Wednesday, January 31, 2018

காதல் பேசுவோம்

#கொஞ்சம்_காதல்பேசுவோம்.. .. அவளும் நானும்.. எப்படி சொல்வேன்.. அரும்புமீசை வளரும்காலம் காதல் அரும்பிய பொன்நேரம்.... ஆசையா.. ஈர்ப்பா.. அது காதல்தானா.. அறியாமல் அரும்பிய மனம் கவர்ந்த மல்லி.. .. ஆற்றங்கரையில் விரல்உரசி.. நடந்ததும்.. வரவை எண்ணி. ஆற்றுபடுகையில் புத்தகத்தால் முகம் மூடி தவமிருந்த மணிதுளிகள்.. மழை நின்று இலை சிந்தும் நீரில் நனைந்து.. இதமாய் இதழ் பதித்த.. நான்..ரசித்த ரசனைக்குரிய நாட்கள்.. .. முதல் காதல்.. முதல் முத்தம்.. முதல் ஸ்பரிசம்.. மறக்கமுடியாத.. காவிரிக்கரை.. அழகிய தென்னந்தோப்பு.. சிறிய குட்டை.. தாமரைக்குளம்.. அமைதியான.. அக்ரஹார கோவில் நிழல்.. சின்ன சிணுங்கல்.. பெரும் மூச்சு.. கருவிழி நாட்டியம்.. என்னை கொன்ற கவிதையவள் மறக்கமுடியுமா.. .. ஒற்றைவரியில்.. மனம் விரும்பிய என் முதல் #கவிதை .. .. அவளும் நானும்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment