Friday, January 12, 2018

உச்சநீதி..

விடுதலை இந்தியாவில் முதன்முறையாக உச்சநீதிமன்றம் அஞ்சுகிறது.. நேர்மையாக நிர்வாகமில்லை என கவலைகொள்கிறது ..மக்களின் கடைசி நம்பிக்கை என இறுமாப்பு கொண்டிருந்த நீதிபீடம் புற்று அரிக்க தொடங்கியிருக்கிறது.. ஜனநாயகத்தில் கடைசி நம்பிக்கையையும் காவிகள் ஆக்கிரமித்து இருக்கிறார்.. .. நீதியரசர்கள் நால்வர் செல்லமேஸ்வர்,குரியன் ஜோசப்,மதன் பி லோகர், ரஞ்சன் கோகாய்.. கூட்டாக செய்தியாளர்களை சந்தித்ததும் நாடு சற்று நடுங்கிதான் போனது.. நான்கு மாதமாக தலைமை நீதியரசரிடம் சொல்லியும் பலனில்லையென்பதால் மக்களிடம் செய்தியை எத்திவைத்திருக்கிறார்கள்.. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மெல்ல படர தொடங்கிய பாசிச சிந்தனையாளர்கள்.. அதிகாரம் கைக்கு வந்தபிறகு வெளிப்படையாகவே நீதித்துறையில் தங்களின் அதிகாரத்தை செலுத்த தொடங்கினார்.. அமிர்ஷா வழக்கில் கூட நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாக ஊடகங்கள் சொல்லியும்.. கவர்னர் பதவி வரை பரிசுகள் காத்திருக்கிறதென்ற புதிய நடைமுறையை தந்தார்கள்.. மரபுகள் மீறபடுவதைவிட .. அநாகரீக செயல்பாடுகளும் தவறான முன்னுதாரணங்களும் நிகழ்த்தபட்டது .. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் பதவியே இல்லாது செய்து தொடக்கம் குறித்தவர்கள் .. குற்றவாளியென தீர்ப்பு தரப்பட்ட ஜெயலலிதாவை சட்ட அமைச்சரும் நிதியமைச்சரும் சந்தித்த அவலம் கூட நடந்தது எல்லாவித தார்மீகங்களையும் உடைத்தெறிந்து தங்களுக்கான மநுநீதியை பெற எல்லாவழிகளையும் திறந்து வைத்தார்கள் .. விசாரணை முடிந்தும் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை தாமதபடுத்தியதும் நிறைய சந்தேகங்களை எழுப்பியது..இப்படி நிறைய .. .. நீதிபதி கர்ணன் சொல்லிய அதே குற்றசாட்டை வேறுவிதமாக நால்வரும் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் நீதிபதிக்கு சிறைத்தண்டனை விதித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்தது .. அப்போது கூட சில கண்டன குரல்கள் எழுந்தன அவை சாதிய குரல்களென வாயடைத்தார்கள்.. அங்கே பிராமண ஆதிக்கம் அதிகமாக இருப்பதும் சில முடிவுகள் மநுவை சொல்லி விளக்கவதும் நாடு கண்டது தான் டைலர் வழக்கில் தூக்குதண்டனை ரத்திற்காக நள்ளிரவில் கூடிய நீதிமன்றம்.. தலைமை வழக்கறிஞர் மநுநீதியை காரணம் காட்டி திசை திருப்பினார் .. இது ஒரு சிறிய உதாரணம் தான்.. நீண்ட நாட்களாகவே உச்சநீதிமன்றத்தில் அரசியல் வெளிப்படையாகவே நடந்தேறுவதை நடுநிலையாளர்கள் மெல்ல விமர்சித்தும் அதேவேளை இன்னமும் நம்பிக்கையற்று போகவில்லை என நம்பியும் இருந்தார்கள்... இதையெல்லாம் உடைந்தெறிந்தது இன்றைய நீதியரசர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு.. நீண்டநாட்கள் உண்மையை மறைக்க முடியாதென்ற பொதுநீதி உயர்ந்த நீதிபீடத்திற்கு தெரியாமல் போனது.. சிராபுதீன் வழக்கை விசாரித்த நீதிபதி மர்ம மரணம் குறித்த வழக்கை அரசிற்கு ஆதரவாக செயல்படும் நீதிபதிக்கு ஒதுக்கியிருப்பதை விமர்சிக்கிறார்கள்... அதோடு நீதித்துறை அரசிற்கு ஆதரவான நிலைபாடு வேண்டுமனில் ஆதரவாக செயல்படும் நீதிபதிகளுக்கு அனுப்புவதாக குற்றம் சுமத்தி நீதிபரிபாலன முறையே கேலிகூத்தாகி இருப்பதாக .. வேண்டபட்டவர்கள் நியமனம் போன்றவற்றை விமர்சித்திருக்கிறார்கள்.. நிச்சயமாக நீதித்துறை செல்லரிக்க தொடங்கியிருப்பது கவலையட வைக்கிறது.. .. இனியேனும் நல்லதொரு தொடக்கம்.. இனியேனும் நீதியரசர்கள் அரசியல் சட்டம் என்ன சொல்கிறதோ அதை செய்யவேண்டும் மநுநீதி சொல்வதை அல்ல.. மக்களின் கடைசி நம்பிக்கையை பொய்யாக்காதீர்கள்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment