Tuesday, January 16, 2018

ரௌத்திரம்

தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளான் தோழர்.கனிமொழி... ஆம்.. ரௌத்திரம் பழகாமல் போனோம்.. தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்ற சொல்கிறவனிடம் ரௌத்திரம் செய்திருந்தால்... கலைஞரைப்பற்றி கீழ்தரமாக பேசுகிறவனிடம் நம் கோபத்தை காட்டியிருந்தால் இன்று இருக்குமிடமே தெரியாமல் இருந்திருப்பார்கள். இன்றைக்கு கண்டவனும் நம்மை பார்த்து கேள்விகேட்கிறான். கருத்து சுதந்திரம் என்ற பேரில் எல்லாவற்றையும் அனுமதித்தது எல்லை மீறி இன்று... இரத்தம் செத்தவனெல்லாம் நம்மை கேலி பேசுகிறான்.. .. சுயமரியாதையை இழந்துவிட்டால் வேறு எது இருந்தும் பயனில்லை.. இன்றைக்கு வைரமுத்துவை மன்னிப்பு கேள் என சொல்ல முடிகிறதே ஏன்.. வைரமுத்து தம் கொள்கையிலிருந்து கொஞ்சம் தடுமாறியதே இந்த நிலைக்கு காரணம்.. தோழர்.அருள்மொழி சொன்னதைப்போல.. அவர் சொல்ல மறந்த சொல் ஒன்று உண்டு சொல்ல மறந்த பெயர் உண்டு எம் பகைவரை குலைநடுக்கவைக்கும் சொல் திராவிடம் பெயர் பெரியார்.. இந்த இரண்டையும் மறந்தால் நமது அறிக்கைகள் கனமாக இருக்கும் எதிரியை அச்சமடைய செய்யாதென்றார்.. ஆம் .. திராவிடம் தவிர்த்த எதுவும் தமிழனை அடிமையாக்கும் என்பதை உணரவேண்டும்.. அமைதியான முறையில் சொல்லிக்கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகபோவதில்லை மாறாக எதிரிகள் எடுக்கும் அதே ஆயுதத்தை நாமும் எடுப்போம்.. வீதியில் இறங்கி போராடுகிறாயா ..நாமும் வைணவர்களுக்கு எதிராக வைரமுத்துவை ஆதரித்து போராட்டம் நடத்துவோம்.. .. எதற்கும் ஒர் எல்லை உண்டென கருதவேண்டும்.. ஆட்சி அதிகாரமோ ஆள்பலமோ இருந்தால் எதுவும் நடத்தலாமென்பதை புறந்தள்ளுவோம் .. யார் இவர்கள் தமிழ் மண்ணில் தமிழனை மன்னிப்பு கேட்க சொல்ல.. இது தனியொரு வைரமுத்துவோடு முடிகிற பிரச்சனை இல்லை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால் புரையோடிவிடும்.. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியற்று .. கடவுள் மதமென போர்க்கொடி ஏந்துவது கீழமை.. யாரையும் புண்படுத்தல்ல நோக்கமென்ற பிறகும் வாலாட்ட தொங்கினால் வாலை அறுக்கவேண்டிய கட்டாயம் வரும்.. எல்லை மீறி விமர்சிக்கிறாரென்றால் வழக்கு தொடரவேண்டியதுதானே.. வைணவர்களை தவிர ..சில இந்துத்துவ கொடிப்பிடிப்போரை தவிர யாரையும் காணோம்.. சைவ சித்தாந்திகள் எதிர்மறையாற்றுகிறார்கள்.. குறிப்பிட்ட யாரையும் குறை கூறுவதல்ல...அல்லது பாஜக மதவெறியர்களை போல பொய் சொல்லி திரியவில்லை.. மாறாக உண்மையாக ஆண்டாளை அறிந்தவர்கள் விவாதத்திற்கு வரலாமே.. விவாதம் செய்தால் இன்னும் நிறைய அசிங்கங்கள் வருமென கு.கா.மானியம் பெற்றவர்களுக்கு தெரியும்.. .. ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென்போரே.. முதலில் கலைஞரைப் பற்றி இதுவரை பேசிய அவதூறுகளுக்காக.. இதுவரை பேசி வந்தவர்கள்.. #திராவிடப்_பெருவுடையார்_கலைஞர் முன் நின்று மன்னிப்பு கேட்கவேண்டும்.. பிறகு வைரமுத்து மன்னிப்பு குறித்து பேசலாம்.. .. இனி.. நாகரீகமாக நேர்மையான எதிர்கருத்தாளர்களை தவிர.. விமர்சனமென்ற பெயரில் தனிநபரைப் பற்றி அவதூறான செயல்களை செய்வோருக்கு அவர்கள் மொழியிலேயே/ வழியிலேயே பதிலடி தரவேண்டும்.. கொஞ்சம் ரௌத்திரம் பழகுவோம்.. #சினம்_கொள்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment