ஏன் ஆண்டின் தொடக்கம் #தைத்திங்கள் என்றார்கள் என்பது நமக்கு விளங்கும் .. சமஸ்கிருத ஆண்டை நம்மீது திணித்தாலும் அறிவியல் ரீதியாகவும் அவர்கள் நம்புகிற வேதங்களில் கூட வருகிற சில உண்மைகளை அவர்களால் கூட மறைக்க முடியவில்லை .. மகா சங்கராந்தியை அவர்கள் கொண்டாடுவதிலே எங்களுக்கு சங்கடமில்லை ஆனால் இந்தியா முழுவதும் அதை திணிக்கவேண்டுமென்பதற்காக செய்யும் அழிச்சாட்டியங்களை காணும் போது கோபம் வருகிறது.. பொங்கலை சாதிமதத்தை மீறி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் .. #உத்தராயன் என சூரியன் வணங்கும் விழாவாக குஜராத்தியர்களும் ராஜஸ்த்தானியர்களும் கொண்டாடிவந்தார்கள் அவர்கள் மீது சங்கராந்தியை திணித்து அவர்களின் தொன்மை கலாசாரத்தை சிதைத்ததைப்போல தமிழர்களின் பண்டிகையை / பண்பாட்டை சிதைக்க முடியாது.. காரணம் தமிழர்கள் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை மலேசியா மற்றும் கீழைநாடுகளிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் உலகெங்கும் பரந்து.. பல்வேறு நாடுகளில் வேரூன்றி நிற்கிறான் தமிழன்.. தமிழர்கள் பொங்கலை சாதிமதங்களை கடந்து கொண்டாடுகிறார்கள்.. .. 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின்தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும் சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், சித்திரையில் புத்தாண்டு பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறியதை ஏற்று #திராவிட_பெருவுடையார்_கலைஞர் 2008 ல் தைத்திங்களை தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார் .. பிறகு ஆட்சிக்கு வந்த ஆரிய மங்கை மீண்டும் சமஸ்கிருத ஆண்டை நம் மீது திணித்தது.. இப்போது தளபதி அவர்கள் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தை மாத முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கபடுமென சொல்லியிருக்கிறார்.. அப்போதே கலைஞர் பெருமகன் .. தமிழ்ப்புத்தாண்டை தை கொண்டாடவேண்டுமென அறிவித்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடுவதை போல விழிந்திருந்து வரவேற்று வீடுகளில் வண்ண விளக்கேற்றி கொண்டுவோம் என்றார் நாம் தான் கேட்கவில்லை.. இதோ நம் இனத்தின் பண்பாட்டை சிதைக்க என்னெல்லாம் வழிகளில் உண்டோ அதில் எல்லாம் நுழைகிறார்கள் ஆனால் அவர்கள் மறைக்க நினைத்தாலும் ஒழிக்க முயற்சித்தாலும் நடக்காது.. தமிழும் தமிழர் கலாச்சாரமும் எங்களின் இன உணர்வோடு சம்பந்தப்பட்டது.. .. கடைசி தமிழ் உணர்வாளர்கள் உள்ளவரை நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டிவரும்.. திமிறி எழுந்தால் திசை தெரியாது போவீர்.. .. #அத்துமீறினால்_அடங்கமறுத்தல்_எங்கள்இயல்பு.. .. Aalanci Spm

No comments:

Post a Comment