Friday, January 19, 2018
திராவிடன்டா
இந்து மதத்திற்கு ஆபத்து ஓடிவாருங்கள் என்ற போது .. ஓடிவந்தவனை பார்த்தால் தெரிந்திருக்கும் புரிந்திருக்கும்.... இந்து மதமென்பதே ஆரிய மதமென்று .. 125 ஆண்டுகளுக்கு முன்பு பிராமண மதம் என்றழைக்கப்பட்ட மதம் ஆங்கிலேயர்களால் இந்து என சூட்டபட்டதும்.. யாரெல்லாம் முகமதியன் இல்லையோ யாரெல்லாம் கிருஸ்துவன் இல்லையோ யாரெல்லாம் சீக்கியன் ஜைனம் இல்லையோ அவர்களை இந்து என அழைக்க தொடங்கியதால்.. எல்லோரும் இந்து என்ற கூட்டுக்குள் அடைபட்டுபோனார்கள்..
..
மிக இக்கட்டான காலக்கட்டத்தில் மத்தியில் ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் எதை பேசினாலும் ஊடகங்கள் அதை தலையில் தூக்கி கொண்டாடுமென அறிந்து வாயை திறந்தால் பொய் பேசி திரிகிறார்கள்.. ஆண்டாளை கையிலெடுத்து ஆடிய ஆட்டம் .. ஆட்டம் கண்டதால் அடுத்தென்ன செய்யலாமென யோசிக்க தொடங்குவார்கள்.. திராவிடத்திற்கெதிராக எத்தனை வடிவில் வந்தாலும் அதை எதிர்க்கொள்ளும் பேராற்றல் நமக்குண்டென்பதை அறிந்து கொள்ளவேண்டும்..
..
தினமொரு பொய்.. இதோ தளபதி பிரசன்னாவை ஆண்டாள் விடயமாக பேசியதற்கு கண்டித்ததாகவும் .. காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்டார் பிரசன்னா என கூசாமல் பொய் சொல்கிறார்கள்.. காலில் விழும் பழக்கம் எங்கள் இனத்திற்கே இல்லையென அறியாதவர்கள் .. இந்த ஆரிய கூட்டம் ..மதநம்பிக்கை என்ற பெயரில் இவர்கள் ஆடும் கூத்து யார் இவர்கள் என்ற உண்மையை போட்டுடைக்கிறது என் நம்பிக்கையை தகர்க்கலாமா என்று கதறுகிறார்கள்.. யார் நம்பிக்கையையும் தகர்க்கவில்லை.. மாறாக பார்பனர்கள் காலமெல்லாம் தங்களை உயர்த்திபிடித்து மற்றவனை தாழ்வாய் என்னும் நம்பிக்கையை தான் காலகாலமாய் எதிர்க்கிறோம்..
..
ஆண்டாளை இவர்கள் கையிலெடுத்ததே அதில் குறிப்பாக திமுகவை சிக்கவைக்கலாமென்றுதான்.. பதிலடிகள் வேறுவிதமாக வருமென எதிர்பார்க்கவில்லை ..
#பெரியார் சொன்னதைப்போல பாப்பானுக்கு முன்யோசனை இல்லை.வேறெதாவது சூத்தரத்தை கொண்டுவாருங்கள்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment