Monday, January 8, 2018

திமுக சதிகளை முறியடிக்கும்

திமுக மா.செ கூட்டத்தில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனின் பேச்சு எனக்கு தஞ்சை தளகர்த்தர் கோ.சி.மணியை நினைவுபடுத்தியது.. பாலைவன ரோஜாக்கள் படத்தில் தலைவர் ஒரு வசனம் எழுதியிருப்பார். ‘ரயில் இன்ஜினையே களவாடிச் சென்றவர்களை விட்டுவிட்டு கரித்துண்டுகளை பொறுக்கியவனுக்கு தண்டனையா?’ என்று கேட்டிருப்பார். அதுபோல ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக என்ற ரயிலின் இன்ஜினையே சீர் குலைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, கரித்துண்டுகளைத் திருடிய வட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆர்.கே.நகரில் இன்ஜினையே திருடி விற்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்..என்று கேட்டார்.. இதுதான் திமுக.. தவறை யார் தெய்தாலும் சுட்டிகாட்டும் துணிவு.. அதை தலைமையின் கவனத்திற்கு புரிகிற மாதிரி விளக்கி சொல்லும் ஆற்றல் இதுபோன்ற நிகழ்வுகள் எந்த கட்சியிலும் நடக்காது.. ஆம்.. எந்த கட்சியிலுமே பேச அனுமதிக்கவே மாட்டார்கள் ஏற்கனவே எப்படி பேசவேண்டுமென தயார்படுத்தி அனுப்புவார்கள் ..திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு.. .. விடயத்திற்கு வருவோம்.. பூண்டியின் கருத்தில் உடன்படுகிறேன் ஒட்டிமொத்த அமைப்பையே கேலிகூத்தாக்கி .. நடந்த விடயங்கள் நம்மை தலைகுனிய வைத்திருக்கிறது மாவட்ட தலைமை தார்மீக பொறுப்பேற்றிருக்கவேண்டும்.. செயல்தலைவராக பொறுப்பேற்று நடந்த முதல் இடைத்தேர்தல் என்பதையும்.. எளிதாக வெல்லகூடிய சூழ்நிலை நிலவியதை மாற்றி யாரெல்லாம் விலைபோனார்கள் .. என்பதை அடையாளம் காண வேண்டும் அதற்கான பணிகளில் தளபதி இறங்கியிருக்கிறார் என அறிந்து மகிழ்வுண்டு.. நிறைய சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்.. கிளைக்கழக அதிகாரத்தை பூத் (வாக்குசாவடி)வாரியாக பிரித்தளிப்பது அதிகார பரவலை ஏற்படுத்தும் நல்ல முடிவும் கூட எல்லைகளை சுருக்கி பணி செய்ய சொல்வதின் மூலம் நேரடி கண்காணிப்பு இலகுவாகும்.. நல்ல முடிவை தளபதி எடுத்திருக்கிறார்.. .. கலைஞர் தலைமையில் நடக்கும் மா.செ.கூட்டத்திலும் சரி பொதுக்குழு செயற்குழுவிலும் சரி நிறைய மாற்று கருத்துகளை விவாதிக்க பேச அனுமதிக்கபட்டது.. எல்லை மீறும் போது கோ.சி.மணியை கொண்டு சரிச்செய்வார். அந்த நிகழ்வுகளை தான் இப்போது காண்கிறேன்.. மன்னை,வீரபாண்டியார், நெல்லிகுப்பம் கிருஷ்ணமூர்த்தி, கோ.சி.மணி போன்றோரெல்லாம் தலைமைக்கு எந்தளவிற்கு விசுவாசமாக இருந்தார்களோ அதே அளவு தவறுகளை சுட்டிகாட்டி திருந்தங்களை கொண்டுவந்திருக்கிறார்கள்.. சில முக்கிய முடிவுகள் எடுக்கும் போதெல்லாம் முக்கிய நிர்வாகிகளோடு கலைஞர் ஆலோசித்திருக்கிறார்.. சிறந்த ஜனநாயக பாதையை நமக்கு கலைஞர் நடத்திகாட்டியிருக்கிறார்.. அதே பாதையில் நடைபோட்டால் நல்ல எதிர்காலம் நமக்கு கிடைக்கும்.. .. 234 தொகுதிகளிலும் தொண்டர்களின் கருத்தை கேட்க பிப்ரவரி முதல் பயணம் மேற்கொள்ளபோவதாக தளபதி சொல்லியிருக்கிறார் நல்ல தொடக்கம் காரணம் நிர்வாகிகள் அல்ல பலம் தொண்டர்கள் .. நடந்தவைகளையும் நடப்பவைகளையும் நேரடியாக தளபதியிடம் சொல்லுங்கள்...அதுவே சிறந்ததாக அமையும் கட்சிக்கு வலுசேர்க்கும்.. .. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும்.. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை திமுகவை பாதிக்குமா என்று பலரும் தொலைக்காட்சிகளில் விவாதிக்கிறார்கள். எம்.ஜி.ஆர். திமுகவை விட்டுப் போய் புதுக்கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு பலத்த எழுச்சியும், வரவேற்பும் கிராமங்கள் தோறும் இருந்தது. அடுத்து வைகோ நம்மை விட்டுப் பிரிந்தபோதும் பலத்த அதிர்வு இருந்தது. கடைசியாக விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது வட மாவட்டங்களில் பல கிராமங்களிலும் அவருக்கு கிளைகள் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இப்போது ரஜினிக்கு ஊடகங்கள் மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றன. அவருக்கு கிராமங்களில் எந்த வரவேற்பும் இல்லை. எனவே நாம் ரஜினி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.. இதுதான் நிதர்சனம்.. .. இல்லாதயொன்றை நமது பொது எதிரிகள் பூதாகரமாக்கி காட்டி தங்களுக்குள் மகிழ்ந்துக்கொள்கிறா்கள் .. பாவம் உண்மை தெரியும் போது தலைகுனிந்து நிற்பர்.. #நாம்_நம்பணியை_செவ்வனே_செய்வோம்.. .. Aalanci Spm

No comments:

Post a Comment