Thursday, January 25, 2018

மன்னிப்பு கேள்

திராவிடப் பெருவுடையாரிடம் மன்னிப்பு கேள்.. .. தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா என்கிற மட பயல்களே.. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.. தேசியம் நாங்கள் இணைந்தது .. தமிழ் எங்கள் தாய்.. தமிழ் எங்களை பெற்றது.. தேசியத்தை மதிக்கிறோம்.. ஆனால் தமிழைத்தான் சுவாசிக்கிறோம் .. .. கண்ட இடங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்க கூடாதென திராவிடன் வேடம் கட்டிய வைணவன் சொல்கிறார்.. திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலித்தபோது என்ன செய்தார்.. கண்ட இடத்திலும் தேசிய கீதத்தை இசைக்கலாமோ.. இவர் நடித்த ஆபூர்வ ராகங்கள் படத்தில் தேசிய கீதத்தை மதிக்காதவன் தேவடியா பையா என திட்டுவார்கள்.. நாம் அப்படி திட்டமாட்டோம் .. ஏனெனில் சங்கரனை பெற்றவளும் தாய்தான் ஆனால் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.. .. சிலர் அறிவிலிகள் ஆரியர்கள் தமிழ் வளர்த்தார்கள் என பேசுகிறார்கள்.. தொல்காப்பியனும் வள்ளுவனும்.. ஏன் இளங்கோஅடிகளும் ஆரியர்கள் இல்லை அண்டி பிழைக்க வந்த ஆரியன் தமிழை கற்றுக்கொண்டு.. தன்னை தமிழனென அடையாளம் காட்டிக்கொண்டான்.. பேரரசர்கள் சிற்றரசர்கள் அந்தரங்கவேலை செய்து தன் நிலைநிறுப்பை தக்கவைத்தவன்.. ஒரு காலத்தில் கல்வி பார்ப்பனனுக்கே உரியது மற்றவர்களுக்கு அது கிடையாதென்கிற நிலையில் தான் பார்பனர்கள் தமிழுக்கு தொண்டாற்ற..? வந்தார்கள்.. கல்வியை எல்லோருக்குமாக செய்திருந்தால் .. உ.வே.சா இடத்தில் வேறொருவர் தமிழனின் படைப்புகளை.. தமிழின் தொன்மைகளை சிதைந்திடாமல் தொகுத்திருப்பார்.. குண்டலகேசியில் நிறைய பாடல்கள் காணாமல் போயிருக்காது.. .. தியானத்தில் இருந்தார்.. எல்லாநேரங்களில் கடவுள்வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை.. என எஸ்.வி.சேகர் தமிழ்த்தாய் வாழ்த்து எங்களுக்கு கடவுள் வாழ்த்தை விட மேல் .. அன்று வைரமுத்து அப்படி பேசலாமாயென வரிந்துகட்டிவந்தவர்கள் இன்று பம்முகிறார்கள்.. காஞ்சி காம கோடிகளின் திமிர்த்தனத்தை கேள்வி கேட்க அஞ்சுகிற அரசு ..அரசாணையை மீறிய விஜயேந்திரன் மீது வழக்கு தொடர்ந்திருக்கவேண்டாமா.. தமிழை நேசிக்கிறவர்கள் விஜயேந்திரன் செயலை கண்டித்து வீதியில் போராடுகிறார்கள்..ஆம் எங்கள் உணர்வோடு இணைந்தது தமிழ்.. அதை நீச மொழியென்று யார் சொன்னாலும்..ஏன் கடவுளே சொன்னலும் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்.. இந்த(கும்பகோணம்) காஞ்சி மட பயல்களின் ஆணவத்தை இனியும் பொறுத்துக்கொள்ள தேவையில்லை .. கடவுள் பெயரைச்சொல்லி காமலீலைகள் புரியும் இவர்கள் போலிகள்.. சிலர் இதை சைவ மடம் என்கிறார்கள் அது தவறு.. இது பார்ப்பனர் மடம் .. திருப்பனந்தாலும் மதுரை ஆதின மடமும் தான் சைவ மடமே தவிர இது ஆரியர்களுக்கான மடம். இங்கே தீண்டாமை உண்டு இரண்டு மேடையுண்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் .. அவன் இனத்தவனை அருகில் அமர்த்தி பேசும் மட அதிபதிகள்.. சூத்திரனை கீழே உட்கார வைத்து தாழ்ந்தவன் நீயென சொல்லும் கயமைத்தனம் .. இவையெல்லாம் கேள்வி கேட்கவேண்டும்.. .. எச்.ராசாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியீட்டுவிழாவில் நடந்த அவமதிப்பிற்கு .. எப்படி வைத்தி சாஷ்டாங்கமாக வைணவன மடத்தில் காலில் விழுந்தாரோ அதைபோல .. திராவிட பெருவுடையாரிடம்.. தமிழ்த்தாய்க்கு வாழ்த்தென ..இந்தியாவிலேயே முதன்முதலில் மொழிக்கென்று தனி வாழ்த்தை அரசாணையோடு வெளியிட்டு அதை இன்றுவரை (ஆட்சிகள் மாறிடினும்) தொடர்ந்து இடம்பெற செய்த எங்கள் கம்பீர கலைஞரிடம் .. முத்தமிழறிஞரிடம்.. நேரில் வந்து மன்னிப்பை கேட்கவேண்டும்.. .. தமிழ்த்தாயை அவமதித்த விஜயேந்திரன் மன்னிப்பு கேட்காவிடில் .. வேறுமாதிரியான போராட்டம்..நடத்தப்படும் மன்னிப்பு கேட்க வைக்கபடுமென தளபதி எச்சரித்திருக்கிறார்.. .. #மன்னிப்பு_கேள்_மடமே.. .. Aalanci Spm

No comments:

Post a Comment