Friday, January 5, 2018
திருமாவின் அரசியல்
என்னானது திருமாவிற்கு..
திடீரென சாதி மதமற்ற ஆன்மீகம் என்பதை வரவேற்றவர்.. கூடவே இருக்கும் ரவிக்குமாரின் மாற்று கருத்தை இப்போது மொழிகிறார்..
ரஜினி காந்த் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் R S S ஆட்சியாகவே அமையும் -- திருமாவளவன்
இது அரசியல் ஆரம்பபாடம் படிக்கும் அனைவரும் அறிந்தது தான்.. திருமாவின் அரசியல் பார்வை அடிக்கடி மாறும்தன்மை கொண்டதாக இருக்கிறது.. ஆன்மீகம் என்பது அது எந்த மதத்தை கையிலெடுத்து சொன்னாலும் அதில் கசடுகளே மிஞ்சியிருக்குமென அறியாதவரா.. தனிமனித ஒழுக்கம் சிநேகம் அன்பு .. அடுத்தவரின் மீதான பரிவு இவையெல்லாம் என்னவென்றே அறியாதவர்கள்.. தங்களின் மதம் மட்டுமே சரி தங்களின் கடவுள் மட்டுமே சரி என்பவர்கள் நிச்சயமாக நேர்மையானவர்களாக இருக்கமுடியாது.
இந்து..முஸ்லிம் கிருஸ்துவ கடவுள்களை இல்லையென்கிறார்கள் ..கிருஸ்துவர் முஸ்லிம் இநிது கடவுளைகளை ஏற்க மறுக்கிறார்.. இஸ்லாமியர் இந்து முஸ்லிம் கடவுள்களை மறுக்கிறார்.. நான் மூன்று கடவுள்களையும் மறுக்கிறேன் என்றார் பெரியார் இதுதான் தெளிவு.. ஆன்மீகம் என்பதிலிருந்தே .. தான் சார்ந்த மதத்தை முன்னெடுப்பதாகவே பொருள்..இதெல்லாம் தன்னை நாத்திகராக Atheist ஆக சொல்லிக்கொள்ளும் திருமா அறியாமல் போனதேன்..
..
ரஜினியின் வரவிற்கு பிறகு சில சஞ்சலக்காரர்கள்.. திருமா உட்பட மாற்றமென்ற சொல்லையும் .. திராவிட அரசியலுக்கு மாற்றாக புதியதொரு எழுச்சியை உருவாவதையும் போலவும் சித்தரிக்க முயல்கிறார்கள்.. கொள்கை என்ன என கேட்கதற்கே வியர்த்து தண்ணீர் குடிக்கிற ஒருவரை புனிதரைப்போல சித்தரிப்பதும்.. தொடர்ந்து மக்களை சந்தித்து தோல்விகளிலும் துவண்டுவிடாமல் கட்சி மற்றும் சமுதாயபணிகளை செய்துவரும் .. செயல்தலைவர் தளபதியின் செயல்பாடுகள் திருப்தியில்லையென்பதைப்போல ஊடகங்கள் சொல்லி திரிவதின் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள்.. எந்த சக்தி இவர்களை இயக்குகிறதென மக்கள் அறியாமல் இல்லை..
எந்தவிதமான போராட்டத்திற்கும் வரமறுக்கும் இதோ இப்போது நடக்கும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பாரா.. எதிர்கருத்தாக இருநிதாலும் சரி சொல்லவேண்டுமல்ல.. உயர்நீதிமன்றமே அவர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க மறுத்திருக்கிறதே.. இதெல்லாம் நேரடி முதல்வர் கனவில் இருக்கும் ஆன்மீகம் ஏன் கண்டுக்கொள்ளவில்லை..
..
Hindustan times நாளிதழ்..
பாரதிய ஜனதா கட்சி பின் நாளில் ரஜினிகாந்தை தனது கட்சியின் ஒரு அங்கமாக மாற்ற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதே நிலைதான் ஆந்திரப் பிரதேசத்தில் சீரஞ்சிவிக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி சீரஞ்சிவியை தனது கட்சிகுள் கொண்டு வந்தது .திராவிட இயக்க அரசியல் ஊழலுக்கு வழிவகுத்தது என்று ரஜினி காந்த் நம்புவது தவறு. திராவிட இயக்க அரசியல் கட்சிகள் சமூகம் , அரசியல் , பண்பாடு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ரஜினி காந்த் உணர வேண்டும்.. என எழுதியிருக்கிறது..
..
திராவிட அரசியலை விமர்சிப்போருக்கு.. இதைவிட தெளிவாக சொல்ல தேவையில்லை..
கடைசியாக..
வெல்வதற்கே தோல்வி..
எழுவதற்கே வீழிச்சி என்றார்
சீன மெய்யியலாளர் தத்துவஞானி #கன்பூசியஸ் ..
நாம்.. வீழும்பொழுதெல்லாம்
வெகுண்டு எழுந்திருக்கிறோம்..
#வீறுக்கொண்டெழுவோம்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment