Tuesday, January 23, 2018
தீராத களங்கம்
ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம்..
ஜெயலலிதா.. மூன்றுமுறை முதல்வராக இருந்து அதில் இரண்டுமுறை தகுதிநீக்கம் செய்யபட்டவர்.. குற்றவாளியென நிரூபணம் செய்யபட்டு சிறை தண்டனை வகித்தவர்..
அரசியல் அமைப்பு வழங்கிய சலுகைகளால் மீண்டும் மீண்டும் முதல்வரானாலும்.. இறுதியில் குற்றவாளியென விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து இந்தியாவின் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது.. தீர்ப்பு வருவதற்குமுன் இறந்து போனார் என்பதற்காக அவரை குற்றமற்றவர் என்று சொல்ல முடியாது.. காலம் தாழ்ந்த தீர்ப்பால் ஒரு கிரிமினல் மாநிலத்தின் முதல்வராக முடிந்தது..
நீண்டநாட்கள் இழுத்தடித்து கடைசியில் ஒன்றும் செய்யமுடியாதென்ற நிலை வந்தபிறகே.. நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கொண்டார்..
..
இவருக்கு அதிமுக சார்பில் விழா எடுப்பதில் நமக்கு அக்கறையில்லை மாறாக .. ஒரு கிரிமினலுக்கு அவர் மக்களின் ஆதரவை பெற்றவர் என்பதால் நினைவு மண்டபம் என்பது ஒட்டுமொத்த ஜனநாயக மரபுகளை கேலிகூத்தாக்கும் செயல் .. உயிரோடிருந்திருந்தால் சசிகலாவோடு சேர்ந்து சிறையில் இருக்கவேண்டியிருந்திருக்கும்..
மேல்முறையீடும் தள்ளுபடியாகிய வழக்கில் சசிகலா மட்டுமல்ல ஜெயலலிதா சேர்ந்துதான் களி தின்ன வேண்டி வந்திருக்கும்.. முன்பு டான்சி வழக்கில் சொத்தை திருப்பி தருவதாக சொன்னதால் உச்சநீதிமன்றம் விடுவித்து மனசாட்சியோடு நடந்துக்கொள்ளுங்கள் என எச்சரித்தது .. சொத்து குவிப்பு மேல்முறையீட்டு குமாரசாமியை கொண்டு கள்ளகணக்கெழுதி தப்பிக்க நினைத்ததும்.. குற்றவாளியை மத்தியில் ஆளும் அரசின் பிரதான அமைச்சர் நேரில் சந்தித்ததும்.. வழக்கிலிருந்து தற்கால விடுதலை கிடைத்தது..
..
குற்றவாளிக்கு நினைவு மண்டபமா என கேட்டால்.. சசிகலாதான் ஜெயலலிதாவிற்கு தெரியாமல் கொள்ளையடித்துவிட்டாரென புதுகதை சொல்கிறார்கள்.. ஜெயலலிதாவை விசாரணை நீதிமன்றம் விடுவிக்கவில்லை மாறாக சசியை விட அதிகமாக அபராதம் விதித்தது.. சசியை விட பத்துமடங்கு அதாவது ₹100 கோடி அபராதம் விதித்து ..அதுவே .. குறைந்தபட்ச தண்டனை எனச் சொன்னது..
..
வரும் காலங்களில் .. கொள்ளையடித்தவர்கள் கொலை செய்தவர்கள்.. சந்தனமரத்தை வெட்டி கடத்தியவர்கள் சாதிமத கலவரத்தை உண்டாக்கியவர்கள் குடிசையை கொளுத்தி குளிர்காய்ந்தவர்கள்.. மக்கள் செல்வாக்கு பெற்றவரெனில்
அரசு சார்பில் நினைவு சின்னம் அமைக்கலாம்.. திருடர்கள் ஜாக்கிரதை என்று இனி மேல் போர்ட் வைப்பதற்கு பதிலாக நினைவுமண்டபம் கட்டப்பட வேண்டியவர்களென பலகை மாட்டலாம்..
..
குற்றவாளி சமாதி மெரினாவில் இருப்பதென்பது இழுக்கு அதை மத்திய அமைச்சர்கள் வந்து தரிசிப்பதும்.. அரசு அலுவலகங்களில் கிரிமனல் படத்தை மாட்டுவதும் அரசு நிகழ்ச்சிகளில் படத்தை தலைமைசெயலரே பிடித்து நிற்பதும்.. தமிழகத்தில் மட்டும்தான் முடியும்.. இதில் முக்கியமான ஒரு விடயம்.. ஜெயலலிதா வைணவராக இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் .. வேறுமாதிரியாக சித்தரிக்கபட்டிருப்பார்..
..
குற்றவாளிக்கு அரசு செலவில் மக்கள் வரிப்பணத்தில் நினைவுமண்டபமென்பது எதிர்காலத்தில் எந்த குற்றம் செய்தாலும் கவலையில்லை அரசியல்வாதியாக இருந்தால் செல்வாக்கோடு இருந்தால் போதும் அரசே விழா எடுக்கும் தவறுகள் மறைக்கப்படும் ..
குற்றவாளி என்பது மாறி தேசத்தின் தியாகி அவரென புகழவேண்டிருக்கும்..
இது கேவலமான செயல்..
உண்மையில் ஜெயலலிதா போன்றவர்களே
anti national.. தேசத்தின் அழுக்கானவர்கள்.. ஆட்சி அதிகாரத்தில் பயன்படுத்தி ஊழல் செய்து அது நிரூபணம் ஆகி தேசத்தை தலைகுனிய வைத்தவர்கள் ..
தமிழகத்தின் தீராத களங்கம்.
..
தீராத கலங்கத்தை தமிழகத்தின் மீது..
தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்காதீர்கள்..
..
Aalanci Spm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment