Saturday, January 6, 2018

திராவிடம்

எத்தனை கிறுக்கர்கள் அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.. திமுக கடைசி அத்தியாயத்தை நோக்கி .. நோட்டாவிடம் தோற்ற கட்சியின் நாகர்கோவில் எம்பி. .. முஸ்லிம் பிள்ளைகள் நபிகளை கும்பிடலாம்..? ஆனால் முப்பாட்டன் முருகன் தான்.. பாஜகவை ஒருபோதும் மதவாத கட்சியென சொல்லமாட்டேன் .. சீமான் உண்மை உழைப்பு உயர்வு.. சாதிமதமற்ற ஆன்மீக அரசியல்.. ஸ்டைல் நடிகர் எனக்கொரு வாய்ப்பு தாருங்கள் .. மருத்துவக் கல்லூரி ஊழல் புகழ் அன்புமணி.. ஆர்.கே.நகர் மக்கள் பிச்சைக்காரர்கள் .. மக்களை காப்பாற்ற துடிக்கும் கமலஹாசன்.. .. எல்லாவற்றிக்கும் காரணம் பாஜக அதிமுக அரசை கலைத்து ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்க வைத்திருந்தால் இவர்களின் உளறலையெல்லாம் கேட்டிருக்கமாட்டோம்.. திமுக அதிமுகவை அழித்துவிடுவதை பேசி திரியும் பொன்னர் நாகர்கோவில் பக்கம் போனால் தெரியும்.. ஒரு தோல்வி மாபெரும் இயக்கத்தை சரித்துவிடுமா என்ன.. சிறந்த ஜனநாயக கட்டமைப்போடு கூடிய இயக்கத்தை கொள்கையில் உறுதிக் கொண்ட பேரியக்கத்தை ... எங்கே என தேடும் நிலையில் உள்ள கட்சி வீழ்த்திவிடுமாம்.. போய் வேலைபாரும் பொன்னரே.. .. முஸ்லிம்கள் நபிகளை தொழுவர்.. என்கிற போதே இன்னமும் முதிர்ச்சியடையவில்லை .. அரைகுறை என தெளிவாக தெரிகிறது.. நமக்கெல்லாம் முப்பாட்டன் முருகன் என்ற போது மோகன் பகவத் கருத்தை வழிமொழிவது தெரிகிறது.. பாஜக மதவாத கட்சியல்ல என்று கூறி முழு சந்திரமுகியாய் காட்சி தருகிறார்.. எங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்பதிலிருந்தே இன்னமும் வளரவில்லையென்றே சொல்லவேண்டும்.. கைகளை தூக்கி வீர வசனம் பேசினால் போதுமா .. புரிதல் வேண்டும் தெளிவான சிந்தனை வேண்டும் பலதரப்பட்ட மக்களின் மதிப்பை பெற்றிருக்கவேண்டும்.. முருகன் முப்பாட்டனாம்.. முருகனின் அப்பன்.. சிவனும் அண்ணன் கணபதியும் .. தமிழர்கள் இல்லையே.. தமிழ்கடவுள் அல்லாதவனுக்கு பிறந்த முருகன் பாட்டான் என்றால் .. தமிழனை தமிழன்தான் ஆளவேண்டுமென்பது அடிபட்டு போகுமே... புரியவில்லையா.. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் எங்குமே நீங்க சொன்ன கடவுள் இல்லையே.. தமிழன் இயற்கையோடு வாழ்ந்தவன் வணங்கியவன் அவ்வளவுதான் இடையில் ஆரியர் மற்றும் பிற (முகலாயர் ஆங்கிலேயர்) ..வரவிற்கு பிறகு தான் சாதி மதம்.. திராவிடத்தை எதிர்க்கிறேன் என்கிற போதே அதன் பின்னில் ஆரியம் இருப்பது பட்டவர்த்தமாக தெரிகிறது.. என்னதான் சூழ்ச்சி செய்தாலும் நீயும் அவனுக்கு தாழ்ந்தவன்தான்.. தமிழ் தமிழர் .. நாங்கள் மட்டும்தான் தமிழர் என்கிற உளறலை குறைத்துக்கொண்டால் மட்டுமே இனி வாழ்வு.. .. எனக்கொரு வாய்ப்பு தாருங்களென சாதி கொண்டையை மறைக்க முடியாமல் அன்புமணியும்.. சிஸடத்தை சரி செய்ய வருகிறேனென ஆன்மீகத்தை துணைக்கழைத்து கிறுக்கனும்.. மக்களை பிச்சைக்காரர்களென ..தாக்குதல் நடத்தி .. சினிமா வசனம் பேசும் ஞானக்கிறுக்கன் நானென்னும் கமலும்... இன்னும் எத்தனை கிறுக்கர்கள் வருவார்கள்.. அப்பப்பா.. தமிழகம் .. வருகிற போகிறவனெல்லாம் நின்று கூத்தாடும் இடமாகிப்போனது.. எழுபதுகளில் தொடங்கி வைத்த கூத்தாடி அரசியல்.. ஐம்பதாண்டு பின்னிட்டும் ஆசைக்காட்டி வருகிறது.. மக்களை பிச்சைகாரன் என்று கூட சொல்ல முடிகிறது.. ₹20 மஸ்கோத் அல்வா தந்தால் போதும் வாக்களித்து விடுவார்களென நம்பவைக்கபடுகிறது.. கண்ட களவாணிகளும் கடைவிரிக்க முடிகிறது.. இன்னும் எத்தனை திரைதுறையினர்.. நேரடியாக முதல்வர் கனவோடு வருவார்கள்.. .. சிறிய சுனக்கம் .. நிறைய கேள்விகளை கேட்கிறது.. சோம்பல் முறித்து எழுந்து நின்றால்..கண்டவுடன் கட்டிய துணியிலேயே கழிந்துவிடுவார்கள்.. பாவம் முதலில் நாவடக்க பழகுங்கள்.. ஊடகங்கள் பரபரப்பிற்காக கண்ட கழிசடைகளிடம் பேட்ட்வாங்கி போடுவதை நிறுத்துங்கள்... சசிக்கல.. .. #நாடகத்தை_நிறுத்துங்கடே.. .. திராவிடத்தால் எழுந்தோம் .. .. Aalanci Spm

No comments:

Post a Comment